ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?

Go down

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Empty யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?

Post by விநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 7:06 pm

டி.வி-க்கள்... நாளிதழ்கள்... தொடர்ந்து பார்க்கிறவர்கள் அந்த மனிதர் முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது!

கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்​பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்?

'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்​தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப் பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன.



கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''கடன் வழங்கும் நிறுவனங்​களை நடத்த ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கடன் தருபவர் யார்? கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் மிகமுக்கியம். நீங்கள் குறிப்பிடும் அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. எனவே, அவர்களின் பாதை தவறானது என்பது முதலில் தெளிவாகிறது.



மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும். வட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும். இதை ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் செய்ய முடியாது. ஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது. இது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வரையறை உள்ளது. அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும். ஆனால் அப்ரோ நிறுவனம், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது. இது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். ''அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எங்கள் கவனத்​துக்கு வந்துள்ளது. எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மகளிர் சுய உதவிக்குழுப் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?

பூந்தமல்லி நாசரேத் பேட்டையில் உள்ள சாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும், வேலூர் அழகாபுரத்தைச் சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும் பேசினோம். ''இதற்காக ஏஜென்ட் ஒருத்தர் இருக்​கிறார். அவர் மாசத்துல ஒருநாள் மட்டும்​தான் வருவார். எங்களுடைய விவரங்கள், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஒரு பிளாங்க் செக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். கடன் கிடைச்​சா, அதில் அஞ்சு முதல் பத்து பெர்சன்ட் வரை அவருக்கு கமிஷன். கடன் வாங்க​ணும்னா, அப்ரோ நிறுவனத்தில் மெம்பர் ஆகணும். அதுக்கு 2,500 ரூபா கட்டணும். வட்டி இல்லாக் கடன் எல்லாம் கிடையாதுங்க. 100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி வாங்குறாங்க'' என்றனர்.

அப்ரோவைப் பற்றி எங்கே யாரிடம் விசாரித்​தாலும், வினோதமான தகவல்கள். அதன் நிறுவனர் ஐ.பி.யேசுதாஸைச் சந்திக்க முயற்சித்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் தொலைபேசியில் அவரைப் பிடித்தோம். ஆனால், 'நான் யேசுதாஸின் பி.ஏ. சதீஷ் பேசுறேன்' என் றது அந்தக் குரல். ''சார் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேட். அவர்கிட்ட நேரடியாப் பேச முடி​யாது. இப்போ பேட்டி கொடுக்கும் ஐடியா​வும் இல்லே. நெக்ஸ்ட் மன்த் ட்ரை பண்ணுங்க'' என்றார். மேற்கொண்டு பேச முயன்ற நம்மிடம், ''எனக்கு நிறைய வொர்க் இருக்கு. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டயும் பேசியதில்லை.'' என்றவர், ''என் னோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?'' என்று கேட்டுவிட்டு தொலை​பேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? P7


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Empty Re: யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?

Post by விநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 7:08 pm

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Resize_20120718061226


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum