Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Today at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
+2
இரா.பகவதி
சிவா
6 posters
Page 1 of 1
தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றி செய்திகள் வராத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
''கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு சென்று விட்டனர்'' என்று ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இப்படி அறிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் அறிவிப்புக்கும், தற்போது தமிழகத்தில் நடப்பதும் என்ன காரணம் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு காவல்துறை தனது கடமையை செய்யத் தவறுகிறதா?
தமிழகத்தில் நடக்கும் சொத்து திருட்டுகளில் மிக அதிகமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்தான் 35 சதவீத அளவுக்கு திருட்டு போவது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப அதன் தொடர்புடைய குற்றங்களும் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2011ல் சொத்து திருட்டு தொடர்பாக 14,924 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119.97 லட்சம் மதிப்பிலான சொத்துகள் திருட்டு போனதில், ரூ.65.33 லட்சம் மதிப்பிலான சொத்து மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கமுடியாத வழக்குகள் பெரும்பாலானவை வாகன திருட்டு தொடர்புடையவை. கடந்தாண்டில் மட்டும் வாகன திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 35.27 சதவீதம். இதன் மதிப்பு ரூ.19.47 லட்சம்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் திருட்டு போன வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ல் சொத்து திருட்டுகளில் மொத்தம் 19.02 சதவீதமாகத்தான் வாகன திருட்டு இருந்தது. ஆனால், இப்போது 16.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2008க்கு பின்னர் தான் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் சராசரியாக பதிவாகும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கு மேல் வாகன திருட்டு தொடர்புடையதாகவே உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை , திருப்பூர் ஆகிய பகுதிகளில்தான் வாகன திருட்டு மிக அதிகமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
உதாரணத்துக்கு, கோவை மாநகரில் பதிவான 1084 திருட்டு வழக்குகளில் 329 வழக்கு இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள். இதில் 60 சதவீதத்திற்கும் குறை வான வாகனங்கள்தான் மீட்கப்பட்டுள்ளன.
வாகனங்களை திருடி சென்று அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிச்சந்தையில் விற்போர் ஏராளமாக உள்ளனர். அதேபோல், வாகனங்களை திருடி அதன் முக்கிய பாகங்களை மட்டும் கழற்றி விற்பனை செய்வதற்கும் கை தேர்ந்த கும்பல் உள்ளது.
இதை தவிர திருட்டு, வழிப்பறி, கஞ்சா, அரிசி கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கும்பலும் முதலில் வாகன திருட்டில் ஈடுபடுகின்றன என்று கூறுகிறது போலீஸ்.
இப்படி கூறும் போலீஸ், கொள்ளையர்களுடன் கூட்டு வைத்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது. உதாரணத்துக்கு ஏராளமானவற்றை கூறலாம்.
தமிழகத்தில் தினமும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்டவைகள் அரங்கேறி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரிசி ஆலை அதிபர் சீனிவாசன் என்பவரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகை கொள்ளையடித்து சென்று விட்டனர். சீனிவாசனின் வீடு முன்புள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாம். இப்படி இருந்தும் கொள்ளையர்கள் துணிச்சலாக கொள்ளையடிக்க காரணம் யார்? போலீஸா? அல்லது சட்டம் சரியில்லையா? என்ற கேள்விதான் எழுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை உரிமையாளர் பத் சந்த் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு இரண்டு கோடி.
ஒரு கொலை, 100 கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையன், நான்கு மாநில போலீசுக்கு சவால் விட்டு தற்போது சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கேரளா போலீசார் சென்னையில் முகாமிட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் அண்மையில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அவர்களை உயிருடன் பிடிக்க வாய்ப்பு இருந்தும் போலீஸ் அவர்களை சுட்டுக் கொன்றது. தடையமே இல்லாமல் செய்துவிட்டது தமிழக போலீஸ். கொள்ளையர்களை சுட்டுக் கொன்றது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும், மறுபக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஒரு பக்கம் நியாயம் என்றாலும், மறுபக்கம் அரசியல் பழிவாங்கும் போக்கே என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு தமிழகம் கொலை, கொள்ளையர்களின் கூடாரமாவதை முதல்வர் ஜெயலலிதா தடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையாக கோரிக்கையாக உள்ளது.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
அண்ணே அதான் நாலு அப்பாவிகளை என்கவுண்டர்ல போட்டுடங்களா இனி எல்லாம் சரி ஆயிடும்
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
கொள்ளையர்கள் அனைவரும் சிவப்பு விளக்கு ஒளிரும் காரில் பாதுகாப்பாக போய் வருகிறார்கள் ...
Guest- Guest
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
புரட்சி wrote:கொள்ளையர்கள் அனைவரும் சிவப்பு விளக்கு ஒளிரும் காரில் பாதுகாப்பாக போய் வருகிறார்கள் ...
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
அகிலன் wrote:MGR இன் காலத்திற்குப்பிறகு வந்த தமிழ் நாட்டின் தலைவர்கள் எல்லாம் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தலைவர்களே அப்படிஎன்றால் மக்கள் எப்படியிருப்பார்கள்?
தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர் இல்லாதது பெரும் குறையே.
இருந்துட்டா மட்டும் நம்ம அவரை நல்லவரா வாழ விட்டுருவோமாக்கும்
Re: தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
கொள்ளையர்களின் கூடாரமாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|