Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
5 posters
Page 1 of 1
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
நள்ளிரவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆக்ராவில் பாதிப்பு
மின்சாரத்தை மாநிலங்கள் எடுத்து கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே மின்தொகுப்பு நிலையங்கள் (பவர் கிரிட் ஸ்டேஷன்) உள்ளன. அதிக மின் அழுத்தம், குறை மின் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் அந்தந்த பகுதி மின் நிலையங்களை இந்த தொகுப்பு நிலையங்கள் எச்சரிக்கை செய்யும். அதேபோல், மாநிலங்கள் எந்த அளவில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றன என்பதையும் இந்த தொகுப்பு நிலையங்கள் கண்காணிக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் இதுபோல் ஒரு மின்தொகுப்பு நிலையம் உள்ளது. அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.35 மணி அளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின.
ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லி, ஆக்ரா, அம்பாலா, ஜான்சி, அலகாபாத், மொராதாபாத், கோடா ஆகிய 7 ரெயில்வே மண்டலங்களில் ராஜ்தானி, சதாப்தி, டொராண்டோ உள்பட 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகை மாற்றி அமைக்கப்பட்டன.
பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய ரெயில்கள் 4 மணி முதல் 11 மணி நேரம் வரை தாமதமாக வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில்
அதேபோல், டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்து காலை 9 மணிக்கு சரியானது. 11 மணிக்கு வழக்கமான இயல்பு நிலைமை திரும்பியது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் 15 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 15 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன.
மத்திய மந்திரி பேட்டி
இதுபற்றி மத்திய மின்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:-
``10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இதுபோன்ற பழுது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை.
பொதுவாக இதுமாதிரி பெரிய அளவில் மின்சார பழுது ஏற்படும் சமயங்களில், மத்திய மின்சார அமைச்சகம் மற்ற மின் தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தும். ஆனால், ஆக்ரா அருகில் உள்ள மின்தொகுப்பு நிலையத்தில் நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால் மற்ற மின்தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தமுடியவில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கமிட்டி அமைப்பு
தற்போது, 60 சதவீத மண்டலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
இதுபற்றி ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தர, மத்திய மின்வாரிய ஆணைய தலைவர் ஏ.எஸ்.பக்ஷி, மத்திய மின்தொகுப்பு வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஏ.எம்.நாயக், பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.சோனே ஆகியோரைக் கொண்ட ஒரு உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கமிட்டி வடமாநில மின்தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி 15 நாளில் அறிக்கை அளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகமாக எடுக்கப்பட்டதா?
``சில மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்ததால் இந்த கோளாறு ஏற்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``விசாரணை கமிட்டி அறிக்கை கொடுத்த பின்னர்தான் அதுபற்றி தெரிய வரும்'' என்று அவர் சொன்னார்.
``நமது தேவையை சமாளிக்க பூடான் உள்பட பல இடங்களில் இருந்து தற்போது நீர்மின்சாரம் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற்று வருகிறோம். கிழக்கு மற்றும் மேற்கு தொகுப்பில் இருந்து வடக்கு மண்டலம் மின்சாரத்தை பெற்று வருகிறது'' என்றும் அவர் கூறினார்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இவங்க ஏன் ஷாக் ஆகறாங்க?
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
வட மாநிலங்களில் மின்தடை: சுரங்கங்களில் சிக்கிக்கொண்ட 200 தொழிலாளர்கள்
மே.வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மின் தடையால் இந்த சுரங்கங்களில் வேலைக்குச் சென்ற 200 தொழிலாளர்கள் பாதாள சுரங்கத்தில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் வெளியேற `லிப்டு'கள் வேலை செய்ய வில்லை. இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவியது.
இதுபற்றி கிழக்கு நிலக்கரி சுரங்கங்களின் தொழில்நுட்ப பொது மேலாளர் நிலாத்ரி ராய் கூறுகையில், ``பாதாள சுரங்கங்களில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லபட்டு நலமுடன் உள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 25 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
தமிழ்நாடு கடந்த இரண்டு வருடமாக இருள்லயே குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்கு.. இதை எந்த மத்திய அமைச்சரும், மத்திய மின்வாரியமும் கண்டுக்கல... இப்ப பாருங்க என்னா கூப்பாடு..
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
ப (பக்கி) சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் - அந்த செய்திய நம்ம பத்திரிக்கைல ஏன் பிரசுரம் பன்னல இது வரைக்கும்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
ஆமா ஆமாராஜா wrote:8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும்.![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு
» கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» மின்சார கம்பத்தின் மீது லாரி மோதியதால், 130 கி.மீ.பரப்பில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின
» கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» மின்சார கம்பத்தின் மீது லாரி மோதியதால், 130 கி.மீ.பரப்பில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|