ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 16, 2012 7:47 pm

"ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." (1கொரிந்தியர்: 15:22).

உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பற்றி வேத வசனம் மேலும் கூறுகிறதாவது:

"ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள் என்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்க மாட்டாதே. நீ விதைக்கிறது இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்" (1கொரிந்தியர்: 15:35-47).

"மரித்தோரின் உயிர்த்தெழுதலும்...அழிவுள்ளதாய் விதைக்கப்படும்; அழிவில்லாததாய் எழுந்திருக்கும்" (1கொரிந்தியர்: 15:42).

"கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும். மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பல வீனமள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்" (1கொரிந்தியர்: 15:53).

"மேலும், மணவாளனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்து கொள்ளுவோம்" (1கொரிந்தியர்: 15:53).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 16, 2012 7:59 pm

மேற்கூறிய வேத வசனங்களின்படி, உயிர்த்தெழுந்த சரீரத்தின் விசேஷித்த தன்மைகள் ஆச்சரியமானவை. இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பரிசுத்தமாக்கர்◌ாடும் பரிசுத்தவான்கள், இந்த தேவ சாயலான மகிமையின் சாயலைப் பெற்று, என்றுமே அழியாத மகிமையின் தோற்றத்துடன் ஜீவிப்பார்கள். இயேசு கிறிஸ்து இவ்விதமான உயிர்த்தெழுந்த சரீரத்தில் தோன்றினார். மரித்த ஆவியின் நிலையில் அவர் தோன்றவில்லை.

இதை வாசிக்கும் அன்பானவர்களே! மரணத்தோடு உங்கள் வாழ்வு முடிவடைவதில்லை. மரணத்தக்குப் பின்புதான் "புதிய வாழ்வு" ஆரம்பமாகிறது. உங்களை சிருஷ்டித்த அதே தேவனுடைய சாயலை நீங்களும் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உங்களுக்கு வாஞ்சை உண்டா? அப்படியானால், இப்பொழுதே ஏன் அதற்கானவைகளைச் செய்யக் கூடாது?

"...ஏனெனில், பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திரக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்" (யோவான்: 5:28,29).

"குமாரனைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனை எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்." (யோவான்: 6:40).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Tue Jul 17, 2012 6:03 pm

"பிசாசின் கிரியைகள்"

நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியும் சக்தியை மனிதருக்கு தேவன் கொடுத்திருக்கிறார். இருந்தும்கூட நன்மையான வழிகளை விட்டு, மக்கள் தீமைகளையே தெரிந்து கொள்ளுகின்றனர். தேவனால் உண்டாக்கப்படாத அநேக மாயையான காரியங்களை பிசாசு இவ்வுலகில் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அவைகளைப் பின்பற்றும்படி மக்கள் தூண்டப்படுவதால், நன்மையை விட்டு வழி விலகி, மாயைகளை மக்கள் பின்பற்றுகின்றனர்.

இவ்விதம் மாயையை பின்பற்றுகிறவர்கள், தேவனை விட்டு தூரம்போய் விடுவதால், தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடிவதில்லை. பதிலாக, மாயையின் பின் பலன்களாகிய பலவித தீமைகளை அனுபவித்து அவதிப்படுகின்றனர். இவ்வித துன்பங்களைக் கண்டு அவர்கள் சீர் திருந்துவதில்லை. மாறாக, திரும்பவும் தவறான வழிகளை உபயோகித்து, கஷ்டங்களைப் போக்கவும், தன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் முயற்சிக்கின்றனர். சோதிடம் மந்திரவாதிகள் மூலமாக விடுதலை பெற விரும்புவோர் திரும்பவும் பிசாசின் கிரியைகளுக்கு இரையாகின்றனர். இதை பலர் ஒத்துக் கொள்ளுவதில்லை.

கவனமாக, உண்மையை பரிசோதித்து அறிய விரும்புகிறவர்கள், பிசாசின் கிரியைகளால் மக்கள் வஞ்சிக்கப்படுவதை நிச்சயம் ஒத்துக் கொள்ளுவார்கள். தேவனுடைய கற்பனைகளுக்கு விரோதமாகப் பாவம் செய்வதும், பாவம் செய்ய மக்களைத் தூண்டுவதும் பிசாசின் கிரியைகளாகும். (1யோவான்: 3:8).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Tue Jul 17, 2012 6:32 pm

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களையும் கூட விழத்தட்ட, பிசாசானவன் கிரியை செய்து வருவதால், தெளிந்த புத்தியுடன் கூடிய விழிப்புள்ள ஜீவியம், கிறிஸ்தவர்களுக்குத் தேவை. (1பேதுரு: 5:8).

தேவனை அறியாத மக்களை மோசம் போக்கி தன்னை வணங்கச் செய்வதுடன் (மத்தேயு: 4:8-10) தேவனை அறிந்த மக்களையும் கூட, திசை திரும்பச் செய்யும் பற்பல சோதனைகளை அவர்களுக்கு உண்டாக்குவதும் பிசாசின் வேலையாகும்.

கீழே தரப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் பிசாசின் கிரியைகளே:

பலவித வியாதிகளை உண்டாக்குதல்: (லூக்கா: 11:14; 8:35, 36; மத்தேயு: 12:22).

விக்கிரக வணக்கம், சிருஷ்டி வணக்கம்: (1கொரிந்தியர்: 10:19,20; ரோமர்: 1:21-25).

வஞ்சித்தல், மனதைக் கெடுத்தல்: (2கொரிந்தியர்: 11:3).

சோதனைக்குட்படுத்துதல்: (லூக்கா: 23:31; யோபு: 2:7; மத்தேயு: 4:3-10).

தேவனுடைய வேலையை தடுத்தல்: (சகரியா: 3:1; 1தெசலோனிக்கேயர்: 2:18).

சுவிசேஷத்தை புறக்கணிக்கச் செய்தல்: (2கொரிந்தியர்: 4:4; மத்தேயு: 13:19).

ஜெபத்துக்கு வரும் பதிலை தடை செய்தல்: (தானியேல்: 10:13,20).

பொய் போதகம் செய்தல்: (ஆதியாகமம்: 3:4; அப்போஸ்தலர்: 13:10; யோவான்: 8:44; 2பேதுரு: 2:1).

கள்ளத்தீர்க்கதரிசனம் உரைத்தல்: (உபாகமம்: 18:20; எரேமியா: 14:14; 23:11,13,14).

பொய்யான அற்புதங்களை செய்தல்: (2தெசலோனிக்கேயர்: 2:9,10; வெளிப்படுத்தல்: 16:14).

தேவனுடையவர்களைக் குற்றம் சாட்டுதல்: (வெளிப்படுத்தல்: 12:10).

தேவதூஷணம் பேசுதல்: (வெளிப்படுத்தல்: 13:5,6; 2பேதுரு: 2:10).

இச்சை - பகை - விரோதம் உண்டாக்குதல் (யாக்கோபு: 3:14,15; 4:1).

பொய்யானவைகளைப் பேசுதல்: (யோவான்: 8:44; அப்போஸ்தலர்: 5:3).

பாவம் செய்யத் தூண்டுதல்: (1கொரிந்தியர்: 7:5; 1நாளாகமம்: 21:1).

மேற் கூறப்பட்ட விதங்களில் கிரியைகளைச் செய்யும்படி, சாத்தான் மக்களிடையே கிரியை செய்கிறான். இந்த உலகத்தில் நமக்கு உண்மையான ஒரே எதிரி சாத்தான் மட்டுமே.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Tue Jul 17, 2012 7:30 pm

உலகில் பகை, விரோதம், சண்டை, கொலை ஆகியவைகளுக்குக் காரணம் பிசாசு என்ற உண்மையை ஒவ்வொருவரும் அறிந்து, பிசாசு தங்களில் கிரியை செய்ய இடம் கொடாதபடி, ஜாக்கிரதையுடன் ஜீவிக்க வேண்டும்.

பிசாசின் கிரியைகள் அதிகரிப்பதைக் கண்டு, நாம் பயப்படத் தேவையில்லை. பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பு+மியில் வந்தார். பிசாசின் வல்லமையைக் குலைத்து,அதிகாரத்தை அவனிடமிருந்து உரிந்து கொண்டு, சிலுவையின் மீது வெற்றி சிறந்தார். அத்துடன், பிசாசையும் அவன் வல்லமையையும் மேற் கொள்ள நமக்கு அவன் மீது அதிகாரமும் வல்லமையும் அளித்திருக்கிறார்.

இப்பொழுது பிசாசுக்கு நம்மீது அதிகாரம் இல்லை. அவர் மரணத்துக்கு அதிகாரியாகிய சாத்தானை தமது மரணத்தால் வென்றார். மரித்த அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததன் மூலம் மரணத்தின் கூர் முறிக்கப்பட்டிருக்கிறது. மரணத்தை இயேசு ஜெயமாக விழுங்கினார். அவர் உயிர்த்தெழுந்ததினால், தம்மை தேவ குமாரனாக உலகத்துக்கு நிரூபித்திருக்கிறார். அவர் சதா காலமும் உயிரோடிருப்பதால், இன்று பிசாசால் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்கிறார். (எபிரேயர்: 4:15; 2:18). பிதாவாகிய தேவனிடம் நமக்காக பரிந்து பேசுகிறார்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவும், அவருடைய சத்திய வசனங்களை அறிந்து கொள்ளுவதன் மூலமாகவும் பிசாசின் கிரியைகளால் ஏற்படும் சால போராட்டங்களிலிருந்தும் இயேசுவின் நாமத்தில் மக்கள் இன்று அற்புத விடுதலை பெற முடியும்.

உங்கள் சரீரத்தில், வீட்டில், வேலை ஸ்தலங்களில், வியாபாரத்தில், உத்தியோகத்தில், விவசாயத்தில் தொல்லைகளை ஏற்படுத்தவது பிசாசு என்பதை நீங்கள் அறிந்து, செயல்பட வேண்டும். இயேசுவின் நாமத்தின் மேலுள்ள அதிகாரத்தை உபயோகப்படுத்துவதன் மூலம், பிசாசின் கிரியைகளிலிருந்து நீங்கள் நிரந்தரமான விடுதலை பெற முடியும். தேவனுக்கு கீழ்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்பதன் மூலம் பிசாசு உங்களை விட்டு ஓடுவதைக் காண்பீர்கள்.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Wed Jul 18, 2012 8:39 am

"மந்திர சக்தியும் தேவ வல்லமையும்"

பிசாசின் ஆவிகளைக் கொண்டு மந்திரவாதிகள் சில சக்திகளை மக்கள் முன் வெளிப்படுத்துவதால், அதைப் பார்க்கும் மக்களுக்கு பயமும், பீதியும், ஏற்படுவதுடன், அவ்வித சக்தியின் மீது நம்பிக்கையும் ஏற்பட்டு விடுகிறது. இந்த மந்திர சக்தியை, மந்திரவாதிகள் இருவிதங்களில் உபயோகிக்கிறார்கள். நன்மைக்காகவும், தீமைக்காகவும் இச்சக்தியை தாங்கள் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

மனிதர் மீதும், ஜீவராசிகள் மீதும், பற்பல சியாதிகளை உண்டு பண்ணவும், மனிதரை மயக்கவும், வசீகரம் செய்யவும், புத்தி மாறாட்டம் செய்யவும், கொல்லவும் (Block Magic) உபயோகிக்கின்றனர்.

வியாதிகளைக் குணப்படுத்தவும் மாய வித்தைகளைச் செய்யவும் அற்புதங்கள், அடையாளங்கள் செய்யவும் (White Magic) உபயோகிக்கின்றனர்.

மேற் கூறிய இரு வழிகளிலும் கிரியை செய்ய அசுத்த ஆவிகளே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் மறக்கக்கூடாது.

இவ்வித சக்திகளைக் கொண்டு, பிறரைப் பழிவாங்குவதும், பயமுறுத்தி பணம் சம்பாதிப்பதும் யாவரும் அறிந்ததே.

ஏவல் பில்லி சுனியம் மாயவித்தை, வஞ்சனை போன்ற அத்தனை தீமைகளும் மந்திர சக்தியினால் உண்டானவைகளே.

அநேகர் இவ்வித மந்திர சக்திகளுக்கு இரையாகி, தங்கள் ஆரொக்கியம், பதவி, பணம், தொழில், சொத்துக்கள், மனைவி கணவன் பிள்ளைகளை இழந்து தவிக்கின்றனர். இவ்வித மந்திர சக்திகளால், மக்களுக்கு மெய்யான நன்மை கிடைப்பதில்லை.

தேவ வல்லமை, பிசாசின் சக்திக்கும் மனித அறிவுக்கும் அப்பாற்ப்பட்டது. தேவனால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் எதுவுமே இல்லை. இயேசு கிறிஸ்துவின் நாமம் "அதிசயமானவர்" என்பதாகும்.

இயேசு கிறிஸ்துவின் அற்புத நாமத்தை சரியாக உபயோகிக்க அறிந்தவர்கள் மூலம், இன்றும் மகத்தான அற்புதங்கள் நடைபெறும்.

தேவனுடைய அற்புதங்கள் நிரந்தரமானவை. கொஞ்ச நேரம் இருந்து விட்டு, பின்பு மறைந்தோ, மாறியோ போகிறவைகளல்ல.

பிசாசின் ஆவிகளால் செய்யப்படும் அற்புதங்களை "மாயா ஜாலங்கள்" என்று அழைக்கின்றனர். இவைகள் மாயையானவைகள். சற்று நேரம் இருந்து விட்டு, பின்பு மாறிவிடும் தன்மையுடையவைகள். ஆகையால், இவைகளை "பொய்யான அற்புதங்கள்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Wed Jul 18, 2012 9:07 am

மந்திரவாதிகளின் அற்புதம் செய்யும் சக்தி ஒரு எல்லைக்குட்பட்டதே. குறிப்பாக, ஒரு பிறவிக் குருடனுடைய கண்களை எந்த மந்திர சக்தியை உபயோகித்தும் திறக்க முடியாது.

"பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே" (யோவான்: 9:32).

இயேசு கிறிஸ்துவோ குருடனுடைய கண்களைத் திறந்தார். (யோவான்: 9:1-11).

இன்றும் கூட இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மூலம் குருடர் பார்வையடையவும், செவிடர் கேள்வியைப் பெறவும், முடவர் குதித்து எழுந்து நடக்கவும் தக்க வல்லமையான அற்புதங்கள் நடைபெறுகின்றன.

.வ்வித அற்புதங்களை இயேசுவின் நாமத்தில் செய்வதற்கான அதிகாரமும் - வல்லமையும் - வரமும் இன்றும் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அருளப்படுகிறது.

தேவன் ஒருவரைத் தவிர எவரும் கடலின் அலைகள் மீது நடக்க முடியாது என்பது பரிசுத்த வேதாகமத்தின் சத்தியமாகும்.

"அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகள் மேல் நடக்கிறவர்" (யோபு: 9:8).

இயேசு கிறிஸ்து, சமுத்திர அலைகளின் மீது நடந்து, தானே அந்த மெய்யான தேவன் என்பதை நிரூபித்தார்.

"இரவின் நாலாம் ஜாமத்தில், இயேசு கடலின் மேல் நடந்து, அவர்களிடத்துக்கு வந்தார்." (மாற்கு: 14:25).

இந்த அற்புதத்தை செய்ய, எந்த மனிதருக்கும் அதிகாரம் இல்லை.

சில இடங்களில் சமுத்திரத்தின் மேல் நடப்பதாகக் கூறி, அவ்விதம் செய்யத் துணிந்தவர்கள் தோல்வியும் அவமானமும் அடைந்ததை நாம் அறிவோம்.

இயெசு கிறிஸ்துவின் அற்புதங்கள் மகத்தானவை. எவ்வித சுயநலன், பெரமை, புகழுக்காக அவைகள் செய்யப்படவில்லை. விடுதலை வேண்டும் என்ற அபயக் குரல் எங்கெல்லாம் உண்டாயிற்றோ, அங்கெல்லாம் இயேசு மனதுருக்கத்துடன் அற்புதங்களை நடப்பித்து, தமது அன்பை வெளிப்படுத்தினார்.

சுயநலன், பேர், புகழ், மேன்மைக்காக அற்புதங்களை செய்யும்படி, சில சு+ழ்நிலைகளில் இயேசு வற்புறுத்தப்பட்டார்.

ஒரு சமயம், அவர் மிகுந்த பசியுடன் இருக்கும் வேளையில் பிசாசு அவரைப் பார்த்து:

"நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்" என்றான். (மத்தேயு: 4:2,3).

மற்றொரு சமயம், வேத பாரகரிலும், பரிசேயரிலும் சிலர் இயேசுவை நோக்கி, "போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்" என்றார்கள். (மத்தேயு: 12:38,39).

இன்னொரு சமயத்தில், இயேசு சிலுவையில் அறையப்பட்டவராக தொங்கிக் கொண்டிருந்த வேளையில்: "அந்த வழியாய் போகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி...'நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா' என்று அவரைத் தூஷித்தார்கள்." (மத்தேயு: 27:39,40).

மேற் கூறிய மூன்று சவால்களையும், இயேசு நிராகரித்தார். பிசாசின் வஞ்சகத்துக்கு இயேசு இணங்கவில்லை. பிசாசின் சவால்களையும், மனித சவால்களையும் ஏற்றுக் கொண்டு, அற்புதங்களைச் செய்து, தன்னை தெய்வமாக நிரூபிக்கும் அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

இயேசு கிறிஸ்துவின் ஊழியம் முழுவதும் அற்புதங்களால் நிறைந்திருந்தது. நடைபெறும் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டும், அவரே தேவன் என்றும் ஏற்றுக் கொள்ள விரும்பாமல், புதிய சவால்களை விடும் எவருக்காகவும் புதிய அற்புதங்களைச் செய்ய தேவன் விரும்பவில்லை.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by dhilipdsp Wed Jul 18, 2012 9:43 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 12:48 am

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் தன்னை தெய்வமாக நிருபிக்கும்படி, இயேசு அற்புதங்களை பு+மியில் நடப்பிக்கவில்லை. ஜனங்களின் மீது தமக்கிருக்கும் அன்பினால், மனதுருக்கம் கொண்டு, ஜனங்களை துன்பங்களிலிருந்தும், பலவித பிணிகளிலிருந்தும், பிசாசின் பிடிகளிலிருந்தும் இயேசு விடுவித்து, ஜனங்களுக்கு நன்மை செய்கிறவராகத் தம்மை வெளிப்படுத்தினார்.

கல்வாரி சிலுவை மூலம் மரணத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயேசு, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசை தமது மரணத்தினால் ஜெயித்து, மரணத்தை ஜெயமாக விழுங்கி, மூன்றாம் நாளில் திரும்பவும் உயிருடன் எழுந்ததன் மூலம் தன்னை "மெய்யான தேவகுமாரன்" என்று பலமாக நிரூபித்தார்.

"மாமிசத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." (ரோமர்: 1:5).

இந்த நாட்களிலும் கூட, தேவனிடத்திலிருந்து பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெற்று வியாதியஸ்தரைக் குணமாக்கும் தேவனுடைய ஊழியர்களும்கூட, தங்களது ஊழியத்தின் பாதையில் கொண்டு வரப்படும் சவால்களை ஏற்க மறுக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், பரிசுத்தாவியானவரால் செய்யப்படும் அற்புதங்கள், தேவசித்தப்படி, தேவ நாம மகிமைக்காக மட்டும் நடப்பிக்கப்பட வேண்டும். அற்புதங்களை நடப்பிக்கத்தக்க தேவ வரம் பெற்றவர்கள், அதை சுய மகிமைக்காகவும், சுய நலனுக்காகவும், பணம், பேர், புகழுக்காகவும் உபயோகிக்கும்படி சாத்தானும், ஜனங்களும் தூண்டுவார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 12:59 am

ஏனெனில், வஞ்சிக்கும் ஆவிகள், அவ்விதம் செய்யும்படி தூண்டி விடும். அதற்கான பல சந்தர்ப்பங்களையும், சு+ழ்நிலைகளையும் உருவாக்கும். பலவித ஏதுக்களை முன் நிறுத்தும். அவைகளில் சிக்குண்டால், முடிவில் தேவ கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

"அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" (மத்தேயு: 7:22,23).

தேவனிடம் கிருபையின் வரங்களைப் பெற்றவர்கள் வஞ்சிக்கும் ஆவிகளால் பிடிபட்டு, தேவனுக்குக் கீழ்படிய முடியாத நிலைக்கு வந்துவிட முடியும். அந்நிலையிலும், வரங்கள் கிரியை செய்யத்தான் செய்யும். ஆகையால், அற்புதங்கள் நடக்கலாம்; வியாதிகள் குணமாகலாம்; பிசாசுகள் ஆடலாம்; தீர்க்கதரிசனங்கள் உரைக்கலாம்.

ஆனால், ஜீவியத்திலும் - உபதேசத்திலும் பரிசுத்தம் இல்லாத எந்த ஊழியமும், தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 10 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum