புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
25 Posts - 78%
heezulia
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
5 Posts - 16%
viyasan
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
202 Posts - 41%
heezulia
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
21 Posts - 4%
prajai
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_m10சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 11, 2012 9:56 pm

சிறு விதைகளைக் கொண்ட, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, வறண்ட பிரதேசங்களில் விவசாயிகளின் வரப்பிரசாதமாக, உயிர் ஆதாரமாக, மலைவாழ் மக்கள் மற்றும் கிராம மக்களின் வளமான, வளமையான உடலமைப்பைத் தரக்கூடிய பயிர்களே சிறுதானியங்களாகும். வளமான மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய இப்பயிர்களில் கிடைக்கும் சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்ந்து வந்தது.

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. மேலும், இவை அதிக நார்சத்து கொண்டுள்ளன. இதனால் இவை இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், மக்காட்சோளத்தில் சப்டூஆலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்குழாய் நோயை குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

கேழ்வரகு

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது இதுவாகும். இதனை கர்நாடகாவில் ராகி என்றும், இந்தியில் மேண்டு என்றும் ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், கேரளாவில் கேவுரு, ஆந்திராவில் ராகூலு, இலங்கையில் குரங்கன் என்றும் அழைக்கிறார்கள். தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

சத்துக்கள்

ராகி என்றழைக்கப்படும் 100 கிராம் கேழ்வரகில் 7.3கி புரதம், 1.3கிராம் கொழுப்பு, 3.9 கிராம் இரும்புச்சத்து, 3.6 கிராம் நார்ச்சத்து, 344 மில்லி கிராம் கால்சியம், 203 மில்லிகிராம் பாஸ்பரஸ், 420 மில்லி கிராம் தய்மின், 72 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பிகரேட்டின் (42மிகி), நயசின் (1.1மிகி), ரிபோப்ளேவின் (1.1மிகி) போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .06 மற்றும் 1.5 கிராம் இரும்புச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோலவே நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .02 மற்றும் 1.2 கிராம் நார் சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோன்றே கால்சியம் .045 மற்றும் .041 மில்லி கிராம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமைகளில் கிடைக்கிறது. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் வலிமையுடையவர்களாகவும், நல்ல திடகாத்திரமானவர்களாகவும், உடலுழைப்பாளிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர்.

இதுபோலவே சிறுதானியங்களான திணை (8 கிராம்), சாமை (7.6 கிராம்), பனிவரகு (7.2கி), வரகு (9கி), குதிரைவாலி (9.8கி) ஆகியவை அரிசியைக் (.02கி) காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளன. அதேபோன்றே தாதுப்பொருட்களையும் அதிகளவில் கொண்டுள்ளன. திணையை உட்கொண்டால் இது இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு உதவும். எனவே தான் மலைகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் தேனும் திணை மாவும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளாக உட்கொண்டு வந்துள்ளனர்.

இவ்வளவு மிகுதியான சத்துக்களைக் கொண்ட இப்பயிர்கள் குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக் கூடியவையாகவும், குறைந்தளவிலான தண்ணீருடன் அதிகளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகவும் உள்ளன.

இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி

இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிக அளவிலான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-08ஆம் ஆண்டில் இந்தியாவில் 39.56 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2008-09ஆம் ஆண்டில் 38.34மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இந்த உலகில் முதல் பத்து நாடுகள் சிறுதானிய உற்பத்தி விவரம் (டன்களில்) இந்தியா 1061. நைஜீரியா 77,00,000, நிகார் 27,81,000, சீனா 21,01,000, பர்க்கினா பாசோ 11,04,010, மாலி 10,74,440, சூடான் 7,92,000, உகாண்டா 7,32,000, சாட் 5,50,000, எத்தியோப்பியா 5,00,000 ஆகும். இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுதானிய உற்பத்தியில் அதே அளவு விகிதத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியாவதில்லை. 2003-04ஆம் ஆண்டில் 213.19 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2008-09ல் 234.47 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 2003-04ஆம் ஆண்டில் 36.3 மில்லியன் டன்களாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ல் 38.4 மில்லியன் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. 2003-04ல் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 17 சதவீதமாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் 16 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மிகவும் கவலை கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்குக் காரணம் இத்தானியங்களுக்கான நுகர்வு குறைந்து கிராமங்களில் கூட அரிசியையும், கோதுமையையும் பிரதானமாக உட்கொள்ள ஆரம்பித்ததுதான். ஒரு சில கிராமங்களில் சிறுதானியங்களை விற்று அரிசியை வாங்கி நுகரும் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி

தமிழகத்தில் 1998-99ஆம் ஆண்டில் 7,56,523 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இது 2008-09ஆம் ஆண்டில் 7,18,396 ஹெக்டேராக குறைந்துள்ளது. அதிலும் மக்காச்சோளம் உற்பத்தி இப்பத்தாண்டு கால இடைவெளியில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. மக்காட்சோளம் தவிர்த்து இதர சிறுதானியங்களைக் கணக்கிட்டால் இதன் பரப்பளவில் பெரும் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பத்தாண்டு காலத்தில் சோளம் பரப்பு 3,64,944 ஹெக்டேரிலிருந்து 2,58,876 ஹெக்டேராகவும், கம்பு பரப்பு 1,53,937 ஹெக்டேராகவும் 56,672 ஹெக்டேராகவும், வரகு பரப்பு 15654 ஹெக்டேரிலிருந்து 4086 ஹெக்டேராகவும், சாமை பரப்பு 43,799 ஹெக்டேரிலிருந்து 21231 ஹெக்டேராகவும், கேழ்வரகு பரப்பு 1,20,047 ஹெக்டேரிலிருந்து 90,079 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. இதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் மக்காட்சோளம் கோழித்தீவனமாக பயன்படுத்தப்படுவதால் உத்தரவாதமான விலையும், பல கோழிப்பண்ணைகள் நேரடியாக விதை உட்பட அனைத்து இடுபொருட்களும் வழங்கி நல்ல நிலையில் விளை பொருளை வாங்கிக் கொள்வதாலும் இதன் பரப்பு கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. துரித உணவு மற்றும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் உணவு நுகர்வு காரணமாக இதர சிறுதானியங்களில் பரப்பு சிறிது சிறிதாகக் குறைந்து முழுவதும் அழியும் நிலையில் உள்ளது.

தமிழகத்தின் கேழ்வரகு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேலான பரப்பும், உற்பத்தியும் கிருக்ஷணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலேயே கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 70,000 ஹெக்டேர் பரப்பில் டிசம்பர் 2010ல் அறுவடை சமயத்தில் மழை பெய்ததால் 50,000 ஹெக்டேரில் உற்பத்தியான கேழ்வரகு விளைச்சல் முழுவதுமாக அழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மேலும் உற்பத்திக் குறைப்பை ஏற்படுத்தும்.

இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்திய ஆய்வு, தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 42,00,000 எனவும், மேலும் சர்க்கரை நோய் அறிகுறிகளுடன் 30,00,000 வாழ்வதாகவும் தெரிவிக்கிறது. ஏறத்தாழ 72 இலட்சம் பேர் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சர்க்கரை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தற்போதைய தேவை துரித உணவை விடுத்து சிறுதானியங்களை அதிகளவில் உட்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். இதனால் உடல் ஆரோக்கியமடைவதுடன் உழவர்களையும் காப்பாற்றிட முடியும். நிரந்தரமான விலையும், பொதுமக்களின் ஆதரவும் இல்லாதுதான் இதுபோன்ற சத்தான சிறுதானியங்கள் அழிவிற்கு முதன்மையான காரணம் என்பது மக்காட்சோள உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கொண்டே அறிய முடியும். இதுபோன்றே தற்போது குதிரைவாலிப் பயிர் உற்பத்தியும் மதுரை மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதும் நிரந்தரமான அங்காடி இருப்பதனால் தான். எனவே, இப்பொருட்கள் உற்பத்தியை, பரப்பை அதிகரிக்க நுகர்வு குறித்த விழிப்புணர்வை, கலாச்சார மரபை உருவாக்குதல் வேண்டும். அரசு சர்க்கரைநோய்க்கு அருமருந்தாய் உள்ள இச்சிறுதானிய உற்பத்திக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்து உற்பத்தியை பெருக்கிடல் வேண்டும். இப்பொருட்களிலிருந்து செறிவூட்டப்பட்ட சத்தான ஆதாரங்களைத் தயாரித்து விற்பனை செய்ய தக்க முயற்சி செய்து நமது நாட்டின் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை அழிவிலிருந்து காப்பாற்றுதல் வேண்டும்.

நன்றி - மதுரை சு.கிருஷ்ணன்
கீற்று..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 11, 2012 10:18 pm

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு - இவைகள் அனைத்தும் இன்று எழுத்தளவிலேயே உள்ளது! வாங்கிப் பயன்படுத்துபவர்கள் மிக மிக அரிது!

பகிர்வுக்கு நன்றி அருண்!






சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 11, 2012 10:36 pm

சிவா wrote:சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு - இவைகள் அனைத்தும் இன்று எழுத்தளவிலேயே உள்ளது! வாங்கிப் பயன்படுத்துபவர்கள் மிக மிக அரிது!

பகிர்வுக்கு நன்றி அருண்!



தல... இதையெல்லாம் வைத்து பர்கர் செய்ய முடியுமா... அய்யோ, நான் இல்லை

avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Postbluestarkarthik Sat Aug 11, 2012 11:58 pm

நல்ல பதிவு, நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 12, 2012 12:13 am

மிகச்சிறந்த பதிவு. இந்த காலத்தில் இவையெல்லாம் குறைந்துவிட்டது கசப்பான உண்மை. மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:16 am

நல்ல பதிவுதான்.

தானிய விலைகளை சற்று குறைக்கச் சொல்லுங்க... அரசாங்கத்தை... சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 440806



சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 12, 2012 7:06 am

தென் கருநாடகத்தில் ராகி மிக முக்கியமான உணவாகும். திருமண விருந்தில் கூட ஒரு களி உருண்டையை முதலில் இலையில் வைத்து அதை உண்டபின்புதான் அடுத்து நெல்லுணவு உண்ணும் பழக்கம் இன்றும் உள்ளது. கோவை/பெரியார் மாவட்டத்தின் முக்கிய உணவாக களி யும், சோளச் சோறும், கம்பும் இருந்தது ஒரு காலத்தில். இப்போது அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஆயினும் இப்போதும் நாங்கள் பெங்களூர்ல இருப்பதால், தொடர்ந்து களி உணவை உண்டுவருகிறோம். வாரத்துக்கு இரண்டு முறை தவறாமல் எங்கள் வீட்டில் களி உண்டு.
ஞாயிற்றுக்கிழமை மட்டன்/கோழி குழம்புடன் சாப்பிடுவோம். இடை நாட்களில் கடைந்த கீரை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும். கீழே உள்ள படத்தில் கொள்ளுப் பருப்பும், பண்ணைக் கீரையும் (அண்ணா சொப்பு என்று கன்னடத்தில் கூறுவார்கள்) பச்சை மிளகாய் சற்று கூடுதலாகச் சேர்த்து கடைந்த கடைசல். இதற்கு இரண்டு களி உருண்டைகள் போதும் ஒருவருக்கு. தமிழ் நாட்டில் உள்ள நம் உறவுகளே நீங்கள் போய் சில்லி கோபி சாப்பிடுங்கள். நாங்கள் இங்கு அருமையான களி உருண்டை உண்கின்றோம். மகிழ்ச்சி

சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Img0112bz

சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Img0116xwm

அருண் அவர்களே, விரும்பினேன் உங்களின் இந்த அருமையான பதிவை.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 12, 2012 9:44 am

உண்மதாங்க, இதெல்லாம் மறந்ததனால்தான் இப்ப மண்டியிட்டு மத்தவங்ககிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டு கிட்டு இருக்கோம்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 12, 2012 11:02 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

அருண் அவர்களே, விரும்பினேன் உங்களின் இந்த அருமையான பதிவை.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

மிக்க நன்றி அய்யா! உங்கள் இளமைக்கு இது தான் காரணமா..! அன்பு மலர் மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 12, 2012 11:42 am

பகிர்வுக்கு நன்றி அருண்!




சிறுதானியங்களை மறந்தோம் சர்க்கரை நோயை வரவேற்றோம்..! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக