Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
3 posters
Page 1 of 1
முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
மழைக்காலமும், குளிர்காலமும் வரப்போகுது. (இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுங்கிறது வேற கதை. எப்பிடினாலும் மழை வரும், குளிரும் வரும்). இந்தமாதிரி சீதோஷ்ண நிலையில... தும்மல், மூக்கடைப்புல தொடங்கி தலைவலி, ஜலதோஷம், சளி எல்லாம் வந்து ஒருவழி பண்ணிரும். இதுல சிக்கி மீண்டு வர்றவங்க சிலபேரு. வேற சில பேர் என்னதான் சிகிச்சை எடுத்தாலும் விட்டேனா பாருனு அட்டை மாதிரி ஒட்டிக்கிடும். இதுக்கெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்குறதோட கைவைத்தியங்கள் செய்யுறதுனால பிரச்சினை இல்லாம வாழ்க்கையை ஓட்டலாம். இங்க நா சொல்லப்போற வைத்தியங்கள் சில பேருக்கு பரிச்சயமானதா இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோங்க.
மழையில நனைஞ்சாலும், நனையாட்டாலும் குளிர்ச்சியான சூழல் நிலவும்போது பலபேர் நச், நச்சுனு தும்மல் போடுவாங்க. சைனஸ் பிரச்சினை உள்ளவங்க, அலர்ஜி உள்ளவங்களுக்கு இந்தமாதிரி தொந்தரவுகள் அதிகமா இருக்கும். குறிப்பா காலையில கண் முழிச்சதும் அவங்க போடுற தும்மல் மத்தவங்களை எரிச்சல் படுத்தும். இப்பிடி தும்மல் வந்தா தேங்காய்நாரை தீயில எரிச்சு அதுல வரக்கூடிய புகையை மூக்கால சுவாசிச்சா தும்மல் நின்னுரும். இதை அடிக்கடி செய்யக்கூடாதுங்குறதையும் இங்கே ஞாபகப்படுத்துறேன்.
நொச்சி இலையை தண்ணியில வேகவச்சி அதோட ஆவியை மூக்கால சுவாசிக்கலாம். வேப்பிலையோட மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வச்சும் ஆவி பிடிக்கலாம். இதை வேது பிடிக்கிறதுனும் சொல்வாங்க. இந்தமாதிரி செய்றதால தும்மல் மட்டுமில்லாம மூக்கடைப்பும், தலைவலியும்கூட சரியாகும். நொச்சி இலை, வேப்பிலை வேதுபிடிக்கிறதையும் அடிக்கடி செய்யக்கூடாது.
அடுத்ததா மூக்கடைப்பு உள்ளவங்க மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம். மஞ்சள்துண்டை நல்லெண்ணையில நனைச்சி அதை தீயில எரிச்சி வர்ற புகையை சுவாசிச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும். மூக்கு ஒழுகுனாலும் சட்டுனு நின்னுரும். இந்தமாதிரி வைத்தியம் ஆபத்தில்லாதது, ஆனா ஒரு அளவோட செய்யும். பச்சக்குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுனா சாதிக்காயை தண்ணி விட்டு இழைச்சி ஒரு கரண்டியில போட்டு சூடாக்கி பொறுக்குற சூட்டுல மூக்கு மேல பத்து போட்டீங்கனா மூக்கொழுகல், மூக்கடைப்பு நிக்கும்.
அடுத்ததா ஜலதோஷம் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தா உடனே சூடா வெந்நீர் குடிச்சா நிவாரணம் கிடைக்கும். இல்லைனா மணத்தக்காளி சூப் போட்டு குடிச்சீங்கனா வந்த வழியை பார்த்து போயிரும். ஜலதோஷம் இருக்குறவங்களுக்கு தலையெல்லாம் வலிக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல சுக்கை தண்ணி விட்டு உரசி நெத்தியில பத்து போட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். காலையில இஞ்சி சாறு, டீயோட இஞ்சி சேர்த்து குடிக்கிறது, இஞ்சி துவையல், மத்தியான வேளையில சுக்கு குழம்பு, சுக்கு மல்லி காபி குடிக்கிறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும். தூதுவேளை துவையல், தூதுவேளை ரசம் நல்லது. கல்யாணமுருங்கை சாறு குடிக்கிறது, கல்யாணமுருங்கை வடை, ஓமவள்ளி & கற்பூரவள்ளி பஜ்ஜி சாப்பிடுறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும்.
மத்தியான சாப்பாட்டுல சின்ன வெங்காயம் - பூண்டு குழம்பு, பச்சையா உரிச்ச சின்ன வெங்காயத்தை சாப்பிடுறது, மிளகுப்பொடியை சுடுசோத்துல முதல் கவளத்தோட சேர்த்து சாப்பிடுறதெல்லாம் நல்லது. ஜலதோஷம் மட்டுமில்லாம சளி தொந்தரவுகளுக்கும் இதெல்லாம் நல்லது. இந்தமாதிரி நேரங்கள்ல சுடுதண்ணியில குளிக்கிறது, அதோட யூகலிப்டஸ் இலைகளைப்போட்டு குளிக்கிறது. நொச்சி இலைகளை கொதிக்க வச்சி குளிக்கிறதெல்லாம் நல்ல நிவாரணி. சளி பிடிச்சா தலைக்கு குளிக்கக்கூடாதுனு சொல்வாங்க. பிரச்சினை அதிகமா இருந்தா தவிர்க்கலாம். ஆனா இந்த இலைக்குளியல்ல நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்பிடி குளிச்சி முடிச்ச கையோட சாம்பிராணி புகை போடுங்க. இதை மற்ற சில மருத்துவத்தில் கூடாதுனு சொல்வாங்க. மூக்கால சாம்பிராணி புகையை உள்ளே இழுக்கக்கூடாது. தலை, காது பகுதியில சாம்பிராணி புகை காட்டணும். சாம்பிராணியோட ஓமம், மஞ்சள்தூள் சேர்த்துக்கலாம். குளிச்சி முடிச்ச கையோட மிளகை பொடியாக்கி மெல்லிசான துணியில போட்டு உச்சந்தலையில சூடு பறக்க தேச்சா ஜலதோஷம், சளி பிரச்சினையெல்லாம் சரியாகும்.
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி மிளகு - பூண்டுப்பால் சாப்பிடுறது ரொம்ப நல்லது. முழு வெள்ளைப்பூண்டை உரிச்சி பால்ல வேக வச்சி அதோட மஞ்சள்தூள், மிளகு, பனங்கல்கண்டு சேர்த்து நல்ல கடைஞ்சி சாப்பிட்டீங்கனா சளியை விரட்டும். குழந்தைங்க, பெரியவங்க யாரானாலும் தேங்காய் எண்ணெய்ல சூடத்தை (கற்பூரம்) போட்டு சூடு பண்ணி நெஞ்சு பகுதியில தேய்க்கிறது, அரிசி, கோதுமைத் தவிடை வறுத்து துணியில முடிஞ்சு நெஞ்சு, விலா பகுதியில ஒத்தடம் போடுறதெல்லாம் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல சிகிச்சை.
நன்றி : வெப் துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
தலைக்கு குளிச்சி முடிச்ச கையோட விபூதியை உச்சந்தலையில சூடு பறக்க தேச்சா ஜலதோஷம், சளி பிரச்சினையெல்லாம் சரியாகும் இது எங்க வீடுகளில் செய்யும் முறை .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
பயனுள்ள பகிர்வு கிருஷ்ணாம்மா - ஹாச்ச்ச்ச் ன்னு தும்ம ஆரம்பிச்சா உங்க கை வைத்தியத்த முயற்சி பண்ணிடறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
யினியவன் wrote:பயனுள்ள பகிர்வு கிருஷ்ணாம்மா - ஹாச்ச்ச்ச் ன்னு தும்ம ஆரம்பிச்சா உங்க கை வைத்தியத்த முயற்சி பண்ணிடறேன்.
தும்மல் ஆரம்பித்ததும், விபூதியை கொஞ்சம் தண்ணிரில் குழைத்து மூக்கின் மேல் தடவ வேண்டும். அந்த ஈரம் காய்வதற்குள் உங்கள் தும்மல் சரியாகி விடும்.
மேலே செய்தி இல் சொன்னதை விட சுலபமானது இது ; முயன்று பாருங்கள் இனியவன் எங்க கிருஷ்ணா அப்பாக்கு எப்பவும் இது தான் கை கொடுக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
உங்க சமையலுக்கு தான் கிருஷ்ணாப்பா ஸ்பெசிமென்னு ன்னு நெனச்சேன் - இதுக்குமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
நேத்து தான் சொன்னேன், எங்க அக்கா வருவாங்கன்னு, கரேக்ட்டா இன்னிக்கி வந்து கலக்கு கலக்குன்னு கலக்க ஆரம்புச்சிட்டாங்க. அக்கான்னா அக்காதான்.
இன்னும் கொஞ்ச நாள்ள பாட்டியாக போராங்க எங்க அக்கா, வாழ்க அக்கா.
இன்னும் கொஞ்ச நாள்ள பாட்டியாக போராங்க எங்க அக்கா, வாழ்க அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!
» முன்னெச்சரிக்கை
» மழைக்கால தொற்று - தேவை முன்னெச்சரிக்கை
» கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை
» பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை
» முன்னெச்சரிக்கை
» மழைக்கால தொற்று - தேவை முன்னெச்சரிக்கை
» கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை
» பெண்களுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|