புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 4:25 pm

இன்னும் மழை
விடவில்லையா ...???

பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...

நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...

நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???

கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...

மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...

எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...

ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...

அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...

பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...

எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...

ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!

எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...

நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...

பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...

குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...

பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...

இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...

எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...

சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...


(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)

அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...




சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 4:30 pm

நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 06, 2012 4:37 pm

நன்றாய் இருக்கிறது arjunsugu .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 4:42 pm

வேதனை தரும் வரிகள் - அந்த வேதனையே வாழ்க்கையாக
அவர்கள் அனுபவிப்பதற்கு மேலா நாம் படும் வேதனை?

கண்டிப்பாக நாம் அனைவரும் இதை மாற்ற முயற்சிக்கலாம்.




arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 5:00 pm

யினியவன் wrote:வேதனை தரும் வரிகள் - அந்த வேதனையே வாழ்க்கையாக
அவர்கள் அனுபவிப்பதற்கு மேலா நாம் படும் வேதனை?

கண்டிப்பாக நாம் அனைவரும் இதை மாற்ற முயற்சிக்கலாம்.
நிச்சயமாக நண்பர் இனியவன் அவர்களே ...நமது தேசத்தின் இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் ஒரு குழந்தையினை வளர்க்கும் பொறுப்பினை ஏற்று கொண்டால் இந்நேரம் அநாதை என்ற சொல் வழக்கொழிந்து போயி இருக்கும் ...நாம் காண விரும்பும் மாற்றமாக நாம் தான் முதலில் மாற வேண்டும் என்ற சொல்லுக்கு இணங்கி அதற்கான முயற்சியினை ஒரு வருட காலத்திற்கு முன்பே நினைத்து விட்டேன் ...அதன் பயனாய் கல்லூரியில் படிக்கும் நாட்களில் இருந்தே STUDENTS MISSION 5 TRUST என்ற சேவை அமைப்பை நண்பர்களை ஒன்றிணைத்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் ...இறுதி கட்டமாக வங்கி கணக்கு ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது பல பேர் இம்முயற்சிக்கு உதவாமல் போனாலும் அலட்சிய போக்கை கடை பிடிப்பதினால் முன்பு பல பேர் டிரஸ்ட் என்ற பேரில் செய்த மோசடிகளை எண்ணி அவர்கள் உதவ மறு ப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது...இது முடியாமல் போனாலும் தனி ஒருவனாய் என்னால் இயன்ற உதவி செய்வேன் ...நன்றி உங்களின்‌ மேலான பகிர்வுக்கும் சிந்தனைக்கும் நண்பர் இனியவன் அவர்களே ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 5:10 pm

நல்ல முயற்சி சுகுமார் - வெற்றி கிடைக்கும் விரைவில்.

தனி ஆளாக நாம மன அமைதிக்கு வேண்டுமெனில் ஒன்றிரண்டு பேருக்கு நம்மால் உதவ முடியும் - மற்றபடி ஒரு கட்டுக் கோப்பான அமைப்பால் தான் இது பலரையும் பயனுற செய்யும்.

தொடங்கியவுடன் இங்கே சொல்லுங்கள் - இங்குள்ள நண்பர்கள் உதவ ஏதுவாகும்.




கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Postகவிதாஜாய் Fri Jul 06, 2012 5:21 pm

கடவுளின் குழந்தையாகவே வாழும் பிள்ளைகளின் மன உணர்வுகளை கச்சிதமாக காட்டியுள்ளீர்கள். இந்நிலை மாற முயற்சி எடுத்தால் மட்டும் போதாது. பெரியவர்கள் மாறும் போது, பிள்ளைகளின் நிலை தானாக மாறும். நன்றி.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 5:34 pm

kavithajoy wrote:கடவுளின் குழந்தையாகவே வாழும் பிள்ளைகளின் மன உணர்வுகளை கச்சிதமாக காட்டியுள்ளீர்கள். இந்நிலை மாற முயற்சி எடுத்தால் மட்டும் போதாது. பெரியவர்கள் மாறும் போது, பிள்ளைகளின் நிலை தானாக மாறும். நன்றி.
மேலான நன்றி தோழி கவிதா அவர்களே ...நாம் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையின் வாழ்விற்கு ஒளி ஏற்றினால் அநாதை என்ற சொல்லே இருக்காது ...நமது தேவைகளினை குறைத்து கொண்டு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ...குழந்தைகளை இன்னிலைக்கு தள்ளும் பெரியோர், மன்னிக்கவும் அவர்களை அவ்வாறு சொல்ல தோன்ற வில்லை அவர்களை போன்றோரை கட்டாயம் தண்டிக்க வேண்டும் ...மாற்றத்தை எதிர் நோக்காமல் நாமே கொண்டு வர முயற்சிப்போமாக ...மிக்க நன்றி மேல கருத்துகளுக்கும் பகிர்வுக்கும் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 5:39 pm

யினியவன் wrote:நல்ல முயற்சி சுகுமார் - வெற்றி கிடைக்கும் விரைவில்.

தனி ஆளாக நாம மன அமைதிக்கு வேண்டுமெனில் ஒன்றிரண்டு பேருக்கு நம்மால் உதவ முடியும் - மற்றபடி ஒரு கட்டுக் கோப்பான அமைப்பால் தான் இது பலரையும் பயனுற செய்யும்.

தொடங்கியவுடன் இங்கே சொல்லுங்கள் - இங்குள்ள நண்பர்கள் உதவ ஏதுவாகும்.
நிச்ச்யம் நண்பர் இனியவன் அவர்களே ... ஒரு நம்பக தன்மை கொண்ட வங்கி கணக்கு உருவாக்கி விட்டால் இந்த முயற்சியின் இறுதியாய் செயல் வடிவம் பெற்று விடும் ... பின்பு நம்மால் முயன்ற உடன் பிறப்புகளுக்கு உதவுவோமாக ...நிச்சயம் நான் அந்த தருணத்தில் இணைந்து செயல் ஆற்றுவோமாக ...நன்றி நண்பரே



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 06, 2012 5:41 pm

rameshnaga wrote:நன்றாய் இருக்கிறது arjunsugu .
நன்றி நண்பர் ரமேஷ் நாக அவர்களே மேலான கருத்துகளுக்கும் பகிர்விர்க்கும் ...மிக்க நன்றி



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக