ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

+2
யினியவன்
இரா.பகவதி
6 posters

Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by இரா.பகவதி Mon Jul 09, 2012 6:46 pm

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Tamil-Daily-News-Paper_4393732548

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). மாநகராட்சி துப்புரவு ஊழியர். மனைவி ரேகா (36). இவர்களுக்கு அருண்குமார் (13), சரண்யா (12) என்ற மகன், மகள் உள்ளனர்.

சரண்யாவுக்கு அடுத்த மாதம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு மண்டபம் பார்க்க முடிவு செய்தனர். நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மண்டபம் பார்ப்பதற்காக பைக்கில் மகன் அருண்குமாருடன் சென்றார் கோபாலகிருஷ்ணன். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் மீது சென்றபோது. திடீரென பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் கோபாலகிருஷ்ணனின் கழுத்தை பதம் பார்த்தது. இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

கொருக்குப்பேட்டை போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் இறந்த தகவலை அறிந்ததும் ரேகா கதறி அழுதார். ‘‘எங்கள் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அதற்காக மண்டபம் பார்க்க மகனுடன் கணவர் சென்றார். யாரோ விட்ட காற்றாடி நூல், என் கணவரின் உயிரை பறித்துவிட்டது. இனி என்னையும், பிள்ளைகளையும் யார் காப்பாற்றுவார்கள்’’ என்று கூறி கதறி அழுதார்.

சென்னையில் காற்றாடி விடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறி, வடசென்னை பகுதிகளில் பலர் அடிக்கடி காற்றாடி பறக்க விடுகின்றனர். காற்றாடி பறக்கவிடும் மாஞ்சா நூல், வாகனங்களில் செல்பவர்களின் உயிரை பறிக்கிறது. மொட்டை மாடிகளில் நின்று காற்றாடி விடும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயம் அடையவோ, இறக்கவோ நேரிடுகிறது. சிலர் அறுந்து செல்லும் காற்றாடியை பிடிக்க சாலையில் ஓடும்போது வாகனங்கள் மோதியும் மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கும்போது சிலர் மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றனர்.

இதுபோன்று பல வழிகளில் பொதுமக்களின் உயிருக்கு எமனாக இருக்கும் காற்றாடிக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்றாடி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாஞ்சா நூல் தயாரிப்பு எப்படி?
மைதா மாவு, கடுக்காய், வஜ்ஜிரம் மற்றும் கண்ணாடி துகள்கள் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து, சாதாரண நூலில் மாஞ்சா என்ற மெருகை ஏற்றுகின்றனர். காய்ந்தவுடன் அது கம்பி போன்ற வலிமை பெறுகிறது. அடுத்தவர் பட்டத்தை அறுக்கவும், காற்றாடி மிக உயரத்தில் பறக்கவும் வேண்டி சிலர், அதிக அளவு கண்ணாடி துகள்களை சேர்த்து மாஞ்சா நூலை மெருகேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நூல்தான், வாகனங்களில் செல்பவர்களின் உடலில் பட்டவுடன் அறுத்துவிடுகிறது. மாஞ்சா நூலால்தான் மாநகராட்சி ஊழியர் கோபாலகிருஷ்ணனின் தொண்டை குழல் அறுபட்டுள்ளது.

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by யினியவன் Mon Jul 09, 2012 6:58 pm

உயரே பட்டம் பறக்க அதனால்
உயிரே பறக்க - இதை
உணர மறக்கும் கயவர்களை
உள்ளே பிடித்து வதக்கினால்
பட்டமும் பறக்காது உயிரும் பறக்காது

தீவிர நடவடிக்கையும், தண்டனையும் கொடுத்தல் வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by ராஜா Mon Jul 09, 2012 7:13 pm

வடசென்னை பகுதியில் தான் இந்த தொந்தரவு மிக அதிகம் , இதை அரசு தயவுதாட்சண்யம் இன்றி கடுமையான தண்டனைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by முரளிராஜா Mon Jul 09, 2012 8:53 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by arjunsugu Mon Jul 09, 2012 10:14 pm

விளையாட்டு ஒரு உயிரை யே எடுத்துவிட்டது வேதனைக்குரியது ... இனி மேலும் இது போல் உயிர்கள் பலி ஆகாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ... பதிவுக்கு நன்றி ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by அசுரன் Mon Jul 09, 2012 10:27 pm

கொஞ்ச நாளைக்கு முன்னால் இரண்டு வயது பெண் குழந்தை கழுத்து அறுந்து இறந்தது... அப்போது ஒரு இரண்டு நாளைக்கு போலீஸ் முதற்கொண்டு வீரவசனம் பேசி பிறகு மறந்து போனார்கள்.. இப்ப மீண்டும் ஒருவர் இறந்ததும்.. இன்டர் நேசனல் ரேஞ்சுக்கு பேசி பிறகு அடுத்த வாரம் மறந்துப்போவார்கள்... என்ன நாடுடா சாமீ என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Empty Re: மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிரை பறித்த கானா பாட்டு
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரின் உயிரை பறித்த பந்து!
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum