Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஈ - திரை விமர்சனம்
+9
பிரசன்னா
ராஜா
அருண்
பிளேடு பக்கிரி
arjunsugu
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
பாலாஜி
சிவா
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நான் ஈ - திரை விமர்சனம்
இந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கும் தெலுங்கு 'ஈகா’ படத்தை அப்படியே தமிழிலும் 'ஈ’ அடிச்சான் காப்பியாக்கி, சில காட்சிகளைத் தமிழுக்கு எனப் படம் பிடித்து சேர்த்து 'நான் ஈ’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனிமேஷன் சினிமாவைப் பொறுத்தவரை நம் ஊருக்கு இந்தப் படம் ஒரு டிரெண்ட் செட்டர்!
அம்புலி மாமா காலத்துக் கதைதான். நாயகி மேல் ஆசைகொண்டு நாயகனைக் கொல்கிறான் வில்லன். ஹீரோவின் ஆவி(!) அருகில் இருக்கும் 'ஈ’ முட்டை ஒன்றில் புகுந்துகொள்கிறது. அது பிறந்ததும் பூர்வஜென்ம நினைவு வந்து வில்லனைப் பழிவாங்குவதே கதை. இதில் 'ஈ’ அனிமேஷன் மட்டும் புதுசு. வயது வித்தியாசம் இல்லாமல், வகை தொகை இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறது படம். கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தில் 2,234 காட்சிகள் 'லைவ் ஆக்ஷன் அனிமேஷன்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.
முட்டையில் இருந்து ஈ வெளிவரும் ஆரம்பக் காட்சிகள் மட்டுமே கார்ட்டூன் தொனி. ஆனால், வில்லனைப் பழிவாங்கத் தொடங்கும் காட்சிகளில் லாஜிக் மறந்து ஈர்த்துவிடுகிறது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை. அதிலும் க்ளைமாக்ஸில் சிறகு இழந்து, ஒற்றைக் கால் உடைந்தபோதும் மிச்சம் இருக்கும் உயிரைத் திரட்டி(!) வில்லனைச் சாய்த்து தானும் பலியாகும் காட்சியில்... கண்களில் நீருடன் கைதட்டுகிறது ஒட்டுமொத்த அரங்கமும்.
நம்மவர்களுக்குப் பழிவாங்கும் கதையும் புதிது அல்ல... அனிமேஷன் படமும் புதிது அல்ல. ஆனால், அதில் காமெடி, காதல், ஃபேன்டஸி, சென்ட்டிமென்ட் சேர்த்து ஜோரான காக்டெய்ல் ஆக்கிய மிக்ஸிங்தான் சுவாரஸ்யம். அதன் முழுப் பெருமையும் இயக்குநர் ராஜமௌலிக்கே!
இப்போதைய டிரெண்டில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் இவர்தான். இவர் இயக்கிய எட்டுப் படங்களும் ஆந்திரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்தவை. 'ஸ்டூடன்ட் நம்பர்-1’, 'எமடொங்கா’, 'சிறுத்தை’, 'மஹதீரா’, 'மரியாதை ராமண்ணா’ எனக் கோடிகளைக் குவித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். வெறுமனே கமர்ஷியல் கலக்கல் மட்டும் இல்லாமல், காமெடியன் சுனிலுக்கு சிக்ஸ்பேக் வைத்து ஹீரோ ஆக்குவது, ரக்ஃபி விளையாட்டை மையமாக வைத்து முழு நீள சினிமா எடுப்பது, பூர்வஜென்மக் கதையில் வரலாற்று ஃபேன்டஸி சேர்ப்பது, 'ஈ’ சினிமா என இவருடைய ஒவ்வொரு படமும் பலே விருந்துவைக்கும் பரிசோதனை முயற்சியாகவே இருக்கும்.
''இந்த 'ஈ’ படம் இயக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது. பிரபாஸை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படம் எடுப்பதற்கு முன்னால், நாலைந்து மாதங்களில் முடிக்கும் அளவுக்கு ஒரு படம் எடுக்கத்தான் எண்ணம். 'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்?’ என்று பல வருடங்களுக்கு முன் என் அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒரு வரி திடீர் என ஃப்ளாஷ் அடித்தது. அதைப் பிடித்துக்கொண்டு 'ஈ’யை ஹீரோவாகவைத்து திரைக்கதை எழுதினேன். எழுதி முடித்துப் பார்த்தால், அந்தப் படத்தைப் போகிறபோக்கில் எடுக்க முடியாது என்று தோன்றியது. 'மஹதீரா’ படத்தில் கிராஃபிக்ஸ் என்பது பின்னணியாக அமைந்துஇருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராஃபிக்ஸும் அனிமேஷனும் தான் முன்னணியில் இருக்கும். நடிகர்கள் பின்னணியில்தான் இயங்குவார்கள். அதிலும் ஒரு 'ஈ’ முகத்தில் 80 சதவிகிதம் அதன் கண்கள்தான். ஈயின் கண்களை வைத்து காதல், கோபம், சந்தோஷம் என்று எந்த உணர்ச்சிகளையும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸின் டைட்டில் கார்டில் தத்தித் தாவும் ஒரு டேபிள் லேம்ப் என் நினைவுக்கு வந்தது. அந்த விளக்குக்கு முகமே கிடையாது. ஆனால், அது சந்தோஷமாக இருப்பதை அதன் அசைவுகளிலேயே உணர்த்திவிடுவார்கள். அப்படி இந்த ஈக்கும் உடல்மொழி ஏற்றுங்கள் என்று சொன்னேன்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அனிமேஷன் ஈயை உருவாக்கினார்கள். என் 10 வருட சினிமா அனுபவத்தில் நான் அப்போதுதான் மிகவும் பயந்துபோனேன். மிகவும் அசிங்கமாக எந்த எமோஷனும் இல்லாமல் இருந்தது அந்த ஈ. ஆனால், அதற்கே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவு. ஒருவேளை ஒரு கோடி மட்டுமே செலவாகி இருந்தால், இந்த புராஜெக்டை அப்போதே நான் கைவிட்டு இருப்பேன். ஆனால், விட்ட இடத்தில்தானே பிடிக்க வேண்டும் என்று வேறு வேறு யூனிட்களில் வேலை செய்து இந்த ஈயை உருவாக்கிவிட்டோம். குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது தெரியும். ஆனால், பெரியவர்களை யும் குழந்தைகளாக்கி ரசிக்கவைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்று அடக்கமாகப் பேசுகிறார் ராஜமௌலி.
ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன்களுக்குச் சவால்விட்டு இருக்கிறது இந்த இந்திய ஈ. முன்பெல்லாம் தியேட்டரில் ஈ ஓட்டுகிறோம் என்பார்கள் பரிதாபமாக... இப்போது ஈ ஓட்டுகிறோம் என்கிறார்கள் பரவசமாக!
கி.கார்த்திகேயன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ஈ - திரை விமர்சனம்
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..
படம் நன்றாக இருப்பதாக நண்பர்களும் சொன்னார்கள் ..
படத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் , படத்திற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
படம் நன்றாக இருப்பதாக நண்பர்களும் சொன்னார்கள் ..
படத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் , படத்திற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நான் ஈ - திரை விமர்சனம்
இதோட டிவி கமர்ஷியல் பார்த்து என்னடா பூ சுத்துராங்கலான்னு நெனச்சேன்.
பரவாயில்லை தொழில் நுட்பம் கண்டு ரசிக்கலாம்ன்னு தெரியுது.
பரவாயில்லை தொழில் நுட்பம் கண்டு ரசிக்கலாம்ன்னு தெரியுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஈ - திரை விமர்சனம்
அருமையான விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா...
படத்தில் ஆரம்ப சில காட்சிகளில் மட்டும் தான் நாயகன் நானி நானியாக இருக்கிறார் அவர் கொலை செய்யபட்ட பின் நானி நான் ஈ யாக மாறி பழி வாங்கும் காட்சிகள் அருமை.இடையில் வரும் நம்ம சாந்தானம் இரண்டு நிமிடத்திலேயே திரையில் இருந்து மறைகிறார் பின் இறுதியில் தான் தெரிகிறார்.பாடல்களும் இதமாகவும் வெறுப்பேறாமலும் இருக்கிறது..
படத்தில் ஆரம்ப சில காட்சிகளில் மட்டும் தான் நாயகன் நானி நானியாக இருக்கிறார் அவர் கொலை செய்யபட்ட பின் நானி நான் ஈ யாக மாறி பழி வாங்கும் காட்சிகள் அருமை.இடையில் வரும் நம்ம சாந்தானம் இரண்டு நிமிடத்திலேயே திரையில் இருந்து மறைகிறார் பின் இறுதியில் தான் தெரிகிறார்.பாடல்களும் இதமாகவும் வெறுப்பேறாமலும் இருக்கிறது..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நான் ஈ - திரை விமர்சனம்
வெளி வந்த படத்தில் நான் ஈ நல்ல இருக்கு என்று சொல்கிறார்கள்..!
விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா.!
விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் ஈ - திரை விமர்சனம்
நானும் இதே நினைப்புல தான் படம் பார்க்கல , இப்ப பார்க்கனும்ன்னு தோணுதுயினியவன் wrote:இதோட டிவி கமர்ஷியல் பார்த்து என்னடா பூ சுத்துராங்கலான்னு நெனச்சேன்.
பரவாயில்லை தொழில் நுட்பம் கண்டு ரசிக்கலாம்ன்னு தெரியுது.
Re: நான் ஈ - திரை விமர்சனம்
ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா...
படத்தில் ஆரம்ப சில காட்சிகளில் மட்டும் தான் நாயகன் நானி நானியாக இருக்கிறார் அவர் கொலை செய்யபட்ட பின் நானி நான் ஈ யாக மாறி பழி வாங்கும் காட்சிகள் அருமை.இடையில் வரும் நம்ம சாந்தானம் இரண்டு நிமிடத்திலேயே திரையில் இருந்து மறைகிறார் பின் இறுதியில் தான் தெரிகிறார்.பாடல்களும் இதமாகவும் வெறுப்பேறாமலும் இருக்கிறது..
ஆம் படம் மிகவும் அருமையாக இருக்கு....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நான் கடவுள் திரை விமர்சனம்
» நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
» நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|