Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
+5
முரளிராஜா
முஹைதீன்
பிளேடு பக்கிரி
யினியவன்
GreatMortal
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
First topic message reminder :
மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.
மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.
எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html
மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.
மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.
எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html
GreatMortal- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
In india where bloom blost held the media and other police department will put it only in muslims head .Like this only held in Mahatma gandhi shoot matter .After that the world relaised who is thereal sulsprite .Like that only one day the world will know who is behind the real bloom blost which is helding in india now
handsomegyee- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
ஆங்கில பதிவுகளை தவிர்க்கவும் handsomegue நண்பரே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
முடிஞ்சது முடிஞ்சு போச்சு ... கதம் கதம்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
புரட்சி wrote:மகா பிரபு wrote:அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
முடிஞ்சது முடிஞ்சு போச்சு ... கதம் கதம்![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:புரட்சி wrote:மகா பிரபு wrote:அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
முடிஞ்சது முடிஞ்சு போச்சு ... கதம் கதம்![]()
![]()
![]()
என்ன சோகம் இதெல்லாம் அப்பவே யோசிச்சு இருக்கணும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நானும் உங்க நிலமையில தான்யா இருக்கிறேன் ..
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
புரட்சி wrote:மகா பிரபு wrote:புரட்சி wrote:மகா பிரபு wrote:அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
முடிஞ்சது முடிஞ்சு போச்சு ... கதம் கதம்![]()
![]()
![]()
என்ன சோகம் இதெல்லாம் அப்பவே யோசிச்சு இருக்கணும்![]()
நானும் உங்க நிலமையில தான்யா இருக்கிறேன் ..![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:புரட்சி wrote:மகா பிரபு wrote:புரட்சி wrote:மகா பிரபு wrote:அப்படித்தான் அண்ணா. சரி நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் அண்ணா!
முடிஞ்சது முடிஞ்சு போச்சு ... கதம் கதம்![]()
![]()
![]()
என்ன சோகம் இதெல்லாம் அப்பவே யோசிச்சு இருக்கணும்![]()
நானும் உங்க நிலமையில தான்யா இருக்கிறேன் ..![]()
![]()
![]()
என்ன ஒரு சந்தோசம் , வெறும் 160 கிலோ மீட்டர் தான் பிரபு ,.. ஓடி வந்து பத்த வச்சுடுவேன் ...
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
இங்கே ஏற்கனவே புகைச்சலா தான் இருக்கு புரட்சி ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
அடுப்படியிலா பிரபு?மகா பிரபு wrote:இங்கே ஏற்கனவே புகைச்சலா தான் இருக்கு புரட்சி
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|