ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Sun Jul 08, 2012 5:31 am

2. பரதீஸ்: (Paradise )

"இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா: 23:43).

இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையின்படி, இயேசு கிறிஸ்துவின் ஆவியும், சிலுவையில் அவரை ஏற்றுக் கொண்ட கள்வனின் ஆவியும், மரணமடைந்த அந்த நாளில்தானே 'பரதீஸ்' என்ற உலகத்தை அடைந்தன. இதிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களாக மரணம் அடையும் பரிசுத்தவான்களின் ஆவிகள் தங்கும் ஒரு இடம் இருப்பதாகவும், அந்த உலகின் பெயர் 'பரதீஸ்' என்பதையும் நன்கு அறிய முடிகிறது.

'பரதீஸ்' என்ற உலகம், தேவனுடைய இராஜ்யம் அல்ல. ஏனென்றால், சிலவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்து எழந்த இயேசு கிறிஸ்து, மரியாளுக்கு தரிசனம் அளித்தபோது கூறியதாவது:

"இயேசு அவளை நோக்கி, என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்" (யோவான்: 20:17).

பரதீஸ் என்பது வேறு உலகம் என்பதையும், பிதாவின் சமூகமாகிய தேவனுடைய இராஜ்யம், வேறு ஒரு உலகம் என்பதையும் இதன் மூலம் அறியலாம்.

தேவனால் குறிப்பிடப்பட்ட காலம் வரை, இந்தப் 'பரதீஸ்' என்ற உலகம் 'பாதாளத்தில்' இடம் பெற்றிருந்தது. அப்பொழுது மரணமடைந்த பரிசுத்தவான்களின் ஆவிகள் அனைத்தும் சிறைப்படுத்தப்பட்டு அங்கே வைக்கப்பட்டிருந்தன. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்தவுடன், தமது ஆவியில் சென்று, சிறையாக வைக்கப்பட்டிருந்த பரிசுத்தவான்களின் ஆவிகளை அங்கிரந்து விடுதலை செய்தார். அவர்களைக் காவல் புரிந்த சாத்தானின் ஆவிகளைச் சிறைப்பிடித்தினார். பின்பு பரதீஸ் என்ற உலகை உன்னதத்தில் ஸ்தாபித்து, அந்த பரிசுத்தவான்களின் ஆவிகளையெல்லாம் அங்கே கொண்டு வந்து சேர்த்தார்.

"ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுர்களுக்கு வரங்களை அளித்தார். ஏறினார் என்பதினாலே, அவர் அதற்கு முன்னே புமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக எல்லா வானங்களுக்கும் மேலாக ஏறினவருமாயிருக்கிறார்." (எபேசியர்: 4:8-10).

இதன் காரணமாக, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, உலகில் மரணமடையும் பரிசுத்தவான்களின் ஆவிகள் பாதாள உலகிற்கு செல்லுவதில்லை. பதிலாக, உன்னதத்தில் உள்ள பரதீசில் இடம் பெற்று, தேறுதலுடன் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இந்தப் 'பரதீஸ்' என்ற உலகத்திற்கு, "ஆபிரகாமின் மடி" (லூக்கா: 16:22) என்ற பெயரும் கொடுக்க்பபட்டிருக்கிறது.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 5:33 am

3. "பாதாள உலகம்" (Hades ) "ஆதீஸ்":

"பின்பு, அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் "ஆபிரகாமுடைய மடியிலே" கொண்டு பொய் விடப்பட்டான். ஐசுவரியவானும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டான். "பாதாளத்தில்" அவன் வேதனைப்படுகின்றபோது தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும், அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: 'தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி, அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினி ஜீவாலையில் வேதனைப்படுகிறேனே' என்று கூப்பிட்டான்" (லூக்கா: 16:23,24).

இயேசு கிறிஸ்துவினால் கூறப்பட்ட இந்த சம்பவத்தை வெறும் கதை என்று கருதக்கூடாது. உவமைகளை உவமைகள் என்று வேதத்தில் குறிப்பிட்டிருக்கையில், அதை உவமை என்று எங்கும் குறிப்பிடவில்லை. "நான் என் சுயமாய் பேசவில்லை. நான் பேச வேண்டியது, இன்னதென்றும், உபதேசிக்க வேண்டியது இன்னது என்றும், என்னை அனுப்பின பிதாவே எனக்கு கட்டளையிட்டார்." (யோவான்: 12:49).

"அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்." (யோவான்: 5:19).

மேற்கூறிய வேதவசனங்களிலிருந்து, இயேசு கிறிஸ்துவினால் கூறப்பட்டுள்ள "ஐசுவரியவான் - லாசரு" ஆகியோரின் சம்பவம் பிதாவினால் காண்பிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவினால் எடுத்துரைக்க்ப்பட்ட மெய்யான சம்பவமாகக் கொள்ள வேண்டும். இச் சம்பவத்தில் ஐசுவரியவான் வேதனையுடன் காணப்பட்ட இடம் "பாதாள உலகம்" ஆகும்.

இது இருளும் பற்கடிப்பும், வேதனையும் அழுகையும் உள்ள இடமாகும். லாசரு காணப்பட்ட இடமானது முன்பு பாதாளத்தில் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்தது; அங்கே இளைப்பாறுதல் இருந்தது. இவ்விரு இடங்களும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இரண்டிற்குமிடையே, ஒருவராலும் கடக்கக்கூடாத பெரும்பிளப்பு (லூக்கா: 16:26) இருந்ததென்றும் அறிய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்பு, இந்த பரதீஸ், பாதாள உலகில் இருந்து பிரிக்கப்பட்டு, உன்னதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 5:47 am

அக்கினியும் கந்தகமும் எரியும் நரகமும் இந்தப் பாதாள உலகமும் ஒன்றல்ல. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி, சிறைச்சாலையில் உயிருடன் இருந்தாலும் அவன் மனதில் மரண உபாதை உண்டு. அவ்விதமே, பாதாள உலகில் இருக்கும் இறந்தவர்களின் ஆவிகளும் தங்கள் மீது வரப்போகும் தண்டணையை அறிந்து நரக வேதனையுடன் இளைப்பாறுதலின்றி இருக்கின்றன.

இயேசு கிறிஸ்த மூலம் இலவசமாய்க் கிடைக்கும் பாவமன்னிப்பை பெறத் தவறிய எல்லா மானிடரின் ஆவிகளுமே, இந்த பாதாள உலகமாகிய அந்தகாரமும் - இருளும் நிறைந்த இளைப்பாறுதலற்ற இடத்தை அடைகின்றன. இங்கு போய்ச்சேரும் ஆவிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. உலகில் உயிருடன் இருந்த சமயம் தாங்கள் அனுபவித்த பலவித ஆசைகளும் - உணர்ச்சிகளும், இங்கும் இவர்களில் தொடர்ந்து இருக்கும். பழைய இன்பங்களை திரும்பவும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை (தாகம்) இவர்களை வதைக்கும். இவர்கள் தாகம் அங்கு தீர்க்கப்படுவதுமில்லை. இவர்கள் ஜெபங்கள் அங்கு கெட்கப்படுவதுமில்லை. குடி லாகிரி போதை வஸ்துக்கள் சிற்றின்பம் களியாட்டு போன்றவைகளில் ஜீவித்து, சுகபோகமாக உலகமே சதம் என்று வாழ்ந்து மரித்தவர்கள் இங்கு வந்த பின்பு, தாங்கள் அனுபவித்த பழைய இன்பங்களை அனுபவிக்க வெண்டும் என்ற கட்டுக்கடங்காத உணர்ச்சியுடன் வேதனைப் படுவார்கள். இவர்கள் ஆசையும் தாகமும் அங்கு தீர்க்கப்படுவதில்லை. ஐசுவரியவானின் ஆவி "வேதனைப்படுகிறேனே" என்று கதறியது. தாகத்தை தீர்க்கும்படி மன்றாடியது; ஆனால், அவனுடைய வேண்டுதல்கள் மறுக்கப்பட்டன.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 6:08 am

சமாரியா ஸ்திரிஎன்ற பெண் ஐந்து புருசர்களை உடையவளாயிருந்தும் அவளுடைய சிற்றின்பத்தின் தாகம் தீரவில்லை என்பதை அறிந்த இயேசு, அவளுடைய தாகம் தீர்க்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து, அவளுக்குப் போதித்தார்.

(இன்றைய உலகில், மனிதரின் ஜீவியத்தை பின்வரும் வேதவசனம் தெரிவிக்கிறது: "அவர்கள் என் ஜனத்தின் பாவத்தை தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின் மேல் பசி தாகமாயிருக்கிறார்கள்" (ஓசியா: 4:8). இயேசுவோ இந்த உலகில் ஜீவ அப்பமாகவும், ஜீவத் தண்ணீராகவும் வந்தார்.)

அன்பானவர்களே! நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருக்கும்போதே உங்கள் பாவங்களின் மீதுள்ள பசியும் தாகமும் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

"என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான்: 6:35).

"ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்" (யோவான்: 8:37) என்று இயேசு அழைக்கும் சத்தம் உங்கள் காதுகளில் விழட்டும். மனிதரின் பசியும் தாகமும் தீர, ஜீத்தண்ணீராகிய இயேசுவையன்றி வேறு ஒரு வழி இல்லை என்பதை, பாதாள உலகில் இருப்பவர்கள் அறிவார்கள். அந்த உண்மையை இந்த பாதாள உலகில் இடம் பெறும் ஆவிகளின் விவரம் வருமாறு:

1. ராஜ்யத்தின் புத்திரர் அல்லது உலக இன்பங்களை மட்டும் சதமாக எண்ணி, நித்திய ஜீவனைப் பற்றி அறிய மனமற்று நிர்விசாரிகளாக, இரக்கமற்றவர்களாக ஜீவிக்கும் மனிதரின் ஆவிகள் (மத்தேயு: 8:10,11; யோபு: 10:21,22).

2. சுயநீதிக்காரர் (சன்மார்க்க ஜீவிகள்) தங்கள் சொந்த நீதியில் மேன்மை பாராட்டி, தேவ நீதியை அசட்டை செய்வோரின் ஆவிகள் (மத்தேயு: 22:23; ஏசாயா: 64:6).

3. பிரயோசனமற்ற ஊழியர்; தேவனுடைய வரங்களையும் தாலந்துகளையும் உபயோகிக்கத் தவறியவர்களும்; அவைகளை தகாதவிதமாக உபயோகித்து பணம் சம்பாதிக்க, பேர் புகழடைய உபயோகித்து, மேன்மை பாராட்டுகிறவர்களின் ஆவிகள் (மத்தேயு: 25:30; 3:10).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 6:30 am

4. "பாதாளக் குழி": (The Bottomless pit or abyss )

"ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்துபூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். அவனுக்கு பாதாளக் குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாளக் குழியைத் திறந்தான். உடனே பெருஞசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால்சூரியனும் - ஆகாயமும் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு,பூமியின் மேல் வந்தது ; அவைகளுக்குபூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.பூமியின் புல்லையும், பசுமையுமான எந்த பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (வெளிப்படுத்தல்: 9:1-3).

"அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்று போடும்." (வெளிப்படுத்தல்: 11:7).

"நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது இல்லை. அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப் போகிறது. உலகத்தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராதபூமியின் குடிகள் இருந்தும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்." (வெளிப்படுத்தல்: 17:8).

மேலே உள்ள வேத வசனங்களின்படி, வரப்போகும் மகா உபத்திரவத்தின் நாட்களில்,பூமியின் மீதுள்ள ஜனங்களை உபத்திரவம் செய்யக் கூடிய "ஆவிக்குரிய உயிரினங்கள்" (Spiritual beings ) உள்ள உலகம் இது. இங்கே மனிதரின் ஆவிகள் இல்லை. ஆயிரவருட அரசாட்சியின்போது, சாத்தான் கட்டப்பட்டு, இங்கே சிறைப்படுத்தப்படுவான். (வெளிப்படுத்தல்: 20:1-3).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 10:05 am

5. "நரக பாதாள உலகம்" அல்லது "அக்கினிக்கடல்": (Eternal Hell or The Lake of Fire )

"பிசாசுகளுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட "நித்திய அக்கினி" என்று அழைக்கப்படும் இந்த உலகமே, அவியாத அக்கினி எரியும் "நித்திய நரகமாகும்" (மத்தேயு: 25:41-46; 18:8; யூதா: :1:7). தற்சமயம் இங்கு ஒருவரும் இல்லை. இந்த இடம் மனிதருக்காக ஆயத்தம் பண்ணப்படாமல், பிசாசுக்காகவும், அவன் சேனைகளுக்காகவுமே தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பூமியில் பிறக்கும் மனிதர், தேவ ஆலோசனையை விரும்பாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனிதருக்கு இலவசமாகக் கிடைக்கும் பாவ மன்னிப்பு "மனந்திரும்புதல்" நித்திய ஜீவன் ஆகியவைகளைச் சுதந்தரிக்க மனமற்று, நிர்விசாரிகளாக - மனம்போல் நடந்து, உலகத்தை அனுபவிப்பதில் மட்டும் கவனம் கொண்டு, பிசாசினால் மோசம் போக்கப்பட்டு , பாவத்தில் ஜீவித்தால் அப்படிப்பட்டவர்களும் இந்த இடத்தில் தள்ளப்படுவார்கள். இயேசு கிறிஸ்து பூமியில் வந்து ஆயிர வருடங்கள் ஆட்சி புரிந்த பின்பு, இந்த இடம் திறக்கப்படும்.

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, பரலோகம் சென்று இருக்கிறார். அவர் திரும்பவும் பூமிக்கு வருவார். அவருடைய பரிசுத்தவான்களும் அவருடன் கூட வருவார்கள். அப்பொழுது இதே பூமியை இயெசு கிறிஸ்துவும் அவருடைய பரிசுத்தவான்களும் 1000 வருடங்கள் நீதியோடும் - நிறைவோடும் - சமாதானத்தோடும் ஆட்சி புரிவார்கள்.

இந்த ஆயிர வருட அரசாட்சி முடிந்தவுடன், ஏற்கனவே மரணமடைந்திருக்கும் அனைத்து மானிடரும், தங்கள் தங்கள் கிரியைகளுக்கேற்றவாறு நியாயத் தீர்ப்படைவார்கள். இயேசு கிறிஸ்துவின் 'ஜீவப் புஸ்தகத்தில்" பெயர் எழுதப்படாத அனைவரும், மேற்கூறிய அக்கினியும், கந்தகமும் எரியும் நரகத்தில் பங்கடைவார்கள். (வெளிப்படுத்தல்: 20:10-15). இங்கே அக்கினியும், கந்தகமும் எரிந்து கொண்டேயிருக்கும்.

இதை வாசிக்கும் அன்பானவர்களே! உங்கள் ஜீவியத்தை இப்பொழுதே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதின் நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா? நித்திய ஜீவனைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உங்களில் உண்டா? நிர்விசாரமான வாழ்க்கை, மனிதரை நித்திய நரகில் சேர்க்கும் என்பதை அறிந்து, இன்றே இயேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தவறுகளை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து, அவைகளை மன்னிக்கும்படி கேளுங்கள். அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பலிக்கும் பாவ மன்னிப்பை பெறுவீர்கள். நித்திய ஜீவனை சுதந்தரிக்க, அவர் உங்களை வழி நடத்துவார்.

"அவராலேயன்றி, வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழ் எங்கும் மனுர்களுக்குள்ளே, அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை..." (அப்போஸ்தலர்: 4:12).

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 10:18 am

மரணமடைந்தோரின் ஆவிகள் எங்கே?

மரணம் மனிதரை சிந்திக்க வைக்கிறது. மரணத்தின் காரணமாக நமக்கு அருமையானவர்களைப் பிரிய நேரிடும்போது, மக்கள் ஏங்கிப் புலம்புவதைக் காண்கிறோம். அப்படிப்பட்டவர்களை ஆறுதலடையச் செய்வது சற்று கடினமே. தங்கள் மரணம் வரை சிலர் தாங்க முடியாத ஏக்கம் கொண்டு, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு, இறந்துபோன தங்களுடையவர்களிடம் சென்று விட முயலுகின்றனர். மரணமடைந்த நமக்குப் பிரியமானவர்கள் எங்கே இருக்கிறார்கள். இவை போன்ற விடை காண முடியாத கேள்விகள் அநேகர் உள்ளத்தில் இன்றும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

ஒரு சிலரின் நம்பிக்கையின்படி, இறந்தவர்கள் வேறு ஒரு சிருஷ்டியாக, திரும்பவும் உலகில் வேறு எங்கோஒரு .டத்தில் பிறந்திருக்கிறார்கள்!

இன்னும் வேறு ஒரு சாராரின் நம்பிக்கையின்படி, இறந்தவர்கள் மோட்சத்தில் அல்லது நரகத்திலிருக்கிறார்கள்.

இறந்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக, "உத்தரிப்பு ஸ்தலத்தில்" பாவ பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு சிலரின் நம்பிக்கையாகும்!

இன்னும் வேறு சிலரின் நம்பிக்கையின்படி, மரணத்துடன் எல்லாமே முடிவடைந்து விட்டது! அதன்பின் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை! அவர்கள் அழிக்கப்பட்டுப் போனார்கள்!

இவ்விதமாக பலரும் பலவிதமான நம்பிக்கையுடன் இருக்கையில், பரிசுத்த சத்திய வேதாகமம் மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்பு மனிதருக்குள்ள வாழ்வு பற்றியும், பல அருமையான தகவல்களை அளிப்பதால், அவைகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 10:39 am

மனிதன் முப்பொருளால் உண்டாக்கப்பட்டவன். அவனுக்குள்ளே, தேவனைப்போலவே, "திரித்துவம்" (Trinity ) அடங்கியுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்தஆவி ஆகிய தெய்வீக திரித்துவம் மிகவும் விசேஷித்த தன்மையுடையது. சரீரம், ஆவி, ஆத்தமா ஆகிய மனித திரித்துவமாகிய மூன்றும் ஒருமித்து இயங்கும்போது மட்டுமே, மனிதன் உலகில் கிரியை செய்ய முடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று செயலற்றுப்போகுமேயாயின், மனிதனும் செயலற்ற பிணமாகி விடுவான். ஆவியோ, ஆத்துமாவோ இல்லாமல் சரீரம் மட்டும் தானாக இயங்காது. அவ்விதமே, சரீரமோ, ஆவியோ இல்லாமல் ஆத்துமா மட்டும் தனித்து உலகில் வசிக்க முடியாது!

ஆனால், தெய்வீக திரித்துவத்தில், பிதாவாகிய தேவன் - குமாரனாகிய இயேசு கிறிஸ்து - பரிசுத்த ஆவியாகிய தேவன் ஆகிய மூவரும் ஒருமித்தும், தனித்தனியாகவும் ஒரே முறையில் செயல்பட முடியும்.

மனித சரீரம் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது. அவனுக்குள் ஜீவ சுவாசத்தை தேவன் ஊதினார். அவன் ஜீவாத்மாவானான் (ஆதியாகமம்: 2:7) என்று பரிசுத்த வேதாகமம் கூறுவதிலிருந்து, மனிதனில் மண்ணான சரீரமும் ஆவியாகிய உயிரும் ஜீவ ஆத்துமாவாகிய அழியாத தெய்வீகமும் அடங்கியிருக்கின்றன.

மனிதன் மரணமடையும்போது மண்ணான சரீரம் மண்ணுக்குத் திரும்புகிறது. (ஆதியாகமம்: 3:19). ஆவியாகிய உயிர் தன்னைத் தந்ம தேவனிடம் செல்கிறது. (பிரசங்கி: 12:7). ஆத்துமாவோ, மனிதன் தன்னை எந்த இடத்துக்கு ஆயத்தம் செய்திருக்கின்றானோ அந்த இடத்துக்கு செல்லும்.

மனித ஆத்துமா மிகவும் விலையேறப் பெற்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த ஆத்துமா, மரணத்துக்குப் பின்பு, நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பது தேவ ஒழுங்கு.

ஆனால், மனிதன் தனது கவலையற்ற நிர்விசாரமான, முரட்டாட்டமான, ஜீவியத்தின் மூலமாகத் தன் ஆத்தும ஈடேற்றத்தக்குகானவைகளைச் சிந்தியாமலும், அவைகளில் செயல்படாமலும், நிர்விசாரமாகவும் - அசட்டையாகவும் ஜீவிப்பதால், தனது விலையுயர்ந்த ஆத்துமாவை சேதப்படுத்தி, அதை நித்திய நரகத்துக்கு ஆளாக்கி விடுகிறான்.

மரணத்தோடு ஒரு மனிதன் உலக வாழ்வும் - பற்றும் - பாசமும் முற்றுமாக அற்றுப் போகிறது. அது முதல் அவன் வேறு உலகவாசியாகி விடுகிறான்! இது பற்றிய உண்மைகளை ஐசுவரியவான் - லாசரு வாழ்வில் நடந்ததை முன்பு பார்த்தோம்.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 11:03 am

சரீரத்துடன் உலகில் வாழும் மனிதனுக்குப் பல விதமான ஆசைகளும், உணர்ச்சிகளும் இருக்கின்றன. மரணம் நேரிட்டவுடன், சரீரத்தில் இந்த உணர்ச்சிகள் அறவே இல்லாமல் போய் விடுவதை நாம் அறிவோம்.

ஆனால். தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசியாத ஆத்துமாவில், அந்த உணர்ச்சிகள் தொடர்ந்து இருக்கும். ஆத்துமாவே மெய்யான மனிதன் எனலாம். அதை வெளிப்படுத்தவே மாமிச சரீரம் உதவுகிறது. ஆத்துமா அழியாதது.

இந்த அழியாத ஆத்தமாவாகிய உள்ளான மனிதன் மரித்ததும் எங்கு செல்கிறான்?
எங்கு இருக்கிறான்?
என்ன செய்கிறான்?
அவனுடன் தொடர்பு கொள்ள உலகில் உள்ளோரால் கூடுமா?
என்பத போன்ற கேள்விகள் எழும்பக் கூடும்! இதற்கான விபரங்களை இதிலும் இனி வரும் நாட்களிலும் பார்ப்போம். இந்த ஆவிகள் எங்கே செல்லுகின்றன? என்பதை மட்டும் இங்கே கவனிப்போம்...

லூக்கா: 16:22,23 - "பின்பு அந்த தரித்திரன் மரித்து தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியில் கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்தில் அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும், அவன் மடியிலே லாசருவையும் கண்டான்."

இதில் கூறப்படடிருக்கும் ஐசுவரியவான், உலகத்தில் சுகபோகமாக வாழ்ந்தவன். வாழ்க்கையை உல்லாசமாக கழித்தவன். உலகமே சதம் என்று ஜீவித்தவன். மரணத்துக்குப்பின் நடக்கப்ப போவதை சிந்திக்க விரும்பாதவன். தனக்குள் இருக்கும் விலையுயர்ந்த ஆத்துமாவைக் குறித்து "சற்றும் கவலையில்லாதவன்" ! புசிப்போம் குடிப்போம் சாவோம் - என்ற தத்துவத்தைக் கடைபிடித்து, இன்ப சாகரத்தில் மூழ்கியிருந்தவன். இவனுக்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கவில்லை! இருப்பினும், யாருக்காகத் தான் இந்த ஐசுவரியத்தை மேலும் மேலும் சேர்க்கிறான் என்பதையும் தான் மரித்த பின்பு, அவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்பதையும் கூட சிந்திக்காதவன்.! (பிரசங்கி: 2:19,21,26; 4:8).

"ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப் போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடகள் நித்திய காலவமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை, தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம். (சங்கீதம்: 49:10,11).

இவ்விதம் நிர் விசாரமாக வாழ்க்கை நடத்துவோர் எங்கே செல்லுவார்கள் என்பதை பின்வரும் வேத வசனங்கள் வெளிப்படுத்துகிறது.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 09, 2012 11:30 am

"அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை. அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிரக்கையில், தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும், நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுசர் அவனைப் புகழ்ந்தாலும் அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்" (சங்கீதம்: 49:17-19).

"காரிருளும் மரண அந்தகாரமுமான இரண்ட தேசமம், இருள் சு+ழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள ஒரு தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பி வராத தேசம்..." (யோபு: 10:20).

இதிலிருந்து என்றென்றுமே வெளிச்சம் இல்லாததும் - காரிருளும், மரண அந்தகாரமும் நிறைந்ததும் - போனால் திரும்பி வர முடியாத "பாதாள உலகில்" இடம் பெறுவார்கள்என்ற உண்மை வெளியாகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஐசுவரியவானின் ஆத்துமா சென்ற இடம் இதுவேயாகும்.

அன்பானவர்களே! உலகில் சீருடனும், சிறப்புடன் வாழ்வது நல்லதுதான். ஆனால், அத்துடன் உங்கள் வாழ்க்கை முடிந்து விடாது என்ற உண்மையை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். உலகில் உயிருடன் இருக்கையில் மனிதர் "ஒளியாக" மாறுவது அவசியம். இவ்வித வெளிச்சத்தைப் பெறாதவர்கள், முடிவில் அந்தகாரமும் இருளும் உள்ள "பாதாள உலகில்" செல்ல நேரிடும்.

"மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்." (யோவான்: 8:12).

இந்த மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையேல், நிங்கள் பிரகாசமடையும்படி, இப்பொழுதே உங்கள் பாவங்களை இயெசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து, பாவ மன்னிப்பைப் பெற்று வெளிச்சமாக மாறுங்கள்.

இயேசு கிறிஸ்துவைச் சொந்தமாக்க அறியாமலும், விரும்பாமலும் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் பாதாள உலகில் இருக்கின்றன.

லூக்கா: 16:22,23 வசனங்களில் கூறப்பட்டுள்ள தரித்திரனாகிய லாசரு ஏழையாக இருந்த போதிலும் தேவனை உடையவனாயிருந்தான். அகையால், அவன் மரித்தவுடன் தேவதூதர்கள் வந்து, அவனைக் கொண்டு சென்று "ஆபிரகாமின் மடியில்" விட்டனர்! உலகில் வாழும்போது ஜீவனுள்ள தேவனைச் சொந்தமாக்கிக் கொண்டு, வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்ககை நடத்துவோர், தங்கள் மரணத்தின் வேளையில், வெளிச்சம் நிறைந்த "பரதீஸ்" என்ற உன்னத்தத்திலுள்ள இடத்துக்குக் கொண்டு போகப்பட்டு அங்கு இளைப்பாறுவார்கள். மரணத்தின் மூலம், மரணமடைவோரின் ஆவிகள் மேற்கூறிய இரு இடங்களில் ஒன்றில் போக நேரிடும். சிறுபிள்ளைகள் மரிக்கும்பொழுது , மத வேறுபாடின்றி, அவர்களனைவருமே, "பரதீஸ்" என்ற இடம் அடைவார்கள்.

தொடரும்...


"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 7 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum