Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நட்பின் நாட்கள் !
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17
விலை ரூபாய் 60
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே ” பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன் .அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின் நாட்கள் ! நட்பின் மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான நண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று சொல்லலாம் .
நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது .நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள் உள்ளது .நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது .
நூலில் முதல் கவிதையே முத்தாப்பாக உள்ளது .உங்கள் பார்வைக்கு இதோ கவிதை !
நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க ..
நாம் கோபப்பட்டால் உடைக்க ..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல் ஆட
நாம் கிடந்து தூங்க !
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க ..
நாம் கிழிக்க ..!
இனிய நண்பர் பா .விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதால் மிக, மிக முக்கியமான கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன் .நட்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை .நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும் விரும்புவார்கள் எனபது உறுதி .நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது .இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் அவர்கள் .
பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட ,மலரும் நினைவுகளை தோற்றுவிக்கும் கவிதை இதோ !
மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!
இளம் ஆண் நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது .அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்..
அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம் !
தலைப்பு – பெண் .
இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விருபும் கேள்வி போல ஒரு கவிதை .
சொல்லியிருக்கிறாயா …?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி !
எப்படி முடியும் ?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி ..!
உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில் ..
உனக்கும் நினைவில்
வருமா ?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும் …!
இதில் பல கவிதைகள் நமது பள்ளி,மற்றும் கல்லூரிப் பருவத்து பெண் தோழிகளை நினைவூட்டும் விதமாக உள்ளது . சில கவிதைகள் நண்பர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது .
கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண் !
அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம் !
நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான் .அம்மா ,அப்பா ஏன் மனைவியிடம் சொல்ல முடியாததைக் கூட நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு .நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு .
பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது
நண்பர்களின் கூட்டுச் சிரிப்பு !
நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம் .நமக்கு ஒரு ஆபத்து என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம் .அவனால் முடிந்த உதவிகளை நண்பான் செய்வான் .நட்பு என்பது மிகவும் உயவ்ர்வானது .உன்னதமானது .
ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு ..
வானமாய் அது
வியாபிக்கிறது …!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!
நட்பில் நம்பிக்கை மிக முக்கியம் .நண்பனை சந்தேகிப்பது தவறு .என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ !
நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூற தேவையில்லை ..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை .
நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம் மறக்காது .கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும் .ஆசிரியர்கள் முகமும் மறப்பதே இல்லை .
உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை .
நண்பனின் முகங்கள் ..!
தோழிகளின் முகவரிகள் ..!
நூல் முழுவதும் பிடித்த கவிதைகள் .எதை எழுதுவது ? எதை விடுவது ? குழப்பத்தில் ஆழ்ந்தேன் .நூலை படித்து முடித்ததும் ,கவிஞர் பா .விஜய் உள்பட என்னுடைய அனைத்து நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன் .இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17
விலை ரூபாய் 60
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே ” பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன் .அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின் நாட்கள் ! நட்பின் மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான நண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று சொல்லலாம் .
நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது .நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள் உள்ளது .நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது .
நூலில் முதல் கவிதையே முத்தாப்பாக உள்ளது .உங்கள் பார்வைக்கு இதோ கவிதை !
நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க ..
நாம் கோபப்பட்டால் உடைக்க ..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல் ஆட
நாம் கிடந்து தூங்க !
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க ..
நாம் கிழிக்க ..!
இனிய நண்பர் பா .விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதால் மிக, மிக முக்கியமான கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன் .நட்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை .நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும் விரும்புவார்கள் எனபது உறுதி .நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது .இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் அவர்கள் .
பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட ,மலரும் நினைவுகளை தோற்றுவிக்கும் கவிதை இதோ !
மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!
இளம் ஆண் நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது .அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்..
அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம் !
தலைப்பு – பெண் .
இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விருபும் கேள்வி போல ஒரு கவிதை .
சொல்லியிருக்கிறாயா …?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி !
எப்படி முடியும் ?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி ..!
உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில் ..
உனக்கும் நினைவில்
வருமா ?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும் …!
இதில் பல கவிதைகள் நமது பள்ளி,மற்றும் கல்லூரிப் பருவத்து பெண் தோழிகளை நினைவூட்டும் விதமாக உள்ளது . சில கவிதைகள் நண்பர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது .
கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண் !
அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம் !
நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான் .அம்மா ,அப்பா ஏன் மனைவியிடம் சொல்ல முடியாததைக் கூட நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு .நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு .
பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது
நண்பர்களின் கூட்டுச் சிரிப்பு !
நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம் .நமக்கு ஒரு ஆபத்து என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம் .அவனால் முடிந்த உதவிகளை நண்பான் செய்வான் .நட்பு என்பது மிகவும் உயவ்ர்வானது .உன்னதமானது .
ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு ..
வானமாய் அது
வியாபிக்கிறது …!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!
நட்பில் நம்பிக்கை மிக முக்கியம் .நண்பனை சந்தேகிப்பது தவறு .என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ !
நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூற தேவையில்லை ..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை .
நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம் மறக்காது .கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும் .ஆசிரியர்கள் முகமும் மறப்பதே இல்லை .
உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை .
நண்பனின் முகங்கள் ..!
தோழிகளின் முகவரிகள் ..!
நூல் முழுவதும் பிடித்த கவிதைகள் .எதை எழுதுவது ? எதை விடுவது ? குழப்பத்தில் ஆழ்ந்தேன் .நூலை படித்து முடித்ததும் ,கவிஞர் பா .விஜய் உள்பட என்னுடைய அனைத்து நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன் .இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
Re: நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மிக மிக அருமையாக இருக்கிறது ... வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது ,,, மிக்க நன்றி ரவி அண்ணே
அட்டை படம் போட்டால் அடையாளம் கண்டு விரைவாக வாங்கலாம் ...
அட்டை படம் போட்டால் அடையாளம் கண்டு விரைவாக வாங்கலாம் ...
Guest- Guest
Similar topics
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|