Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters
Page 13 of 15
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
First topic message reminder :
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உங்கள் மனதில் நிறைந்திருக்கும் காரியங்களே உங்கள் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்ற வசனம் உண்மையே. தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளிப்படுமானால், அது உங்கள் இருதயத்தின் நிறைவு தீமையே என்பதையே உறுதிப்படுத்தும். தீமையான வார்த்தைகளுக்கு தீமையை உருவாக்கும் வல்லமை உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
நலமான தேவனுடைய வார்த்தைகளால், உங்கள் மனம் நிரப்பப்பட்டால், நீங்கள் நன்மையானவைகளைப் பேசுவீர்கள். அதன் பயனாக நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
உங்கள் வாயின் வார்த்தைகளின் மூலம், தவறான - பெலவீனமான - வீணான, தீமையான வார்த்தைகளைப் பேச வழிவகுப்பது சாத்தானின் தந்திரமே.
நீங்கள் ஒருவரோடொருவர் சம்பாஷனை செய்யும் சமயங்களில் ஆகாத - தகாத - தேவனுக்குப் பிரியமில்லாத வேத வசனத்துக்கு விரோதமான காரியங்களைப் பேசும்படி சாத்தான் தந்திரம் செய்வதால், வீண் பேச்சுகளுக்கு விலகி, ஓய்வு நெரங்களை, வேதத்தை தியானிப்பதிலும், தேவனோடு ஐக்கியம் கொள்ளுவதிலும் செலவிட வேண்டும்.
தொடரும்...
நலமான தேவனுடைய வார்த்தைகளால், உங்கள் மனம் நிரப்பப்பட்டால், நீங்கள் நன்மையானவைகளைப் பேசுவீர்கள். அதன் பயனாக நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
உங்கள் வாயின் வார்த்தைகளின் மூலம், தவறான - பெலவீனமான - வீணான, தீமையான வார்த்தைகளைப் பேச வழிவகுப்பது சாத்தானின் தந்திரமே.
நீங்கள் ஒருவரோடொருவர் சம்பாஷனை செய்யும் சமயங்களில் ஆகாத - தகாத - தேவனுக்குப் பிரியமில்லாத வேத வசனத்துக்கு விரோதமான காரியங்களைப் பேசும்படி சாத்தான் தந்திரம் செய்வதால், வீண் பேச்சுகளுக்கு விலகி, ஓய்வு நெரங்களை, வேதத்தை தியானிப்பதிலும், தேவனோடு ஐக்கியம் கொள்ளுவதிலும் செலவிட வேண்டும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உங்கள் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்கள், மரணம், வியாதி, வறுமை, கடன், தோல்விகள், உபத்திரவங்களை தேவன் அனுப்புவதாகச் சொல்லாதிருங்கள்.
தீமையானவைகளைக் கொண்டு, தேவன் உங்களைப் பரிசுத்தப்படுத்துவதில்லை!
சில தேவனுடைய பிள்ளைகள் சில சமயங்களில் தங்கள் ஜெபங்களில் கூட வீண் வார்த்தைகளை உபயோகித்து கீழ்கண்டவாறு ஜெபிப்பது உண்டு.
- "எனக்கு எதுவும் வேண்டாம் - உமக்கு சாட்சியாக ஜீவித்தால் போதும்"
- "அழகான மனைவி - புருஷன் கிடைத்தால் போதும் - வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்"
- "பணம் மட்டும் போதும் - மற்றவை தேவையில்லை"
மேற் கூறியவாறு ஜெபித்ததன் பலனாக, கேட்டவைகளை மட்டும் பெற்றுக் கொண்டு, இதர தேவையான நன்மை, சந்தோஷம், சமாதானம் ஆகியவைகளை இழந்து தவிப்போர் அநேகர் உண்டு.
தொடரும்...
தீமையானவைகளைக் கொண்டு, தேவன் உங்களைப் பரிசுத்தப்படுத்துவதில்லை!
சில தேவனுடைய பிள்ளைகள் சில சமயங்களில் தங்கள் ஜெபங்களில் கூட வீண் வார்த்தைகளை உபயோகித்து கீழ்கண்டவாறு ஜெபிப்பது உண்டு.
- "எனக்கு எதுவும் வேண்டாம் - உமக்கு சாட்சியாக ஜீவித்தால் போதும்"
- "அழகான மனைவி - புருஷன் கிடைத்தால் போதும் - வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்"
- "பணம் மட்டும் போதும் - மற்றவை தேவையில்லை"
மேற் கூறியவாறு ஜெபித்ததன் பலனாக, கேட்டவைகளை மட்டும் பெற்றுக் கொண்டு, இதர தேவையான நன்மை, சந்தோஷம், சமாதானம் ஆகியவைகளை இழந்து தவிப்போர் அநேகர் உண்டு.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
பகை - விரோதம் - குற்றம் சாட்டுதல்:
"சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு அப்படிச் செய்தென். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே" (2கொரிந்தியர்: 2:11).
பிறர் செய்யும் தவறுகளை நாம் மன்னிக்க வேண்டும் என்றும், பிறர் தவறுகளை மன்னிப்பதை விட்டு, அவைகளை மனதில் பேணுவதின் மூலம், சாத்தானின் தந்திரத்தில் நாம் பிடிபடுவோம் என்ற கருத்துடன், அப்போஸ்தலன் இந்த வசனத்தை எழுதியிருக்கின்றார்.
தேவனுடைய பிள்ளைகளுக்குள் விரோதம், பகை, சண்டை, பொறாமை, குற்றம் சாட்டுதல் போன்ற காரியங்களை நடப்பிப்பது யார்? இதுவும் சாத்தானின் தந்திரச் செயலே என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
பிறருடைய ஜீவியத்தின் குறைகளைக் கண்டு பிடிப்பதில் பெருமை கொள்கிறவர்களும், அக்குறைகளைப் பிறரிடம் கூறி பெருமையடித்துக் கொள்ளுகிறவர்களும் இதைச் சற்று சிந்திக்க வேண்டும்! தேவனுடைய பிள்ளைகள் மீது, இரவும் பகலும் குற்றம் சுமத்தம் வேலை சாத்தானுடையது என்பதாக வெளிப்படுத்தல்: 12:8 - ல் வாசிக்கிறோம். "குற்றம் சாட்டுகிறவன்" என்பது, சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பலவிதப் பெயர்களில் ஒன்றாகும்.
தேவனுடைய பிள்ளைகளையும், ஊழியர்களையும் குற்றம் சாட்டி பேசுவதும், மொட்டைக் கடிதங்கள் எழுதுவதும், பத்திரிக்கைகளில் தரக்குறைவாக எழுதுவதும், பிசாசின் தந்திரங்களில் சிக்குண்டோர் செய்யும் காரியங்களாகும்.
பிறரை அவமதித்து மற்றவர்களிடம் குறைகூறும் வேளைகளில் சாத்தான் நம்மைப் பயன்படுத்தாதவாறு நாம் ஜாக்கிரதையுடன் இருப்பது எவ்வளவு அவசியம்?
தொடரும்...
"சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு அப்படிச் செய்தென். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே" (2கொரிந்தியர்: 2:11).
பிறர் செய்யும் தவறுகளை நாம் மன்னிக்க வேண்டும் என்றும், பிறர் தவறுகளை மன்னிப்பதை விட்டு, அவைகளை மனதில் பேணுவதின் மூலம், சாத்தானின் தந்திரத்தில் நாம் பிடிபடுவோம் என்ற கருத்துடன், அப்போஸ்தலன் இந்த வசனத்தை எழுதியிருக்கின்றார்.
தேவனுடைய பிள்ளைகளுக்குள் விரோதம், பகை, சண்டை, பொறாமை, குற்றம் சாட்டுதல் போன்ற காரியங்களை நடப்பிப்பது யார்? இதுவும் சாத்தானின் தந்திரச் செயலே என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
பிறருடைய ஜீவியத்தின் குறைகளைக் கண்டு பிடிப்பதில் பெருமை கொள்கிறவர்களும், அக்குறைகளைப் பிறரிடம் கூறி பெருமையடித்துக் கொள்ளுகிறவர்களும் இதைச் சற்று சிந்திக்க வேண்டும்! தேவனுடைய பிள்ளைகள் மீது, இரவும் பகலும் குற்றம் சுமத்தம் வேலை சாத்தானுடையது என்பதாக வெளிப்படுத்தல்: 12:8 - ல் வாசிக்கிறோம். "குற்றம் சாட்டுகிறவன்" என்பது, சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பலவிதப் பெயர்களில் ஒன்றாகும்.
தேவனுடைய பிள்ளைகளையும், ஊழியர்களையும் குற்றம் சாட்டி பேசுவதும், மொட்டைக் கடிதங்கள் எழுதுவதும், பத்திரிக்கைகளில் தரக்குறைவாக எழுதுவதும், பிசாசின் தந்திரங்களில் சிக்குண்டோர் செய்யும் காரியங்களாகும்.
பிறரை அவமதித்து மற்றவர்களிடம் குறைகூறும் வேளைகளில் சாத்தான் நம்மைப் பயன்படுத்தாதவாறு நாம் ஜாக்கிரதையுடன் இருப்பது எவ்வளவு அவசியம்?
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
தேவனுடைய ஊழியரைக் குற்றம் பிடிக்கவோ, குறைத்துப் பேசவோ, பறரக்கு தேவன் அதிகாரம் கொடுப்பதில்லை. (ரோமர்: 2:1-6; 8:33).
தேவ ஊழியர்களின் ஜீவியத்தில் குறைகள், தவறுகள் காணப்பட்டால், அவர்களுக்காக ஜெபியுங்கள். மிகுந்த ஜெபத்துடனும், அன்புடனும் அவர்களிடம் சென்று, அவர்கள் தவறுகளை நெரில் அவர்களுக்கு உணர்த்துங்கள். அவ்விதம் செய்வதை விட்டு இடறலை உண்டாக்குகிறவர்களின் கழுத்தில் இயந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் நடுவில் அவர்களை அமிழ்த்திப்போடுவது அவர்களுக்கு நலமாயிரக்கும் என்று இயேசு கூறியுள்ளார்.
அவ்விதமே, திரச்சபைகளில் பகை, விரோதம், பொறாமை, சண்டை, குழப்பங்களை உண்டு பண்ணும்படி தந்திரமாக சாத்தான் பலரை உபயோகிப்பான். நாம் அவைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
ஒருவேளை நம்மைக் குற்றம் சாட்டி, நிந்தித்து, பகைத்து அவதூறாகப் பேசி - எழுதி, குழப்பங்களை உண்டு பண்ணினாலும்கூட, அவ்விதம் கிரியை செய்கிறவர்களைப் பகைக்க நாம் இடம் கொடுக்க வேண்டாம். அப்படிப்பட்டவர்களைப் பகைத்து விரோதிப்பதன் மூலம், நாமும்கூட சாத்தானுக்கு சேவை செய்கிறவர்களாகி விடலாம்!
அப்படிப்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் மன்னித்து, ஆசீர்வதிப்பதன் மூலம், சாத்தானின் தந்திரங்களை முறியடிக்கிறவர்களாயிருப்பீர்கள்!
தொடரும்...
தேவ ஊழியர்களின் ஜீவியத்தில் குறைகள், தவறுகள் காணப்பட்டால், அவர்களுக்காக ஜெபியுங்கள். மிகுந்த ஜெபத்துடனும், அன்புடனும் அவர்களிடம் சென்று, அவர்கள் தவறுகளை நெரில் அவர்களுக்கு உணர்த்துங்கள். அவ்விதம் செய்வதை விட்டு இடறலை உண்டாக்குகிறவர்களின் கழுத்தில் இயந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் நடுவில் அவர்களை அமிழ்த்திப்போடுவது அவர்களுக்கு நலமாயிரக்கும் என்று இயேசு கூறியுள்ளார்.
அவ்விதமே, திரச்சபைகளில் பகை, விரோதம், பொறாமை, சண்டை, குழப்பங்களை உண்டு பண்ணும்படி தந்திரமாக சாத்தான் பலரை உபயோகிப்பான். நாம் அவைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
ஒருவேளை நம்மைக் குற்றம் சாட்டி, நிந்தித்து, பகைத்து அவதூறாகப் பேசி - எழுதி, குழப்பங்களை உண்டு பண்ணினாலும்கூட, அவ்விதம் கிரியை செய்கிறவர்களைப் பகைக்க நாம் இடம் கொடுக்க வேண்டாம். அப்படிப்பட்டவர்களைப் பகைத்து விரோதிப்பதன் மூலம், நாமும்கூட சாத்தானுக்கு சேவை செய்கிறவர்களாகி விடலாம்!
அப்படிப்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் மன்னித்து, ஆசீர்வதிப்பதன் மூலம், சாத்தானின் தந்திரங்களை முறியடிக்கிறவர்களாயிருப்பீர்கள்!
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
"பிசாசின் பலவீனம்"
பிசாசையும் அவனுடைய சகல சேனைகளையும் நீங்கள் எளிதாக ஜெயிக்க வேண்டுமானால், அவனுடைய பெலவீனங்களைக் குறித்தும் உங்களுக்கு நன்கு தெரிந்திருப்பது மிகமிக அவசியம்.
இராட்சதனாகிய கோலியாத் என்னும் வீனையும், அவன் தரித்திருந்த பலத்த ஆயுதங்களையும், அவன் கையில் பிடித்திருந்த பெரிய இரும்பு ஈட்டியையும் கண்டு, அவதூறான அவனுடைய தூஷணங்களையும் கேட்டு, சவுல் இராஜாவும், இஸ்ரவேலின் சேனை வீரர்களும் பயந்து ஓடினர்.
ஆனால், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, இளைஞனாகிய தாவீது, அவ்விதம் பயந்து ஓடாமல், ஆவியில் வைராக்கியம் கொண்டு, பெலிஸ்தரின் நம்பிக்கைக்குக் காரணமாயிருந்த கோலியாத் என்னும் எதிரியைத் தனிமையாக எதிர்த்துப் போரிடத் துணிந்தான்.
தாவீதிடம் காணப்பட்ட கீழ்க்கண்ட அனுபவங்கள் இன்று நம்மிலும் செயல்பட வேண்டும்.
1. தேவனைப் பற்றிய அறிவு
2. தாவீதின் விசுவாசம்
3. தைரியம்
4. தன்னை பலப்படுத்தும் விதம்
5. தேவஞானம்
6. எதிரியின் பலவீனம்
மேற்கூறிய முறைகளை நாமும் அனுபவமாகத் தீர்மானித்தால், எதிரியாகிய சாத்தானின் பலவீனமும், நமது பலமும் நம் மூலம் வெளிப்படும்.
தொடரும்...
பிசாசையும் அவனுடைய சகல சேனைகளையும் நீங்கள் எளிதாக ஜெயிக்க வேண்டுமானால், அவனுடைய பெலவீனங்களைக் குறித்தும் உங்களுக்கு நன்கு தெரிந்திருப்பது மிகமிக அவசியம்.
இராட்சதனாகிய கோலியாத் என்னும் வீனையும், அவன் தரித்திருந்த பலத்த ஆயுதங்களையும், அவன் கையில் பிடித்திருந்த பெரிய இரும்பு ஈட்டியையும் கண்டு, அவதூறான அவனுடைய தூஷணங்களையும் கேட்டு, சவுல் இராஜாவும், இஸ்ரவேலின் சேனை வீரர்களும் பயந்து ஓடினர்.
ஆனால், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, இளைஞனாகிய தாவீது, அவ்விதம் பயந்து ஓடாமல், ஆவியில் வைராக்கியம் கொண்டு, பெலிஸ்தரின் நம்பிக்கைக்குக் காரணமாயிருந்த கோலியாத் என்னும் எதிரியைத் தனிமையாக எதிர்த்துப் போரிடத் துணிந்தான்.
தாவீதிடம் காணப்பட்ட கீழ்க்கண்ட அனுபவங்கள் இன்று நம்மிலும் செயல்பட வேண்டும்.
1. தேவனைப் பற்றிய அறிவு
2. தாவீதின் விசுவாசம்
3. தைரியம்
4. தன்னை பலப்படுத்தும் விதம்
5. தேவஞானம்
6. எதிரியின் பலவீனம்
மேற்கூறிய முறைகளை நாமும் அனுபவமாகத் தீர்மானித்தால், எதிரியாகிய சாத்தானின் பலவீனமும், நமது பலமும் நம் மூலம் வெளிப்படும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
1. தாவீதுக்கு தேவனைப்பற்றிய அறிவு இருந்தது:
"இஸ்ரவேலின் சேனைகளின் கர்த்தர்," தன்னுடைய தேவன் என்னும் தாவீதின் அறிவு சாதாரணமானதல்ல. நமக்கும் நமது தேவனைக் குறித்த சரியான அறிவும், அவருடைய நாமத்தைக் குறித்த அறிவும், அதைச் சரியான விதத்தில் உபயோகிக்கும் அறிவும் அவசியம். இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்த சரியான அறிவு நமக்கிருந்தால், நாமும் வித்தியாசமான முறையில் செயல்படுவோம்.
2. தாவீதின் விசுவாசம் அருமையானது:
பழைய சம்பவங்களாகிய சிங்கம் - கரடி ஆகியவைகளுடன் தான் போராடிய சந்தர்ப்பங்களில் தனக்கு ஜெயம் கொடுத்த அதே கர்த்தரின் ஆவியானவர் இன்றும் கோலியாத் மீதும் ஜெயம் தருகிறவர் என்ற விசுவாசமே தாவீதைக் கோலியாத்துக்கு விரோதமாக போர் புரிய ஏவிற்று.
"யுத்தம் கர்த்தருடையது"; "ஜெயம் கர்த்தருடையது"; "கைவிடாத தேவன்" - ஆகிய வேத வசனங்களில் தாவீதின் விசுவாசம் உறுதிப்பட்டிருந்தது. தேவனுடைய வாக்குத்தத்தமான வேத வசனங்களை முற்றிலும் விசுவாசித்து, சொந்தமாக்கும் அனுபவம் நமக்கும் அவசியம்.
சாத்தானுடன் நமக்கு இரக்கும் போராட்டத்தில், "ஆவியானவர் சாத்தானுக்கு விரோதமாக கொடியேற்றுவார்" சமாதானத்தின் தேவன் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்" போன்ற வாக்குத்தத்தங்களாகிய வேத வசனங்களை விசுவாசத்தடன் பற்றிக் கொண்டு அறிக்கையிடுவோமாக.
தொடரும்...
"இஸ்ரவேலின் சேனைகளின் கர்த்தர்," தன்னுடைய தேவன் என்னும் தாவீதின் அறிவு சாதாரணமானதல்ல. நமக்கும் நமது தேவனைக் குறித்த சரியான அறிவும், அவருடைய நாமத்தைக் குறித்த அறிவும், அதைச் சரியான விதத்தில் உபயோகிக்கும் அறிவும் அவசியம். இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்த சரியான அறிவு நமக்கிருந்தால், நாமும் வித்தியாசமான முறையில் செயல்படுவோம்.
2. தாவீதின் விசுவாசம் அருமையானது:
பழைய சம்பவங்களாகிய சிங்கம் - கரடி ஆகியவைகளுடன் தான் போராடிய சந்தர்ப்பங்களில் தனக்கு ஜெயம் கொடுத்த அதே கர்த்தரின் ஆவியானவர் இன்றும் கோலியாத் மீதும் ஜெயம் தருகிறவர் என்ற விசுவாசமே தாவீதைக் கோலியாத்துக்கு விரோதமாக போர் புரிய ஏவிற்று.
"யுத்தம் கர்த்தருடையது"; "ஜெயம் கர்த்தருடையது"; "கைவிடாத தேவன்" - ஆகிய வேத வசனங்களில் தாவீதின் விசுவாசம் உறுதிப்பட்டிருந்தது. தேவனுடைய வாக்குத்தத்தமான வேத வசனங்களை முற்றிலும் விசுவாசித்து, சொந்தமாக்கும் அனுபவம் நமக்கும் அவசியம்.
சாத்தானுடன் நமக்கு இரக்கும் போராட்டத்தில், "ஆவியானவர் சாத்தானுக்கு விரோதமாக கொடியேற்றுவார்" சமாதானத்தின் தேவன் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்" போன்ற வாக்குத்தத்தங்களாகிய வேத வசனங்களை விசுவாசத்தடன் பற்றிக் கொண்டு அறிக்கையிடுவோமாக.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
3. தாவீதின் தைரியம்:
தாவீதின் தைரியம் அனைவருக்கும் பிரமிப்பை உண்டாக்கியது. "சேனைகளின் கர்த்தரின் நாமத்தை" அவன் தரித்துக் கொண்டதால், அனைவரும் பயந்து பிரமித்தனர். "கர்த்தரின் நாமத்தை" நாமும் தரித்துக் கொண்டால், பு+மியின் ஜனங்கள் நமக்குப் பயப்படுவார்கள்!
தான் தனித்து இல்லை, இஸ்ரவேலின் சேனைகளின் கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்ற அறிவு தாவீதுக்கு மகா பெரிய தைரியத்தைக் கொடுத்தது. நமக்கும் அப்படியே. "உலகத்தில் இருக்கிறவனிலும், நம்மில் இருக்கிறவர் பெரியவர்" என்ற உண்மையும், அறிவும் நமக்கு ஏற்பட்டால், நாமும் தைரியமாகக் கிரியை செய்ய முடியும். உயிர்த்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து - அறிக்கை செய்வதன் மூலம், தைரியம் உண்டாவதைக் காணலாம். விசுவாசத்தை உபயோகிக்க தைரியமும் தேவை.
தொடரும்...
தாவீதின் தைரியம் அனைவருக்கும் பிரமிப்பை உண்டாக்கியது. "சேனைகளின் கர்த்தரின் நாமத்தை" அவன் தரித்துக் கொண்டதால், அனைவரும் பயந்து பிரமித்தனர். "கர்த்தரின் நாமத்தை" நாமும் தரித்துக் கொண்டால், பு+மியின் ஜனங்கள் நமக்குப் பயப்படுவார்கள்!
தான் தனித்து இல்லை, இஸ்ரவேலின் சேனைகளின் கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்ற அறிவு தாவீதுக்கு மகா பெரிய தைரியத்தைக் கொடுத்தது. நமக்கும் அப்படியே. "உலகத்தில் இருக்கிறவனிலும், நம்மில் இருக்கிறவர் பெரியவர்" என்ற உண்மையும், அறிவும் நமக்கு ஏற்பட்டால், நாமும் தைரியமாகக் கிரியை செய்ய முடியும். உயிர்த்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து - அறிக்கை செய்வதன் மூலம், தைரியம் உண்டாவதைக் காணலாம். விசுவாசத்தை உபயோகிக்க தைரியமும் தேவை.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
4. தாவீதின் பலம்:
தேவனுடைய பலத்தைச் சாா்நததால் உண்டானது. தன்னுடைய சொந்த பலத்தில் அல்ல. தன் தேவனுடைய பலத்தில் தாவீது கோலியாத்தை எதிா்த்துச் சென்றான். எதிாியின் மிரட்டல்களுக்கு அவன் பயப்படாதவாறு, தேவபலம் அவனை ஆட்கொண்டிருந்தது. நமக்கும் அப்படியே.
”பாிசுத்த ஆவியானவா் உங்களிடத்தில் வரும் பொழுது நீங்கள் பெலனடைந்து” என்றும் கா்த்தருக்குக் காத்திருக்கிறவா்கள் பெலனடைந்து என்றும் எழுதப்பட்டிருக்கும் வேதவசனங்களின்படி தினமும் தேவசமூகத்தில் அமா்ந்திருந்து, பாிசுத்தாவியின் நிறைவை விசுவாசத்தின் மூலம் உங்கள் இருதயத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தினமும் இதை அப்பியாசித்து, பழக்கமாக்குவதன் மூலம், நீங்கள் அறியாத தேவபலம் உங்களை ஆட்கொள்ளும்.
நமது பெலவீனத்தை அல்ல. தேவனுடைய பலத்தை நாம் சாா்ந்து ஜீவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
தொடரும்...
தேவனுடைய பலத்தைச் சாா்நததால் உண்டானது. தன்னுடைய சொந்த பலத்தில் அல்ல. தன் தேவனுடைய பலத்தில் தாவீது கோலியாத்தை எதிா்த்துச் சென்றான். எதிாியின் மிரட்டல்களுக்கு அவன் பயப்படாதவாறு, தேவபலம் அவனை ஆட்கொண்டிருந்தது. நமக்கும் அப்படியே.
”பாிசுத்த ஆவியானவா் உங்களிடத்தில் வரும் பொழுது நீங்கள் பெலனடைந்து” என்றும் கா்த்தருக்குக் காத்திருக்கிறவா்கள் பெலனடைந்து என்றும் எழுதப்பட்டிருக்கும் வேதவசனங்களின்படி தினமும் தேவசமூகத்தில் அமா்ந்திருந்து, பாிசுத்தாவியின் நிறைவை விசுவாசத்தின் மூலம் உங்கள் இருதயத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தினமும் இதை அப்பியாசித்து, பழக்கமாக்குவதன் மூலம், நீங்கள் அறியாத தேவபலம் உங்களை ஆட்கொள்ளும்.
நமது பெலவீனத்தை அல்ல. தேவனுடைய பலத்தை நாம் சாா்ந்து ஜீவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
5. தாவீது தேவஞானமும், புத்தியும் உள்ளவராக வாழ்ந்தாா்:
நாமும்கூட உலகஞானம், பாரம்பாிய சட்டதிட்டங்கள், முதியோாின் அறிவுரைகள் இவைகளைக் கொண்டு செயல்படாமல், அனைத்துக் காாியங்களிலும் தேவ ஆலோசனைகளுக்காக காத்திருந்து, தேவஞானம் பெற்று, கிாியை செய்ய வேண்டும். சவுல் இராஜாவின் யுத்த ஆயுதங்கள், உடைகளைக் களைந்து, கவண் கூழாங்கல் ஆகியவைகளைத் தாவீது உபயோகித்ததும் தேவஞானம் தான்.
தொடரும்...
நாமும்கூட உலகஞானம், பாரம்பாிய சட்டதிட்டங்கள், முதியோாின் அறிவுரைகள் இவைகளைக் கொண்டு செயல்படாமல், அனைத்துக் காாியங்களிலும் தேவ ஆலோசனைகளுக்காக காத்திருந்து, தேவஞானம் பெற்று, கிாியை செய்ய வேண்டும். சவுல் இராஜாவின் யுத்த ஆயுதங்கள், உடைகளைக் களைந்து, கவண் கூழாங்கல் ஆகியவைகளைத் தாவீது உபயோகித்ததும் தேவஞானம் தான்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
6. தன் எதிாியின் பலவீனம் எது என அறிந்தவன் தாவீது:
தன் எதிாியின் பலவீனம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, தாக்கியதை கவனியுங்கள். எதிாியின் பிரமாண்டமான தோற்றம், பயங்கரமான போராயுதங்கள், சாபத்தீடான சொற்கள், கோரமான பயமுறுத்தல்கள் ஆகிய எதிாியின் மேன்மைகளையல்ல, அவனுடைய பலவீனம் எங்கு உள்ளது என்பதைக் கண்டு பிடித்து, அதற்கேற்ற சாியான ஆயுதத்தை உபயோகித்தாா்.
கோலியாத்தின் நெற்றி ஒன்று தவிர, மற்ற எல்லா அவயங்களும் பலமாக பாதுகாக்கப்பட்டிருந்தது.
நெற்றியில் படும்படியாகத் தாவீது தன் கவண் கல்லை உபயோகித்தத, ஏற்ற இடத்தில் ஏற்ற தேவ வசனத்தை உபயோகிக்கும் விந்தையாகும்.
இதன் விளைவாக, தாவீது தன் எதிாியாகிய கோலியாத்தை வெகுசுலபமாக மடங்கடித்து, பெலிஸ்தாின் மீது வெற்றி சிறந்தான். நாமும், சாத்தானின் பெலவீனங்களை அறிந்து, அவைகளை வேதவசனமாகிய பட்டயத்தால் தாக்கும்பொழுது, நமக்கும் அவ்வித வெற்றி உண்டு.
தொடரும்...
தன் எதிாியின் பலவீனம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, தாக்கியதை கவனியுங்கள். எதிாியின் பிரமாண்டமான தோற்றம், பயங்கரமான போராயுதங்கள், சாபத்தீடான சொற்கள், கோரமான பயமுறுத்தல்கள் ஆகிய எதிாியின் மேன்மைகளையல்ல, அவனுடைய பலவீனம் எங்கு உள்ளது என்பதைக் கண்டு பிடித்து, அதற்கேற்ற சாியான ஆயுதத்தை உபயோகித்தாா்.
கோலியாத்தின் நெற்றி ஒன்று தவிர, மற்ற எல்லா அவயங்களும் பலமாக பாதுகாக்கப்பட்டிருந்தது.
நெற்றியில் படும்படியாகத் தாவீது தன் கவண் கல்லை உபயோகித்தத, ஏற்ற இடத்தில் ஏற்ற தேவ வசனத்தை உபயோகிக்கும் விந்தையாகும்.
இதன் விளைவாக, தாவீது தன் எதிாியாகிய கோலியாத்தை வெகுசுலபமாக மடங்கடித்து, பெலிஸ்தாின் மீது வெற்றி சிறந்தான். நாமும், சாத்தானின் பெலவீனங்களை அறிந்து, அவைகளை வேதவசனமாகிய பட்டயத்தால் தாக்கும்பொழுது, நமக்கும் அவ்வித வெற்றி உண்டு.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
» பேய் மழை ,பிசாசு மழை
» பேய், பிசாசு,மோகினி
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» பேய், பிசாசு,மோகினி
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
» முத்தம் பற்றி ஒரு ஆய்வு
Page 13 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|