ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கவிஞர்களே!

+3
அருண்
ஹிஷாலீ
yarlpavanan
7 posters

Go down

open புதிய கவிஞர்களே!

Post by yarlpavanan Tue Jul 10, 2012 4:15 am


புதிய கவிஞர்களே!
நீங்கள் கவிதை எழுதும் போது; கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!

இதனைப் பார்த்தால் கவிதை இல்லை என்றே சொல்லலாம். ஒடித்து முறித்த வரிகளை ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால் சிறந்த உரைநடையாகக் கருதமுடியும். இதனைக் கவிதையாக மாற்ற முயல்வோம்.

கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!

சொற்களை மாற்றாமல் வரிகளில் மாற்றம் செய்ததும் கவிதையாக மாறிய நுட்பம் என்ன? ஆமாம், ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே! அதாவது, ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு அல்லது வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய கவிஞர்களே! உங்கள் கவிதைகளில் இந்த நுட்பத்தைக் கையாளுங்களேன்.

உங்கள் கவிதை மேலும் சிறக்க...
நீங்கள் எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாம். இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் மோனை ஆகும்.

எடுத்துக்காட்டாக
மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!

இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள் ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து மோனையாக வந்துள்ளது.

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் எதுகை ஆகும்.

எடுத்துக்காட்டாக
படித்து முடித்தால் மீட்டுப்பார்

இவ்வடியில் படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்) குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளது. குறிலடுத்து அல்லது நெடிலடுத்து எதுகை அமைதலே சிறப்பாகும்.

இவ்வடிப்படைத் தகவலை வைத்து புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா? அப்படியாயின் ஒரு சூழலை நினைவில் மீட்போம். ஓராண் ஒரு பெண்ணை உள்ளத்தில் நினைத்ததும் இப்படியொரு கவிதை எழுதுவதாகக் கருதுக.

அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ஹிஷாலீ Tue Jul 10, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றிகள் கவிஞரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by அருண் Tue Jul 10, 2012 2:12 pm

அழகிய அறிவுரைக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி


Last edited by அருண் on Tue Jul 10, 2012 2:32 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ராஜா Tue Jul 10, 2012 2:28 pm

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்
புதிய கவிஞர்களுக்கு பயன்படும் , அன்பான அறிவுரை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by சந்திரகி Tue Jul 10, 2012 2:36 pm

சொன்ன விதத்திற்கும், சொல்லிய நேர்த்திக்கும் :வணக்கம்:

நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ஹர்ஷித் Tue Jul 10, 2012 7:11 pm

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by Guest Tue Jul 10, 2012 8:27 pm

அருமை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by yarlpavanan Wed Jul 11, 2012 4:39 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by dhilipdsp Wed Jul 11, 2012 8:08 am

நன்றி சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum