Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
5 posters
Page 1 of 1
சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 52423941148949886930613](https://2img.net/r/ihimizer/img441/6193/52423941148949886930613.jpg)
நினைவில் நிற்கும் பெரும் சமூகப் பணி ஆற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறுகச் சிறுக குருவி சேர்க்கிற மாதிரி சேமித்து வைப்பது எதற்காக? தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தானே?ஆனால் சேர்த்து வைத்த பணம் எல்லாம், ஏதோ ஒரு நோய் வந்து அதற்கு மருத்துவம் பார்ப்பதற்காகச் செலவழிந்து போகிறது என்றால்?... அப்படியானால் இவ்வளவு நாட்கள் பட்ட துன்பத்துக்குப் பொருளே இல்லையா?
இப்போதுள்ள மருத்துவச் செலவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தால், இந்தக் கேள்வி ஏழை மக்களுக்கு மட்டுமல்ல,நடுத்தர வர்க்கத்தினருக்கும் எழுவதைத் தவிர்க்கவே முடியாது.
அதிலும் சிறுநீரகத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு வாரத்துக்கு இருமுறையோ, மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால்...
பொதுவாக ஒருமுறை டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 2,500 ரூபாய் ஆகும். வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் ஐந்தாயிரம் ஆகும். மாதத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஏழைகளால் இப்படிச் செலவு செய்ய முடியுமா? இல்லை மாதம்20 ஆயிரம் சம்பளம் வாங்குபவரால் கூட முடியுமா?
அப்படியானால் என்ன செய்வது? நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க வேண்டியதுதானா? என்று கலங்குபவர்களுக்கு ஆறுதல் கரம் நீட்டி அரவணைக்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
ஒருமுறை டயாலிஸிஸ் செய்வதற்கு வெறும் 500 ரூபாயை மட்டுமே கட்டணமாக வாங்கி,பெரும் சமூகப் பணி ஆற்றி வருகிறது அது.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்தி வரும் "நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனின்' மூல ஊற்று "நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை'. அந்த அறக்கட்டளை உறுப்பினரான லலிதா பாலசந்தர்.
தெற்காசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் சர்க்கரை வியாதி அதிகம். நமது வாழ்க்கைமுறை,உணவுமுறை மாறிவிட்டதே இதற்குக் காரணம். இயந்திரத்தனமான மனித வாழ்க்கையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் எப்போதும் டென்ஷன்... டென்ஷன். இதுவே சர்க்கரை வியாதி அதிகம் வரக் காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி வந்தால், உடலின் பிற உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதயம், சிறுநீரகம் போன்றவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விட்டால் மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு அதிகச் செலவு ஆகும். மேலும் பொருத்தமான மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பதும் சிரமம். இந்தச் சூழ்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வாழ வேண்டுமானால், வாரத்துக்கு இருமுறையோ அல்லது மூன்று முறையோ டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நமது நாடு ஏழைகள் அதிகம் உள்ள நாடு. டயாலிஸிஸ் செய்து கொள்வதற்கோ அதிகம் செலவாகும். அப்படியானால் ஏழைகள் என்ன செய்வார்கள்? மேலை நாடுகளில் அங்குள்ள அரசுகளே இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தி, ஏழைகளும் குறைந்த செலவில் டயாலிஸிஸ் செய்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. ஆனால் நம்நாட்டில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார் நந்தலாலா சேவா சமிதியின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர். சரஸ்வதி. அவருடைய முயற்சியால் உருவானதுதான் ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் டயாலிஸிஸ் செய்யும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்.
2005 ஆம் ஆண்டு வெறும் ஆறு டயாலிஸிஸ் செய்யும் இயந்திரங்களுடன் இந்த சென்டர் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இல் மேலும் மூன்று இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இப்போது ஆண்டுக்கு சுமார் 5,400 பேருக்கு டயாலிஸிஸ் செய்யும் அளவுக்கு இது திறன் கொண்டதாக இருக்கிறது.
டயாலிஸிஸ் செய்து கொள்ளும்போது தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கே கட்டணம் எதுவும் வாங்கப்படுவதில்லை.
சிலநேரங்களில் இயந்திரப் பழுது காரணமாக ஒருவேளை டயாலிஸிஸ் பாதியில் நின்றால் அதற்குக் கட்டணம் வாங்குவதில்லை. முழுமையாக டயாலிஸிஸ் செய்தால் மட்டுமே இந்தக் குறைந்த கட்டணத்தை வாங்குகிறோம். பிற டயாலிஸிஸ் செய்யும் இடங்களில் இந்த நடைமுறை இல்லை. ஒரு மணி நேரம் டயாலிஸிஸ் செய்தாலும் முழுக்கட்டணத்தையும் வசூலித்துவிடுவார்கள்.
இந்த டயாலிஸிஸ் சென்டரை நடத்துவதால் மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. எங்களுடைய சேவையைத் தெரிந்து கொண்டு உதவும் நல்ல மனமுடைய பலரின் உதவியாலும் ஒத்துழைப்பாலும்தான் இந்த இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து செயல்பட முடிகிறது. மேலும் ஒவ்வோராண்டும் நன்கொடை திரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். நந்தலாலா மெடிகல் பவுண்டேஷனில் பல தொண்டுள்ளம் உள்ள மருத்துவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். இந்த டயாலிஸிஸ் சென்டரை டாக்டர் ஆர்.வெங்கட்ராமன் கவனித்துக் கொள்கிறார்.
நந்தலாலா மெடிகல் பவுண்டேஷன் இந்த டயாலிஸிஸ் சென்டரை மட்டுமல்ல, பல மருத்துவப் பணிகளையும் செய்து வருகிறது. திண்டிவனம் அருகில் மாம்பட்டு எனும் கிராமத்தில் உள்ள 600 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச மருத்துவமுகாம் நடத்தி வருகிறது.
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், எலும்புத் தேய்வு நோய் தொடர்பாகவும் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறது'' என்ற அவரிடம், இங்கு டயாலிஸிஸ் செய்து கொள்ள வருகிறவர்களை ஏழைகள் என்று எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.
அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. டாக்டர்கள் பலரும் சொல்லித்தான் டயாலிஸிஸக்காக இங்கே வருகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளைப் பற்றி விசாரிக்காமல் இங்கே அனுப்பமாட்டார்கள். மேலும் ஒருவரிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாலே அவர்களைப் பற்றித் தெரிந்துவிடும்''என்கிறார் சிரித்துக் கொண்டே லலிதா பாலசந்தர்.
நன்றி - தினமணி — with Haja Jahir Hussain and Suresh
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
இந்த செண்டருக்கும், இதனை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.
பகிர்வுக்கு நன்றி செந்தில்.
பகிர்வுக்கு நன்றி செந்தில்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
இந்த தொண்டு நிருவனத்துக்கு என் பாராட்டுகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
இப்படியொரு தொண்டு நிறுவனம் இருப்பதை ஈகரை மூலமாக வெளி உலகுக்கு உபயோகமான தகவல் தந்தமைக்கு நன்றி செந்தில்.
இத் தொண்டு நிறுவனத்துக்கும் எனது பாராட்டுக்கள்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சமூகப் பணி ஆற்றி செயல்பட்டுவரும் சுரக்ஷா டயாலிஸிஸ் சென்டர்...
உலகில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
» சொந்தப் பிரச்னையை, சமூகப் பிரச்னையாக மாற்றத் தெரிந்தவர் அரசியல்வாதி..!
» சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
» கால் சென்டர் காதலி வரலொட்டி ரெங்கசாமி
» சமூகப் பணியாற்றுவோம்: அரசியலுக்கு அழைத்த இளைஞர்களுக்கு வீடியோ மூலம் சகாயம் விளக்கம்
» சொந்தப் பிரச்னையை, சமூகப் பிரச்னையாக மாற்றத் தெரிந்தவர் அரசியல்வாதி..!
» சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
» கால் சென்டர் காதலி வரலொட்டி ரெங்கசாமி
» சமூகப் பணியாற்றுவோம்: அரசியலுக்கு அழைத்த இளைஞர்களுக்கு வீடியோ மூலம் சகாயம் விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|