ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்?

Go down

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்? Empty கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்?

Post by முஹைதீன் Wed Jun 27, 2012 10:41 pm

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்? 49733426



இதன் அறிவியல் பெயர் : Prosopis Juliflora


நம்மூரில் அறியப்படுவது : சீமை கருவேலம் அல்லது வேலிமரம்

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்? Acacianilot


இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்...


1) இந்த மரம் அதிகம் விஷத்தன்மை கொண்டது.


2) இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.


3) இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.


4) நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது


5) இந்த மரத்தில் கால்நடைகளை கட்டிவைத்தால் அவைகள் மலடாக மாறும் அல்லது கன்றுகள் ஊனமாக பிறக்கும்.


இதே விசயங்கள் இணையம் முழுதும் எங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதனால் ஒரேயடியாக இந்த மரத்தை விஷம் நிறைந்த மரம் என்று ஒதுக்கி தள்ளுவதற்கு முன் இதனை பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது கொஞ்சம் அவசியமாகிறது.


இதை இங்கு தெரிவிப்பதின் காரணம் இந்த மரம் நமக்கு மிகவும் அவசியமானது, இதை வீட்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும் என இந்த மரத்துக்கு பரிந்துபேசி வலியுறுத்த போவதில்லை. மாறாக இந்த மரத்தைப் பற்றிய தவறான தகவல்களை ஆதாரங்களோடு மறுப்பதோடு, சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் இம்மரத்தின் நன்மைகளையும் பார்க்கப் போகிறோ ம்.


ஆனால் இதன் பொதுவான தீங்கு விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது. இது பெரியதாக வளர்ந்து விட்டால் இதன் வளர்சித்தன்மையின காரணமாக வேகமாக பரவும். அதுவும் எந்த காலநிலையும்,மண் தன்மையும் இதன் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலும் எந்த விவசாயியும் இதனை தனது நிலத்தில் வளர அனுமதிப்பது இல்லை அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யும் பொருட்டு. இது ஒன்றுதான் நாம் எதிர்கொள்ளும் தீமை.அதுவும் நாமே அதை வளர அனுமதித்தால் ஒழிய.




1. விஷச்செடியா??


இது விஷச்செடி வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம். இந்த முறையில் பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதன் முள் விஷத்தன்மை வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே.


2. வறட்சிக்குக் காரணமா?


அடுத்து சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை. பல காரணிகள் பின் நிற்கின்றன. மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.


குறிப்பாக விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு அங்கு நிலவும் மண்வளமே காரணம். மண்ணில் காணப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) மண்ணின் வளம் மேம்படுவதை வெகுவாக பாதிக்கிறது. வைகைப் படுகை இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மணல், உவர்நிலங்களாகவே இருக்கின்றன.


இப்படி அதிகமாக காணப்படும் தரமற்ற மண்ணில் மரவகைகள் செழித்து வளர்வது முடியாத காரியம். ஆனால் இந்த கருவேலம் மரத்துக்கு மண் வளம் பெரிய பிரச்சினையே இல்லை. முக்கியமாக உவர், உப்பு நிலங்களில் கூட செழித்து வளரும். இதுவளரும் சூழ்நிலையில் மற்ற மரங்கள் வளர்வது சாத்தியமற்றது.


இந்த வறட்சியான சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் பென்னி குக் பெரியார் அணையே கட்டினார். ஏனென்றால் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கபெரும் நீர் அங்கு நிலவும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியதே. முக்கியமான விசயம் என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த வறட்சி இருந்து இருக்கிறது. ஆனால் கருவேலம் இந்தியாவுக்கு வந்தது 1857 ல் தான். அதுவும் தமிழகத்துக்கு இதன் வருகை கொஞ்சம் காலம் தள்ளியே இருக்க வேண்டும். பார்க்க..


///the earliest recorded introduction of P. juliflora was in 1857, the first systematic plantations were not carried out until 1876 ~ 77 in the Kaddapa area of Andhra Pradesh. It was introduced into parts of Gujarat in 1882 ///


ஆனால் பெரியாறு அணை கட்டும் திட்டம் 1807 ல் அடிப்படை வேலைகள் தொடங்கி சில பிரச்சினை வந்து அப்புறம் 1882 ஆம் ஆண்டில் முழுவதும் கட்டி முடிக்கபெற்று இருக்கிறது. இந்த அணை கட்டுவதற்க்கு முன்பே நிலவிய வறட்சியின் காரணமே இதனை உருவாக்கும் எண்ணம்அவருக்கு தோன்றி இருக்கிறது.


http://en.wikipedia.org/wiki/ John_Pennycuick_%28British_ engineer%29


எனவே இந்த கருவேலம் மரம்தான் அங்கு நிலவும் வறட்சிக்கு முழுக்காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதில் அர்த்தமில்லை. மேலும் மற்ற மரங்கள் வளரமுடியாத அந்த உவர் நிலங்களில் இந்த கருவேல் மரம் வளர்ந்து அப்பகுதி மக்களுக்கு கரிமூட்டம், அடுப்பு எரிக்க விறகு போன்ற விசயங்களுக்கு உதவுகின்றது.


3. எப்படி பயனளிக்கிறது...?


எரிபொருளாக


இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை அப்படியே விஷம் என்று சொல்லி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் அதிக இழப்புகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக ஏழை மக்கள். அவர்களுக்கு முக்கியமான எரிபொருளாக பயன்படுவது இந்த மரமே. பார்க்க பக்கம் 137 & 138, http://www.iamwarm.gov. in/Environment/report.pdf.


அதோடு ஏழைமக்களுக்கு வேலையோடு நிலையான வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் கொடுத்து வருகின்றன. மிகவும் வறட்சி மற்றும் பொதுவான மரங்கள் செழித்து வளர முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த மரத்தை விட்டால் வேறு மாற்றுவழி இல்லாததே காரணம். இதன் விதைகளையும் மாவாக்கி பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 7 ~ 10 .. http://www.cazri.res.in/ envis/pdf/3no3-4.pdf


வாழ்வாதாரத்தைப் ஏழைகளுக்கு கொடுப்பதில் இதன் விறகு முக்கியத்தன்மை பெறுகிறது. இதில் இருந்து கரிமூட்டம் மூலமாக தயாரிக்கப்படும் கரி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக் சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உணவகங்கள், கொள்ளபட்டரை, தாது பொருள்களை பிரித்து எடுக்கும் பெரிய தொழிற்சாலைகள் என பட்டியல் நீளும். பார்க்க பக்கம் 1 ~ 2 http://www. currentsciencejournal.info/ issuespdf/Saraswathi% 20Prosophis.pdf.


உணவாக


அடுத்து இதன் நெத்து (காய்), மற்றும் அதில் இருந்து பெறப்படும் விதைகள் விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கு ம் உதவுகின்றன. ஆடு மாடுகளுக்கு இதையே உணவாக கொடுக்கிறார்கள். இதில் ப்ரோடீன் சத்து நிறைவாக இருப்பதாகவும் இதை உணவாக உண்பதால் கால்நடைகள் நலமாக வளர்வதாக சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 11 ~ 14 & 28. http://www.issg.org/ database/species/reference_ files/progla/Mwangi&Swallow_ 2005.pdf


இதனை மரமாக எப்படி திறன்மிக்க முறையில் வீட்டு உபகரணங்கள், கரிமுட்டம் இவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்க பக்கம் 77 ~ 81 http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf


ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் இதன் விதையை மாவாக்கி அதை மனிதர்களும் உணவுப் பொருள்களாக பயன்படுத்துவதுதான். அதுவும் இது மிகவும் சத்து நிறைந்த ஒன்றாக அதாவது இதில் ப்ரோடீன் 10%, fiber 14% கலந்து இருப்பதுதான். இதை கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டிக்கும், கோதுமை மாவினால் செய்த ரொட்டிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதோடு பிரேசில், பெரு போன்ற நாடுகளில் இந்த விதைகளை அரைத்து காபியாக குடிக்கிறார்கள். பார்க்க பக்கம் 84 ~ 86 (தொடர்ந்து வரும் பக்கங்களில் எப்படி மருந்தாக பயனளிக்கிறது என்பதயும் பார்க்கலாம்) http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf


4. உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல்


இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது. அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்பட செய்கிறது.


உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து உள்ளார்கள்,


கர்நாடக மாநிலம் சித்திரதுர்க்கா என்னும் மாவட்டத்தில் அதிகம் உப்புத்தன்மை கொண்ட சாதரணமாக மரங்கள் வளர முடியாத நிலம் சோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதில் இந்த மரத்தை நட்டுவளர்த்து அதற்கு பின் அந்த மண்ணில் ஏற்ப்பட்ட மாற்றத்தை கணக்கிட்டு இதனை நிரூபித்து உள்ளார்கள்.


இந்த ஆய்வில் முற்றிலும் உப்புத்தன்மை கொண்ட நிலமாக இருந்த இடத்தில் கருவேலம் மரத்தை சில வருடங்கள் வளர்ததின் மூலம் அதில் உள்ள கனிமங்கள் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை தெளிவாக இங்கு காணலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://pub.uasd.edu/ojs/ index.php/kjas/article/ viewFile/354/339


அவர்களின் ஆய்வின்படி இந்த மரம் மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பன் (organic carbon) ஐ மண்ணில் அதிகமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த organic கார்பன் மண்ணின் வளத்தில் முக்கியபங்கை வகிக்கிறது என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://www.esd.ornl.gov/~wmp/ PUBS/post_kwon.pdf


இன்னொரு ஆய்வு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடமான கோயம்புத்தூர் பகுதியில் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில் அதில் இருந்து வெளியாகும் சிறு உலோக துகள்களால் மண்ணின் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும்.


கொஞ்சம் கொஞ்சமாக சேரும் இந்த துகள்கள் நாளடைவில் மண்ணின் மேற்பரப்பில் ஒரு தடுப்பு போல அமைந்து மற்ற தாவர இனங்கள் வளர முடியாதபடி செய்துவிடும். இந்த ஆய்வின் படி அந்த பகுதியில் இருந்த தாமிரம் மற்றும் காட்மியம் போன்ற உலோகதுகள்களால் பாதிப்படைந்த நிலத்தில் இம்மரங்களை வளர்த்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதிகமாக உலோகதுகல்களால் பாதிப்படைந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையில் இருந்து மாறி வருவது கண்டறியப்பட்டது.


இதில் காட்மியம் எனும் உலோகம் மிக அபாயம் நிறைந்த ஒன்று என்பதால் இந்த நிலங்ககளில் வளரும் மரத்தின் எந்த ஒரு பொருளையும் மக்கள் தங்கள் கால்நடை பயன்பாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்படவேண்டும் என அறிவுருத்தபடுகிறது. மண்ணில் இருக்கும் ஆபத்தான உலோகங்களை மரமே உறிஞ்சி எடுத்துக் கொள்வதாலேயே இப்படி சொல்லப்படுகிறது (இந்த காட்மியம் உலோகம் ஒரு வகைp புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்று அறிக). பார்க்க http://www.ncbi.nlm.nih.gov/ pubmed/16054919

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்? Large91335
5. கால்நடைகளுக்கு மருந்து


இதை உண்டால் கால்நடைகள் இறந்துவிடும் அல்லது மலடாக மாறிவிடும் என்ற ஜல்லியடிப்புகள் விழிப்புணர்வு என்ற போர்வையில் பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை கிழே உள்ள விசயங்களை படிப்பதின் மூலம் உணரலாம்.

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது எனபது உண்மை. இதன் நெத்து (காய்) சத்து பொருள்கள் நிறைந்த ஒரு உணவாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது. வறட்சி காலங்ககளில் ஏற்க்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த நெத்துக்களை தங்களின் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர், வறட்சியான நிலங்களில் வசிப்பவர்கள். பார்க்க பக்கம் 82 http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/ ManagingProsopisManual.pdf


இந்த மரத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகிறது என்று அபத்தமாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி பொத்தம் பொதுவாக சொல்ல முடிந்ததோ தெரியவில்லை. காரணம் இந்த விதைகளே ஆடுகளின் மலட்டுத்தன்மையை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எப்படி உண்மையை நேர்மாற்றமாக பரப்பி வருகிறார்கள் பார்த்தீர்களா?


அதாவது ஒருகிராமத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆட்டுமந்தைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ஒரு பிரிவில் இந்த நெத்தை அல்லது இதன் விதைகளை பார்லி உடன் சேர்த்து உணவாகக் கொடுக்கபட்டது. மற்ற பிரிவில் இந்த உணவு வழங்கப்படவில்லை.இந்த விதைகளை சினை காலங்களில் ஆட்டுக்கு கொடுப்பதின் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் திறன் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்க http://www.dfid.gov. uk/r4d/PDF/Outputs/R6953e.pdf


6. பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி


விவசாயம் ஏதும் செய்ய முடியாத, வறட்சி மிகுந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இந்த மரங்களினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனை ஏழைகளுக்கான மரம் என்றே சொல்கிறார்கள். ஆனாலும் முதலில் சொன்னபடி இது தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் வளருவதால் விவசாயிகள் பாதிப்படைந்து அரசாங்கத்திடம் இதன் முற்றிலும் அளிக்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு நிர்பந்திக்கிரார்கள்.


இவர்கள் சொல்படியே நமது மாநிலத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் இதனை எரிபொருளாக,தொழிலாக பயன்படுத்துவோரின் நிலை என்னவாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல செழிப்பான பகுதிகளில் இருக்கும் மற்ற எல்லா விவசாயிகளும் இதனை தனது நிலத்தில் வளரவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது அல்லவா?


அதற்கு விளை நிலங்களை எந்த காரணம் கொண்டும் தரிசாக வைத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து சில வருடங்ககள் வரை கண்டுகொள்ளாத நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த மரங்கள் வளர வாய்ப்பு இருக்கிறது. எனவே முடியாத பட்சத்தில் வருடத்தில் ஒருமுறையாவது தனது நிலத்தில் இருக்கும் தேவையில்லாத செடிகளை அகற்றும் பணியில் செயல்பட வேண்டும். அது ஆட்களை வைத்து அகற்றுவதாக அல்லது உழவு அடிப்பதான முறையில் இருக்கலாம். இதுதான் அவர்களுக்குண்டான விழிப்புணர்வைக் கொடுக்கும் விசயமாக இருக்கழ்மே தவிர மற்றவர்களுக்கு வேறு விதத்தில் பயனளிக்கும் ஒன்றை மொத்தமாக அழிப்பது என்பதை எதில் சேர்ப்பது ?


இந்த மரத்தைப் பயன்படுத்துவோரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் சில விசயங்களை இந்த இணைப்பில் காணலாம் பார்க்க http://www.gardenorganic.org. uk/pdfs/international_ programme/Prosopis- PolicyBrief-2.pdf


7. மின்சார தயாரிப்பில் இதன் பங்கு


மின்சாரம் தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்கள், மின்சாரத்தின் அவசியம் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதைய நிலையில் நான் எதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறேன். அனைத்தையும் அனுபவப் பாடமாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.


இருக்கும் மின்தட்டுப்பாட்டை அணுமின்நிளையம் வைத்து போக்க முயன்றால்பாதுகாப்பு,சுற்றுப்புற சூழ்நிலை நலன் கருதி முடக்கி வைத்தாயிற்று. மற்ற முறையில் எடுக்கப்படும் மின்சார முறையில் ஏற்ப்படும் இழப்புகளும் அதிகம். அனல்மின்சாரம் எடுக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பிற கழிவுகளை எல்லோரும் அறிந்ததே.


இந்த மாதிரியான நிலையில் ஒரு நல்ல தீர்வை முடிவாக எடுப்பது உடனடி தேவை. அந்த தீர்வும் உடனடியாக கிடைக்கும் தருவாயில் இருப்பதாக இல்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அதிகச்செலவில் மாற்று மின்சார முறைகளை புதியாதாக ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்துவது என்பது அதிக காலமும்,பண விரயத்தையும் கொண்ட செயல். அதிலும் முழு பயன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.


இந்த நிலையில் நமது நாட்டில் கிடைக்கும் அதிகமான உதிரிப்பொருள்களை ஆதாயமாக வைத்து சில திட்டங்ககளை செயல்படுத்தினால் நல்ல பலனோடு அதை கொடுப்பவர்களின் வழக்கையும் உயர வாய்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் Biomass Power Generation என்ற முறை சிறப்பான ஒன்று.


இந்த முறையில் இயற்கையாக கிடைக்கும் கனிம அல்லது மற்ற பொருள்களை வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. நாம் கொட்டும் குப்பைகள் கூட ஒருவிதத்தில் இதுக்கு உதவும் என்கிறார்கள். குப்பையை பயன்படுத்துவதின் மூலம் அதை வேறொரு முறையில் அழிக்கும் போது இருக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதோடு பயனாக மின்சாரம் கிடைக்கிறது.


தமிழ் நாட்டில் இந்தமாதிரியான சிறு மின்நிலையங்கள் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால் அதற்கு எரிபொருளாக கருவேல் மரத்தின் விறகுகள் பயனபடுத்தப்படுகின்றன. இந்த மரவிறகுகள் அதிக எரிசக்தி கொண்டவையாக இருப்பதால் நல்ல பலனும் கிடைக்கிறது. மற்ற வழிமுறைகளைவிட குறைந்த அளவே கார்பன் டை ஆக்சடை வெளியிடுகிறது. (பக்கம் 23, 24). http://www.sgsqualitynetwork. com/tradeassurance/ccp/ projects/395/BMC-PDD-Final% 5B1%5D.pdf


இதனால் இன்றைய அத்தியாவசியத்த் தேவையான மின்சாரமும் கிடைப்பதோடு பிந்தங்கிய மாவட்டங்களில் வாழும் இந்த மரத்தை சார்ந்து தொழில்செய்வோரின் வாழ்வாதாரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.


இந்த Biomass Power Generation எவ்வாறு இயங்குகிறது அதற்கு உண்டான வழிமுறைகள் என்னென்ன போன்ற விசயங்களை தெளிவாக இந்த இணைப்பில் படிக்கலாம். கொடுமை என்னவென்றால் இது திருநெல்வேலி பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் இந்த மாதிரியான விசயங்ககளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல் ஜல்லியடித்து இருப்பவர்களை என்ன சொல்வது....? பார்க்க
http://www.sgsqualitynetwork. com/tradeassurance/ccp/ projects/395/BMC-PDD-Final% 5B1%5D.pdf
http://gasifiers. bioenergylists.org/gasdoc/abe/ IndiaBioSummary050721Web.pdf

இது எவ்வாறு சாத்தியம் என்பதில் சந்தேகம் இருந்தால் அறிவியல்பூர்வமான செயல்முறை விளக்கம் இங்கே காணலாம் பார்க்க,http://en.wikipedia.org/wiki/ Gasification


ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கவே நினைத்தோம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் கட்டுரையின் அதிக நீளம் கருத்தில் கொண்டு பல இடங்களில் "பார்க்க பக்கம்" என்று போடவேண்டியாதாகிவிட்டது. எப்படியோ இதன் மூலம் கருவேலம் ஒரு நச்சுப்பொருள் இல்லை என்பதோடு அதனால் எப்படியெல்லாம் பயனடைகிறோம் என்பதை விளக்கமாக தெரிந்து இருப்பிர்கள். முக்கியமாக விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல் அபத்தங்களை எழுதி பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்றாவது புரிந்து இருக்கும்.
நன்றி:டெரர் கும்மி


நன்றி : Engr.Sulthan





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum