ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

3 posters

Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by சிவா Thu Jul 26, 2012 10:27 am

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Love

இளமையில் மனைவியை இழக்கும் ஆண்களின் வாழ்க்கையை உள்ளபடியே ஒரு சூன்யம் சூழ்ந்துகொள்ளத்தான் செய்கிறது. மனைவியோடு வாழ்ந்து பாதி வேலையை அவள் தலையில் கட்டிவிட்ட அவர்கள், சுயமாக செயல்படவே தடுமாறிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு மனைவி ஒரு குழந்தையை கொடுத்துவிட்டுப்போயிருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது. அதனை பராமரிக்க வேண்டிய பொறுப்பு, வீட்டு நிர் வாகம், அதற்கு மேல் தனிமை இதெல்லாம் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடு கிறது.

மனைவியை இழந்த அவர் இப்படி தடுமாறிக்கொண்டிருக்கும்போது பெற்றோரும் உறவினர் களும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். இந்த மறுமணம் அவர்கள் வாழ்க்கையை நறுமணமாக்குமா என்பது கவனிக்கத்தகுந்த விஷயம்.

மறுமணம் அவசியம்தான். ஆனால் நன்றாக அறிமுகமான பெண்ணாக இருப்பது நல்லது என்று சொல்லி மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொள்ள முற்படுகிறவர்கள் அதிகம். வீட்டுப் பெரியவர்களும் அதற்கு ஒத்துழைப்பார்கள். அதன் முடிவு, அந்த பெண் ணின் மனதிற்குப் பிடிக்காத ஒரு கட்டாய திருமணம் அங்கு அரங்கேறும். அந்தப் பெண் ஏற்கனவே யாரையாவது மனதில் நினைத்திருந்தால் அவனைத் தூக்கி தூரவீசிவிட்டு, இந்த தியாக வேள்வியில் இறங்க வேண்டியிருக்கும். பிறகு அந்த மறுமணத்தில் சந்தோஷம் எங்கிருந்து வரும்?!

இளம் மனைவியை இழந்த ரமேஷின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். மனைவியை இழந்து தவித்த அவர் தனக்கு நன்கு அறிமுகமான, கணவனை இழந்த ஒரு பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தை கள். அந்தப் பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள். ஆறு பேர் இருந்ததால் அந்த குடும்பம் பெரிதாகிப்போனது. வருமானம் போதவில்லை. எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. வாழ்க்கையே போராட்டமாகிப் போனது.

அந்தப் பெண்ணுக்கோ குடும்ப பாரம் அதிமானது. இடப் பற்றாகுறை, பணப்பற்றாக்குறை, ஓய்வில்லாத உழைப்பு இதுவே வாழ்க்கையாகிப் போனது. இப்படி ஒரு மறுமணம் தேவை தானா என்று இருவரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். முடிவு மனமுறிவு, மண முறிவு, குடும்பத்தில் பிரிவு.

இந்த மாதிரி வாழ்க்கையில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

மனைவியை இழந்தவரிடம் போய் நின்றுகொண்டு அவரை, மறுமணத்திற்கு கட்டாயப்படுத்த கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம் மதிக்க வைக்கக் கூடாது. அவர்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். சிந்தித்து தனக்கு மறுமணம் அவசியம் என்று உணரும்பட்சத்தில் அவசரப்படாமல் அவருக்கு பெண் தேட வேண்டும். அதற்கான திருமண தகவல் மையங்களில் தகவல் பெறுவதாக இருந்தால், அந்த தகவல்கள் உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கூடுமானவரை நன்கு அறிமுகமான பெண்ணை தேர்வு செய்து அவர்கள் விருப்பத்துடன் மணமுடிப்பது அவசியம்.

நன்கு அறிமுகமானவர் என்றவுடன் சட்டென்று மனைவியின் தங்கை என்று தீர்மானித்து விட வேண்டாம். எடுத்த எடுப்பில் யாரும் இரண்டாம் தரமாக வர விரும்ப மாட்டார்கள். உறவுகள் மீது இருக்கும் பாசம் வேறு - திருமணம் வேறு. இரண்டையும் ஒன்றாக்கி குழப்ப வேண்டாம்.

விதவைப் பெண்ணை மணப்பது தவறல்ல. ஆனால் குடும்பப் பொறுப்பு பெரிதாகி விடாமல் இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் வாழ்க்கையை பெரிய அளவில் பாரமாக்கி விடும்.

மறுமணம் செய்துகொள்ளும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. `தங்களுக்கு மறுமணத்தில் அவ்வளவு பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்' என்பார்கள். குழந்தை களுக்காக அப்பா செய்துகொள்ளும் மறுமணம் பெரும்பாலும் வெற்றியடையாது. வளர்ந்த குழந்தைகளால் சுலபமாக புதிய அம்மாவை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளை மட்டும் மனதில்வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை தேர்வு செய்தால், அவள் வீட்டில் ஆயா வேலை பார்ப்பவள் போல் ஆகிவிடுவாள். தனக்கும் அந்த ஆயா போன்ற பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் மறுமண கணவர் நடந்துகொள்வார். அதனால் அந்த பெண்ணுக்கும் திருப்தியான வாழ்க்கை கிடைக்காது. அவருக்கும் திருப்தி கிடைக்காது. மறுமணத்தில் வாழ வரும் பெண்ணின் மனநிலையும் மிக முக்கியம். மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.

பண்டித ஜவஹர்லால் நேரு தனது மனைவி கமலாவின் இறப்பிற்கு பின் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன்னுடைய முழு நேரத்தையும் நாட்டு சேவைக்காக அர்ப்பணித்தார்.

புகழ் பெற்ற நடிகர் சுனில் தத், மனைவி நர்கீஸ் மறைவுக்கு பின் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களுடைய இல்வாழ்க்கையில் பரிசாக கிடைத்த மகனையும், மகளை யும் தனியாக நின்று வளர்த்து ஆளாக்கினார். சமூக சேவையில் ஈடுபட்டு தனிமையை போக்கிக் கொண்டார். அதனால் மறுமணம் கூடாது என்று சொல்வதிற்கில்லை. மறுமணத் தில் அவசரம் கூடாது. தக்க ஆலோசனையுடன் சூழ்நிலைகளை ஆராய்ந்து, எதிர்பார்க்கும் நிம்மதியை மறுமணம் தரும் என்றால் அதை செய்துகொள்ளலாம்.

தினத்தந்தி


மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by விநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 10:36 am

மகிழ்ச்சி சூப்பருங்க வித்தியாசமான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by சந்திரகி Thu Jul 26, 2012 11:40 am

சிவா wrote: மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.


மனமிணைந்து மணம் செழிக்க இதுவே வழி.

அருமையான பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

மறுமண வாழ்க்கையில் நறுமணம்.. Empty Re: மறுமண வாழ்க்கையில் நறுமணம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum