புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
65 Posts - 64%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சபலத்தின் சம்பளம் Poll_c10சபலத்தின் சம்பளம் Poll_m10சபலத்தின் சம்பளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபலத்தின் சம்பளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:36 am




பரமேஷ்வருக்கு காரை செலுத்துவதில் கவனம் செல்ல மறுத்தது. உடம்பெங்கிலும் ஒருவித படபடப்பும் பரபரப்பும் நிறைந்து கிடந்தது. மாலை ஐந்து மணி பூந்தமல்லி டிராபிக் ஒருபக்கம் காரை நிதானமாக செலுத்தவிடாமல் அவரை படுத்த ... மனதோ அதைவிடப் படுத்திற்று. ஐம்பத்தைந்து வயது ஆசாமிக்கு பெண் சபலம் வரக்கூடாது. கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகளும், தனியார் நிறுவனமொன்றில் உயர் பதவியில் மனைவியும் இருக்க... ஏன் இப்படி புத்தி தறிகெட்டுப் போயிற்று?

ஆயிரமாவது முறையாய் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

விட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு ஆறுமாத காலமாய் விதம்விதமான தூண்டில் வீசி... ரகசியமாய் பணம் பொருள் கொடுத்து அவளின் ஏழ்மை சூழ்நிலையை பயன்படுத்தி... காலையில் மனைவி அலுவலகத்திற்கு சீக்கிரமாய் கிளம்பி இருக்க... மகளும் ஏதோ காரணமாய் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றிருக்க.. வீடு பெருக்கி முடித்தவளை நைச்சியமாய் பேசி மடக்கி...

ஆனால் வீட்டுக் கதவு சரியாக தாழ்ப்பாள் போடாமல் இருக்க.... முதலாவது மாடியில் இருக்கும் அவரது மகள் வயதுடைய கல்லூரி முதலாமாண்டு படிக்கும் சியாமளா... திடுமென சுந்தரியைப் பார்க்க வீட்டிற்குள் பிரவேசிக்க... கையும் களவுமாய்...

அந்தக் காட்சியை கண்டு திடுக்கிட்டு திகைத்துப்போன சியாமளாவின் முகம் போன போக்கு அழிய மறுத்து நெஞ்சிலேயே ஒட்டிக் கொண்டது. இந்நேரம் தனது மகள் சுந்தரியிடம் சொல்லி இருப்பாளோ?

சுந்தரி, அம்மாவிடம் சொல்லியிருப்பாளோ...

வீட்டிற்குள் நுழைந்ததும் பிரளயம் வெடிக்குமோ?

சிக்னலை கடந்து அண்ணா நகர் ரவுண்டானாவை ஒரு சுற்று வந்தபோது அந்த கூட்டத்தை கவனித்தார். பெரும் கூட்டம். ஏராளமான கால்களுக்கிடையே ஒரு டூ வீலர் கீழே தாறுமாறாய்க் கிடப்பது தெரிந்தது...

சியாமளாவின் ஸ்கூட்டரே தான்... சந்தேகமில்லை.

சாலையில் வழிந்திருந்த ரத்தம் பார்த்ததும் இனம் பிரிக்க முடியாத ஒரு உணர்வு அவருக்குள் எழுந்தது. சந்தோஷம்?

சின்னப் பொண்ணு சார்... டிப்பர் லாரிக்காரன் அடிச்சிட்டான்... உயிர் இருக்கான்னு தெரியல... மண்டைல அடி... நூத்தியெட்டு ஆம்புலன்ஸ் தூக்கிட்டுப் போயிருக்கு...''

அவரது தோற்றத்தைப் பார்த்து ஒருவர் விளக்கம் கூறினார்.

"இப்ப தான் சார்.... பத்து நிமிஷம் இருக்கும்.... பொண்ணுகிட்ட செல்போன் இல்ல... வண்டில ரிகார்ட்ஸ் ஏதும் இல்ல... வீட்டுக்கு எப்படி தகவல் சொல்றதுன்னு யாருக்கும் தெரியல சார்...''

சியாமளாவின் உயிருக்கு ஆபத்து என்பது இப்போதைய அவரது மனநிலைக்கு ஒருவித ரிலாக்ஸான விஷயமாய் இருந்தது. மேல் வீட்டுப் பெண். ஆறு வருடங்களாக பழக்கம். மகளுக்கு நெருக்கமான தோழி. அவரைப் பார்க்கும்போதெல்லாம் `ஹலோ' சொல்லாமல் போக

மாட்டாள்...விபத்தில் சிக்கி இருக்கிறாள்... மண்டையில் அடி... ஏராளமான ரத்தப் பெருக்கு... ஆனால் தனக்கு பதட்டம் ஏதும் ஏற்படவில்லையே... அது ஏன்?

உயிருக்கு ஆபத்து... எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று விசாரித்து உடனடியாக அங்கே செல்லலாம்... அவள் வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்...

ஆனால்... சியாமளா காப்பாற்றப்பட்டு விட்டால்...?

காலையில் அவள் பார்த்த அந்த காட்சி...

பரமேஷ்வர் மனிதம் மறந்தார்.

ஏனோ மனது உற்சாகமாய் இருக்க காரை ஸ்டார்ட் செய்து குழப்பமின்றி வீட்டை நோக்கிச் செலுத்தினார். அப்பாட்மெண்ட் அமைதியாக இருந்தது. காரை பார்க் செய்து இறங்கினார். யாருக்கும் தகவல் தெரியவில்லை. தெரிந்தால் இந்நேரம் பரபரப்பாக இருக்கும். அவருக்கும் தகவல் வந்திருக்கும். எப்படி சியாமளாவை அடையாளம் காண்பார்கள்? பிழைப்பாளா... மண்டையில் அடி என்றார்களே... ஒரு சமயம் உயிர்பிழைத்து ஆனால் நினைவுகள் தப்பி..

இந்த இரண்டில் எது நடந்தாலும் ஓகே தான்...

மனைவி லெட்சுமி கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்தவரிடம் படபடப்பாகப் பேசினாள்... "ஏங்க... இந்த சுந்தரிப் பொண்ணுக்கு எப்பதான் பொறுப்பு வருமோ? அவ பைக் பங்ச்சர்... ஏதோ அவசரம் அண்ணாநகர்ல ஒரு பிரெண்டை பார்க்கணும்னு மேல் வீட்டு சுந்தரி பைக்கை வாங்கிட்டு போயிருக்கா... செல்போனை விட்டுட்டுப் போயிட்டா... போயி ரெண்டு மணி நேரமாகுதுங்க... என்னமோ தெரியல... நெஞ்சு முழுக்க பக்பக்ன்னு இருக்குதுங்க...'

- திருவாரூர் பாபு



சபலத்தின் சம்பளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 2:11 pm

சபலத்துக்கு சம்பளம் என்று சொல்வதைவிட மனித நேயம் மறந்ததுக்கு சம்பளம் என்று சொல்லலாம்
பகிர்வுக்கு நன்றி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக