ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரந்தாமனின் பாதுகைகள்

Go down

பரந்தாமனின் பாதுகைகள் Empty பரந்தாமனின் பாதுகைகள்

Post by பிரசன்னா Sun Aug 05, 2012 11:22 pm

பரந்தாமனின் பாதுகைகள் BT_1343988062பரந்தாமனின் பாதுகைகள் E_1344092837

புலி உறுமுது புலி உறுமுது.. நடு நடுங்குது.. வெவெலங்குது.. என்ன திரைப்பட பாடல்வரிகளை மாற்றி பாடுவதாக நினைக்கிறீர்களா? அதெல்லாம் இல்லை. பிலகிரி ரங்கநாதரை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு தான் இப்படி யெல்லாம் அனுபவங்கள் ஏற்படும். காரணம், அடர்ந்த காட்டின் வழியே பயணித்து, உயரமான மலை மீது ஏறினால் தான் அவரை தரிசிக்க முடியும். பிலகிரி என்றால் வெண்மையான மலை என்று அர்த்தம். வடமொழியில் ஸ்வேதாசலம், மைசூர் - பெங்களூர் இடையே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5091 அடி உயரத்தில், மலைமீது அமைந்திருக்கிறது பிலகிரி ரங்கன்னா கோயில்.

தமிழகத்தில் ரங்கநாதர் காவிரிக்கரையில் இருப்பது போல் இங்கும் காவிரிக்கும் கபில நதிக்கும் இடையே தான் இத்தலம் அமைந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் இந்த ரங்கநாதரை ஆதியில் பூஜித்தவர், வசிஷ்ட மாமுனிவர். பிள்ளை வரம் கேட்டு வழிப்பட்ட அவருக்கு இத்தலத்து பெருமாளின் அருளால் பிறந்தவரே சக்திமுனிவர். அவரது சந்ததியினரே பராசர், வியாசர், சுகமுனிவர் ஆகியோர்.

கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருப்பதால் தன் பக்தர்களை காத்திட பகவானே இங்கே வேட்டைக்காரன் வடிவில் வலம் வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதற்கான ஆதாரமாக கோயிலில் ஓர் அதிசய சாட்சியும் இருக்கிறது. அது என்ன என்பதை பார்ப்தற்கு முன் கோயிலை வலம் வந்துவிடுவோமா? பலி பீடமும் பெரிய்ய்ய கொடிமரமும் முன் நிற்க, பகவானின் திருக்கோலங்கள் தாங்கிய முகப்பு வரவேற்க, தலை தாழ்த்தி பணிந்து உள் செல்கிறோம். கம்பீரமாகவும், கலை அழகுட னும் காட்சி தரும் தூண்கள், ராமாயண, மகாபாரத காட்சிகளை தாங்கி நிற்கின்றன.

எழிலான கிருஷ்ணர், ஏகாந்தமான சரஸ்வதி, சாந்தமான சதாசிவன், பக்தபாவ அனுமன் போன்ற தெய்வத் திருவடிவங்களும் ஆதுண் சிற்பங்களாக அமைந்துள்ளன.

ரங்கநாதர், ஸ்ரீநிவாசர், வேங்கடேஸ்வரர் எனும் திருநாமங்களால் அழைக்கப்படும் இத்தலத்து மூலவரை முழுமனதும் ஒன்றி சேவித்து விட்டு, வலம் வருகிறோம். வசிஷ்டரின் பிள்ளை இல்லாக் குறையை தீர்த்த இவர் தன்னை வணங்குவோரின் எக்குறையையும் தீர்ப்பதில் வல்லவர். மகாலட்சுமி தாயார் தனிச்சன்னதியில் திருக்காட்சி அளிக்கிறாள். செல்லமகளை வழிபடுவோர் வாழ்வில் செல்வங்கள் அனைத்தும் சேரும் என்பதும் நிச்சயம்.க்ஷ

கோயிலை வலம் வரும்போது ஓரிடத்தில் மிகப்பெரிதான காலணிகள் இரண்டினை காணலாம். பகவானின் பாதுகைகள் இவை என்கிறார்கள். இப்பகுதி பக்தர்களை காப்பதற்காக தினமும் இரவு நேரத்திதல் வனப்பகுதியில் காவல் வலம் வரும் நேரத்தில் வனப்பகுதியில் ரங்கநாதர் அவற்றை அணிந்து கொள்வாராம். அதனை உறுதிப்படுத்துவதுபோல், இக்காலணிகள் குறிப்பிட்ட காலத்தில் தேய்ந்து கிழிந்துவிடுவதும், புதிய காலணிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதும் வாடிக்கையாக இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் இக்கோயிலில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ஆனந்தமாக ஆராதனைகள் நடத்துவது கண்கொள்ளா காட்சி.

காட்டுவழியே ஒரு வித்தியாசமான பயணணம் கண்குளிரும் இயற்கை காட்சிகள், மலைமேல் அமைந்திருக்கும் கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் ஆரோக்யம். எல்லாவற்றோடும் பகவானின் பாத அணிகளை தரிசிக்கும் பாக்கியம் இவற்றோடு அரங்கனின் அருளால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும். இந்த கோயிலுக்கு செல்ல? பெங்களூரிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், மைசூரிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிலகிரி மலை.
- சமாத்மிகா, பெங்களூரு.

நன்றி - குமுதம் பக்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum