Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
+16
Manik
manimac
அருண்
ராஜா
அசுரன்
பாலாஜி
பிரசன்னா
பிளேடு பக்கிரி
தர்மா
யினியவன்
மகா பிரபு
விநாயகாசெந்தில்
முஹைதீன்
பிஜிராமன்
சிவா
ரா.ரமேஷ்குமார்
20 posters
Page 1 of 21
Page 1 of 21 • 1, 2, 3 ... 11 ... 21
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
லண்டன், ஜூலை.28-
உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.
தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.
இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.
லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.
இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.
இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.
கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.
அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.
தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-மாலை மலர்
உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.
தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.
இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.
லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.
இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.
இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.
கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.
அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.
தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒலிம்பிக்கில் இன்று துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பளுதூக்குதலில் களம் இறங்குகிறது, இந்தியா
லண்டன், ஜுலை.28-
லண்டன் ஒலிம்பிக்கில் 81 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2-வது
நாளான இன்று இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும், அப்போட்டி
தொடங்கும் இந்திய நேரம் பற்றிய விவரமும் வருமாறு:-
லண்டன் ஒலிம்பிக்கில் 81 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2-வது
நாளான இன்று இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும், அப்போட்டி
தொடங்கும் இந்திய நேரம் பற்றிய விவரமும் வருமாறு:-
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதலில் 4 வீராங்கனைகள் உள்பட 11 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. ஒலிம்பிக்
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பெரிய அணி இது தான். கடந்த ஒலிம்பிக்கில்
தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங், ரஞ்சன் சோதி உள்ளிட்டோர்
மீது பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பெரிய அணி இது தான். கடந்த ஒலிம்பிக்கில்
தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மற்றும் ககன் நரங், ரஞ்சன் சோதி உள்ளிட்டோர்
மீது பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான
10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் துப்பாக்கி
சுடுதலில் தான் லண்டன் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கம்
வழங்கப்படுகிறது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் துப்பாக்கி
சுடுதலில் தான் லண்டன் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப்பதக்கம்
வழங்கப்படுகிறது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் மட்டும் இந்தியாவின் விஜய்குமார் கலந்து கொள்கிறார்.
அவருடன் மொத்தம் 45 பேர் களத்தில் உள்ளனர். முதலில் இந்திய நேரப்படி மாலை
4.30 மணிக்கு தகுதி சுற்று நடக்கும். இதில் இருந்து 8 பேர்
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இரவு 8 மணிக்கு இறுதி சுற்று
நடைபெறும்.
அவருடன் மொத்தம் 45 பேர் களத்தில் உள்ளனர். முதலில் இந்திய நேரப்படி மாலை
4.30 மணிக்கு தகுதி சுற்று நடக்கும். இதில் இருந்து 8 பேர்
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இரவு 8 மணிக்கு இறுதி சுற்று
நடைபெறும்.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் 3 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான விஜய்குமார், குவாங்ஷூவில்
நடந்த ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்த ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ்:
டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டனில் இன்று ஆரம்பிக்கின்றன. முதல் நாளில் பெண்கள்
இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி களம்
இறங்குகிறது. இவர்கள் முதல் சுற்றில் சீனத்தைபேயின் சுவாங் சியா ஜங்-ஹூசைய்
சு வெய் இணையை(இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு) சந்திக்கிறார்கள்.
இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி களம்
இறங்குகிறது. இவர்கள் முதல் சுற்றில் சீனத்தைபேயின் சுவாங் சியா ஜங்-ஹூசைய்
சு வெய் இணையை(இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு) சந்திக்கிறார்கள்.
ஒற்றையரில் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கொலம்பியாவின்
அலெஜான்ட்ரோ பல்லாவையும், பெண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன்
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச்சையும் சந்திக்க
இருப்பது முதல் நாளில் நடக்கும் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் ஆகும்.
அலெஜான்ட்ரோ பல்லாவையும், பெண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன்
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜான்கோவிச்சையும் சந்திக்க
இருப்பது முதல் நாளில் நடக்கும் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் ஆகும்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின்
மேக்ஸ் மிர்னி-அலெக்சாண்டர் பரி ஜோடியையும், லியாண்டர் பெயஸ்-விஷ்ணு வர்தன்
இணை, நெதர்லாந்தின் ஜுலியன் ஜீன் ரோஜர், ராபின் ஹாஸ் இணையையும்
எதிர்கொள்கிறது.
மேக்ஸ் மிர்னி-அலெக்சாண்டர் பரி ஜோடியையும், லியாண்டர் பெயஸ்-விஷ்ணு வர்தன்
இணை, நெதர்லாந்தின் ஜுலியன் ஜீன் ரோஜர், ராபின் ஹாஸ் இணையையும்
எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் வைல்டு கார்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் ரவுண்டில் பின்லாந்தின்
ஜார்க்கோ நிமினனுடன் மோதுகிறார்.
ஜார்க்கோ நிமினனுடன் மோதுகிறார்.
பளுதூக்குதல்:
சில ஆண்டுகளாக ஊக்கமருந்தினால் அல்லோலப்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் அணியை
தூக்கி நிறுத்தும் உத்வேகத்துடன் ரவிகுமார் (69 கிலோ), சோனியா சானு (48
கிலோ) ஆகியோர் ஒலிம்பிக்குக்கு வந்துள்ளனர்.
தூக்கி நிறுத்தும் உத்வேகத்துடன் ரவிகுமார் (69 கிலோ), சோனியா சானு (48
கிலோ) ஆகியோர் ஒலிம்பிக்குக்கு வந்துள்ளனர்.
இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி இன்று நடக்கிறது. இரவு 8
மணிக்கு நடக்கும் இந்த பந்தயத்தில் 14 வீராங்கனைகள் போட்டியிடுகிறார்கள்.
இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் போட்டி நடைபெறும்.
இரு பிரிவிலும் மூன்று முறை எடை தூக்க அனுமதிக்கப்படும்.சிறந்த நிலையை
கணக்கிட்டு, ஒட்டுமொத்தத்தில் அதிக எடையை தூக்கும் வீராங்கனைக்கு
தங்கப்பதக்கம் கிடைக்கும்.
மணிக்கு நடக்கும் இந்த பந்தயத்தில் 14 வீராங்கனைகள் போட்டியிடுகிறார்கள்.
இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் போட்டி நடைபெறும்.
இரு பிரிவிலும் மூன்று முறை எடை தூக்க அனுமதிக்கப்படும்.சிறந்த நிலையை
கணக்கிட்டு, ஒட்டுமொத்தத்தில் அதிக எடையை தூக்கும் வீராங்கனைக்கு
தங்கப்பதக்கம் கிடைக்கும்.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிசில் 19 வயது நிரம்பிய அங்கிதா தாஸ், சவும்யாஜித் கோஷ் ஆகிய இரு
இந்தியர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.
முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு வந்திருக்கும் இருவரும் இன்று களம்
காணுகிறார்கள்.
இந்தியர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.
முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு வந்திருக்கும் இருவரும் இன்று களம்
காணுகிறார்கள்.
அங்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்பெயினின் சாரா ராமிரெசுடனும் (மாலை 4.30 மணி), ஆண்கள்
ஒற்றையரில் சவும்யாஜித் கோஷ், பிரேசிலின் குஸ்தவோ சுபோயுடனும் (இரவு 8.30 மணி) மோதுகிறார்கள்.
ஒற்றையரில் சவும்யாஜித் கோஷ், பிரேசிலின் குஸ்தவோ சுபோயுடனும் (இரவு 8.30 மணி) மோதுகிறார்கள்.
துடுப்பு படகு:
துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல் பிரிவின் தகுதி சுற்றில்
இந்தியாவின் ஸ்வரன் சிங் (மாலை 5 மணி) களம் காணுகிறார்.
இந்தியாவின் ஸ்வரன் சிங் (மாலை 5 மணி) களம் காணுகிறார்.
பேட்மிண்டன்:
பேட்மிண்டனில் மூன்று ஆட்டங்களில் இந்தியா இன்று பேட்டை சுழற்ற இருக்கிறது. ஆண்கள்
ஒற்றையர் குரூப் பிரிவில் (பிற்பகல் 2 மணிக்கு பிறகு) இந்தியாவின்
காஷியாப், பெல்ஜியத்தின் யுஹான் டானுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையரில்
இந்தியாவின் ஜுவாலா கட்டா-திஜு கூட்டணி, குரூப் சுற்றில் இந்தோனேஷியாவின்
டோன்டோவி அகமது-லிலியானா நாட்சிர் ஜோடியை (மாலை 5.30 மணி) எதிர்கொள்கிறார்.
இதே போல் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி,
ஜப்பானின் மிசூகி புஜீ-ரெய்கா காகீவா இணையுடன் (இரவு 8 மணி) மோதுகிறது.
-மாலை மலர் ஒற்றையர் குரூப் பிரிவில் (பிற்பகல் 2 மணிக்கு பிறகு) இந்தியாவின்
காஷியாப், பெல்ஜியத்தின் யுஹான் டானுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையரில்
இந்தியாவின் ஜுவாலா கட்டா-திஜு கூட்டணி, குரூப் சுற்றில் இந்தோனேஷியாவின்
டோன்டோவி அகமது-லிலியானா நாட்சிர் ஜோடியை (மாலை 5.30 மணி) எதிர்கொள்கிறார்.
இதே போல் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி,
ஜப்பானின் மிசூகி புஜீ-ரெய்கா காகீவா இணையுடன் (இரவு 8 மணி) மோதுகிறது.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
ஒலிம்பிக் செய்திகளுக்கு நன்றி ரமேஷ்குமார்! ஒலிம்பிக் செய்திகள் அனைத்தையும் 'லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்' என்ற திரியில் தொடர்ந்து பதிவிடுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
சரி அண்ணா இனி இவ்வாறே பதிவிடுவோம்...சிவா wrote:ஒலிம்பிக் செய்திகளுக்கு நன்றி ரமேஷ்குமார்! ஒலிம்பிக் செய்திகள் அனைத்தையும் 'லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்' என்ற திரியில் தொடர்ந்து பதிவிடுவோம்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
ஒலிம்பிக்ஸ் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல் இருந்தால் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
நல்ல தகவல்கள்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
திரி துவங்கிய ரமேஷ் குமார் அவர்களுக்கு நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
பிஜிராமன் wrote:ஒலிம்பிக்ஸ் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல் இருந்தால் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே.....
நம்ம பிஜிக்கு யாருமே உதவவில்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
ஒலிம்பிக் : சீனா முதல் தங்கம்
30வது ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், சீன வீராங்கனை யி சிலிங், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த பீஜிங் ஒலிம்பிக்கின்போதும், சீனா அதிக தங்க பதக்ககங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
30வது ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், சீன வீராங்கனை யி சிலிங், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த பீஜிங் ஒலிம்பிக்கின்போதும், சீனா அதிக தங்க பதக்ககங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 21 • 1, 2, 3 ... 11 ... 21
Similar topics
» எபோலா - செய்தித் தொகுப்புகள்
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
» இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்
» விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!
» கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
» இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்
» விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!
» கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்
Page 1 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|