ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

+4
கவிதாஜாய்
யினியவன்
rameshnaga
arjunsugu
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Fri 6 Jul 2012 - 17:55

First topic message reminder :

இன்னும் மழை
விடவில்லையா ...???

பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...

நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...

நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???

கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...

மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...

எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...

ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...

அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...

பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...

எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...

ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!

எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...

நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...

பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...

குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...

பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...

இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...

எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...

சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...


(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)

அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...


Last edited by arjunsugu on Sun 8 Jul 2012 - 1:52; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down


தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by Gulzaar Sat 7 Jul 2012 - 3:50

arjunsugu wrote:நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...

???????????????????
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Sat 7 Jul 2012 - 12:54

Gulzaar wrote:
arjunsugu wrote:நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...

???????????????????
சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது நண்பர் அவர்களே ...நான் இதுவரை ஆங்கிலத்தில் எழுதி வந்ததால் நமது தாய் மொழியிலே பிழைகள் செய்ய கூடிய வேதனை நிலை அதற்கு வருந்துகிறேன் ...அதனால் தான் மன்னிப்பு கோரினேன் gulzaar அவர்களே ...நன்றி மேலான படிப்பினைக்கு ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by சந்திரகி Sat 7 Jul 2012 - 13:25

arjunsugu wrote:
பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...

பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...

தெருவோரம் திரியும் சிறார்களின் மன ஓலத்தை கண் முன் நிறுத்தின உங்கள் வரிகள். சோகம்

மனிதர்களால் மறுக்கப்பட்டார்களா???
கடவுளாலும் வெறுக்கப்பட்டார்களா???
காலத்திற்க்காய் காத்திருக்காது
ஆனது செய்ய ஆவன செய்து
அவர்கள் வாழ்வை
பூத்திருக்கச் செய்வோம்.





மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by Gulzaar Sat 7 Jul 2012 - 15:02

arjunsugu wrote:
Gulzaar wrote:
arjunsugu wrote:நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...

???????????????????
சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது நண்பர் அவர்களே ...நான் இதுவரை ஆங்கிலத்தில் எழுதி வந்ததால் நமது தாய் மொழியிலே பிழைகள் செய்ய கூடிய வேதனை நிலை அதற்கு வருந்துகிறேன் ...அதனால் தான் மன்னிப்பு கோரினேன் gulzaar அவர்களே ...நன்றி மேலான படிப்பினைக்கு ...

எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள் என்பதற்கும், நீங்கள் கூறியதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அதனால் தான் கேள்விக் குறிகள் போட்டிருந்தேன்.
ஏனென்றால் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று தெரிந்தும் நீங்கள் அதை சரி செய்யவில்லையே. நீங்கள் எப்படி அனாதைகளை இல்லாமல் செய்யப் போகோரீர்கள்?

மற்றபடி உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. புதிதாக சிந்தித்துள்ளீர்கள். அதில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் அதில் ஒன்றும் குற்றம் இல்லை.

ஒரு சந்தேகம் நண்பரே... அனாதைகளுக்கு உதவி செய்வதற்கு வங்கிக் கணக்கு எதற்கு?
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Sun 8 Jul 2012 - 1:07

சந்திரகி wrote:
arjunsugu wrote:
பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...

பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...

தெருவோரம் திரியும் சிறார்களின் மன ஓலத்தை கண் முன் நிறுத்தின உங்கள் வரிகள். சோகம்

மனிதர்களால் மறுக்கப்பட்டார்களா???
கடவுளாலும் வெறுக்கப்பட்டார்களா???
காலத்திற்க்காய் காத்திருக்காது
ஆனது செய்ய ஆவன செய்து
அவர்கள் வாழ்வை
பூத்திருக்கச் செய்வோம்.



நன்றி சந்திரகி அவர்களே நன்றி தங்களது மேலான வாசிப்புக்கும் பகிர்வுக்கும் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Sun 8 Jul 2012 - 1:54

Gulzaar wrote:
arjunsugu wrote:
Gulzaar wrote:
arjunsugu wrote:நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...

???????????????????
சில இடங்களில் எழுத்து பிழை உள்ளது நண்பர் அவர்களே ...நான் இதுவரை ஆங்கிலத்தில் எழுதி வந்ததால் நமது தாய் மொழியிலே பிழைகள் செய்ய கூடிய வேதனை நிலை அதற்கு வருந்துகிறேன் ...அதனால் தான் மன்னிப்பு கோரினேன் gulzaar அவர்களே ...நன்றி மேலான படிப்பினைக்கு ...

எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள் என்பதற்கும், நீங்கள் கூறியதற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அதனால் தான் கேள்விக் குறிகள் போட்டிருந்தேன்.
ஏனென்றால் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று தெரிந்தும் நீங்கள் அதை சரி செய்யவில்லையே. நீங்கள் எப்படி அனாதைகளை இல்லாமல் செய்யப் போகோரீர்கள்?

மற்றபடி உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. புதிதாக சிந்தித்துள்ளீர்கள். அதில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் அதில் ஒன்றும் குற்றம் இல்லை.

ஒரு சந்தேகம் நண்பரே... அனாதைகளுக்கு உதவி செய்வதற்கு வங்கிக் கணக்கு எதற்கு?
முதலில் உங்களது சந்தேகத்திற்கு விடை அளிக்க விரும்புகிறேன் ...ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு வங்கி கணக்கு வேண்டும் தனி நபர் பேரில் இல்லாமல் டிரஸ்ட் இன் பேரில் இருக்க வேண்டும் ...இதற்கு முன்பாக டிரஸ்ட் ஐ பதிவு செய்ய வேண்டும் ... அதனை தனி நபரை கொண்டு மட்டும் இல்லாமல் குறைந்த பட்சம் 3 நபர்கள் தேவை ... நாம் தனி ஒரு ஆளாய் ஒரு அநாதை குழந்தைக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் நமது பணத்தை கொண்டு செய்து விடலாம் ...டிரஸ்ட் என்று வரும்போது தனி நபர் பேரில் இல்லாமல் டிரஸ்ட் இன் பேரில் இருக்க வேண்டும் ...நாம் ஒவ்வொருவரும் தனி ஒரு ஆளாய் உதவி செய்ய இயலும்...டிரஸ்ட் இன் மூலமே எல்லா நண்பர்களையும் ஒன்றிணைத்து உதவ இயலும்... எனவே வங்கி கணக்கு மிக அவசியம் எதிர்கால உதவி செய்யும் போது நிகழும் பரிவர்த்தனைகளுக்கும் கணக்குகளை நிர்வகிப்பதற்க்கும் ...உங்களுக்கு இரண்டாவதாக பிழைகளுக்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏற்கிறேன் ... அந்த கவிதையினை எழுதும் போது உண்மையில் கனத்த இதயத்தோடு எழுதினேன் கண்களில் கண்ணீரோடு என்னால் அதனை திரும்பி படிக்க கூட முடியாமல் வலியினை உணர்ந்தேன் ....சில இடங்களில் தமிழில் எழுதும் போது பிழைகள் இருப்பதை உணர்ந்தேன் ... கண்டிப்பாக பிழைகளையும் திருத்தி பதிவு இடுவேன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ...மற்றபடி நீங்கள் சொன்ன கருத்து மிகவும் என்னை பாதிக்கிறது பிழைகளை திருத்தாமல் அனாதைகளை எப்படி இல்லாமல் செய்வேன் என்று ...கண்டிப்பாக பிழைகளையும் திருத்தி கொள்வேன் என்னால் முயன்ற அநாதை சிறார்களையும் அரவனைப்பேன்...எழுத்தில் பிழைகள் செய்ததை கொண்டு தனி மனிதனின் லட்சியத்தோடு ஒப்பிட்டு தாக்கி பேசுவது எப்படி நியாயமாகும் ...மிகவும் வருத்தமாக உள்ளது உங்களின் கருத்து ...மற்றபடி பிழைகள் செய்வது மனித இயல்பு தெரிந்த பின்பு திருத்தி கொள்வதும் நல்ல எண்ணம் தான் ...மற்றபடி என்னால் அந்த கணம் திருத்தி கொள்ள முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன் ... பிழைகளினை சரி செய்து விட்டேன் ....தங்களின் மேலான பகிர்வுக்கு நன்றி ...என்னை பொறுத்தவரையில் மற்றவரின் மனம் புண் படும் படியான வார்தைகளை விட எழுத்து பிழைகள் மேலானவை ...நன்றி நண்பர் அவர்களே


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by யினியவன் Sun 8 Jul 2012 - 2:04

சுகுமார் வருந்தாதீர்கள் - சிலரின் கருத்து சில சமயம் இப்படித் தான் இருக்கும் - சமூக நலனுக்கு வேண்டி நீங்கள் இறங்கி களத்தில் வேலை செய்யும் பொழுது இதனினும் பெரிய சோதனைகளை சந்திக்கே நேரிடும். இதெல்லாம் அதனோடு ஒப்பிட்டால் ஜுஜூபி.

ஒருவன் இதுபோல் எழுத்துப் பிழைகளையும் மற்ற சிறு பிழைகளையும் களைந்துவிட்டு தான் பொது நலனுக்கு பாடு படவேண்டும் என்று இருந்தால் ஒரு மனிதனும் என்றைக்குமே எந்த பொது நலனிலும் ஈடு பட முடியாது.

சியர் அப் சுகுமார் - தொடருங்கள் உங்கள் பணிகளை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Sun 8 Jul 2012 - 2:30

யினியவன் wrote:சுகுமார் வருந்தாதீர்கள் - சிலரின் கருத்து சில சமயம் இப்படித் தான் இருக்கும் - சமூக நலனுக்கு வேண்டி நீங்கள் இறங்கி களத்தில் வேலை செய்யும் பொழுது இதனினும் பெரிய சோதனைகளை சந்திக்கே நேரிடும். இதெல்லாம் அதனோடு ஒப்பிட்டால் ஜுஜூபி.

ஒருவன் இதுபோல் எழுத்துப் பிழைகளையும் மற்ற சிறு பிழைகளையும் களைந்துவிட்டு தான் பொது நலனுக்கு பாடு படவேண்டும் என்று இருந்தால் ஒரு மனிதனும் என்றைக்குமே எந்த பொது நலனிலும் ஈடு பட முடியாது.

சியர் அப் சுகுமார் - தொடருங்கள் உங்கள் பணிகளை.
நன்றி அண்ணா என்னவோ அவரின் கருத்து என் கனவும் லட்சியமும் என நான் நினைக்கும் இந்த டிரஸ்ட் யோடு ஒப்பிட்டு பேசி விட்டார் ...சில பேருக்கு இது சாதாரண பதிவு என்னை பொறுத்த மட்டில் ஆழ் மனதின் கனவு நீண்ட வருட லட்சியம் ...நான் மட்டும் இந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டுமென்று நினக்கவில்லை என்னோடு சக தோழர்களும் எங்கோ உலகின் ஒரு மூலையில் இருக்கும் மனிதனும் கூட இதில் பங்கெடுக்க வேண்டும் அநாதை குழந்தைகளின் இன்னல்களிலும்...பலர் டிரஸ்ட் ஐ பதிவு செய்யவே அனுமதிக்கவில்லை ...எப்படியோ போராடி முடித்த பின் இப்பொழுதும் பல இன்னல்கள் ... இந்த கவிதை வெறும் வார்த்தையில் ஜோடிக்க பட்டது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள தவறிவிட்டார் ...தான் யார் எங்கே செல்கிறோம் என்ன ஆக போகிறோம் என தெரியாமல் சுற்றி தவிக்கும் அநாதை குழந்தைகளின் மன எண்ணங்களையே கவிதையில் பதிவு செய்தேன்...அதனால் தான் அவரது கருத்து காயப்படுத்தி விட்டது ...உங்களின் தூண்டுதளுக்கும் வார்த்தைகளுக்கும் இந்த சகோதரன் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் மிக்க நன்றி அண்ணா ....சொல்ல வேறு வார்த்தை இல்லை...நிச்சயம் தடைகள் வந்தாலும் பின் வாங்க மாட்டேன் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by யினியவன் Sun 8 Jul 2012 - 2:44

எனைத் தெருவில் இடத்தான்
பத்துத் திங்கள் சுமந்து எனை
பெற்றெடுத்தாய் என நான்
உணர்ந்திருந்தால் கர்பத்திலேயே
கரைந்திருப்பேனே அம்மா
சொல்ல மறந்தது உன் குற்றமா
உணர மறந்தது என் குற்றமா
தெருவில் எறிந்தது குற்றமென
உணர மறந்தாயோ!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by arjunsugu Sun 8 Jul 2012 - 3:07

யினியவன் wrote:எனைத் தெருவில் இடத்தான்
பத்துத் திங்கள் சுமந்து எனை
பெற்றெடுத்தாய் என நான்
உணர்ந்திருந்தால் கர்பத்திலேயே
கரைந்திருப்பேனே அம்மா
சொல்ல மறந்தது உன் குற்றமா
உணர மறந்தது என் குற்றமா
தெருவில் எறிந்தது குற்றமென
உணர மறந்தாயோ!!!!
மொத்த வலியினையும் உணர்த்தும் வரிகள் ... உண்மை தான் அண்ணா பெற்று எடுத்து எப்படி தான் வீதியில் போட அவர்களுக்கு மனசு வருதோ... அவங்க பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது அநாதை என்கிற பட்டதோடு சின்னச்சிறு குழந்தைங்க ...அவங்க தனி ஒரு ஆளாய் வாழ்க்கையை எதிர் நோக்கும் பயணம் ரொம்ப ஆபத்தானது ....இந்த உலகம் உண்மையிலே அவங்களை அனாதைனு சொல்றது ரொம்ப தப்பு ...

"எனக்கு யார் பெயர்
வைப்பது ...??? - இந்த
உலகம் வைத்த
அநாதை என்ற பெயரை
மாற்ற ...

சோறூட்ட எனக்கு
தாய் வேண்டாம் ...
ஒரு வேளை
உணவு கொடுக்க
யார் இருக்கா...??? "







சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 2 Empty Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum