புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
Page 6 of 15 •
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Rajenderamபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2012
நண்பரே நீங்கள் மேலே எழுதிய அத்தனை பதிவுகளும் வேத ஆதாரத்தைக் கொண்டதே!! அப்போஸ்தலர் காலத்துடன் அற்புதங்கள் செய்யும் வரம் முடிவுக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது பலபேர் தங்களை போதகர் என்று சொல்லிக்கொண்டு அந்நியபாஷை, சுகப்படுதல், தீர்க்கதரிசனம் என்று பொய்யான மாயேயே பரப்பிக்கொண்டும் இருக்கிறார்கள். இது நான் அறிந்தவரையில் வேதத்துக்கு முரணானது. உங்கள் கட்டூரை நன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் .... உங்கள் கட்டூரை முடிவில்; மேலே எழுதிய பதிவுகளுக்கு வேத ஆதாரத்துடன் சிலவற்றை பார்ப்போம். நன்றி
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நண்பரே! அற்புதங்கள் செய்யும் வரம் அப்போஸ்தலர்களோடு நின்று போய்விடவில்லை என்பதை தாங்கள் அறிய வேண்டும். அந்நிய பாஷை, சுகப்படுத்துதல், தீர்க்தரிசனம் - இவைகள் பொய்யான மாயை அல்ல. ஒரு சிலரால் அவைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டோ அல்லது தவறாக நடந்தோ - இவ்வித பாதிப்பு சில நேரங்களில் மக்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அவை மூன்றும் தவறானவை என்ற முடிவுக்கு வருவது சரியல்ல. இதைப்பற்றி இக்கட்டுரை முடிவில் வேத ஆதாரத்தடன் தக்க சான்றுகளோடு பார்ப்போம். தொடர்ந்து வாசியுங்கள். சத்தியத்தை அறியுங்கள். நன்றி!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
குறி சொல்லம் ஆவிகளும், வஞ்சிக்கும் ஆவிகளும் இந்த கடைசி நாட்களில், பொய்யான அற்புதங்களை செய்யும்படி ஓவ்வொருவருடைய பெயரையும் - காரியங்களையும் அறிவிக்கும்.
தேவனுடைய சத்திய வசனங்களுக்கு கீழ்படியாதவர்கள், வஞ்சிக்கும் ஆவிகளின் மூலம் நடத்தப்படும் பொய்யான அற்புதங்களை செய்வோராய் பிடிப்பட்டு மோசம் போவார்கள்!
வஞ்சிக்கும் ஆவிகளின் போதனைகளும் சத்திய வேதத்திற்கு மாறுபாடானவைகள். "தேவன் அன்புள்ளவர்". தமது சிருஷ்டிகளை என்றென்றுமாக நித்திய நரகத்தில் போட்டு வேதனைப் படுத்த மாட்டார் என்று போதிக்கும்! மரணத்திற்குப் பின்னும், மனந்திரும்ப இடமுண்டு என்று கற்பிக்கும்!
"சத்தியத்தை விசுவாசியாமல், அநீதியில் பிரியப்படுகிற யாவரும் வஞ்சிக்கும் ஆவியின் போதனைகளையும் தீர்க்கதரிசனங்களையும் நம்பி, ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்" (2தெசலோனிக்கேயர்: 2:10-12).
தேவனுடைய ஆவியானவர் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யப்படும் அற்புதங்கள், அடையாளங்கள் அனைத்தும், தேவநாம மகிமைக்காக நடப்பிக்கப்படுகின்றன. ஆனால், வஞ்சிக்கும் ஆவிகள் மூலம் நடைபெறும் பொய்யான அற்புதங்கள் மூலம் சுய மகிமை- சுய பிரயோஜனம் மற்றும் இடம் பெறுவதைக் காணலாம். தேவனிடமிருந்து, ஆவிக்குரிய வரங்களைப் பெற்று கிரியை செய்யும் தேவ பிள்ளைகள் தங்கள் ஊழியங்களில் தேவன் மகிமைப்படுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இருளின் அதிகாரத்தில் பிடிபட்டிருக்கும் மக்களை விடுதலையாக்கி, அவர்களை ஒளிக்குள் கொண்டு வரும்படி தேவனிடம் திசை திருப்பி, தேவ நாமம் மகிமைப்படவும் தக்கதாக, நாம் ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்த வேண்டும்.
தொடரும்...
தேவனுடைய சத்திய வசனங்களுக்கு கீழ்படியாதவர்கள், வஞ்சிக்கும் ஆவிகளின் மூலம் நடத்தப்படும் பொய்யான அற்புதங்களை செய்வோராய் பிடிப்பட்டு மோசம் போவார்கள்!
வஞ்சிக்கும் ஆவிகளின் போதனைகளும் சத்திய வேதத்திற்கு மாறுபாடானவைகள். "தேவன் அன்புள்ளவர்". தமது சிருஷ்டிகளை என்றென்றுமாக நித்திய நரகத்தில் போட்டு வேதனைப் படுத்த மாட்டார் என்று போதிக்கும்! மரணத்திற்குப் பின்னும், மனந்திரும்ப இடமுண்டு என்று கற்பிக்கும்!
"சத்தியத்தை விசுவாசியாமல், அநீதியில் பிரியப்படுகிற யாவரும் வஞ்சிக்கும் ஆவியின் போதனைகளையும் தீர்க்கதரிசனங்களையும் நம்பி, ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்" (2தெசலோனிக்கேயர்: 2:10-12).
தேவனுடைய ஆவியானவர் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யப்படும் அற்புதங்கள், அடையாளங்கள் அனைத்தும், தேவநாம மகிமைக்காக நடப்பிக்கப்படுகின்றன. ஆனால், வஞ்சிக்கும் ஆவிகள் மூலம் நடைபெறும் பொய்யான அற்புதங்கள் மூலம் சுய மகிமை- சுய பிரயோஜனம் மற்றும் இடம் பெறுவதைக் காணலாம். தேவனிடமிருந்து, ஆவிக்குரிய வரங்களைப் பெற்று கிரியை செய்யும் தேவ பிள்ளைகள் தங்கள் ஊழியங்களில் தேவன் மகிமைப்படுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இருளின் அதிகாரத்தில் பிடிபட்டிருக்கும் மக்களை விடுதலையாக்கி, அவர்களை ஒளிக்குள் கொண்டு வரும்படி தேவனிடம் திசை திருப்பி, தேவ நாமம் மகிமைப்படவும் தக்கதாக, நாம் ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்த வேண்டும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை கண்ட ஜனங்கள் "தேவனை மகிமைப்படுத்தினார்கள்". என்ற வாசகத்தை லூக்கா: 7:14-16; 13:13; 18:42,43 ஆகிய வேத வசனங்களில் காணலாம்.
கிறிஸ்தவர்கள் ஆரோக்கியமான வசனத்திலும், உபதேசத்திலும் நிலைத்திருப்பது அவசியம். (2தீமோத்தேயு: 4:3; 1தீமோத்தேயு: 6:3-5).
வேதவசனங்களை ஜெபத்துடன் வாசித்து, தியானம் செய்து, கீழ்ப்படிய வேண்டும். பிறர் மூலம் வரும் செய்திகளை வேதவசனத்தடன் ஒப்பிட்டு, சோதித்த அறிய வேண்டும். வாசிக்கிற, கேட்கிற வசனங்கள் சத்தியம் என்று அறிந்தவுடன் அவைகளுக்கு கீழ்ப்படியவும் வேண்டும். தவறினால், வஞ்சக உபதேசங்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். (2தெசலோனிக்கேயர்: 2:9-12)
வரும் நாட்களில் இவ்வித 'வஞ்சிக்கும் ஆவிகள்' வல்லமையாக செயல்படுமென்று இயேசு கிறிஸ்து முன்னதாகவே எச்சரித்திருக்கிறார். ( மாற்கு: 13:5,6; மத்தேயு: 24:23-25; 1தீமோத்தேயு: 4:1). வஞ்சிக்கும் ஆவிகளைக் குறித்து நாமும் எச்சரிக்கையாயிருப்பது அவசியம்.
இதுவரை வாசித்த ஆறு விதமான ஆவிகளைத் தவிர, வேறு எத்தனையோ விதமான பிசாசின் ஆவிகள் வான மண்டலத்திலும் பூமியிலும் கிரியை செய்து வருவதாக சத்திய வேதம் கூறுகிறது.
இன்றைய பத்திரிக்கை செய்திகளில் நாம் வாசிக்கும் விதவிதமான பயங்கர சம்பவங்கள், கொலைகள், தற்கொலைகள், விபத்துகள், சண்டைகள், குழப்பங்கள், பிரிவினைகள், வெறிச் செயல்கள் ஆகியவைகளை மனிதரிடையே உண்டு பண்ணுவது பிசாசின் ஆவிகளேயாகும்.
தொடரும்...
கிறிஸ்தவர்கள் ஆரோக்கியமான வசனத்திலும், உபதேசத்திலும் நிலைத்திருப்பது அவசியம். (2தீமோத்தேயு: 4:3; 1தீமோத்தேயு: 6:3-5).
வேதவசனங்களை ஜெபத்துடன் வாசித்து, தியானம் செய்து, கீழ்ப்படிய வேண்டும். பிறர் மூலம் வரும் செய்திகளை வேதவசனத்தடன் ஒப்பிட்டு, சோதித்த அறிய வேண்டும். வாசிக்கிற, கேட்கிற வசனங்கள் சத்தியம் என்று அறிந்தவுடன் அவைகளுக்கு கீழ்ப்படியவும் வேண்டும். தவறினால், வஞ்சக உபதேசங்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். (2தெசலோனிக்கேயர்: 2:9-12)
வரும் நாட்களில் இவ்வித 'வஞ்சிக்கும் ஆவிகள்' வல்லமையாக செயல்படுமென்று இயேசு கிறிஸ்து முன்னதாகவே எச்சரித்திருக்கிறார். ( மாற்கு: 13:5,6; மத்தேயு: 24:23-25; 1தீமோத்தேயு: 4:1). வஞ்சிக்கும் ஆவிகளைக் குறித்து நாமும் எச்சரிக்கையாயிருப்பது அவசியம்.
இதுவரை வாசித்த ஆறு விதமான ஆவிகளைத் தவிர, வேறு எத்தனையோ விதமான பிசாசின் ஆவிகள் வான மண்டலத்திலும் பூமியிலும் கிரியை செய்து வருவதாக சத்திய வேதம் கூறுகிறது.
இன்றைய பத்திரிக்கை செய்திகளில் நாம் வாசிக்கும் விதவிதமான பயங்கர சம்பவங்கள், கொலைகள், தற்கொலைகள், விபத்துகள், சண்டைகள், குழப்பங்கள், பிரிவினைகள், வெறிச் செயல்கள் ஆகியவைகளை மனிதரிடையே உண்டு பண்ணுவது பிசாசின் ஆவிகளேயாகும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பிசாசின் பலதரப்பட்ட ஆவிகளைக் குறிப்பாக நான்கு விதங்களாக பிரிக்கலாம்:
1. துரைத்தனங்கள் (Principalities )
2. அதிகாரங்கள் (Powers )
3. இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள் (Rulers of Darkness )
4. வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவியின் சேனைகள் (Wicked spirits in the heavenlies )
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல. துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு ( எபேசியர்: 6:12).
இங்கு கூறப்பட்டுள்ள " வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளும் அதன் சேனைகளும்" கணக்கிலடங்காதவை. வான மண்டலத்திலுள்ள இந்த பொல்லாத ஆவிகளையே சத்திய வேதம் "தேவர்கள்" என்றும், "கர்த்தாக்கள்" என்றும் அழைக்கிறது. பூமியிலுள்ள பேய்க்கணங்களை வல்லமையூட்டி கிரியை செய்யும்படி தூண்டுவது, வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவியின் சேனைகளாகும்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு, இந்த ஆவிகளால் சோதனையும் போராட்டங்களும் நேரிடலாம். ஆகவே, இவ்வித ஆவிகளின் தந்திரங்களை எதிர்த்து - மேற்கொண்டு - ஜெயிக்கவும், அவைகளின் கிரியைகளை அழிக்கவும், இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு அதிகாரமும், வல்லமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தொடரும்...
1. துரைத்தனங்கள் (Principalities )
2. அதிகாரங்கள் (Powers )
3. இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள் (Rulers of Darkness )
4. வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவியின் சேனைகள் (Wicked spirits in the heavenlies )
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல. துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு ( எபேசியர்: 6:12).
இங்கு கூறப்பட்டுள்ள " வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளும் அதன் சேனைகளும்" கணக்கிலடங்காதவை. வான மண்டலத்திலுள்ள இந்த பொல்லாத ஆவிகளையே சத்திய வேதம் "தேவர்கள்" என்றும், "கர்த்தாக்கள்" என்றும் அழைக்கிறது. பூமியிலுள்ள பேய்க்கணங்களை வல்லமையூட்டி கிரியை செய்யும்படி தூண்டுவது, வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவியின் சேனைகளாகும்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு, இந்த ஆவிகளால் சோதனையும் போராட்டங்களும் நேரிடலாம். ஆகவே, இவ்வித ஆவிகளின் தந்திரங்களை எதிர்த்து - மேற்கொண்டு - ஜெயிக்கவும், அவைகளின் கிரியைகளை அழிக்கவும், இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு அதிகாரமும், வல்லமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"மரணத்துக்கு அதிகாரியான பிசாசு"
ஆதியில் தேவன் மனிதனை நித்திய ஜீவியாகவே சிருஷ்டித்தார். ஆதாமுக்கோ - ஏவாளுக்கோ, ஒரு குறிப்பிட்ட வயதை தேவன் நிர்ணயம் செய்யவில்லை.
'மரணத்துக்கு அதிகாரி' பிசாசு (எபிரேயர்: 2:14) என்று வாசிக்கிறோம். மரணம் தேவனால் உண்டாக்கப்படவில்லை. சாத்தானின் மிகப் பெரிய ஆயுதம் மரணம்தான். இந்த மரணத்தை, ஆதாம் ஏவாள் மீது கொண்டு வர சாத்தான் கிரியை செய்வான் என்பது தேவனுக்கு தெரியும். தேவனுக்கு விரோதமான காரியத்தை ஆதாம் செய்தால் மட்டுமே தன்னுடைய "மரணம்" என்னும் ஆயுதத்தை ஆதாம் மீது பிரயோகிக்க தன்னால் முடியும் என்பதை சாத்தான் அறிந்திருந்தான். எனவே, அதைக் குறித்து ஆதாமுக்கு தேவன் எச்சரிப்புக் கொடுத்தார். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர்: 6:23) என்ற சட்டப்படி "இந்த நடு மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" (ஆதியாகமம்: 2:17) என்று கட்டளையிட்டார்.
ஆனால், சாத்தானின் தந்திரத்தில் சிக்குண்ட ஏவாள் மூலம் ஆதாம் தேவ கட்டளையை மீறினான். உலகில் மரணத்தை உண்டு பண்ணக் கூடிய பாவத்தைச் செய்யும்படி தூண்டிய சாத்தான் தன் முயற்சியில் வெற்றியும் கண்டான்! இதன் காரணமாக அன்று முதல் உலகை மரணம் ஆண்டு கொண்டது.
சாத்தானுடைய மிகப் பெரிய ஆயுதமான மரணத்தையும் மரண பயத்தையும் மக்களை விட்டு அகற்ற , தேவனும் தமது பெரிய ஆயுதமாகிய "அன்பை" பிரயோகிப்பது அவசியமாயிற்று. அன்பு (நேசம்) மரணத்தைவிட வல்லமையுள்ளது என்று வேத வசனம் கூறுகிறது.
"நேசம் மரணத்தைப் போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும், அதின் ஜீவாலை கடும் ஜீவாலையுமாகயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்க மாட்டாது. வெள்ளங்களும் அதைத் தணிக்க மாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்" (உன்னதப்பாட்டு: 8:6,7).
மரணத்தின் கூராகிய பாவத்தை முறிக்கவும், மரணத்தக்கு அதிகாரியாகிய பிசாசை அழிக்கவும், "அன்பு" - இயேசு என்ற பெயரில் மனிதனாக அவதரித்து, சிலுவையில் பாடுபட்டு - இரத்தம் சிந்தி - மரித்து - உயிரோடு திரும்பவும் எழும்புவது அவசியமாயிற்று.
"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல், மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்." (எபிரேயர்: 2:14,15).
தொடரும்...
ஆதியில் தேவன் மனிதனை நித்திய ஜீவியாகவே சிருஷ்டித்தார். ஆதாமுக்கோ - ஏவாளுக்கோ, ஒரு குறிப்பிட்ட வயதை தேவன் நிர்ணயம் செய்யவில்லை.
'மரணத்துக்கு அதிகாரி' பிசாசு (எபிரேயர்: 2:14) என்று வாசிக்கிறோம். மரணம் தேவனால் உண்டாக்கப்படவில்லை. சாத்தானின் மிகப் பெரிய ஆயுதம் மரணம்தான். இந்த மரணத்தை, ஆதாம் ஏவாள் மீது கொண்டு வர சாத்தான் கிரியை செய்வான் என்பது தேவனுக்கு தெரியும். தேவனுக்கு விரோதமான காரியத்தை ஆதாம் செய்தால் மட்டுமே தன்னுடைய "மரணம்" என்னும் ஆயுதத்தை ஆதாம் மீது பிரயோகிக்க தன்னால் முடியும் என்பதை சாத்தான் அறிந்திருந்தான். எனவே, அதைக் குறித்து ஆதாமுக்கு தேவன் எச்சரிப்புக் கொடுத்தார். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர்: 6:23) என்ற சட்டப்படி "இந்த நடு மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" (ஆதியாகமம்: 2:17) என்று கட்டளையிட்டார்.
ஆனால், சாத்தானின் தந்திரத்தில் சிக்குண்ட ஏவாள் மூலம் ஆதாம் தேவ கட்டளையை மீறினான். உலகில் மரணத்தை உண்டு பண்ணக் கூடிய பாவத்தைச் செய்யும்படி தூண்டிய சாத்தான் தன் முயற்சியில் வெற்றியும் கண்டான்! இதன் காரணமாக அன்று முதல் உலகை மரணம் ஆண்டு கொண்டது.
சாத்தானுடைய மிகப் பெரிய ஆயுதமான மரணத்தையும் மரண பயத்தையும் மக்களை விட்டு அகற்ற , தேவனும் தமது பெரிய ஆயுதமாகிய "அன்பை" பிரயோகிப்பது அவசியமாயிற்று. அன்பு (நேசம்) மரணத்தைவிட வல்லமையுள்ளது என்று வேத வசனம் கூறுகிறது.
"நேசம் மரணத்தைப் போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும், அதின் ஜீவாலை கடும் ஜீவாலையுமாகயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்க மாட்டாது. வெள்ளங்களும் அதைத் தணிக்க மாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்" (உன்னதப்பாட்டு: 8:6,7).
மரணத்தின் கூராகிய பாவத்தை முறிக்கவும், மரணத்தக்கு அதிகாரியாகிய பிசாசை அழிக்கவும், "அன்பு" - இயேசு என்ற பெயரில் மனிதனாக அவதரித்து, சிலுவையில் பாடுபட்டு - இரத்தம் சிந்தி - மரித்து - உயிரோடு திரும்பவும் எழும்புவது அவசியமாயிற்று.
"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல், மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்." (எபிரேயர்: 2:14,15).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கும் சிருஷ்டிகள் அனைத்திலும் மனிதனே மிகவும் சிறப்புடையவன். இவ்வித சிறப்புத் தன்மை வாய்ந்த மனிதனை சுத்திகரிக்க, அவனை விடக் குறைந்த மதிப்புள்ள மிருகம் அல்லது பறவைகளின் பலிகளோ, இரத்தமோ பயன் தராது. தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்குள் தேவனுடைய ஜீவ சுவாசமும் ஜீவ ஆத்தமாவும் இருப்பதால், தேவனுடைய பரிசுத்த இரத்தம் சிந்திப்பட்டாலொழிய, மனிதன் பாவ நிவாரணம் பெறுவது கூடாத காரியமாதலால், மனிதராகிய நமது பாவங்களை சுத்திகரிக்கும்படி, தேவன் தாமே அன்பின் உருவாக இயேசு என்ற பெயரில், உலகில் பாவமின்றி பிறந்து, பாவம் அற்றவராக வாழ்ந்து, பாவிகளுக்காகத் தமது பரிசுத்த இரத்தத்தை சிந்தி, விலை மதிக்கக்கூடாத மாபெரும் இரட்சிப்பை, இலவசமாக அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்.
"நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர்: 9:22).
"அல்லாமலும் காளை, வெள்ளாட்டுக்கடா அவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்ய மாட்டாதே" (எபிரேயர்: 10:4).
"குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது." (கொலோசெயர்: 1:14).
"இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்" (1யோவான்: 1:7).
இதை வாசிக்கும் அன்பானவர்களே! உங்களுக்கு மரணத்தைக் குறித்த பயம் இருக்கிறதா? இயேசுவை மெய்யான தேவன் என்று விசுவாசித்து, அவரிடத்தில் உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து, இயேசுவின் இரத்தம், உங்களை சுத்திகரிக்கும்படி கேளுங்கள். உண்மையுடன் இவ்விதம் நீங்கள் இந்த முறையை கடைபிடித்தவுடன்தானே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை சுத்திகரிக்கும். அதன் பலனாக பாவத்திலிருந்தும், பாவத்தின் தண்டனையிலிருந்தும் நீங்கள் விடுதலையாக்கப்பட்டதை உங்கள் மனம் சாட்சியிடும். உங்களுக்குள் புதிய நம்பிக்கையும் விசுவாசமும் உருவாகும். "இனி நான் தேவனுடைய பிள்ளை" என்ற அற்புதமான சாட்சி, உங்கள் இரதயத்தில் உண்டாகும்.
இந்த அனுபவங்கள் உண்மையாக உங்களில் நிறைவேறுவதால், நீங்கள் பெற்றிருக்கும் இந்தப் புதிய அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை உங்கள் மனதில் உண்டாகும். "நான் இரட்சிக்கப்பட்டேன்" என்ற சாட்சியை உங்கள் நாவு அறிக்கை செய்யும். இதனால், மனதில் குதூகலமும், சந்தோஷமும், களிப்பும் உண்டாகும். வாழ்வில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். மரண பயம் உங்களை விட்டு ஓடிப் போகும்.
"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான்: 5:24).
"இயேசு அவனை நோக்கி, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும், என்றென்றைக்கும் மரியாமலுமிருப்பான்...என்றார்" (யோவான்: 11:25,26).
தொடரும்...
"நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர்: 9:22).
"அல்லாமலும் காளை, வெள்ளாட்டுக்கடா அவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்ய மாட்டாதே" (எபிரேயர்: 10:4).
"குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது." (கொலோசெயர்: 1:14).
"இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்" (1யோவான்: 1:7).
இதை வாசிக்கும் அன்பானவர்களே! உங்களுக்கு மரணத்தைக் குறித்த பயம் இருக்கிறதா? இயேசுவை மெய்யான தேவன் என்று விசுவாசித்து, அவரிடத்தில் உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து, இயேசுவின் இரத்தம், உங்களை சுத்திகரிக்கும்படி கேளுங்கள். உண்மையுடன் இவ்விதம் நீங்கள் இந்த முறையை கடைபிடித்தவுடன்தானே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை சுத்திகரிக்கும். அதன் பலனாக பாவத்திலிருந்தும், பாவத்தின் தண்டனையிலிருந்தும் நீங்கள் விடுதலையாக்கப்பட்டதை உங்கள் மனம் சாட்சியிடும். உங்களுக்குள் புதிய நம்பிக்கையும் விசுவாசமும் உருவாகும். "இனி நான் தேவனுடைய பிள்ளை" என்ற அற்புதமான சாட்சி, உங்கள் இரதயத்தில் உண்டாகும்.
இந்த அனுபவங்கள் உண்மையாக உங்களில் நிறைவேறுவதால், நீங்கள் பெற்றிருக்கும் இந்தப் புதிய அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை உங்கள் மனதில் உண்டாகும். "நான் இரட்சிக்கப்பட்டேன்" என்ற சாட்சியை உங்கள் நாவு அறிக்கை செய்யும். இதனால், மனதில் குதூகலமும், சந்தோஷமும், களிப்பும் உண்டாகும். வாழ்வில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். மரண பயம் உங்களை விட்டு ஓடிப் போகும்.
"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான்: 5:24).
"இயேசு அவனை நோக்கி, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும், என்றென்றைக்கும் மரியாமலுமிருப்பான்...என்றார்" (யோவான்: 11:25,26).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இயேசு கிறிஸ்து உரைத்த மேலேயுள்ள வசனங்களின்படி, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பைப் பெற்ற பின்பு இறந்து போன பரிசுத்தவான்களை இயேசு திரும்பவும் உயிருடன் எழுப்புவார். இயேசு கிறிஸ்து மறுபடியும் உலகிற்கு வரும்பொழுது, உயிருடனிருக்கும் அவருடைய பரிசுத்தவான்கள் அனைவரும், தங்கள் சரீரத்தில் திடீரென மகிமையடைந்து, மறுரூபமாகி, மரணத்தை ஜெயித்தவர்களாக, மரிக்காமல், உலகிலிருந்து ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இயேசுவோடு ஜீவிப்பார்கள்.
"ஏனெனில், கர்த்தர்தாமே ஆராவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்; பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக, மேகங்கள் மேல் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்பொம்." (1தெசலோனிக்கேயர்: 4:16,17).
இவ்வித நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், ஏன் மரணத்துக்குப் பயப்பட வேண்டும்? மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனை இயேசு தமது மரணத்தினால் அழித்தார். (எபிரேயர்: 2:14) என்ற உண்மை, உங்களுக்கு விளங்கி விட்டால், உங்களைப் பிடித்திருக்கும் மரண பயம் இன்றே உங்களை விட்டு நீங்கி விடும்.
இப்பொழுதே உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து, அவைகளை மன்னிக்கும்படி கேளுங்கள். அவருடைய இரத்தம் உங்கள் பாவங்களை போக்கி, உங்கள் இருதயத்தை உடன் தானே சுத்திகரிப்பதை விசுவாசியுங்கள்; தேவனைத் துதியுங்கள்; தேவனுடைய பிள்ளைகளாக மாறுங்கள்; மரண பயம் உங்களை விட்டு ஓடுவதை காண்பீர்கள்.
"மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர்: 15:52).
தொடரும்...
"ஏனெனில், கர்த்தர்தாமே ஆராவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்; பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக, மேகங்கள் மேல் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்பொம்." (1தெசலோனிக்கேயர்: 4:16,17).
இவ்வித நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், ஏன் மரணத்துக்குப் பயப்பட வேண்டும்? மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனை இயேசு தமது மரணத்தினால் அழித்தார். (எபிரேயர்: 2:14) என்ற உண்மை, உங்களுக்கு விளங்கி விட்டால், உங்களைப் பிடித்திருக்கும் மரண பயம் இன்றே உங்களை விட்டு நீங்கி விடும்.
இப்பொழுதே உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து, அவைகளை மன்னிக்கும்படி கேளுங்கள். அவருடைய இரத்தம் உங்கள் பாவங்களை போக்கி, உங்கள் இருதயத்தை உடன் தானே சுத்திகரிப்பதை விசுவாசியுங்கள்; தேவனைத் துதியுங்கள்; தேவனுடைய பிள்ளைகளாக மாறுங்கள்; மரண பயம் உங்களை விட்டு ஓடுவதை காண்பீர்கள்.
"மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? (1கொரிந்தியர்: 15:52).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"ஆவிகள் உலகம்"
நாம் வசிக்கும் புமியையும் வானில் காணும் கதிரவனையும், சந்திர நட்சத்திர மண்டலங்களையும் அல்லாமல், வேறு உலகங்களையும் தேவன் உண்டாக்கியிருக்கின்றார் என்ற உண்மை பரிசுத்த வேதாகமம் மூலம் புலனாகிறது.
"இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்" (எபிரேயர்: 1:2) என்ற வசனத்தின்படி "உலகங்கள்" என்ற பதத்தின் மூலம், புமியைத் தவிர வேறு சில உலகங்களையும் தேவன் உண்டாக்கியிருக்கிறார் என்று அறிய முடிகிறது. அவைகளைக் குறித்தும் நாம் அறிவது அவசியம்.
தொடரும்...
நாம் வசிக்கும் புமியையும் வானில் காணும் கதிரவனையும், சந்திர நட்சத்திர மண்டலங்களையும் அல்லாமல், வேறு உலகங்களையும் தேவன் உண்டாக்கியிருக்கின்றார் என்ற உண்மை பரிசுத்த வேதாகமம் மூலம் புலனாகிறது.
"இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்" (எபிரேயர்: 1:2) என்ற வசனத்தின்படி "உலகங்கள்" என்ற பதத்தின் மூலம், புமியைத் தவிர வேறு சில உலகங்களையும் தேவன் உண்டாக்கியிருக்கிறார் என்று அறிய முடிகிறது. அவைகளைக் குறித்தும் நாம் அறிவது அவசியம்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. அந்தகார உலகம்: (Tartarus )
பாதாளத்தின் ஒரு பகுதியில் உள்ள உலகம் இது என்று கூறப்படுகிறது. இது ஒரு அந்தகாரமும், இருளும் நிறைந்த உலகம். இயேசு கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்புக்காக சங்கிலிகளால் கட்டப்பட்டு, காவல் பண்ணப்பட்டிருக்கும், கீழ்ப்படியாமற்போன தேவதூதர்களின் ஆவிகள் இங்கே உண்டு.
"தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு தூதர்களையும் மகா நாளின் நியாயத் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்" (2பேதுரு: 2:4 ; யுதா: 1:6).
இந்த அந்தகார உலகத்தில், கட்டப்பட்ட தேவ தூதர்களின் ஆவிகள் மட்டும் உண்டு. இறந்த போன மனிதரின் ஆவிகளோ சாத்தானின் கணங்களோ, இங்கு இடம் பெறுவதில்லை.
தொடரும்...
பாதாளத்தின் ஒரு பகுதியில் உள்ள உலகம் இது என்று கூறப்படுகிறது. இது ஒரு அந்தகாரமும், இருளும் நிறைந்த உலகம். இயேசு கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்புக்காக சங்கிலிகளால் கட்டப்பட்டு, காவல் பண்ணப்பட்டிருக்கும், கீழ்ப்படியாமற்போன தேவதூதர்களின் ஆவிகள் இங்கே உண்டு.
"தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு தூதர்களையும் மகா நாளின் நியாயத் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்" (2பேதுரு: 2:4 ; யுதா: 1:6).
இந்த அந்தகார உலகத்தில், கட்டப்பட்ட தேவ தூதர்களின் ஆவிகள் மட்டும் உண்டு. இறந்த போன மனிதரின் ஆவிகளோ சாத்தானின் கணங்களோ, இங்கு இடம் பெறுவதில்லை.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 15
|
|