Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
+2
இரா.பகவதி
சிவா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
பெண்கள் பழைய காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அதனால் அவர்கள் தூரத்து உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அவர்களது பெயரை மட்டும் கூறி அறிமுகம் செய்தால் அடையாளம் தெரியாது. அதனால் இன்னாரது மகள், இன்னாரது மனைவி என்று சொல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் திருமணத்திற்கு முன்பு பெண், தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும்- திருமணத்திற்கு பின்பு கணவரது பெயரையும் இணைத்துக்கொண்டார்கள்.
பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது. பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும். அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் செல்கிறார்..
"கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக் கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது''- என்கிறார்.
தினத்தந்தி!
பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது. பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும். அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் செல்கிறார்..
"கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக் கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது''- என்கிறார்.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
பகிர்வுக்கு நன்றி சிவா
இப்படியா பகவதி
இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
இப்படியா பகவதி
பகவதி ஆயா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.
ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
முஹைதீன் wrote:சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.
ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.
ஆசை அதிகமா இல்லை, லைட்டா..,
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
முரளிராஜா wrote:உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா
உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் எழுத முடியுது. ரசித்தேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
தல இந்த விஷயம் அண்ணிக்கு தெரியதுக்கு முன்னாடி தலைமறைவா ஆயிடுங்க இல்லாட்டி நிங்க தலை இல்லாம சுத்த வேண்டி இருக்கும்
Re: ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சிவாஇரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
இப்படியா பகவதிபகவதி ஆயா
போயா நான் இன்னைக்கு உங்க விட்டுல போடுற குண்டுல உங்களுக்கு இனி விட்டுல சோறு எப்படி போடுரங்கனு பாக்குறேன்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் !
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்
» ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்
» ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|