புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_m10குடி குடியைக் கெடுக்கும் - 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும் - 2


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 27, 2012 11:27 pm

தமிழ்நாட்டில் சாராயக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து அதன்படி கடையை ஒருநாள் மூடினார்கள். ஒரு நிறுவனம் அல்லது ஒரு தொழிற்சாலை வேலைநிறுத்தம் செய்கிறதென்றால் அவர்கள் செய்யும் தொழிலில் உற்பத்தி லாபம் கூடுதலாக இருக்கிறது. அதில் தமக்கான ஊதியம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காகத்தான் இருக்கும். ஆக, சாராய கடைகளை மூடி வைப்பதின்மூலம் தங்கள் எதிர்ப்பை இவர்கள் தெரிவிக்கிறார்கள் என்றால், இதில் கிடைக்கும் லாபத்தில் எங்களுக்கு குறைவான அளவே ஊதியம் அளிக்கிறார்கள் என்பதை வலியுறுத்தத்தான் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் புரியும்.

ஒரு காலத்தில் சாராயம் விற்பது ஒரு ஈனத் தொழிலாக கருதப்பட்டது. சாராயம் விற்பவர்களை ஊரிலிருப்பவர்கள் ஏதோ அவன் இச்சமூகத்தைவிட்டு விலக்கப்பட்டவனைப்போல் பார்ப்பார்கள். சாராயம் விற்பனையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆற்றோரங்களில் அல்லது கருவேலங்காடுகளில் இல்லையெனில் சுடுகாட்டு புறங்களில் தான் அதற்கான விற்பனை மையங்கள் இருக்கும். குடிப்பவர்களை குடிகாரன் என்று அழைக்கும்போதே அதற்குள் அவன் இச்சமூகத்திற்கு எதிரானவன் அல்லது இவனால் இச்சமூகத்திற்கு பயனில்லை என்கின்ற பொருள் பொதிந்திருப்பதை உணர முடியும். ஆனால் படிப்படியாக வளர்ந்து, இன்று அரசே சாராயக் கடைகளை நடத்தி, அதன்மூலம் பொருளீட்ட துவங்கி இருப்பதின்மூலம் இது எந்த அளவிற்கு இந்த நாட்டையும், இந்த சமூகத்தையும் கீழ் நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் மேலே கூறியதுபோன்று, சாராயக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நிலைமாறி, இன்று வீட்டிற்கு அருகிலேயே அவை திறந்திருப்பதை காண்கிறோம். படித்த, பட்டம் பெற்ற, பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்று சாராயம் ஊற்றித் தரும் தொழிலை தமது வாழ்வாதாரமாய் கொண்டிருக்கக்கூடிய அவல நிலை, அல்லது கேடு இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதை தவிர்க்கவே முடியாதா? என்ற கேள்வி பல்வேறு தளங்களிலிருந்து புறப்பட்டாலும், இதற்கான சரியான பதில் இதுவரை எழவில்லை. மாறாக இந்த அரசு சாராய விற்பனையின் அளவை விழுக்காடு வைத்து உயர்த்துகிறது. ஆண்டிற்கு பத்தாயிரம் கோடிக்கும் மேலாக சாராயத்தின் மூலம் லாபம் கிடைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

நாம் முன்பெல்லாம் சாராய கடை நடத்துபவர்கள் ஊருக்கு ஒருவராக இருப்பார்கள். அவர்கள் அதிகப்பட்சமாக ஒருநாளைக்கு நூறிலிருந்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிப்பார்கள். ஆனால் இன்று சாராய தொழிற்சாலைகள் வைத்திருக்கும் சாராய தொழிற்சாலை முதலாளிகள், பல்லாயிரக் கோடிகளின் அதிபதிகளாக வலம்வருகிறார்கள். ஆக, இந்த நாட்டின் ஏழை பாழைகளின் வருமானம் ஒட்டுமொத்தமாய் ஒருசில சாராய உற்பத்தியாளர்களை வளர்த்தெடுக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு அடித்தட்டு குடும்பங்களிலும் வறுமையும், வாழ்வின் மகிழ்வும் சூறையாடப்படுகின்றது. நாம் சாராயக் கடை என்று சொல்வது ஒருவேளை அரசுக்கு பிடிக்காமல் போகலாம், அல்லது இந்த சாராயக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். அதுவும் இல்லையெனில் இவர்கள் இந்த சாராயத்திற்கு ஆங்கிலத்தில் பல பெயர்களை வைத்து அழைக்கலாம்.

ஆனால் எப்படிச் சொன்னாலும் அது அடிப்படையில் சாராயம் என்பதிலிருந்து மாறப் போவது கிடையாது. ஆகவே நாம் சாராய கடை என்று சொல்வதிலிருந்து எந்த மாற்றத்தையும் செய்து கொள்ள வேண்டாம். இந்த சாராய கடைகள் ஆரம்ப நிலையில் தனி மனிதனின் குத்தகையாக இருந்தது. அது படிப்படியாக உருமாற்றம் அடைந்து, இன்று அரசே சாராய வியாபாரம் செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கான அதிகாரிகள், அதற்கான அளவீட்டாளர்கள், கொள்முதல் செய்பவர்கள், விற்பனையாளர்கள் என இந்த தீயச் செயலுக்கு ஒரு அரசு தன்னுடைய முழு பரிவாரங்களையும் பயன்படுத்துகிறதே? இது சரிதானா? என்று கேட்டால் ஒருவேளை அரசு சாராயம் விற்காவிட்டால் தனியாக கள்ளச்சாராயம் விற்பனையாகும்.

அதன்மூலம் பலர் நச்சு சாராயம் குடித்து பலியாகலாம். ஆகவே தான் அதைத் தடுக்க அரசு இந்த சாராய கடைகளை திறந்திருக்கிறது. சாராயம் விற்பனையின்மூலம் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய லாபம் நேரிடையாக அரசுக்கேக் கிடைக்கிறது என்று அரசு தமது மக்களிடம் நியாயம் கற்பிக்கிறது. ஆனால் சாராயம் குடிப்பதின் மூலம் வரும் வியாதிகளிலிருந்து அவர்கள் விடுதலைப் பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்பதை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், இந்த சாராயம் திருட்டுத்தனமாக கிடைக்கும்போது குடிப்பது தவறு என்ற மனநிலையில் குடித்துக் கொண்டிருந்த பலர், இன்று நேரிடையாக இது சரிதான் என்ற ஒரு உளவியல் பக்குவநிலைக்கு வருவதற்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

காரணம், அரசே தமது குடிமக்களின் மீது அக்கறையற்று, அவர்களை குடிகாரர்களாக உருமாற்றியது என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமிருக்காது. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரக்கணக்கான காவல்துறை அங்கத்தினர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நவீன கருவிகள், பணிமனைகள், குடியிருப்புகள் என பலநூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு இந்த நாட்டின் மக்களை அச்சமற்று தீய வழிகளில் இருந்து அவர்களை காப்பாற்றி, அவர்களின் செயல்பாடுகளின்மூலம் இந்த மக்களுக்கு நேர்மையை போதிப்பதாக அமைய வேண்டும். இதுதான் காவல் துறையினரின் கடமையாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கோடிக்கணக்கில் கொட்டி வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு துறை இந்த நாட்டின் அதிகார நடுவமாக இருக்கும்போது, எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு தவறிவிடும் என்கிற நியாயமாக கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பானதுதானே? அதே கேள்விதான் நம் மனதிலும் எழுகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசு, இந்த மக்களை மேலும் மேலும் படிப்படியாக குடிகாரர்களாக மாற்றி வரும் அவலப்போக்கு இந்த சமூக சீரழிவின் அடையாளம் என்பதை நாம் அழுத்தமாக பதிவு செய்கிறோம். ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட வயதினர் விழாக்களிலும், அல்லது பொது நிகழ்வுகளிலும் குடிப்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாக இருந்தது. ஆனால் இன்றோ இது முற்றிலுமாக மாறி, ஒவ்வொரு சாராய கடையும் திருவிழா நிகழ்வாக மாறியிருக்கிறது.

சாராயம் குடிக்கும் வயதும் மிக குறைந்த நிலையில், அதாவது உயர்நிலைக் கல்வி மாணாக்கர்கள் எல்லாம் மிகச் சாதாரணமாக சாராயக் கடைகளில் குழுமி இருப்பதைக் காண முடிகிறது. பள்ளி இறுதித் தேர்வுகளின்போது, அல்லது பள்ளியின் இறுதி நாட்களின்போது அவர்கள் சேர்ந்து சாராயம் குடிப்பதை ஒரு நடைமுறை நிகழ்ச்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது நாளடைவில் அவர்களின் பழக்கமாக மாற்றப்படலாம். அதுவே அவர்களின் வாழ்வை சீரழிக்கலாம். அவர்களின் வாழ்வு சீரழிவதற்கும் இந்த அடிப்படை வாழ்வியல் மாற்றத்திற்கும் இந்த அரசுதான் காரணம் என்பதை நாம் மறுதலிக்க முடியாது. ஒரு நாட்டில் வாழும் மக்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினர் சாராயம் குடிக்கிறார்கள். ஆகையால் அவர்கள் நச்சுச்சாராயம் குடிக்கக் கூடாது என்பதற்காக சாராயக்கடை திறக்கிறோம் என்பது ஒரு சரியான பொருள் பதிந்த நியாயம் கிடையாது என்பதே எமது வாதம். நாம் நினைப்பது ஒருவேளை தவறு என்று சிலர் கருதக் கூடும்.

ஆனாலும் இதை பதிவு செய்வது சரியென்றே நாம் நினைக்கிறோம். சாராய கடைகளை ஒட்டுமொத்தமாய் மூடிவிட்டு சாராயமே கிடைக்காத ஒரு வறண்ட நிலையை உருவாக்கினால் சாராயத்திற்கு அடிமையான ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் நச்சுச் சாராயம் குடித்து இறந்து போகலாம். அப்படி ஒரு சாரார் இந்த சமூகத்தின் அழுக்கடைந்த, அழுகிப்போன ஒரு பகுதி ஒழிந்து தான் போகட்டுமே. புதிதாக வரும் இச்சமூக அமைப்பு சாராயம் என்றால் என்னதென்றே தெரியாத ஒரு வாழ்வு வாழட்டுமே. இதை அரசு நினைத்தால் செய்ய முடியாதா? பழங்குடியின மக்களின் வாழ்வை சூறையாட நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏக போக முதலாளிகளுக்கும் துணைநிற்கும் இந்த அரசு, பல்வேறு பெயர்களில் புதிய புதிய படைகளை கட்டி, பல நவீன ஆயுதங்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு எதிரான சமர் நடத்துவதாக காரணம் சொல்லி மக்களை அழித்தொழிக்கிறதே? அதேப்போன்று இந்த சாராய சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒரு புதிய படையை கட்டி, அதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு முயற்சிக்க தயங்குவது ஏன்? ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது லாப வெறி.

சாராயத்தின் மூலம் கிடைக்கும் பணம். சாராய ஆலை முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை, கையூட்டு, கழிவுத்தொகை. இதுதான் இந்த புதிய புதிய சாராய கடைகளை வரம்பில்லாமல் திறந்து வைக்கக் காரணமாக இருக்கிறது. ஒரு காலத்தில் வரலாறு இதை கடுமையாக விமர்சிக்கும். அப்போது இந்த நாடே போதை நாடாக மாறியிருக்கும். இதை மாற்ற சமூக அக்கறையும், இந்த மக்களின் மீது உள்ளார்ந்த அன்பும் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் அவர்களின் வாழ்வை மீட்டெடுக்க உறுதுணை புரியும் என்பதை நாம் மீண்டும் பதிவு செய்கிறோம்.

(நன்றி - - கண்மணி - www .keetru .com )


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 1:56 pm

போதை தரும் சாராயம்
மனிதனை அழிக்கும் சாராயம்
அருந்தாதவரின் அமைதி கெடுக்கும் சாராயம்

என அறிந்தும் அருந்தும் அன்பர்களை அரவனைக்குது அரசு
அரசின் கஜானாவை நிறைக்கும் சாராயம் என்பதால்...

அரசும் அருந்துபவரும் திருந்துவது எப்போது?

நல்ல பகிர்வு சாமி.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 28, 2012 2:07 pm

குடி இப்ப ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது.
குடிகாரர்கள் இதை படித்து திருந்தினால் தான் உண்டு.!
பகிர்வுக்கு நன்றி சாமிஅண்ணா..! சூப்பருங்க .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 28, 2012 2:08 pm

சிறந்த கட்டுரை சாமி , பகிர்வுக்கு நன்றி.



விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 28, 2012 3:22 pm

குடியால் ஏற்படும் தீமைகளை எண்ணி நான் வருந்தாத நாளில்லை நண்பரே , உங்கள் பதிவு என் குமுறல்களை கொட்டிதீர்தாற்போல் உள்ளது .பகிர்விற்குநன்றி ,



செந்தில்குமார்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Jun 28, 2012 3:50 pm

சாராய கடைகளை ஒட்டுமொத்தமாய் மூடிவிட்டு சாராயமே கிடைக்காத ஒரு வறண்ட நிலையை உருவாக்கினால் சாராயத்திற்கு அடிமையான ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் நச்சுச் சாராயம் குடித்து இறந்து போகலாம். அப்படி ஒரு சாரார் இந்த சமூகத்தின் அழுக்கடைந்த, அழுகிப்போன ஒரு பகுதி ஒழிந்து தான் போகட்டுமே.

நல்ல கருத்து !!! முத்தம்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Jun 28, 2012 4:33 pm

சாராய கடைகளை ஒட்டுமொத்தமாய் மூடிவிட்டு சாராயமே கிடைக்காத ஒரு வறண்ட நிலையை உருவாக்கினால் சாராயத்திற்கு அடிமையான ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் நச்சுச் சாராயம் குடித்து இறந்து போகலாம். அப்படி ஒரு சாரார் இந்த சமூகத்தின் அழுக்கடைந்த, அழுகிப்போன ஒரு பகுதி ஒழிந்து தான் போகட்டுமே[quote] ஆமோதித்தல்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Jun 28, 2012 4:33 pm

சாராய கடைகளை ஒட்டுமொத்தமாய் மூடிவிட்டு சாராயமே கிடைக்காத ஒரு வறண்ட நிலையை உருவாக்கினால் சாராயத்திற்கு அடிமையான ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் நச்சுச் சாராயம் குடித்து இறந்து போகலாம். அப்படி ஒரு சாரார் இந்த சமூகத்தின் அழுக்கடைந்த, அழுகிப்போன ஒரு பகுதி ஒழிந்து தான் போகட்டுமே[quote] ஆமோதித்தல்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக