புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
25 Posts - 39%
heezulia
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 2%
Barushree
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 2%
M. Priya
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
7 Posts - 2%
prajai
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:23 pm

எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? 529637_377578335629101_1331454255_n


ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர்வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடப் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது.ஆனால், ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்.

மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறை யினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டி ருக்கும் நூதன மாற்றம் இது.

ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள். ஒரு டாக்டர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!

இன்றைக்கு நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்தாலே போதும், அதிலிருந்து வருகிற கமிஷன், சிகிச்சை பெற வருவோர் தரும் ஃபீûஸக் காட்டிலும் பலப்பல மடங்கு அதிகம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் டாக்டர்களுக்குக் கிடைக்கிற கமிஷன் விகிதத்தைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்; பி.பி. எகிறும்.

மதுரை போன்ற நகரத்தில், மூளைக்கான சிடி ஸ்கேனுக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது; இதில் டாக்டருக்கான கமிஷன் ரூ. 1,500. சிடி ஸ்கேன் நடத்தும் நிறுவனத்துக்கு கிடைப்பது ரூ. 1,000 மட்டுமே.
அதேபோல், மூளைக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு வசூலிக்கப் படுவது ரூ. 6,000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூ. 4,000. மீதி ரூ. 2,000 மட்டுமே ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு. இது தவிர டாக்டரிட மிருந்து வரும் ஒவ்வொரு 6-வது பரிந்துரை மூலமாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கமிஷனாக டாக்டருக்கே தரப்படுகிறது.

டாக்டருக்குத் தந்தது போக மீதியுள்ள தொகையில் ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு லாபம் இருக்கும். அது இல்லாமல் நிறுவனத்தை நடத்த இயலாது. அப்படியெனில், ஒரு ஸ்கேனுக்கான அசலான மதிப்புதான் என்ன? கமிஷனையும் லாபத்தையும் நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு ஸ்கேன் ரூ. 500-க்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ரூ. 1,000-க்கும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால், ரூ. 500 மதிப்புள்ள சி.டி. ஸ்கேனை ரூ. 2,500-க்கும்; ரூ. 1,000 மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை ரூ. 6,000-க்கும் பெற்று வருகிறோம். கிட்டத்தட்ட 5 அல்லது 6 மடங்கு லாபம் இந்தத் துறையில் புகுந்து விளையாடு கிறது. இதில் பெரும்பகுதி டாக்டர்களுக்குக் கொடுப்ப தற்காக நோயாளிகளிடமிருந்து பறிக்கப்படுவதாகும்.
எந்தத் துறையிலும் கமிஷன் பெறுவது என்பது லஞ்சத் துக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே நடந்து வருகிறது.

இதுதான் இப்படியெனில், மருந்துப்பொருள்கள் விற்பனையிலும் மருத்துவ அறிவியல் உபகரணங்கள் விற்பனையிலும் (சயன்டிஃபிக் எக்யுப்மென்ட்ஸ் சேல்ஸ்) அடிக்கப்படும் கொள்ளை அளவு கடந்தது.
உதாரணமாக, லேடக்ஸ் கையுறைகள் 100 கொண்ட டப்பாவின் சந்தை விலை (எம்ஆர்பி விலை) ரூ. 600. இதனை மருந்துக் கடைகளில் வாங்காமல் மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால், ரூ. 200-லிருந்து ரூ. 250-க்குள் கிடைக்கும்.

இதில், மொத்த விற்பனையாளருக்கு ஒரு லாபம் இருக்கத்தான் செய்யும். கையுறைகளை அவருக்கு விநியோகித்தவர் இன்னும் குறைவான விலைக்குத் தான் விநியோகித்திருப்பார். குறைவான விலைக்கு விநியோகித்தவரும் ஒரு லாபத்துடன்தான் சரக்கைத் தள்ளி விட்டிருப்பார். கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அந்த விநியோகஸ்தருக்கு இன்னும் குறைவான விலையில்தான் சப்ளை செய்திருக்கும். அதில், உற்பத்தி செய்யும் கம்பெனிக்கும் ஒரு லாபம் இருக்கும். இப்படியே கழித்துக்கொண்டு போனால், அந்தக் கையுறைகளின் அசல் மதிப்பு ரூ. 50 தேறினால் அதிசயம்! ஆனால், அது சந்தை விலையில் ரூ. 600-க்கு விற்கப்படுகிறது.

அதாவது பொதுமக்களை வந்து சேர்கிறபோது, சராசரி யாக 1,000 சதவிகித லாபத்தில் விற்கப்படுகிறது. மக்களின் உயிர்காக்கும் இந்தத் துறையில் இத்தனை திருவிளையாடல்கள் இருப்பது, இந்தியா மாதிரியான கோடானுகோடி "தரித்திர நாராயணர்'களைக் கொண்ட தேசத்துக்கு அடுக்குமா?

இதற்குக் காரணம் என்ன?

அரசின் அபத்தமான கொள்கை. அல்லது கொள்கையே இல்லாமல் இருப்பது. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதும்; தன் வசம் இருக்கும் மருத்துவத் துறையை நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கியதும் அரசு செய்த மாபெரும் தவறு.

தனியாருக்குப் போட்டியாக பல்வேறு ஸ்கேன் மையங்களை அரசே தனது முதலீட்டில் ஏன் தொடங்கக் கூடாது? அப்படிச் செய்தால், அசல் விலையில் மக்கள் பயன் பெறுவார்களே! மேலும், அரசின் போட்டி காரணமாக தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அல்லவா!

மருத்துவத் துறையில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கையை அரசு உருவாக்காத வரை, இந்த அவலம் தொடர் கதையாகத்தான் இருக்கும். அதுவரை, குணமாக்குவதே டாக்டரின் கடமை என்கிற நிலை மாறி, பணமாக்குவதே அவர்கள் பணி என்ற நிலை தொடரத்தான் செய்யும்.

நன்றி : தினமணி & கோலாகல ஸ்ரீநிவாஸ்


முகநூல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 27, 2012 1:29 pm

மருத்துவப் படிப்புக்கு பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளதே! அங்கு கொடுத்த பணத்தை எந்த வழியில் மீட்டெடுப்பது.

முதலில் மருத்துவப் படிப்பிற்கு லஞ்சம் இல்லாத நிலை வரட்டும்! அப்புறம் மருத்துவர்களைக் குறை கூறலாம்!



எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:30 pm

இன்று சேவை மனப்பான்மை குறைந்து விட்டது.

குழிக்குள் போகிற வரை பணம் மட்டுமே தேவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக