Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !
நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17. விலை ரூபாய் 60 .
தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது எழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற இந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.
காந்தியடிகள் அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .
"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கிறாய் .இதில் ஒன்றும் இல்லை .தீமைக்கு மாறாக நன்மை செய்வதில் தான் அழகு உண்டு .என்னும் கருத்துள்ள வாக்கியம் இது. பிறகு இயேசுவின் மலைப் பிரசங்கம் என்னை ஆட்கொண்டது ."
காந்தியடிகள் தொடங்கி வாலஸ் வரை பல மேதைகளின் வெற்றி ரகசியங்கள் நூலில் உள்ளது .
"மன வலிமையே பலம்" என்று சொன்ன விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு !
விவேகானந்தர் வீட்டு வாசலில் நின்ற போது கந்தலான துணி அணிந்து வந்த ஒரு துறவி "நீ உடுத்தியிருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா ? என்று கேட்டதும் உடன் தன்னுடைய ஆடைகளை கழற்றித் துறவியிடம் தந்து விட்டார் .இந்த அன்பு உள்ளம் தான் அவரை பிற்காலத்தில் அன்பு உருவாகக் காட்சி அளிக்க காரணமாக இருந்தது .
இப்படி சுவையான புதிய தகவல்கள் நூலில் உள்ளது .நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வாழ்வியல் நெறி போதிக்கும் அற்புத நூல் இது .எழுத்தாளர் மெர்வின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல வருடங்களுக்கு முன் மதுரை வந்து இருந்த போது இனது கவிதை நூல்களை படித்து விட்டு பாராட்டி விட்டு .எதிர் மறை கருத்து இருந்த ஒரு சில கவிதைகளைச் சுட்டி விட்டு , இனி வரும்காலங்களில் எதிர்மறை சிந்தனை தவிர்த்து எழுதுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .அவர் அன்று சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன் .இந்த நூலிலும் ,அவரது எந்த நூலிலும் எதிர்மறை கருத்துக்களை காண முடியாது .
வாழ்க்கையில் யார் ? யார் ? என்னென்ன எதிர்மறை வார்த்தைகளை சொன்னார்களோ அதன் படியே தான் அவர்களுக்கு நடந்திருக்கிறது . யாரவது சுடுவார்கள் என்றார் காந்தியடிகள். அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. .எனவே யாரும் எதிர்மறை சொற்கள் பயன் படுத்தாமல் இருந்தால் நன்மை உண்டு .
ஆடம்பரமாக ஆடை அணிந்து பணத்தை விரையம் செய்பவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ள ஒரு நிகழ்வு .
அலெக்சாண்டர் எப்பொழுதும் தமது மிகக் கீழான அலுவலர் போலவே எளிமையான உடைகளியே அணிந்து கொள்வார் .என்ற தகவல் நூலில் உள்ளது .
காதல் அன்றும் ,இன்றும் ,என்றும் சுகமானதுதான் .நெப்போலியன் காதலியின் கடிதத்தை சட்டைப் பையிலேயே வைத்து இருப்பாராம் .அவர் காதலிக்கு எழுதிய கடிதத்தில் , " எனக்கு சோர்வு ஏற்படும்போது காதலியின் கடிதத்தை எடுத்து படித்தவுடன் சோர்வு பறந்துவிடும் ,புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும் ,அப்புறம் பசியாவது தாகமாவது .துன்பம் என் நண்பன் .அதை நான் வெறுக்க மாட்டேன் ." இவ்வாறு எழுதி உள்ளார் நெப்போலியன் .
முதுமை பருவத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு நீதிபதி சொல்கிறார் ."இத்தகைய மனைவி கிடைக்க இவ்வளவு காலம் காத்திருந்தது நல்லது என்று மகிழலாம் .அல்லது அவளது பண்புகள் எனக்குப் பிடிக்காதவைகளாக இருந்தால் ,இன்னும் கொஞ்ச காலம்தானே இவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று மன அமைதிப் பட்டுக் கொள்ளலாம் ." துன்பத்திற்கு துவளாத மன பக்குவம் போதிக்கும் கருத்துக்கள் உள்ளது .
ஆண்ட்ரு ஜாக்சனுக்கு திருமணதிற்கு முன் எழுத படிக்க தெரியாது .அவரது மனைவி அவருக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் துணை நின்றார் .சர்ச்சில் அதிர்ச்சியான நிகழ்சிகள் நடக்கும் போது தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத் தொடர்வார் .இப்படி பெண்மையின் மேன்மை உணர்த்தும் தகவல்கள் உள்ளது .
பாபர் 26 வயதில் பகைவர்களால் சூழப் பட்டிருந்தார் .அவரது அரியணை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிந்தது .அப்பொழுது தன் நிலையை உணர்த்தார் .இனிமேல் மதுக் கோப்பையைத் தீண்டுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார் .எடுத்த உறுதியில் இறுதி வரை உறுதியாக இருந்தார் . இப்படி மதுவிலக்கு பற்றிய தகவலும் உள்ளது .
ராக்பெல்லர் சொன்ன கருத்து ஒன்று .இதோ !
"உழைப்பை நிறுத்தி விட்டால் உடலும் மனமும் சீர் கேட்டு விடும் ."எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் இது .
காந்தியடிகள் பற்றி நிறைய தகவல் உள்ளது .நேரு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் உள்ளது .மர்மக்கதை மன்னர் வாலஸ் தமது கற்பனை தடைபடாமல் இருக்க தேநீர் அருந்திக் கொண்டே இருப்பார் .
ஒரு சில தகவல்கள் தவிர மற்ற எல்லா தகவல்களும் புதியவை .புத்துணர்வு தருபவை .மகாகவி பாரதியார் ,அறிஞர் பெர்னாட்ஷா ,ரூஷ்வெல்ட் உள்ளிட்ட பல மேதைகளின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உள்ளது .இந்த நூலை படித்து முடித்தவுடன் பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் மெர்வின்அவர்களுக்கு பாராட்டுக்கள் .சிறந்த நூலை சிறப்பாக பதிப்பித்த குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள்
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17. விலை ரூபாய் 60 .
தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது எழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற இந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.
காந்தியடிகள் அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .
"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கிறாய் .இதில் ஒன்றும் இல்லை .தீமைக்கு மாறாக நன்மை செய்வதில் தான் அழகு உண்டு .என்னும் கருத்துள்ள வாக்கியம் இது. பிறகு இயேசுவின் மலைப் பிரசங்கம் என்னை ஆட்கொண்டது ."
காந்தியடிகள் தொடங்கி வாலஸ் வரை பல மேதைகளின் வெற்றி ரகசியங்கள் நூலில் உள்ளது .
"மன வலிமையே பலம்" என்று சொன்ன விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு !
விவேகானந்தர் வீட்டு வாசலில் நின்ற போது கந்தலான துணி அணிந்து வந்த ஒரு துறவி "நீ உடுத்தியிருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா ? என்று கேட்டதும் உடன் தன்னுடைய ஆடைகளை கழற்றித் துறவியிடம் தந்து விட்டார் .இந்த அன்பு உள்ளம் தான் அவரை பிற்காலத்தில் அன்பு உருவாகக் காட்சி அளிக்க காரணமாக இருந்தது .
இப்படி சுவையான புதிய தகவல்கள் நூலில் உள்ளது .நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வாழ்வியல் நெறி போதிக்கும் அற்புத நூல் இது .எழுத்தாளர் மெர்வின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல வருடங்களுக்கு முன் மதுரை வந்து இருந்த போது இனது கவிதை நூல்களை படித்து விட்டு பாராட்டி விட்டு .எதிர் மறை கருத்து இருந்த ஒரு சில கவிதைகளைச் சுட்டி விட்டு , இனி வரும்காலங்களில் எதிர்மறை சிந்தனை தவிர்த்து எழுதுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .அவர் அன்று சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன் .இந்த நூலிலும் ,அவரது எந்த நூலிலும் எதிர்மறை கருத்துக்களை காண முடியாது .
வாழ்க்கையில் யார் ? யார் ? என்னென்ன எதிர்மறை வார்த்தைகளை சொன்னார்களோ அதன் படியே தான் அவர்களுக்கு நடந்திருக்கிறது . யாரவது சுடுவார்கள் என்றார் காந்தியடிகள். அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. .எனவே யாரும் எதிர்மறை சொற்கள் பயன் படுத்தாமல் இருந்தால் நன்மை உண்டு .
ஆடம்பரமாக ஆடை அணிந்து பணத்தை விரையம் செய்பவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ள ஒரு நிகழ்வு .
அலெக்சாண்டர் எப்பொழுதும் தமது மிகக் கீழான அலுவலர் போலவே எளிமையான உடைகளியே அணிந்து கொள்வார் .என்ற தகவல் நூலில் உள்ளது .
காதல் அன்றும் ,இன்றும் ,என்றும் சுகமானதுதான் .நெப்போலியன் காதலியின் கடிதத்தை சட்டைப் பையிலேயே வைத்து இருப்பாராம் .அவர் காதலிக்கு எழுதிய கடிதத்தில் , " எனக்கு சோர்வு ஏற்படும்போது காதலியின் கடிதத்தை எடுத்து படித்தவுடன் சோர்வு பறந்துவிடும் ,புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும் ,அப்புறம் பசியாவது தாகமாவது .துன்பம் என் நண்பன் .அதை நான் வெறுக்க மாட்டேன் ." இவ்வாறு எழுதி உள்ளார் நெப்போலியன் .
முதுமை பருவத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு நீதிபதி சொல்கிறார் ."இத்தகைய மனைவி கிடைக்க இவ்வளவு காலம் காத்திருந்தது நல்லது என்று மகிழலாம் .அல்லது அவளது பண்புகள் எனக்குப் பிடிக்காதவைகளாக இருந்தால் ,இன்னும் கொஞ்ச காலம்தானே இவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று மன அமைதிப் பட்டுக் கொள்ளலாம் ." துன்பத்திற்கு துவளாத மன பக்குவம் போதிக்கும் கருத்துக்கள் உள்ளது .
ஆண்ட்ரு ஜாக்சனுக்கு திருமணதிற்கு முன் எழுத படிக்க தெரியாது .அவரது மனைவி அவருக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் துணை நின்றார் .சர்ச்சில் அதிர்ச்சியான நிகழ்சிகள் நடக்கும் போது தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத் தொடர்வார் .இப்படி பெண்மையின் மேன்மை உணர்த்தும் தகவல்கள் உள்ளது .
பாபர் 26 வயதில் பகைவர்களால் சூழப் பட்டிருந்தார் .அவரது அரியணை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிந்தது .அப்பொழுது தன் நிலையை உணர்த்தார் .இனிமேல் மதுக் கோப்பையைத் தீண்டுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார் .எடுத்த உறுதியில் இறுதி வரை உறுதியாக இருந்தார் . இப்படி மதுவிலக்கு பற்றிய தகவலும் உள்ளது .
ராக்பெல்லர் சொன்ன கருத்து ஒன்று .இதோ !
"உழைப்பை நிறுத்தி விட்டால் உடலும் மனமும் சீர் கேட்டு விடும் ."எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் இது .
காந்தியடிகள் பற்றி நிறைய தகவல் உள்ளது .நேரு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் உள்ளது .மர்மக்கதை மன்னர் வாலஸ் தமது கற்பனை தடைபடாமல் இருக்க தேநீர் அருந்திக் கொண்டே இருப்பார் .
ஒரு சில தகவல்கள் தவிர மற்ற எல்லா தகவல்களும் புதியவை .புத்துணர்வு தருபவை .மகாகவி பாரதியார் ,அறிஞர் பெர்னாட்ஷா ,ரூஷ்வெல்ட் உள்ளிட்ட பல மேதைகளின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உள்ளது .இந்த நூலை படித்து முடித்தவுடன் பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் மெர்வின்அவர்களுக்கு பாராட்டுக்கள் .சிறந்த நூலை சிறப்பாக பதிப்பித்த குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள்
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|