ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் காதல்...

3 posters

Go down

மணிமேகலையின் காதல்... Empty மணிமேகலையின் காதல்...

Post by சிவா Wed Aug 01, 2012 12:08 am

துறவு வாழ்க்கையைத் தானே மேற்கொண்டபோது ஒருவர் காதலில் புக விரும்புவதில்லை. இளமையில் துறவு திணிக்கப்பட்டபோது, இளமைக் காதல் அவ்வப்போது தலைகாட்டுவதும் நேரிடுகிறது. மணிமேகலையின் முற்பிறப்பு வாழ்க்கையும் காதல் தொடர்வதற்குக் காரணமாகிறது. துறவு மேற்கொண்டாலும் முற்பிறப்பில் உதயகுமரன் தன் கணவன் என்றறியும்பொழுது அவனிடம் மணிமேகலைக்குக் காதல் ஏற்படுவது இயல்பாகிறது.

உதயகுமரனின் வரவு கண்டு மணிமேகலை சுதமதியிடம். ""என்மேல் வைத்த உள்ளத்தாள் (4:80) என்று கூறுகிறாள். பளிக்கறையில் ஒளிந்திருந்த மணிமேகலையைக் கண்டு உதயகுமரன்,

""கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டி''


என்று அவளைப் பழிக்கிறான். அப்போதும் மணிமேகலை, அவனை வெறுக்கவில்லை. மாறாக,

""இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுகதன் றிறமென''
(5:88-91)

என்று சுதமதியிடம் காமத்தைப் பற்றிக் கூறி வியக்கிறாள். மணிமேகலா தெய்வம்,

""ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்''
(10:44-45)

என்று கூறியபோது மணிமேகலை மறுக்கவில்லை. உடன்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அமைதி காக்கிறாள். தீவதிலகை மணிமேகலையிடம் நீ யார்? என்று கேட்டபோது முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் தான் யார் என்பதை விளக்குகிறாள்.

""எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது
பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியிற் பூமியங் கிழவன்
இராகுலன் மனையா னிலக்குமி யென்பேர்
ஆய பிறவியி லாடலங் கணிகை
மாதவி யீன்ற மணிமே கலையான்
(11:9-14)

என்று தீவதிலகையிடம் கூறுகிறாள். உதயகுமரன் அம்பலம் புகுந்து தவத்திற்குக் காரணம் கேட்டபோது, மணிமேகலை, "என்னமர் காதலன் இராகுலன்' என நினைத்து அவன் அடி வணங்குகிறாள்.

இப்பிறப்பில் துறவியாகிய தன்னை மற்றவர் வணங்க வேண்டும்; தான் மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மணிமேகலை மறக்கிறாள். தன்னை இராகுலனின் மனைவி என்று நினைத்தே அவனை வணங்குகிறாள்.

தொன்று காதலன் சொல் மறுக்கக் கூடாது; நன்றியன்று என நடுங்குகிறாள். (18:128-133) உதயகுமரன் கொலையுண்ட போதும்,

""பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல!
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோ''
(21:19-24)

என மணிமேகலை அரற்றுகிறாள். இராசமாதேவி தன்னை வணங்கியபோதும், காதலற் பயந்ததற்காகவும், காவலன் மாபெருந்தேவி என்பதற்காகவும் வணங்கியதாகக் கூறப்படுகிறது. (23:146-147)

சாத்தனார் முற்பிறவிக் கொள்கைகளை வற்புறுத்தினார். அதே நேரத்தில் புத்தன் திருவடிகளை அடைவதற்கு - நிர்வாணம் பெறுவதற்கு - முற்பிறவியை அறுக்க வேண்டும். காதல் உணர்வைக் கடிய வேண்டும் என்னும் பௌத்தக் கொள்கையை வலியுறுத்தினார்.

முனைவர் சரளா இராசகோபாலன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by அசுரன் Wed Aug 01, 2012 12:14 am

கவிதை வரிகள் தவிர (பாதி புரிந்தது) மற்றவை புரிந்தது... முற்பிறப்பின் தொடர்ச்சியை இப்பிறவியில் சந்திக்கும் மணிமேகலை... சோதனைகளை கடந்த சாதனை..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:08 pm

அன்பும் காதலும் வெறுப்பை தராது. நல்ல தகவல். நன்றி.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum