Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters
Page 9 of 15
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
First topic message reminder :
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"உயிர்த்தெழுந்த சரீரம்"
சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்ட பின் மூன்றாவது நாளில் திரும்பவும் இயேசு கிறிஸ்து பூமியில் வந்து, தமக்கு அறிமுகமானவர்களுக்கு தரிசனம் தந்தார், அவர்களோடு பேசினார் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
இதை ஒரு சாரார் தவறாகப் புரிந்து கொண்டு, இறந்தவர்களின் ஆவி பூமிக்கு வந்து, பூமியிலுள்ளவர்களுடன் பேசவும் முடியும் என்று நம்பி வருகின்றனர். இயேச மரித்த பின்பு ஒரு ஆவியாக மட்டும் அவர் பூமிக்கு வரவில்லை. அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுதலின் மூலம் ஒரு புதிய - மகிமையான சரீரத்துடன் பூமியில் அநேகருக்கு காட்சியளித்தார். பேசினார். புசித்தார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் அளித்த தரிசனங்களைக் குறித்து, கீழே குறிப்பிட்டுள்ள வசனங்களை அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ௧கொரிந்தியர்: 15 ம் அதிகாரம் 3 ம் வசனம் முதல் எழுதுகின்றார்.
"நான் அடைந்ததும், உங்களுக்குப் பிரதானமாக ஒப்புக் கொடுத்ததும் என்னவென்றால் கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐநூறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு, யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்." (1கொரிந்தியர்: 15:3-8).
இது தவிர, இயேசு கிறிஸ்து பிறருக்குத் தரிசனம் கொடுக்கும் முன்பு, அவர் உயிரோடு எழுந்த செய்தி, தூதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
தொடரும்...
சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்ட பின் மூன்றாவது நாளில் திரும்பவும் இயேசு கிறிஸ்து பூமியில் வந்து, தமக்கு அறிமுகமானவர்களுக்கு தரிசனம் தந்தார், அவர்களோடு பேசினார் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
இதை ஒரு சாரார் தவறாகப் புரிந்து கொண்டு, இறந்தவர்களின் ஆவி பூமிக்கு வந்து, பூமியிலுள்ளவர்களுடன் பேசவும் முடியும் என்று நம்பி வருகின்றனர். இயேச மரித்த பின்பு ஒரு ஆவியாக மட்டும் அவர் பூமிக்கு வரவில்லை. அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுதலின் மூலம் ஒரு புதிய - மகிமையான சரீரத்துடன் பூமியில் அநேகருக்கு காட்சியளித்தார். பேசினார். புசித்தார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் அளித்த தரிசனங்களைக் குறித்து, கீழே குறிப்பிட்டுள்ள வசனங்களை அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ௧கொரிந்தியர்: 15 ம் அதிகாரம் 3 ம் வசனம் முதல் எழுதுகின்றார்.
"நான் அடைந்ததும், உங்களுக்குப் பிரதானமாக ஒப்புக் கொடுத்ததும் என்னவென்றால் கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐநூறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு, யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்." (1கொரிந்தியர்: 15:3-8).
இது தவிர, இயேசு கிறிஸ்து பிறருக்குத் தரிசனம் கொடுக்கும் முன்பு, அவர் உயிரோடு எழுந்த செய்தி, தூதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தில் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையை பார்க்க வந்தனர். அப்பொழுது பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி,அதன் மேல் உட்கார்ந்தான். தூதன் ஸ்திரிகளை நோக்கி நீங்கள் பயப்படாதிருங்கள். சிருவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்; அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு: 28:1,2,5,6).
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் மூலம், அடக்கம் பண்ணப்பட்டிருந்த இயேசுவின் சரீரம், கல்லறையை விட்டு வெளிப்பட்டிருந்தது! 'அவர் இங்கே இல்லை' என்ற பதம், அவர் சரீரம் இங்கே இல்லை என்பதைக் குறிக்கிறது. (லூக்கா: 24:12,23).
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இறந்தவர்களின் ஆவி என்ற நிலையில் அவர் தம்முடையவர்களுக்கு தரிசனம் அளிக்காமல், புதியதொரு மகிமையின் சாயலுள்ள உயிர்த்தெழுந்த சரீரத்தில் இயேசு காட்சியளித்தார். இந்த மகிமையான சரீரத்தின் தன்மைகள் விசித்திரமானவை. இந்த உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரத்தின் சில தன்மைகளை, இயேசு கிறிஸ்துவின் தரிசனங்களிலிருந்து அறிய முடியும்.
இந்த 'உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம்' வெவ்வேறு சாயலில் தோற்றமளிக்க வல்லது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின், இந்த உலகில் அநேகருக்கு தரிசனமானார். அநேகரோடு பேசினார். பழகினார். இவ்வித சந்தர்ப்பங்களை, வேத வசனங்களைக் கொண்டு கவனித்தால், உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரத்தின் நிலைகளை ஒருவாறு அறியலாம்.
தொடரும்...
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் மூலம், அடக்கம் பண்ணப்பட்டிருந்த இயேசுவின் சரீரம், கல்லறையை விட்டு வெளிப்பட்டிருந்தது! 'அவர் இங்கே இல்லை' என்ற பதம், அவர் சரீரம் இங்கே இல்லை என்பதைக் குறிக்கிறது. (லூக்கா: 24:12,23).
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இறந்தவர்களின் ஆவி என்ற நிலையில் அவர் தம்முடையவர்களுக்கு தரிசனம் அளிக்காமல், புதியதொரு மகிமையின் சாயலுள்ள உயிர்த்தெழுந்த சரீரத்தில் இயேசு காட்சியளித்தார். இந்த மகிமையான சரீரத்தின் தன்மைகள் விசித்திரமானவை. இந்த உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரத்தின் சில தன்மைகளை, இயேசு கிறிஸ்துவின் தரிசனங்களிலிருந்து அறிய முடியும்.
இந்த 'உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம்' வெவ்வேறு சாயலில் தோற்றமளிக்க வல்லது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின், இந்த உலகில் அநேகருக்கு தரிசனமானார். அநேகரோடு பேசினார். பழகினார். இவ்வித சந்தர்ப்பங்களை, வேத வசனங்களைக் கொண்டு கவனித்தால், உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரத்தின் நிலைகளை ஒருவாறு அறியலாம்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"அன்றையத் தினமே, அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்" (லூக்கா: 24:13).
"இப்படி அவர்கள் பேசி சம்பாஷித்துக் கொண்டிருக்கையில் இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார்" (லூக்கா: 25:15).
"ஆனாலும், அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது" (லூக்கா: 24:16).
அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்கு சமீபமானார்கள் அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்" (லூக்கா: 24:28).
"அவர்கள் அவரை நோக்கி, நீர் எங்களுடனே தங்கியிரும். சாயங்காலமாயிற்று. பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர், அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." (லூக்கா: 24:29).
"அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார்." (லூக்கா: 24:31).
மேலே வாசித்த வசனங்கள் மூலம் இயேசு கிறிஸ்து தமது இரண்டு சீர்களோடு சுமார் எட்டு மைல் தூரம் பேசிக் கொண்டே நடந்து சென்றார். ஆயினும் அவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை! அவர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர்போலவே அவர்கள் அவரைக் கண்டார்கள். பேசினார்கள். கூட நடந்தார்கள். முடிவில் இயேசுவை அவருடைய சுய உருவத்திலும் அவர்கள் கண்டார்கள்!
அதுமட்டுமல்ல, இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்த விடும் சக்தியும், இந்த உயிர்த்தெழுந்த சரீரத்துக்கு இருந்தது! இவை தவிர, வேறு சில தன்மைகளையும், வேத வசனம் வெளிப்படுத்துகிறது.
தொடரும்...
"இப்படி அவர்கள் பேசி சம்பாஷித்துக் கொண்டிருக்கையில் இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார்" (லூக்கா: 25:15).
"ஆனாலும், அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது" (லூக்கா: 24:16).
அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்கு சமீபமானார்கள் அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்" (லூக்கா: 24:28).
"அவர்கள் அவரை நோக்கி, நீர் எங்களுடனே தங்கியிரும். சாயங்காலமாயிற்று. பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர், அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." (லூக்கா: 24:29).
"அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார்." (லூக்கா: 24:31).
மேலே வாசித்த வசனங்கள் மூலம் இயேசு கிறிஸ்து தமது இரண்டு சீர்களோடு சுமார் எட்டு மைல் தூரம் பேசிக் கொண்டே நடந்து சென்றார். ஆயினும் அவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை! அவர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர்போலவே அவர்கள் அவரைக் கண்டார்கள். பேசினார்கள். கூட நடந்தார்கள். முடிவில் இயேசுவை அவருடைய சுய உருவத்திலும் அவர்கள் கண்டார்கள்!
அதுமட்டுமல்ல, இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்த விடும் சக்தியும், இந்த உயிர்த்தெழுந்த சரீரத்துக்கு இருந்தது! இவை தவிர, வேறு சில தன்மைகளையும், வேத வசனம் வெளிப்படுத்துகிறது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவில் நின்று; உங்களுக்கு சமாதானம் என்றார்" (லூக்கா: 24:37).
"அவர்கள் கலங்கி, பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்" (லூக்கா: 24:37).
"அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?" (லூக்கா: 24:48).
"நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாமிசமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்" (லூக்கா: 24:39,40).
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில், புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களைக் கேட்டார்.
அப்போது, பொரித்த மீன் கண்டத்தையும், தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
"அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்து..." (லூக்கா: 24:41-43).
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வேத வசனங்கள் மிகுந்த கவனத்துக்கு உரியவை. (வசனம் 36) சீர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவில் நின்று 'உங்களுக்கு சமாதானம்' என்றார். சீஷர்கள் இயேசுவின் இறந்த ஆவியுடன் தொடர்பு கொள்ள வெண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு கூடியிருக்கவில்லை. இயேசு தாமாகவே அங்கு வந்தார்! அவர் தோன்றிய விதத்தை யோவான்: 20:18 -ல் வாசிக்கலாம்.
தொடரும்...
"அவர்கள் கலங்கி, பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்" (லூக்கா: 24:37).
"அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?" (லூக்கா: 24:48).
"நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாமிசமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்" (லூக்கா: 24:39,40).
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில், புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களைக் கேட்டார்.
அப்போது, பொரித்த மீன் கண்டத்தையும், தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
"அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்து..." (லூக்கா: 24:41-43).
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வேத வசனங்கள் மிகுந்த கவனத்துக்கு உரியவை. (வசனம் 36) சீர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவில் நின்று 'உங்களுக்கு சமாதானம்' என்றார். சீஷர்கள் இயேசுவின் இறந்த ஆவியுடன் தொடர்பு கொள்ள வெண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு கூடியிருக்கவில்லை. இயேசு தாமாகவே அங்கு வந்தார்! அவர் தோன்றிய விதத்தை யோவான்: 20:18 -ல் வாசிக்கலாம்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
வாரத்தின் முதலாம் நாளாகிய அன்றையத்தினம் சாயங்கால வேளையில், சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்கு பயந்ததினால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று 'உங்களுக்கு சமாதானம்' என்றார்.
இயேசு வந்த வேளை, இருள் சூழ்ந்த நேரம் அல்ல. மாலைவேளையாக இருந்தது. ஆனால வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் இயேசு அங்கே உள்ளே வர முடிந்தது! இதிலிருந்து “உயிர்த்தெழுந்த சரீரம்“ எந்த இடத்திற்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த “மகிமையின் சரீரம“ என்று அறியலாம்.
கட்டிட சுவரோ கதவுளோ அதை தடை செய்ய முடியாது. மேலும் இந்த உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் , மாமிச உருவில் தோற்றமளிக்கவும் வல்லமையுடையது. தொட்டுப் பார்க்கக்கூடிய திட சரீரத்தில் தோற்றமளிக்கக்கூடியது.
ஆனால், அதேவேளையில், ஆவியின் உருவில், மாயமாக மறையக் கூடிய சக்தியும் வாய்ந்தது. இன்னமும் கூற வேண்டுமானால், இந்த மகிமையின் சரீரத்திற்கு பசியோ தாகமோ கிடையாது. ஆயினும், மாமிச உருவில் தோன்றும் வேளைகளில், விரும்பினால் நம்மைப் போன்று புசிக்கவும், குடிக்கவும் கூடும். இயேசு தமது, உயிர்த்தெழுந்த சரீரத்தில், சீஷர்கள் கொடுத்த மீன் கண்டத்தைப் புசித்ததாக லூக்கா: 24:43 -ல் வாசிக்கிறோம்.
இவ்விதமான அற்புத இலட்சணங்கள் உள்ள உயிர்ப்பிக்கப்பட்ட மகிமையின் சரீரத்திற்கும், இறந்தவுடன் மாமிச சரீரத்தை விட்டுப் பிரியும் ஆன்ம சரீரத்திற்கும் எண்ணிறந்த வித்தியாசங்கள் உண்டு.
தொடரும்...
இயேசு வந்த வேளை, இருள் சூழ்ந்த நேரம் அல்ல. மாலைவேளையாக இருந்தது. ஆனால வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் இயேசு அங்கே உள்ளே வர முடிந்தது! இதிலிருந்து “உயிர்த்தெழுந்த சரீரம்“ எந்த இடத்திற்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த “மகிமையின் சரீரம“ என்று அறியலாம்.
கட்டிட சுவரோ கதவுளோ அதை தடை செய்ய முடியாது. மேலும் இந்த உயிர்த்தெழுந்த மகிமையின் சரீரம் , மாமிச உருவில் தோற்றமளிக்கவும் வல்லமையுடையது. தொட்டுப் பார்க்கக்கூடிய திட சரீரத்தில் தோற்றமளிக்கக்கூடியது.
ஆனால், அதேவேளையில், ஆவியின் உருவில், மாயமாக மறையக் கூடிய சக்தியும் வாய்ந்தது. இன்னமும் கூற வேண்டுமானால், இந்த மகிமையின் சரீரத்திற்கு பசியோ தாகமோ கிடையாது. ஆயினும், மாமிச உருவில் தோன்றும் வேளைகளில், விரும்பினால் நம்மைப் போன்று புசிக்கவும், குடிக்கவும் கூடும். இயேசு தமது, உயிர்த்தெழுந்த சரீரத்தில், சீஷர்கள் கொடுத்த மீன் கண்டத்தைப் புசித்ததாக லூக்கா: 24:43 -ல் வாசிக்கிறோம்.
இவ்விதமான அற்புத இலட்சணங்கள் உள்ள உயிர்ப்பிக்கப்பட்ட மகிமையின் சரீரத்திற்கும், இறந்தவுடன் மாமிச சரீரத்தை விட்டுப் பிரியும் ஆன்ம சரீரத்திற்கும் எண்ணிறந்த வித்தியாசங்கள் உண்டு.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
இயேசு கிறிஸ்து, பூமியில் மூன்று பேர்களை, மரித்த பின்பு உயிரோடு எழுப்பினார். இவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்ட மகிமையின் சரீரம் கொடுக்கப்படவில்லை. தங்களுடைய மாம்ச சரீரத்தில்தான் அவர்கள் எழுப்பப்பட்டார்கள். மரணத்தில் அவர்களை விட்டுப் பிரிந்த ஆவியையும், ஆத்துமாவையும் அவர்களுக்குள் திரும்பி வரும்படி இயேசு கட்டளையிட்டார்.
ஆகவே, அவர்கள் திரும்பவும் பூமியில் வாழ்ந்து திரும்பவும் மரணமடைந்தனர். தேவனுடைய அனுமதியின் பேரில் மரித்தவர்களை உயிரோடு எழுப்ப, தமது ஊழியருக்கும் தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கூறப்பட்டபடி, இறந்து போனவர்களின் ஆவிகள், பூமியிலுள்ளவர்களுடன் பேசவும் தொடர்பு கொள்ளவும் முடியாது.
தொடரும்...
ஆகவே, அவர்கள் திரும்பவும் பூமியில் வாழ்ந்து திரும்பவும் மரணமடைந்தனர். தேவனுடைய அனுமதியின் பேரில் மரித்தவர்களை உயிரோடு எழுப்ப, தமது ஊழியருக்கும் தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கூறப்பட்டபடி, இறந்து போனவர்களின் ஆவிகள், பூமியிலுள்ளவர்களுடன் பேசவும் தொடர்பு கொள்ளவும் முடியாது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"மரணமும் உயிர்த்தெழுதலும்"
வெவ்வேறு விதமாக மரணமடைந்தோரின் சரீரங்கள், பல விதங்களில் அழிந்து போனாலும் கூட, திரும்பவும் ஓர் நாளில் தேவன் அந்த சரீரங்களை எழுப்புவார் என்று வேதம் கூறுகிறது. ஆகையால், பூமிக்குள் புதைக்கப்பட்டு அல்லது தகனம் செய்யப்பட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்து சிதைந்து போன சரீரங்கள் அனைத்தம் கிறிஸ்துவின் நாளில், தங்கள் தங்கள் வரிசையில் திரும்பவும் உயிர் பெற்று எழும்பும்.
Nothing is lost when a candle என்ற ஆங்கிலப் பழமொழிப்படி, ஒரு மெழுகுவர்த்தி எரிந்து, ஒன்றுமில்லாமற் போனாலும் கூட, அதிலுள்ள மூலப் பொருட்கள், வெறு கூட்டுப் பொருட்களாக (Compounds) இரசாயண மாறுதல் அடைந்து, ஆகாயத்தில் கலந்திருக்கிறதேயன்றி, அழிந்து போய்விடவில்லை! அதே கூட்டுப் பொருட்களிலிருந்து, திரும்பவும் மெழுகுவர்த்தியை உண்டாக்க முடியும்.
அவ்விதமே, மனித சரீரத்தை தேவன் மண்ணிலிருந்து உண்டாக்கினார். ஆயினும் ஒவ்வொரு மனிதனும் தன்னில் தானே தோற்றத்திலும் அமைப்பிலும் வெவ்வேறு வித்தியாசமானவர்களாயிருக்கும்படி, பலதரப்பட்ட அணுப் பிரிவுகளைக் கொண்டு இசைத்திருக்கின்றார். மரணத்தின் காரணமாக மாமிசம் அழிந்தாலும் இந்த அணுக்கள் அழிவதில்லை. ஆகையால், தேவன் கட்டளையிடும் வேளையில் அந்தந்த சரீரத்தின் ஆவிகளைக் கொண்டு உயிர்ப்பிக்கப்படும்!
தொடரும்...
வெவ்வேறு விதமாக மரணமடைந்தோரின் சரீரங்கள், பல விதங்களில் அழிந்து போனாலும் கூட, திரும்பவும் ஓர் நாளில் தேவன் அந்த சரீரங்களை எழுப்புவார் என்று வேதம் கூறுகிறது. ஆகையால், பூமிக்குள் புதைக்கப்பட்டு அல்லது தகனம் செய்யப்பட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்து சிதைந்து போன சரீரங்கள் அனைத்தம் கிறிஸ்துவின் நாளில், தங்கள் தங்கள் வரிசையில் திரும்பவும் உயிர் பெற்று எழும்பும்.
Nothing is lost when a candle என்ற ஆங்கிலப் பழமொழிப்படி, ஒரு மெழுகுவர்த்தி எரிந்து, ஒன்றுமில்லாமற் போனாலும் கூட, அதிலுள்ள மூலப் பொருட்கள், வெறு கூட்டுப் பொருட்களாக (Compounds) இரசாயண மாறுதல் அடைந்து, ஆகாயத்தில் கலந்திருக்கிறதேயன்றி, அழிந்து போய்விடவில்லை! அதே கூட்டுப் பொருட்களிலிருந்து, திரும்பவும் மெழுகுவர்த்தியை உண்டாக்க முடியும்.
அவ்விதமே, மனித சரீரத்தை தேவன் மண்ணிலிருந்து உண்டாக்கினார். ஆயினும் ஒவ்வொரு மனிதனும் தன்னில் தானே தோற்றத்திலும் அமைப்பிலும் வெவ்வேறு வித்தியாசமானவர்களாயிருக்கும்படி, பலதரப்பட்ட அணுப் பிரிவுகளைக் கொண்டு இசைத்திருக்கின்றார். மரணத்தின் காரணமாக மாமிசம் அழிந்தாலும் இந்த அணுக்கள் அழிவதில்லை. ஆகையால், தேவன் கட்டளையிடும் வேளையில் அந்தந்த சரீரத்தின் ஆவிகளைக் கொண்டு உயிர்ப்பிக்கப்படும்!
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசிக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத்தில் இவ்விதம் சம்பவித்ததைக் காண்கிறோம்.
"கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது; கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி, வெளியே கொண்டு போய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் நடுவே சுற்றி நடக்கப் பண்ணினார். இதோ பள்ளத்தாக்கின் வெட்டவெளியில் எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது. அவைகள் மிகவும் உலர்ந்தும் இருந்தது. அவர் என்னை நோக்கி, மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா? என்று கேட்டார்; அதற்கு நான் கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால், உலர்ந்த எலும்புகளே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்"
"கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி, இதோ நான் உங்களுக்குள் ஆவியை பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்"
"நான் உங்கள் மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாமிசத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்."
"எனக்குக் கட்டளையிட்டபடியே, நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில், ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்து கொண்டது"
"நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, அவைகள் மேல் நரம்புகளும், மாமிசமும் உண்டாயிற்று; மேற்புறமெல்லாம் தோலினால் மூடப்பட்டது. ஆனாலும், அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து, நீ ஆவியை நோக்கி தீர்க்கதரிசனம் உரை. மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து ஆவியை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே நீ காற்றுத் திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்றார் என்று சொல் என்றார்"
"எனக்கு கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்" (எசேக்கியேல்: 37:1-10).
தொடரும்...
"கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது; கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி, வெளியே கொண்டு போய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் நடுவே சுற்றி நடக்கப் பண்ணினார். இதோ பள்ளத்தாக்கின் வெட்டவெளியில் எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது. அவைகள் மிகவும் உலர்ந்தும் இருந்தது. அவர் என்னை நோக்கி, மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா? என்று கேட்டார்; அதற்கு நான் கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால், உலர்ந்த எலும்புகளே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்"
"கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி, இதோ நான் உங்களுக்குள் ஆவியை பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்"
"நான் உங்கள் மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாமிசத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்."
"எனக்குக் கட்டளையிட்டபடியே, நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில், ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்து கொண்டது"
"நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, அவைகள் மேல் நரம்புகளும், மாமிசமும் உண்டாயிற்று; மேற்புறமெல்லாம் தோலினால் மூடப்பட்டது. ஆனாலும், அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து, நீ ஆவியை நோக்கி தீர்க்கதரிசனம் உரை. மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து ஆவியை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே நீ காற்றுத் திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்றார் என்று சொல் என்றார்"
"எனக்கு கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்" (எசேக்கியேல்: 37:1-10).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
இவ்விதமாக, இயேசு கிறிஸ்து, திரும்பவும் வரும் சமயத்தில், அவருடைய வருகையின் முதற் பாகமான "அந்தரங்க வருகை" யின்போது, மரணமடைந்த சகல பரிசுத்தவான்களின் சரீரங்களும் உயிர்த்து எழும்பி, மகிமையின் சாயல் அடைந்து, ஆகாயத்தில் இயேசுவிடம் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். பின்பு பூமியில் உயிருடன் ஜீவித்துக் கொண்டிருக்கும் பூரண பரிசுத்தவான்களின் சரீரங்களும் திடீரென மறு ரூபமடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட மகிமையின் சரீரத்தைப் பெற்று, மரணத்தை வென்று ஆகாயத்தில் இயேசுவிடம் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இதை 1தெசலோனிக்கேயர்: 4:15-17 வரை வாசிக்கிறோம்.
தொடரும்...
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு, நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆராவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுத்தக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்."
மேற் கூறிய சம்பவம் "முதலாம் உயிர்த்தெழுதல்" என்று அழைக்கப்படுகிறது. இது நிகழ்ந்த பின்னர், இயேசு கிறிஸ்து பூமி முழுவதையும் தமக்கு கீழ்ப்படுத்தி, 1000 வருடங்கள் இராஜாவாக இருந்து, நீதியுடன் ஆட்சி செய்வார். மரித்து உயிர்ப்பிக்கப்பட்ட பரிசுத்தவான்களும், மரணத்தை ஜெயித்து மரணமடையாமல் மறுரூபமாக்கப்பட்டு மகிமையின் சாயலை அடைந்த பரிசுத்தவான்களும், அவரோடுகூட ஆட்சி செய்வார்கள் (வெளிப்படுத்தல்: 20:4). இந்த 1000 வருட ஆட்சி முடிவடைந்த பின்பு மரணமடைந்த மற்றவர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்படைவார்கள்.
மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்க்க கண்டேன். அப்பொழுது, அந்த புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறு ஒரு புத்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது, அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே, மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
"சமுத்திரமும் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும், பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன். யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்" (வெளிப்படுத்தல்: 20:12-13).
தொடரும்...
மேற் கூறிய சம்பவம் "முதலாம் உயிர்த்தெழுதல்" என்று அழைக்கப்படுகிறது. இது நிகழ்ந்த பின்னர், இயேசு கிறிஸ்து பூமி முழுவதையும் தமக்கு கீழ்ப்படுத்தி, 1000 வருடங்கள் இராஜாவாக இருந்து, நீதியுடன் ஆட்சி செய்வார். மரித்து உயிர்ப்பிக்கப்பட்ட பரிசுத்தவான்களும், மரணத்தை ஜெயித்து மரணமடையாமல் மறுரூபமாக்கப்பட்டு மகிமையின் சாயலை அடைந்த பரிசுத்தவான்களும், அவரோடுகூட ஆட்சி செய்வார்கள் (வெளிப்படுத்தல்: 20:4). இந்த 1000 வருட ஆட்சி முடிவடைந்த பின்பு மரணமடைந்த மற்றவர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்படைவார்கள்.
மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்க்க கண்டேன். அப்பொழுது, அந்த புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறு ஒரு புத்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது, அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே, மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
"சமுத்திரமும் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும், பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன். யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்" (வெளிப்படுத்தல்: 20:12-13).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Similar topics
» பேய் மழை ,பிசாசு மழை
» பேய், பிசாசு,மோகினி
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» பேய், பிசாசு,மோகினி
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
Page 9 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|