புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jun 25, 2012 2:02 pm

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!  25kapildevworldcup
பெங்களூர்: இந்தியாவுக்கு முதல் முறையாக கிரிக்கெட்டில் பெருமை சேர்ந்த தினம் இது. இதே நாளில், 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக 'ஹரியானா சிங்கம்' கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய 'மகா சிங்கம்' மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து உலகக் கோப்பையை வென்று வந்த தினம்.
யாருமே எதிர்பார்த்திராத ஒரு வெற்றி அது... ஆனால் கபில்தேவும், அவருடைய சில சகாக்களும் அத்தனை பேரையும் ஏறி மிதித்து வந்து கோப்பையைக் கைப்பற்றிய போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை... இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் அமோகமான வெற்றி அது.
லார்ட்ஸ் மைதானமே அன்று விழாக்கோலம் பூண்டது. ஒரு பக்கம் இந்தியா சாம்பியனா என்ற அதிர்ச்சி அலைகள், மறுபக்கமோ, நம்ம இந்தியாதான் சாம்பியன் என்று மைதானத்திற்குள் வெள்ளமென பாய்ந்து வந்த இந்திய ரசிகர்களின் உற்சாகப் புயல். லார்ட்ஸ் மைதானமே அதை நினைத்து இன்று கூட ஆச்சரியப்படும்.
டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம், அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சுண்டெலியாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ அசைக்க முடியாத மகா சிங்கமாக வீற்றிருந்தது. ஆனால் கபில்தேவ் தனது அபாரமான புத்திசாதுரியத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை சாய்த்து அனைவரையும் அதிர வைத்தனர் கபில்தேவும், அவருடைய சகாக்களும்.
அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால், 3வது முறையும் அதுவே சாம்பியனாகும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர். 3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியின் முடிவைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருந்தது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தனது அட்டகாசமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய அந்த தருணம் ஒட்டுமொத்த இந்தியாவும், குதூகலித்தது.
இறுதிப் போட்டியின் சில துளிகள்...
இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம்8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும். நீளமான போட்டிதான்.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தீப்பொறி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் என மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை நசுக்கி பிதுக்கி விட்டனர்.
ஸ்ரீகாந்த் சேர்த்த 38
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.
பலே பலே சந்து
ஆனால் நடந்தது வேறு..இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்து ரூபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சனி வந்து சேர்ந்தது. அபாயகரமான ஓபனரான கார்டன் கிரீனிட்ஜை சந்து அவுட்டாக்கிய விதம் இன்று நினைத்தும் வியப்பைத் தரும்.
ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் கார்டன். அதன் பிறகுதான் இந்தியாவுக்கே நம்பிக்கை வந்தது. அதேபோல வி்வ் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி நகர்ந்து கபில் தேவ் கேட்ச் செய்த விதம் அத்தனை பேரையும் அசரடி்ததது.
படு வேகமாக ஆடிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் இப்படி அவுட்டாகிப் போனதால் இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.
மொஹீந்தரின் 'மோகினியாட்டம்'
அதன் பிறகு வந்து சேர்ந்தது மொஹீந்தர் அமர்நாத்தின் 'மோகினியாட்டம்'. அபாரமாக பந்து வீசிய அவர், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களை நிலை குலைய வைத்தார். 3 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தியதால் இந்தியாவின் கை ஓங்கியது, 'கப்'பும் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இறுதியில் ஆட்ட நாயகன் அவரே. வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் மதன்லாலும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைத் தூக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி சரணடைந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
இப்படி கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தினம் அது. அதன் பிறகு இன்னொரு கோப்பையைப் பெற இந்தியா 28 வருடங்கள் காக்க வேண்டியதாகப் போயிற்று.
நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் - கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி கொஞ்சமாச்சும் நினைத்துப் பார்க்க வேண்டிய நன்னாள்...!

http://tamil.thatscricket.com/news/2012/06/25/june-25-when-india-won-the-world-cup-001125.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 25, 2012 4:55 pm

வாழ்த்துக்கள் கபில் தேவ் & கோ



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 25, 2012 5:55 pm

சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 26, 2012 11:04 am

வாழ்த்துக்கள் கபில்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக