புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
Page 3 of 15 •
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உங்களுக்கு அறிமுகமான யாராவது ஒருவர் பிசாசின் ஆவியால் பீடிக்கப்பட்டு இறந்துபோன ஒருவரின் அல்லது அகால மரணமடைந்த ஒருவரின் பெயரைச் சொன்னால் அதை நம்பி ஏமாறாதீர்கள்!
இறைவனை அறிந்து கொள்ள மன இருள் நீக்கப்படுவது அவசியம். இந்த அகஇருள் நீக்கப்பட மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்து உங்கள் இருதயங்களில் பிரகாசிக்க இன்று இடம் கொடுத்துப் பாருங்கள்.
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்." (யோவான்: 8:12).
"உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான்: 1:9).
"அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை." (யோவான்: 1:4,5).
"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்" (யோவான்: 12:46). (இங்கே - 'இருள்' என்பது பிசாசையும் 'ஒளி' என்பது இயேசு கிறிஸ்துவையும் குறிக்கும்).
மானிடரின் மனக் கண்களைக் குருடாக்கி, அவர்களை இருளுக்குள் நடத்தும் நோக்கத்துடன் செயல்படும் பிசாசையும் அவன் தூதர்களையும் முறியடித்து மனிதருக்கு வெளிச்சத்தையும், அழியாத நித்திய வாழ்வையும் அருளும்படி இயேசு கிறிஸ்துவாகிய மெய்யான ஜீவ ஒளி உலகத்தில் வந்தது. இருளுக்கும் மரணத்துக்கும் அதிகாரியாகிய சாத்தானை தமது கல்வாரி சிலுவை மரணத்தினால் அழித்து, சிலுவையின் மேல் வெற்றி சிறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக - மனிதரைப் பிரகாசிக்கும் மாபெரும் ஒளியாக இயேசு இன்றும் ஜீவிக்கிறார்.
இந்த மாபெரும் உண்மையை நீங்கள் மனதில் ஏற்றுக் கொள்வதின் மூலம் சாத்தானின் நோக்கங்கள் உங்களில் நிறைவேறாதபடி சிதைக்கப்படும். நீங்கள் இருளின் அதிகாரத்தினின்று விடுதலை பெற்று தேவ நோக்கத்தின்படி உலகத்திற்கு வெளிச்சமாக மாறுவீர்கள்.
தொடரும்...
இறைவனை அறிந்து கொள்ள மன இருள் நீக்கப்படுவது அவசியம். இந்த அகஇருள் நீக்கப்பட மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்து உங்கள் இருதயங்களில் பிரகாசிக்க இன்று இடம் கொடுத்துப் பாருங்கள்.
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்." (யோவான்: 8:12).
"உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான்: 1:9).
"அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை." (யோவான்: 1:4,5).
"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்" (யோவான்: 12:46). (இங்கே - 'இருள்' என்பது பிசாசையும் 'ஒளி' என்பது இயேசு கிறிஸ்துவையும் குறிக்கும்).
மானிடரின் மனக் கண்களைக் குருடாக்கி, அவர்களை இருளுக்குள் நடத்தும் நோக்கத்துடன் செயல்படும் பிசாசையும் அவன் தூதர்களையும் முறியடித்து மனிதருக்கு வெளிச்சத்தையும், அழியாத நித்திய வாழ்வையும் அருளும்படி இயேசு கிறிஸ்துவாகிய மெய்யான ஜீவ ஒளி உலகத்தில் வந்தது. இருளுக்கும் மரணத்துக்கும் அதிகாரியாகிய சாத்தானை தமது கல்வாரி சிலுவை மரணத்தினால் அழித்து, சிலுவையின் மேல் வெற்றி சிறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக - மனிதரைப் பிரகாசிக்கும் மாபெரும் ஒளியாக இயேசு இன்றும் ஜீவிக்கிறார்.
இந்த மாபெரும் உண்மையை நீங்கள் மனதில் ஏற்றுக் கொள்வதின் மூலம் சாத்தானின் நோக்கங்கள் உங்களில் நிறைவேறாதபடி சிதைக்கப்படும். நீங்கள் இருளின் அதிகாரத்தினின்று விடுதலை பெற்று தேவ நோக்கத்தின்படி உலகத்திற்கு வெளிச்சமாக மாறுவீர்கள்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"மோசம் போக்கும் பிசாசு"
"உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதனோடே கூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்" (வெளிப்படுத்தல்: 12:9).
பரிசுத்த வேதாகமத்தில் சாத்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களில் 'மோசம் போக்குகிற பிசாசு' என்பதும் ஒரு பெயராகும். சாத்தானுடைய கொள்கைகளையும், அவனுடைய கிரியைகள் என்ன என்பதையும், அவனுடைய இந்த பெயர் நமக்கு வெளிப்படுத்துகிறது. சர்தானுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி அவனுடைய தூதர்கள் (பிசாசின் ஆவிகள் - பேய் கணங்கள்) இரவு பகலாக கிரியை செய்து வருகின்றன.
இந்தப் பிசாசின் ஆவிகள்தேவனுடைய தூதர்களைப் போன்ற ஆவிக்குரிய சரீரம் உடையவைகள் அல்ல. தேவதூதர்களுக்கும், பிசாசின் ஆவிகளுக்கும் அமைப்பிலும், தோற்றத்திலும், தன்மையிலும் மாபெரும் வித்தியாசங்கள் உண்டு. இந்தப் பிசாசின் ஆவிகள் மனிதருடைய சரீர கண்களுக்கு முன்பாக, மாமிச உருவில் புலப்படவோ, தோன்றவோ முடியாது. அதற்கான அமைப்பும் அதிகாரமும் இவைகளுக்கு கொடுக்கப்பட்வில்லை. இருப்பினும், இவைகளின் உருவத்தை ஒரு சிலர் இருளின் பிம்பம் போன்ற நிலையில், நிழலாட்டமாகக் காணக் கூடும். ஆனால், மனிதருக்குள்ளும், மிருகங்கள், இதர பிராணிகளுக்குள்ளும் பிசாசின் ஆவிகள் உட்புகுந்து அசுத்தமான தீய செயல்களைப் புரியக் கூடும்.
தேவதூதர்கள் தங்கள் சுய உருவில் அல்லது வேறு மனிதரூபத்தில் பூமிக்கு வந்து மனிதனோடு பேசி, பழகி, புசித்து சேவை செய்யும் அதிகாரமுடையவர்கள். பிசாசின் ஆவிகளுக்கும் தேவதூதர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே.
தொடரும்...
"உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதனோடே கூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்" (வெளிப்படுத்தல்: 12:9).
பரிசுத்த வேதாகமத்தில் சாத்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களில் 'மோசம் போக்குகிற பிசாசு' என்பதும் ஒரு பெயராகும். சாத்தானுடைய கொள்கைகளையும், அவனுடைய கிரியைகள் என்ன என்பதையும், அவனுடைய இந்த பெயர் நமக்கு வெளிப்படுத்துகிறது. சர்தானுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி அவனுடைய தூதர்கள் (பிசாசின் ஆவிகள் - பேய் கணங்கள்) இரவு பகலாக கிரியை செய்து வருகின்றன.
இந்தப் பிசாசின் ஆவிகள்தேவனுடைய தூதர்களைப் போன்ற ஆவிக்குரிய சரீரம் உடையவைகள் அல்ல. தேவதூதர்களுக்கும், பிசாசின் ஆவிகளுக்கும் அமைப்பிலும், தோற்றத்திலும், தன்மையிலும் மாபெரும் வித்தியாசங்கள் உண்டு. இந்தப் பிசாசின் ஆவிகள் மனிதருடைய சரீர கண்களுக்கு முன்பாக, மாமிச உருவில் புலப்படவோ, தோன்றவோ முடியாது. அதற்கான அமைப்பும் அதிகாரமும் இவைகளுக்கு கொடுக்கப்பட்வில்லை. இருப்பினும், இவைகளின் உருவத்தை ஒரு சிலர் இருளின் பிம்பம் போன்ற நிலையில், நிழலாட்டமாகக் காணக் கூடும். ஆனால், மனிதருக்குள்ளும், மிருகங்கள், இதர பிராணிகளுக்குள்ளும் பிசாசின் ஆவிகள் உட்புகுந்து அசுத்தமான தீய செயல்களைப் புரியக் கூடும்.
தேவதூதர்கள் தங்கள் சுய உருவில் அல்லது வேறு மனிதரூபத்தில் பூமிக்கு வந்து மனிதனோடு பேசி, பழகி, புசித்து சேவை செய்யும் அதிகாரமுடையவர்கள். பிசாசின் ஆவிகளுக்கும் தேவதூதர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தேவதூதர்கள் மனிதருக்கு தொண்டு செய்த பல அநுபவங்களை வேதத்தில் வாசிக்கிறோம். தேவதூதர்களின் சேவை இன்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவதூதர்களின் சேவை தேவனால் அளிக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம்: 34:7; எபிரேயர்: 1:13,14; மத்தேயு: 18:10).
பிசாசின் ஆவிகளுக்கு சரீரம் இல்லையென்பதை இயேசு தாமே சீஷர்களிடம் விளக்கினார். "நான்தான் என்று அறியும்படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்." (லூக்கா: 24:39,40).
மேற்கூறியவைகளிலிருந்து அசுத்த ஆவிகள் மாமிச உருவில் நம் கண்முன் தோன்ற முடியாது என்ற உண்மையை அறிய முடிகிறது.
பல மாயையான இன்பங்களை மக்களுக்குக் காண்பித்து அவர்கள் தாங்கள் சுதந்தரிக்க வேண்டிய 'நித்திய ஜீவனை' அல்லது 'என்றும் அழியாத தெய்வீக வாழ்வை' சிந்திக்கவும் - சொந்தமாக்கும் விடாமல், அவர்களை மதி மயக்கி, உலக இன்பங்களிலேயே வழி நடத்தி, மோசம் போக்குவது சாத்தானின் வேலையாகும்.
நாம் வசிக்கும் இன்றைய உலகில் பிசாசின் கிரியைகள் நிறைந்தள்ளன. தேவனால் ஆதியில் உண்டாக்கப்பட்ட இந்த உலகில் வேறு சில காரியங்களை சாத்தான் திறம்பட உருவாக்கியிருக்கிறான். "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டாணவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்." (1யோவான்: 2:16).
தொடரும்...
பிசாசின் ஆவிகளுக்கு சரீரம் இல்லையென்பதை இயேசு தாமே சீஷர்களிடம் விளக்கினார். "நான்தான் என்று அறியும்படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்." (லூக்கா: 24:39,40).
மேற்கூறியவைகளிலிருந்து அசுத்த ஆவிகள் மாமிச உருவில் நம் கண்முன் தோன்ற முடியாது என்ற உண்மையை அறிய முடிகிறது.
பல மாயையான இன்பங்களை மக்களுக்குக் காண்பித்து அவர்கள் தாங்கள் சுதந்தரிக்க வேண்டிய 'நித்திய ஜீவனை' அல்லது 'என்றும் அழியாத தெய்வீக வாழ்வை' சிந்திக்கவும் - சொந்தமாக்கும் விடாமல், அவர்களை மதி மயக்கி, உலக இன்பங்களிலேயே வழி நடத்தி, மோசம் போக்குவது சாத்தானின் வேலையாகும்.
நாம் வசிக்கும் இன்றைய உலகில் பிசாசின் கிரியைகள் நிறைந்தள்ளன. தேவனால் ஆதியில் உண்டாக்கப்பட்ட இந்த உலகில் வேறு சில காரியங்களை சாத்தான் திறம்பட உருவாக்கியிருக்கிறான். "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டாணவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்." (1யோவான்: 2:16).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்த ஜீவனுக்கும், இனிவரும் ஜீவனுக்கும் தேவையான அநேக நன்மையான காரியங்களை தேவன் மனிதனுக்காக வைத்திருக்கிறார். மெய்ப்பொருள் - மெய் இன்பம் - மெய் சந்தோஷம் - மெய்ச் சமாதானம் - மெய் வழி - மெய் ஞானம் மெய் பக்தி, மெய்யான தேவநீதி இவைகளை மனிதர் கண்டறிந்து சொந்தமாக்கவிடாத நிலையில் அவர்களை மோசம்போக்கும்படி, இவைகளுக்குப் போலியாக அல்லது பதில் வெட்டாக ( ) மாற்றான காரியங்களை அமைத்து வைத்து தன் பக்கமாக மக்களை திசை திருப்பும் வகையில் சாத்தான் முயற்சி செய்கிறான்.
இன்றைய உலகத்தின் சரியான பொருள் என்னவெனில் - மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய இம்மூன்று காரியங்கள் மூலமாகவே உலகின் சகலவித தொல்லைகளையும் சாத்தான் உருவாக்குகிறான். மேற்கூறிய மூன்று நிலைக்குள் மக்களை சிந்திக்க வைக்கும்படி சாத்தானும் அவனது கணங்களும் ஓய்வின்றி இரவு பகலாக கிரியை செய்கின்றனர் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.
அத்துடன் அவைகள் எவ்விதம் கிரியை செய்கின்றன என்ற விபரங்களையும் நாம் அறிவது அவசியம். குறிப்பாக உலகத்தில் மாயையான காரியங்களில் மனிதரை மதிமயக்கி மெய்வழியை விட்டு திசை திருப்பும் வகையில் செயல்படும் பலவகை ஆவிகள் சாத்தானிடம் உண்டு.
மனிதரின் மனக்கண்களை குருடாக்கி அவர்கள் தேவனை விட்டு விலகும்படி செய்வதும், தேவனுடைய சித்தம் மனிதரில் நிறைவேறாதபடி தடை செய்வதும் மோசம்போக்கும் பிசாசின் செயலாகும். மனிதர் அனுபவிக்க வேண்டிய சந்தோஷம் - சமாதானம் - மகிழ்ச்சி - பரிபூரணம் - வல்லமை - அதிகாரம் - சுகம் - பெலன் - ஞானம் - வெற்றி ஆகிய சிலாக்கியமான தெய்வீக நன்மைகளையும் மனிதர்களிடமிருந்து திருடும்படி போலி மாயைகளையும் மனிதருக்குக் காண்பித்து - கொடுத்து - அவர்களை மோசம் போக்கி - அழிவுக்குட்படுத்துவது மோசம் போக்கும் பிசாசின் வேலையாகும்.
சாத்தானுடைய மோசம் போக்கும் செயலின் விளைவால் இன்று மனிதருக்குள் பயம், கவலை, வியாதி, வறுமை, தரித்திரம், கடன், உபத்திரவம், தோல்வி, குழப்பம், பகை, விரோதம், மரணம் ஆகியவைகளை மனிதர் அனுபவிக்க நேரிடுகிறது. இயேசு கிறிஸ்துவையும், அழிவில்லாத ஜீவனையும் சொந்தமாக்கும் அவருடைய சுவிசேஷத்தையும் புறக்கணித்து உலகத்தை நேசித்து, தங்கள் மாமிசமும் மனதும் விரும்புகிறபடி நடக்கும் ஒவ்வொருவரும் பிசாசினால் மோசம் போக்கப்படுகிறார்கள். (எபேசியர்: 2:2).
தொடரும்...
இன்றைய உலகத்தின் சரியான பொருள் என்னவெனில் - மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய இம்மூன்று காரியங்கள் மூலமாகவே உலகின் சகலவித தொல்லைகளையும் சாத்தான் உருவாக்குகிறான். மேற்கூறிய மூன்று நிலைக்குள் மக்களை சிந்திக்க வைக்கும்படி சாத்தானும் அவனது கணங்களும் ஓய்வின்றி இரவு பகலாக கிரியை செய்கின்றனர் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.
அத்துடன் அவைகள் எவ்விதம் கிரியை செய்கின்றன என்ற விபரங்களையும் நாம் அறிவது அவசியம். குறிப்பாக உலகத்தில் மாயையான காரியங்களில் மனிதரை மதிமயக்கி மெய்வழியை விட்டு திசை திருப்பும் வகையில் செயல்படும் பலவகை ஆவிகள் சாத்தானிடம் உண்டு.
மனிதரின் மனக்கண்களை குருடாக்கி அவர்கள் தேவனை விட்டு விலகும்படி செய்வதும், தேவனுடைய சித்தம் மனிதரில் நிறைவேறாதபடி தடை செய்வதும் மோசம்போக்கும் பிசாசின் செயலாகும். மனிதர் அனுபவிக்க வேண்டிய சந்தோஷம் - சமாதானம் - மகிழ்ச்சி - பரிபூரணம் - வல்லமை - அதிகாரம் - சுகம் - பெலன் - ஞானம் - வெற்றி ஆகிய சிலாக்கியமான தெய்வீக நன்மைகளையும் மனிதர்களிடமிருந்து திருடும்படி போலி மாயைகளையும் மனிதருக்குக் காண்பித்து - கொடுத்து - அவர்களை மோசம் போக்கி - அழிவுக்குட்படுத்துவது மோசம் போக்கும் பிசாசின் வேலையாகும்.
சாத்தானுடைய மோசம் போக்கும் செயலின் விளைவால் இன்று மனிதருக்குள் பயம், கவலை, வியாதி, வறுமை, தரித்திரம், கடன், உபத்திரவம், தோல்வி, குழப்பம், பகை, விரோதம், மரணம் ஆகியவைகளை மனிதர் அனுபவிக்க நேரிடுகிறது. இயேசு கிறிஸ்துவையும், அழிவில்லாத ஜீவனையும் சொந்தமாக்கும் அவருடைய சுவிசேஷத்தையும் புறக்கணித்து உலகத்தை நேசித்து, தங்கள் மாமிசமும் மனதும் விரும்புகிறபடி நடக்கும் ஒவ்வொருவரும் பிசாசினால் மோசம் போக்கப்படுகிறார்கள். (எபேசியர்: 2:2).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மனிதருக்குள் பிசாசின் ஆவிகள் கிரியை செய்யும் விதம் இரு வகைப்படும்.
முதல் வகை: " பிசாசினால் பீடிக்கப;படுதல்"
மனிதரின் சரீரத்திற்கு உள்ளே புகுந்து மனிதருக்குள்ளேயே தங்கி, வாசம் செய்து, அவர்களுடைய சரீரங்களை பலவிதங்களில் அலைக்கழித்தல். இவ்வித அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் பலவித சரீர உபாதைக்குட்படுகிறார்கள். பற்பல விதமான வியாதிகள் இவர்களுக்கு வரலாம். அசுத்த ஆவிகளால் ஏற்படும் பலவித வியாதிகள் வைத்திய முறையில் குணமாக்கக்கூடாமலும் போகலாம்! எக்ஸ்ரே, ஸ்கேனிங்கிலும் வியாதிகளின் படங்களோ, தன்மையோ தெரிவதில்லை.
இப்படி அசுத்த ஆவிகளினால் வரும் வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஜெபித்து, பிசாசின் ஆவிகளை வெளியேறும்படி கட்டளை கொடுப்பதன் மூலம், அந்த பிசாசின் ஆவிகள் பீடிக்கப்பட்ட மக்களிடமிருந்து வெளியேறுவதையும், உடன்தானே வியாதியஸ்தர்கள் தங்கள் வலி, வேதனை வியாதிகளிலிருந்து பூரண குணமடைவதை காணலாம்.
சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் பேச முடியாதபடி ஊமைகளாகி விடுவதுண்டு. அதே சமயத்தில் வேறு சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் ஓயாது ஏதேதோ பேசிக் கொண்டே அலைவார்கள்!
சில ஆவிகள் மூலம் கன நித்திரையும், ஓயாத தூக்கமும் உண்டாகும். சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இரவு பகலாய் தூங்குவதே இல்லை.
அப்படியே, வேறுசில ஆவிகள் மக்களை பெலவீனப்படுத்தி எலும்பும் தோலுமாக காட்சியளிக்கச் செய்யும். ஆனால், சில ஆவிகள் மனிதரை மிகவும் பலசாலிகளாகவும், அடங்காத மிருகத்தன்மையும் உடையவர்களாகவும் மாற்றி விடும்.
இன்னும் சில ஆவிகளால் பீடிக்கப்பட்டோர் சாப்பிட மனமற்று திரிவதைக் காணலாம். ஆனால் வேறு சில ஆவிகள் பெருந்தீனியை உண்டு பண்ணும். என்னதான் சாப்பிட்டாலும் இவர்களுக்கு அடிக்கடி பசியுண்டாகும்.
அசுத்த ஆவிகள் சிலரை வஸ்திரமில்லாத நிர்வாணிகளாகவும், சிலரை நாகரீகம் என்ற பெயரில் அலங்கோலமான அரை நிர்வாண அலங்கரிப்புடனும் தெருவில் திரிய செய்யும்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, தேவன் கொடுத்திருக்கும் அதிகாரத்தை உபயோகிக்கத் தெரிந்த, தேவனுடைய பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வித அசுத்த ஆவிகள்:
- தலை விரித்தாடும்
- வாய் விட்டுப் புலம்பும்
- உருண்டு புரளும்
- ஐயோ என்று அலறும்.
தொடரும்...
முதல் வகை: " பிசாசினால் பீடிக்கப;படுதல்"
மனிதரின் சரீரத்திற்கு உள்ளே புகுந்து மனிதருக்குள்ளேயே தங்கி, வாசம் செய்து, அவர்களுடைய சரீரங்களை பலவிதங்களில் அலைக்கழித்தல். இவ்வித அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் பலவித சரீர உபாதைக்குட்படுகிறார்கள். பற்பல விதமான வியாதிகள் இவர்களுக்கு வரலாம். அசுத்த ஆவிகளால் ஏற்படும் பலவித வியாதிகள் வைத்திய முறையில் குணமாக்கக்கூடாமலும் போகலாம்! எக்ஸ்ரே, ஸ்கேனிங்கிலும் வியாதிகளின் படங்களோ, தன்மையோ தெரிவதில்லை.
இப்படி அசுத்த ஆவிகளினால் வரும் வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஜெபித்து, பிசாசின் ஆவிகளை வெளியேறும்படி கட்டளை கொடுப்பதன் மூலம், அந்த பிசாசின் ஆவிகள் பீடிக்கப்பட்ட மக்களிடமிருந்து வெளியேறுவதையும், உடன்தானே வியாதியஸ்தர்கள் தங்கள் வலி, வேதனை வியாதிகளிலிருந்து பூரண குணமடைவதை காணலாம்.
சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் பேச முடியாதபடி ஊமைகளாகி விடுவதுண்டு. அதே சமயத்தில் வேறு சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் ஓயாது ஏதேதோ பேசிக் கொண்டே அலைவார்கள்!
சில ஆவிகள் மூலம் கன நித்திரையும், ஓயாத தூக்கமும் உண்டாகும். சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இரவு பகலாய் தூங்குவதே இல்லை.
அப்படியே, வேறுசில ஆவிகள் மக்களை பெலவீனப்படுத்தி எலும்பும் தோலுமாக காட்சியளிக்கச் செய்யும். ஆனால், சில ஆவிகள் மனிதரை மிகவும் பலசாலிகளாகவும், அடங்காத மிருகத்தன்மையும் உடையவர்களாகவும் மாற்றி விடும்.
இன்னும் சில ஆவிகளால் பீடிக்கப்பட்டோர் சாப்பிட மனமற்று திரிவதைக் காணலாம். ஆனால் வேறு சில ஆவிகள் பெருந்தீனியை உண்டு பண்ணும். என்னதான் சாப்பிட்டாலும் இவர்களுக்கு அடிக்கடி பசியுண்டாகும்.
அசுத்த ஆவிகள் சிலரை வஸ்திரமில்லாத நிர்வாணிகளாகவும், சிலரை நாகரீகம் என்ற பெயரில் அலங்கோலமான அரை நிர்வாண அலங்கரிப்புடனும் தெருவில் திரிய செய்யும்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, தேவன் கொடுத்திருக்கும் அதிகாரத்தை உபயோகிக்கத் தெரிந்த, தேவனுடைய பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வித அசுத்த ஆவிகள்:
- தலை விரித்தாடும்
- வாய் விட்டுப் புலம்பும்
- உருண்டு புரளும்
- ஐயோ என்று அலறும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இரண்டாவது வகை: "பிசாசினால் தாக்கப்படுதல்"
அசுத்த ஆவிகள் நேரடியாக சரீரத்திற்குள் புகுந்து அலைக் கழிப்பதை தவிர மறைமுகமாக மனிதருக்கு வெளியே இருந்து கொண்டு, அவர்களைத் தாக்கி அவர்கள் மனதைக் கெடுக்கும் வகையில் அவர்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் தூண்டிவிடும். தகாதவைகளை சிந்திக்கவும், நடப்பிக்கவும் ஏவி விடும். (1நாளாகமம்: 21:1; 1கொரிந்தியர்: 7:5). இதன் மூலம் மனிதருடைய மனம் கெடுக்கப்பட்டு ஆத்துமா கறைப்பட்டு ஜீவியமும் கேடடையும். (2கொரிந்தியர்: 11:3).
மேற்கூறிய இரவகைகளிலும் கிரியை செய்ய சாத்தானிடம் பலவகைப்பட்ட எண்ணிறந்த பொல்லாத ஆவிகள் உண்டு. இவைகளின் கிரியைகளுக்கும் குணங்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான பெயர்கள் சத்திய வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த உலகில் மனிதர் தேவனை அறிந்து, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து, அன்பிலே நடந்து, தேவனோடு ஒருமித்து வாழும் வழியைக் கற்றுக் கொண்டு, தேவனைச் சேவிப்பதன் மூலம் அவர்களுக்குத் தேவையான மெய்ச் சமாதானம், சந்தோஷம், குறைவற்ற சம்பத்து, வளமான வாழ்வு போன்ற பாக்கியங்களும் - மரணத்திற்கு பின்பு அழியாத நித்திய ஜீவனும் உண்டு என்பதாக பரிசுத்த சத்திய வேதாகமம் வாக்களிக்கிறது.
மேற்கூறிய உண்மையை மனிதர் அறிந்து இம்மையிலும் மறுமையிலும் பாக்கியவான்களாக திகழ்வதை சாத்தான் வெறுப்பதால், இந்த மறுக்க முடியாத உண்மையை மனிதர் அறிந்து கொள்ள விடாதபடி, அவர்களை மயக்கி, மனதை குருடாக்கி அவரவர் தன் மனம் போல் மயங்கி நடக்கத்தக்கதாக சாத்தான் கிரியை செய்கிறான். அவனுடைய நோக்கம் முழுவதும் ஜனங்களை மோசம் போக்கி நித்திய ஜீவனை இழக்கச் செய்வதேயாகும்.
இந்த நித்திய ஜீவனாகிய மறு உலக வாழ்வு இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே மனிதருக்கு கிடைக்கும் மாபெரும் உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் - ஏற்க மறுத்தாலும், அது முற்றிலும் உண்மை என்பது சாத்தானுக்கு நன்றாக தெரியும்.
இதை வாசிக்கும் அன்பானவர்களே, இந்த உலகத்தோடு உங்கள் வாழ்வு முடிந்து போவதில்லை. அவ்விதமே மரித்த பின்பு நீங்கள் மறுபடியும் பூமியில் பிறக்கப் போவதும் இல்லை. இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் கவலை வியாதி துன்பமற்றவர்களாக வளமுடன் வாழ வேண்டும் என்பதுதான் உங்களைக் குறித்த தேவதீர்மானம் என்பத உங்களுக்கு தெரியுமா?
உங்கள் தற்போதைய வாழ்வு எப்படிப்பட்டது? அன்பு - பரிசுதத்ம் ஆகியவைகளில் நடந்து, சந்தோஷம் - சமாதானம் - சுகம் - பெலன் - ஆரோக்கியம் வல்லமை - காரியசித்தி - பரிபூரணம் - ஜெயம் ஆகிய தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்று ஜீவிக்கிறீர்களா? அல்லது அசுத்தம் - மோகம் - இச்சை - பெருமை ஆகிய வழிகளில் நடந்து கவலை, வியாதி, தன்பம், பயம், நஷ்டம், கடன், தொல்லை, தோல்வி ஆகிய தீமைகளை அனுபவித்து வருந்துகிறீர்களா? இதைக் குறித்த கால தாமதம் செய்யாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
"தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான்: 3:16).
தொடரும்...
அசுத்த ஆவிகள் நேரடியாக சரீரத்திற்குள் புகுந்து அலைக் கழிப்பதை தவிர மறைமுகமாக மனிதருக்கு வெளியே இருந்து கொண்டு, அவர்களைத் தாக்கி அவர்கள் மனதைக் கெடுக்கும் வகையில் அவர்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் தூண்டிவிடும். தகாதவைகளை சிந்திக்கவும், நடப்பிக்கவும் ஏவி விடும். (1நாளாகமம்: 21:1; 1கொரிந்தியர்: 7:5). இதன் மூலம் மனிதருடைய மனம் கெடுக்கப்பட்டு ஆத்துமா கறைப்பட்டு ஜீவியமும் கேடடையும். (2கொரிந்தியர்: 11:3).
மேற்கூறிய இரவகைகளிலும் கிரியை செய்ய சாத்தானிடம் பலவகைப்பட்ட எண்ணிறந்த பொல்லாத ஆவிகள் உண்டு. இவைகளின் கிரியைகளுக்கும் குணங்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான பெயர்கள் சத்திய வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த உலகில் மனிதர் தேவனை அறிந்து, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து, அன்பிலே நடந்து, தேவனோடு ஒருமித்து வாழும் வழியைக் கற்றுக் கொண்டு, தேவனைச் சேவிப்பதன் மூலம் அவர்களுக்குத் தேவையான மெய்ச் சமாதானம், சந்தோஷம், குறைவற்ற சம்பத்து, வளமான வாழ்வு போன்ற பாக்கியங்களும் - மரணத்திற்கு பின்பு அழியாத நித்திய ஜீவனும் உண்டு என்பதாக பரிசுத்த சத்திய வேதாகமம் வாக்களிக்கிறது.
மேற்கூறிய உண்மையை மனிதர் அறிந்து இம்மையிலும் மறுமையிலும் பாக்கியவான்களாக திகழ்வதை சாத்தான் வெறுப்பதால், இந்த மறுக்க முடியாத உண்மையை மனிதர் அறிந்து கொள்ள விடாதபடி, அவர்களை மயக்கி, மனதை குருடாக்கி அவரவர் தன் மனம் போல் மயங்கி நடக்கத்தக்கதாக சாத்தான் கிரியை செய்கிறான். அவனுடைய நோக்கம் முழுவதும் ஜனங்களை மோசம் போக்கி நித்திய ஜீவனை இழக்கச் செய்வதேயாகும்.
இந்த நித்திய ஜீவனாகிய மறு உலக வாழ்வு இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே மனிதருக்கு கிடைக்கும் மாபெரும் உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் - ஏற்க மறுத்தாலும், அது முற்றிலும் உண்மை என்பது சாத்தானுக்கு நன்றாக தெரியும்.
இதை வாசிக்கும் அன்பானவர்களே, இந்த உலகத்தோடு உங்கள் வாழ்வு முடிந்து போவதில்லை. அவ்விதமே மரித்த பின்பு நீங்கள் மறுபடியும் பூமியில் பிறக்கப் போவதும் இல்லை. இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் கவலை வியாதி துன்பமற்றவர்களாக வளமுடன் வாழ வேண்டும் என்பதுதான் உங்களைக் குறித்த தேவதீர்மானம் என்பத உங்களுக்கு தெரியுமா?
உங்கள் தற்போதைய வாழ்வு எப்படிப்பட்டது? அன்பு - பரிசுதத்ம் ஆகியவைகளில் நடந்து, சந்தோஷம் - சமாதானம் - சுகம் - பெலன் - ஆரோக்கியம் வல்லமை - காரியசித்தி - பரிபூரணம் - ஜெயம் ஆகிய தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்று ஜீவிக்கிறீர்களா? அல்லது அசுத்தம் - மோகம் - இச்சை - பெருமை ஆகிய வழிகளில் நடந்து கவலை, வியாதி, தன்பம், பயம், நஷ்டம், கடன், தொல்லை, தோல்வி ஆகிய தீமைகளை அனுபவித்து வருந்துகிறீர்களா? இதைக் குறித்த கால தாமதம் செய்யாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
"தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான்: 3:16).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"பலவகை ஆவிகள்"
சாத்தானின் அதிகாரத்திற்குட்பட்டு பூமியில் கிரியை செய்த வரும் பலவிதமான ஆவிகளைக் குறித்து பரிசுத்த சத்திய வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பொதுவாக இவைகளை 'பிசாசின் ஆவிகள்' , 'அசுத்த ஆவிகள்', 'பொல்லாத ஆவிகள்' என்று வேதம் கூறுகிறது. (மத்தேயு: 12:43-45). இவைகளின் பல்வேறு கிரியைகளுக்கு ஏற்றவாறு வித்தியாசமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எரிச்சலின் ஆவி - 1சாமுவேல்: 18:8.
கன நித்திரையின் ஆவி - ஏசாயா: 29:10.
கொலை பாதக ஆவி - யோவான்: 8:44; மத்தேயு: 17:15.
பொய்யின் ஆவி - 1இராஜாக்கள்: 22:22; யோவான்: 8:44.
பயத்தின் ஆவி - 2தீமோத்தேயு: 1:7.
ஊமையும் செவிடுமான ஆவி - மாற்கு: 9:25.
குற்றம் சாட்டும் ஆவி - வெளிப்படுத்தல்: 12:10.
லேகியோன் - மாற்கு: 5:9.
தாறுமாறுகளின் ஆவி - ஏசாயா: 19:14.
வஞ்சிக்கும் ஆவி - 1தீமோத்தேயு: 4:1.
பலவீனப்படுத்தும் ஆவி - அப்போஸ்தலர்: 16:16.
குருடும் ஊமையுமான ஆவி - மத்தேயு: 12:22.
ஆகாயத்து அதிகார பிரபுவின் ஆவி - எபேசியர்: 2:2.
உலகத்தின் ஆவி - 1கொரிந்தியர்: 2:12.
அற்புதங்களைச் செய்யும் பிசாசின் ஆவிகள் - வெளிப்படுத்தல்: 16:13,14; 2தெசலோனிக்கேயர்: 2:9.
அந்திக் கிறிஸ்துவின் ஆவி - 1யோவான்: 4:3. - ஆகியவை.
இங்கே குறிப்பிட்டுள்ள எல்லா ஆவிகளையும் குறித்து விளக்கமாக எழுதுவதற்கு இல்லை. இருப்பினும், ஒரு சில ஆவிகளைக் குறித்து சற்று விரிவாக கவனிப்பது அவசியம்.
தொடரும்...
சாத்தானின் அதிகாரத்திற்குட்பட்டு பூமியில் கிரியை செய்த வரும் பலவிதமான ஆவிகளைக் குறித்து பரிசுத்த சத்திய வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பொதுவாக இவைகளை 'பிசாசின் ஆவிகள்' , 'அசுத்த ஆவிகள்', 'பொல்லாத ஆவிகள்' என்று வேதம் கூறுகிறது. (மத்தேயு: 12:43-45). இவைகளின் பல்வேறு கிரியைகளுக்கு ஏற்றவாறு வித்தியாசமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எரிச்சலின் ஆவி - 1சாமுவேல்: 18:8.
கன நித்திரையின் ஆவி - ஏசாயா: 29:10.
கொலை பாதக ஆவி - யோவான்: 8:44; மத்தேயு: 17:15.
பொய்யின் ஆவி - 1இராஜாக்கள்: 22:22; யோவான்: 8:44.
பயத்தின் ஆவி - 2தீமோத்தேயு: 1:7.
ஊமையும் செவிடுமான ஆவி - மாற்கு: 9:25.
குற்றம் சாட்டும் ஆவி - வெளிப்படுத்தல்: 12:10.
லேகியோன் - மாற்கு: 5:9.
தாறுமாறுகளின் ஆவி - ஏசாயா: 19:14.
வஞ்சிக்கும் ஆவி - 1தீமோத்தேயு: 4:1.
பலவீனப்படுத்தும் ஆவி - அப்போஸ்தலர்: 16:16.
குருடும் ஊமையுமான ஆவி - மத்தேயு: 12:22.
ஆகாயத்து அதிகார பிரபுவின் ஆவி - எபேசியர்: 2:2.
உலகத்தின் ஆவி - 1கொரிந்தியர்: 2:12.
அற்புதங்களைச் செய்யும் பிசாசின் ஆவிகள் - வெளிப்படுத்தல்: 16:13,14; 2தெசலோனிக்கேயர்: 2:9.
அந்திக் கிறிஸ்துவின் ஆவி - 1யோவான்: 4:3. - ஆகியவை.
இங்கே குறிப்பிட்டுள்ள எல்லா ஆவிகளையும் குறித்து விளக்கமாக எழுதுவதற்கு இல்லை. இருப்பினும், ஒரு சில ஆவிகளைக் குறித்து சற்று விரிவாக கவனிப்பது அவசியம்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. உலகத்தின் ஆவி (அ) இப்பிரபஞ்சத்தின் ஆவி: (1கொரிந்தியர்: 2:12; 2கொரிந்தியர்: 4:4)
வானமும் பூமியும் அதிலுள்ளவைகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் சிருஷ்டிக்கப்பட்டது. (யோவான்: 1:3; ஏசாயா: 45:12; 44:24; அப்போஸ்தலர்: 17:24; எபேசியர்: 3:11).
தேவன் மனிதனை சிருஷ்டித்தார் (சங்கீதம்: 100:3; 95:6; ஏசாயா: 45:12; அப்போஸ்தலர்: 17:26; மத்தேயு: 19:4; மல்கியா: 2:10; ஆதியாகமம்: 2:7).
தேவன் மனிதரைத் தமக்கென்று சிருஷ்டித்தார். (1கொரிந்தியர்: 8:6; கொலோசெயர்: 1:15; ரோமர்: 7:4).
எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் மற்றும் சகல தேவைகளையும் கொடுக்கிறவர் தேவனே. (அப்போஸ்தலர்: 17:25; 17:28; எரேமியா: 17:10; அப்போஸ்தலர்: 14:17; லூக்கா: 6:35; மத்தேயு: 6:26).
மேற் கூறியுள்ள சத்திய வசனங்களின்படி மனிதர் தங்களை சிருஷ்டித்த தேவனைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். (அப்போஸ்தலர்: 17:27; ரோமர்: 1:20). தங்களை உண்டாக்கின மெய்யான தேவனையே ஆராதிக்க வேண்டும். (உபாகமம்: 5:7,9; மத்தேயு: 4:10). தேவனுக்கென்றே பூமியில் ஜீவிக்கவும் வேண்டும். (2கொரிந்தியர்: 5:15; 1தெசலோனிக்கேயர்: 5:10).
மெய்யான சிருஷ்டி கர்த்தாவாகிய தேவனை ஆராதிப்பதை விட்டு, சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் சிருஷ்டியை தெய்வங்களாக வைத்து வணங்கும்படி 'உலகத்தின் ஆவி' கிரியை செய்கிறது. ஆகவேதான், ஆறறிவு பெற்ற மானிடர் சற்றும் சிந்திக்காமல், அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனிதர்கள் - பறவைகள் - மிருகங்கள் - ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றி, சொரூபங்களையும், படங்களையும் தாங்களே உண்டாக்கி, அவைகளை தெய்வமாக மதித்து, பூஜித்து வணங்குகின்றனர். இயேசு கிறிஸ்து - கன்னி மரியாள் போன்றவர்களையும் சிலைகளாகவும், படங்களாகவும் உருவாக்கி, அவைகளுக்கு மாலையிட்டு - தீபம் ஏற்றி வணங்கி வழிபடுவதும் தேவனுக்குப் பிரியமில்லாத அருவருப்பான விக்கிரக வணக்கத்தின் செய்கைகளாகும்.
இவ்விதம் செய்கிறவர்கள், தேவனுடைய சத்தியத்தை பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரை தொழுது சேவியாமல், சிருஷ்டிகளை தொழுது சேவிக்கின்றனர். (ரோமர்: 1:20-23). இதைக் குறித்து வேதம் கூறுவதாவது:
"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடி இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர்: 4:4).
தொடரும்...
வானமும் பூமியும் அதிலுள்ளவைகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் சிருஷ்டிக்கப்பட்டது. (யோவான்: 1:3; ஏசாயா: 45:12; 44:24; அப்போஸ்தலர்: 17:24; எபேசியர்: 3:11).
தேவன் மனிதனை சிருஷ்டித்தார் (சங்கீதம்: 100:3; 95:6; ஏசாயா: 45:12; அப்போஸ்தலர்: 17:26; மத்தேயு: 19:4; மல்கியா: 2:10; ஆதியாகமம்: 2:7).
தேவன் மனிதரைத் தமக்கென்று சிருஷ்டித்தார். (1கொரிந்தியர்: 8:6; கொலோசெயர்: 1:15; ரோமர்: 7:4).
எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் மற்றும் சகல தேவைகளையும் கொடுக்கிறவர் தேவனே. (அப்போஸ்தலர்: 17:25; 17:28; எரேமியா: 17:10; அப்போஸ்தலர்: 14:17; லூக்கா: 6:35; மத்தேயு: 6:26).
மேற் கூறியுள்ள சத்திய வசனங்களின்படி மனிதர் தங்களை சிருஷ்டித்த தேவனைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். (அப்போஸ்தலர்: 17:27; ரோமர்: 1:20). தங்களை உண்டாக்கின மெய்யான தேவனையே ஆராதிக்க வேண்டும். (உபாகமம்: 5:7,9; மத்தேயு: 4:10). தேவனுக்கென்றே பூமியில் ஜீவிக்கவும் வேண்டும். (2கொரிந்தியர்: 5:15; 1தெசலோனிக்கேயர்: 5:10).
மெய்யான சிருஷ்டி கர்த்தாவாகிய தேவனை ஆராதிப்பதை விட்டு, சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் சிருஷ்டியை தெய்வங்களாக வைத்து வணங்கும்படி 'உலகத்தின் ஆவி' கிரியை செய்கிறது. ஆகவேதான், ஆறறிவு பெற்ற மானிடர் சற்றும் சிந்திக்காமல், அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனிதர்கள் - பறவைகள் - மிருகங்கள் - ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றி, சொரூபங்களையும், படங்களையும் தாங்களே உண்டாக்கி, அவைகளை தெய்வமாக மதித்து, பூஜித்து வணங்குகின்றனர். இயேசு கிறிஸ்து - கன்னி மரியாள் போன்றவர்களையும் சிலைகளாகவும், படங்களாகவும் உருவாக்கி, அவைகளுக்கு மாலையிட்டு - தீபம் ஏற்றி வணங்கி வழிபடுவதும் தேவனுக்குப் பிரியமில்லாத அருவருப்பான விக்கிரக வணக்கத்தின் செய்கைகளாகும்.
இவ்விதம் செய்கிறவர்கள், தேவனுடைய சத்தியத்தை பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரை தொழுது சேவியாமல், சிருஷ்டிகளை தொழுது சேவிக்கின்றனர். (ரோமர்: 1:20-23). இதைக் குறித்து வேதம் கூறுவதாவது:
"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடி இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர்: 4:4).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் இயேசு கிறிஸ்துவே என்று பரிசுத்த வேதாகமம் திட்டவட்டமாக கூறுகின்றது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (யோவான்: 1:3).
"அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துகளும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது."
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படிஅநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம், இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது; அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." (1கொரிந்தியர்: 8:5-9).
மேற் கூறிய வேதவசனங்களிலிருந்து அனைத்தையும் உருவாக்கிப் படைத்த மெய்யான தேவன் இயேசுவே என்பது உண்மை. பூமியிலும் வானத்திலுமுள்ள இதர தேவர்களையும் படைத்தவர் இயேசு கிறிஸ்துவே. இவரே தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தாவுமானவர்.
இத்தகைய தேவ ஒழுங்கை மனிதர் அறியவிடாமல் அவர்கள் மனக் கண்களை குருடாக்குவதும், மெய்யான தேவனை சேவித்து ஆராதிப்பதை விட்டு, தேவனல்லாதவைகளை வணங்கச் செய்வதும் இந்த 'உலகத்தின் ஆவியின்' கிரியையாகும். இதன் காரணமாக, மக்கள் தேவனை ஆராதிக்காமலும், அவர்கள் சிந்திக்காமலும் வாழ்ந்து, தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கும் சிருஷ்டிகளை தொழுது சேவிக்கிறார்கள்! எப்பொழுதும் உலகக் காரியங்களுக்காக கவலைப் படுகிறார்கள்; உலக காரியங்களிலேயே இரவும் பகலும் கவனம் செலுத்துகிறார்கள்; பூமிக்குரியவைகளையே பேசுகிறார்கள் - சிந்திக்கிறார்கள்! இவர்கள் நோக்கமெல்லாம் "புசிப்போம் - குடிப்போம் - சாவோம்" (ஏசாயா: 22:13) என்பதே. இவர்கள் இம்மையில் தங்கள் பங்கைப் பெற்று வாழ்வதுடன் திருப்தியடைவதால் இவர்கள் உலக மக்களாக மாற்றப்பட்டு, மறுமைக்குரிய அற்புதமான நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களை இழந்து போகின்றனர். (சங்கீதம்: 17:14).
தொடரும்...
"அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துகளும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது."
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படிஅநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம், இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது; அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." (1கொரிந்தியர்: 8:5-9).
மேற் கூறிய வேதவசனங்களிலிருந்து அனைத்தையும் உருவாக்கிப் படைத்த மெய்யான தேவன் இயேசுவே என்பது உண்மை. பூமியிலும் வானத்திலுமுள்ள இதர தேவர்களையும் படைத்தவர் இயேசு கிறிஸ்துவே. இவரே தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தாவுமானவர்.
இத்தகைய தேவ ஒழுங்கை மனிதர் அறியவிடாமல் அவர்கள் மனக் கண்களை குருடாக்குவதும், மெய்யான தேவனை சேவித்து ஆராதிப்பதை விட்டு, தேவனல்லாதவைகளை வணங்கச் செய்வதும் இந்த 'உலகத்தின் ஆவியின்' கிரியையாகும். இதன் காரணமாக, மக்கள் தேவனை ஆராதிக்காமலும், அவர்கள் சிந்திக்காமலும் வாழ்ந்து, தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கும் சிருஷ்டிகளை தொழுது சேவிக்கிறார்கள்! எப்பொழுதும் உலகக் காரியங்களுக்காக கவலைப் படுகிறார்கள்; உலக காரியங்களிலேயே இரவும் பகலும் கவனம் செலுத்துகிறார்கள்; பூமிக்குரியவைகளையே பேசுகிறார்கள் - சிந்திக்கிறார்கள்! இவர்கள் நோக்கமெல்லாம் "புசிப்போம் - குடிப்போம் - சாவோம்" (ஏசாயா: 22:13) என்பதே. இவர்கள் இம்மையில் தங்கள் பங்கைப் பெற்று வாழ்வதுடன் திருப்தியடைவதால் இவர்கள் உலக மக்களாக மாற்றப்பட்டு, மறுமைக்குரிய அற்புதமான நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களை இழந்து போகின்றனர். (சங்கீதம்: 17:14).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உலகதத்தின் ஆவியின், மோசம்போக்கும் கிரியை காரணமாக மக்கள் மறுஉலக வாழ்வின் ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் அசட்டை செய்து, மாம்சமும் மனதும் விரும்புகிறபடியெல்லாம் நடக்கிறார்கள். உலக இன்பங்களிலேயே மக்கள் சதா மயங்கி திரிகிறார்கள்! செல்வப் பிரியராகவும் - பணப்பிரியராகவும் - போஜனப் பிரியராகவும் - சுகபோகப் பிரியராகவும் ஜீவிக்கிறர்கள். தங்கள் சொந்த ஆத்துமா சேதமடைவதை இவர்கள் அறியார்கள்! இப்படிப்பட்டவர்களின் முடிவு இம்மையில் பரிதபிக்கப்படத்தக்கதே. (லூக்கா: 12:15-21; சங்கீதம்: 49:10-19; 39:6).
சொரூபங்களையும், விக்கிரகங்களையும் பணிந்து கொண்டு அவைகளுக்கு ஆராதனை செய்வது நம்மை சிருஷ்டித்த தேவனை நாம் அவமதிப்பதாகும்.
தேவன் அளவிடப்படாதவர்
சர்வ வல்லவர்
சர்வ வியாபிகர்
சேரக்கூடாத ஒளி
ஜோதிமயமானவர்
அதரிசனமானவர்
பாவமற்றவர்
பரிசுத்தத்தில் மகத்துவமானவர்
வானத்திலும், பூமியிலும் நாம் காண்கிற - காணக் கூடாத அனைத்தையும் சிருஷ்டித்தவர்.
அளவிடப்படாத தேவனை மனிதன் உருவாக்குவது எப்படி?
அவ்விதம் செய்வது அறிவிற்கு பொருந்தாததும் தேவனை அவமதிப்பதும் ஆகும்.
வான சாஸ்திரிகள் மரியாளையோ, யோசேப்பையோ பணிந்து கொள்ளவில்லை. குழந்தையாயிருந்த இயேசுவுக்கே தங்கள் காணிக்கைகளை செலுத்தினார்கள். இயேசுவையே பணிந்து கொண்டார்கள். சொரூப வணக்கத்தை தேவன் அங்கீகரிப்பதில்லை.
சொரூப வணக்கம் என்பது, வார்ப்பிக்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டும் அல்லாமல், சித்திரமாக வரையப்பட்டவைகளையும் குறிக்கும். இயேசு கிறிஸ்துவின் படங்களை வீடுகளில் மாட்டி வைத்து, அவைகளுக்கு மாலையிடுவதும் - தீபம் கொளுத்துவதும் - சுகந்த தூபமிடுவதும் கூட விக்கிரக வணக்கமாகும்.
உலகத்தின் ஆவியின் மோசம் போக்கும் செயல்களிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவது அவசியம்.
சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசுவை இன்றே விசுவாசியுங்கள். அவரையே செவியுங்கள். அவரையே ஆவியுடனும் உண்மையுடனும் தொழுது கொள்ளுங்கள்.
தொடரும்...
சொரூபங்களையும், விக்கிரகங்களையும் பணிந்து கொண்டு அவைகளுக்கு ஆராதனை செய்வது நம்மை சிருஷ்டித்த தேவனை நாம் அவமதிப்பதாகும்.
தேவன் அளவிடப்படாதவர்
சர்வ வல்லவர்
சர்வ வியாபிகர்
சேரக்கூடாத ஒளி
ஜோதிமயமானவர்
அதரிசனமானவர்
பாவமற்றவர்
பரிசுத்தத்தில் மகத்துவமானவர்
வானத்திலும், பூமியிலும் நாம் காண்கிற - காணக் கூடாத அனைத்தையும் சிருஷ்டித்தவர்.
அளவிடப்படாத தேவனை மனிதன் உருவாக்குவது எப்படி?
அவ்விதம் செய்வது அறிவிற்கு பொருந்தாததும் தேவனை அவமதிப்பதும் ஆகும்.
வான சாஸ்திரிகள் மரியாளையோ, யோசேப்பையோ பணிந்து கொள்ளவில்லை. குழந்தையாயிருந்த இயேசுவுக்கே தங்கள் காணிக்கைகளை செலுத்தினார்கள். இயேசுவையே பணிந்து கொண்டார்கள். சொரூப வணக்கத்தை தேவன் அங்கீகரிப்பதில்லை.
சொரூப வணக்கம் என்பது, வார்ப்பிக்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டும் அல்லாமல், சித்திரமாக வரையப்பட்டவைகளையும் குறிக்கும். இயேசு கிறிஸ்துவின் படங்களை வீடுகளில் மாட்டி வைத்து, அவைகளுக்கு மாலையிடுவதும் - தீபம் கொளுத்துவதும் - சுகந்த தூபமிடுவதும் கூட விக்கிரக வணக்கமாகும்.
உலகத்தின் ஆவியின் மோசம் போக்கும் செயல்களிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவது அவசியம்.
சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசுவை இன்றே விசுவாசியுங்கள். அவரையே செவியுங்கள். அவரையே ஆவியுடனும் உண்மையுடனும் தொழுது கொள்ளுங்கள்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 15
|
|