ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

+2
யினியவன்
முரளிராஜா
6 posters

Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by முரளிராஜா Wed Jul 11, 2012 11:30 am

சென்னை: மாணவர்களைத் தூண்டும் வகையில் டிரஸ் போட்டு வரக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது தமிழக பள்ளி ஆசிரியைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக கல்வித்துறை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆசிரியைகள், நாகரீகமான முறையில் நமது கலாச்சாரத்திற்கு உட்பட்ட வகையில் டிரஸ் அணிய வேண்டும். வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு முன்மாதிரியாக ஆசிரியைகள் முதலில் நல்ல முறையில் ஆடை அணிந்து வர வேண்டும்.

குறிப்பாக மாணவர்களிடையே தவறான எண்ணத்தைத் தூண்டும் வகையிலான உடைகள் அணிவதை ஆசிரியைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இதுகுறித்து சுஜாதா என்ற மூத்த ஆசிரியை கூறுகையில், ஒரு ஆசிரியைக்கு தான் என்ன டிரஸ் போட்டுச் செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்று கூடவா தெரியாது. இதில் அரசு ஏன் தலையிடுகிறது என்று புரியவில்லை. அதற்கான அவசியமே இல்லை.

9 வது முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே ஆசிரியைகள் போட்டு வரும் டிரஸ் குறித்த ஆர்வம் இருக்கும்தான். அதை யாரும் மறுக்கவில்லை. தங்களுக்குள் கிசுகிசுக்கத்தான் செய்வார்கள். கமெண்ட் அடிப்பார்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதை எப்படி சமாளிக்க வேண்டுமோ அப்படிச் சமாளிக்க ஆசிரியைகளுக்குத் தெரியும். ஆசிரியைகள் என்ன மாதிரியான டிரஸ் போட்டு வந்தாலும் இதுபோன்ற கமெண்டுகளைத் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது. அந்த மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள ஆசிரியைகளுக்குத் தெரியும்.
ஆசிரியைகளின் நடத்தை, பண்பு, பழகும் தன்மை, பிரச்சினைகளை அணுகும் திறமை, பரிவு காட்டுவது, நல்ல போதனை ஆகியவற்றை வைத்துத்தான் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியுமே தவிர வெறும் உடைக் கட்டுப்பாட்டால் அதை சாதிக்க முடியாது.

அதை விடுத்து இப்படி டிரஸ் போடக் கூடாது, அப்படி டிரஸ் போடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தால் நாளை இப்பணிக்கு வர பலரும் தயங்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றார்.

உஷா என்ற ஆசிரியை கூறுகையில், ஆசிரியைகளின் பிளவுஸ் முதல் கொண்டு எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது அநாகரீகமாக உள்ளது. மேலும் மாணவர்கள் எல்லோருமே ஆசிரியைகளின் உடைகளைப் பார்த்து கெட்டுப் போவதாக கூறுவது அதை விட மோசமானது, நியாயமற்றது. கேலிக்கூத்தாக உள்ளது. இதுவும் கூட ஒரு வகையில் ஆணாதிக்க வெளிப்பாடுதான்.

ஒரு மாணவன் தனது ஆசிரியை என்ன டிரஸ் போட்டுள்ளார் என்பதைப் பார்த்து மதிப்பதில்லை. மாறாக, அந்த ஆசிரியை எப்படி நடந்து கொள்கிறார், எப்படி பாடம் நடத்துகிறார், தனது பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு சொல்கிறார் என்பதைப் பார்த்துதான் மதிக்கிறான் என்றார்.

இருப்பினும் தலைமை ஆசிரியை வத்சலா பாஸ்கரன் இதிலிருந்து முரண்படுகிறார். அரசின் கட்டுப்பாட்டை அவர் வரவேற்கிறார். அவர் கூறுகையில், ஒரு ஆசிரியை நல்ல முறையில் டிரஸ் போட்டு வர வேண்டியது அவசியமதான். சேலையை நல்ல முறையில் கட்டி வாருங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும். பள்ளிகளில் ஆசிரியைகளை சேலையில் வரச் சொல்வதே, மாணவர்கள் மத்தியில் அவர்கள் கண்ணியமாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் இன்று பல இளம் ஆசிரியைகள், கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வேலைக்கு வந்து விடுகிறார்கள். பலருக்கு சேலையை சரியாக கட்டிக் கொண்டு கூட வரத் தெரியவில்லை. இது உண்மை. எனவேதான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அரசு சொல்ல நேரிட்டுள்ளது என்றார்.

இந்த சர்ச்சை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியைகளை மட்டம் தட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அல்ல இது. மாறாக கல்வி நிலையங்களில் எந்தவிதமான கவனச் சிதறல்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் பிறப்பிக்கப்பட்ட அறிவுரைதான். எந்த வகையிலும் ஒழுங்கீனம் ஏற்பட்டு விடக் கூடாது
என்பதற்காகவே இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சில ஆசிரியைகள் உடை அணிவதில் தவறு இருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்தே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்கின்றனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by யினியவன் Wed Jul 11, 2012 12:09 pm

நல்லபடியா உடுத்தி வரவங்க ஏன் கோவப் படனும்?

அப்படி வராதவங்களுக்கு தான் இந்த சுற்றறிக்கை என்பது இவர்களுக்கு தெரியலையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by முஹைதீன் Wed Jul 11, 2012 12:18 pm

உண்மையில் நல்ல சுற்றறிக்கை.
கண்டிப்பாக கல்வித்துறையை இவ்விஷயத்தில் பாராட்டவேண்டும். மகிழ்ச்சி

நல்லபடியா உடுத்தி வரவங்க ஏன் கோவப் படனும்?

அப்படி வராதவங்களுக்கு தான் இந்த சுற்றறிக்கை என்பது இவர்களுக்கு தெரியலையா?

குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும் தோழரே.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by ஜாஹீதாபானு Wed Jul 11, 2012 12:25 pm

எங்கள் ஊர் இளையான்குடி சாஹிர் உசேன் கல்லூரியில் பெண்கள் முஸ்லிம் என்றால் புர்ஹாவோடும் இந்து மதத்தவர் என்றால் கோட் போட்டு தான் பாடம் நடத்துவார்கள்...... புன்னகை




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by dhilipdsp Wed Jul 11, 2012 2:13 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by சிவா Wed Jul 11, 2012 3:29 pm

இதில் கோபப்பட என்ன உள்ளது. மாணவர்களுக்கு முன்னோடியாகத் திகழும் ஆசிரியைகள் நல்ல முறையில் உடுத்த வேண்டும் என்று கூறியதில் தவறேதும் இல்லையே!


என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்! Empty Re: என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» ‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum