ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் காதல்...

3 posters

Go down

மணிமேகலையின் காதல்... Empty மணிமேகலையின் காதல்...

Post by சிவா Wed Aug 01, 2012 12:08 am

துறவு வாழ்க்கையைத் தானே மேற்கொண்டபோது ஒருவர் காதலில் புக விரும்புவதில்லை. இளமையில் துறவு திணிக்கப்பட்டபோது, இளமைக் காதல் அவ்வப்போது தலைகாட்டுவதும் நேரிடுகிறது. மணிமேகலையின் முற்பிறப்பு வாழ்க்கையும் காதல் தொடர்வதற்குக் காரணமாகிறது. துறவு மேற்கொண்டாலும் முற்பிறப்பில் உதயகுமரன் தன் கணவன் என்றறியும்பொழுது அவனிடம் மணிமேகலைக்குக் காதல் ஏற்படுவது இயல்பாகிறது.

உதயகுமரனின் வரவு கண்டு மணிமேகலை சுதமதியிடம். ""என்மேல் வைத்த உள்ளத்தாள் (4:80) என்று கூறுகிறாள். பளிக்கறையில் ஒளிந்திருந்த மணிமேகலையைக் கண்டு உதயகுமரன்,

""கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டி''


என்று அவளைப் பழிக்கிறான். அப்போதும் மணிமேகலை, அவனை வெறுக்கவில்லை. மாறாக,

""இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுகதன் றிறமென''
(5:88-91)

என்று சுதமதியிடம் காமத்தைப் பற்றிக் கூறி வியக்கிறாள். மணிமேகலா தெய்வம்,

""ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்''
(10:44-45)

என்று கூறியபோது மணிமேகலை மறுக்கவில்லை. உடன்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அமைதி காக்கிறாள். தீவதிலகை மணிமேகலையிடம் நீ யார்? என்று கேட்டபோது முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் தான் யார் என்பதை விளக்குகிறாள்.

""எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது
பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியிற் பூமியங் கிழவன்
இராகுலன் மனையா னிலக்குமி யென்பேர்
ஆய பிறவியி லாடலங் கணிகை
மாதவி யீன்ற மணிமே கலையான்
(11:9-14)

என்று தீவதிலகையிடம் கூறுகிறாள். உதயகுமரன் அம்பலம் புகுந்து தவத்திற்குக் காரணம் கேட்டபோது, மணிமேகலை, "என்னமர் காதலன் இராகுலன்' என நினைத்து அவன் அடி வணங்குகிறாள்.

இப்பிறப்பில் துறவியாகிய தன்னை மற்றவர் வணங்க வேண்டும்; தான் மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மணிமேகலை மறக்கிறாள். தன்னை இராகுலனின் மனைவி என்று நினைத்தே அவனை வணங்குகிறாள்.

தொன்று காதலன் சொல் மறுக்கக் கூடாது; நன்றியன்று என நடுங்குகிறாள். (18:128-133) உதயகுமரன் கொலையுண்ட போதும்,

""பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல!
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோ''
(21:19-24)

என மணிமேகலை அரற்றுகிறாள். இராசமாதேவி தன்னை வணங்கியபோதும், காதலற் பயந்ததற்காகவும், காவலன் மாபெருந்தேவி என்பதற்காகவும் வணங்கியதாகக் கூறப்படுகிறது. (23:146-147)

சாத்தனார் முற்பிறவிக் கொள்கைகளை வற்புறுத்தினார். அதே நேரத்தில் புத்தன் திருவடிகளை அடைவதற்கு - நிர்வாணம் பெறுவதற்கு - முற்பிறவியை அறுக்க வேண்டும். காதல் உணர்வைக் கடிய வேண்டும் என்னும் பௌத்தக் கொள்கையை வலியுறுத்தினார்.

முனைவர் சரளா இராசகோபாலன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by அசுரன் Wed Aug 01, 2012 12:14 am

கவிதை வரிகள் தவிர (பாதி புரிந்தது) மற்றவை புரிந்தது... முற்பிறப்பின் தொடர்ச்சியை இப்பிறவியில் சந்திக்கும் மணிமேகலை... சோதனைகளை கடந்த சாதனை..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:08 pm

அன்பும் காதலும் வெறுப்பை தராது. நல்ல தகவல். நன்றி.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum