Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 21:14
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
+4
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
யினியவன்
பிஜிராமன்
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
உறவுகளுக்கு வணணக்கம்,
எனக்கு புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும். இரண்டிற்கும் தனி தனி கட்டுரைகள் இருந்தாலும் சரி அல்லது ஒரே கட்டுரையில் இரண்டும் இடம் பெற்றிருந்தாலும் சரி. விளைவுகளுக்கான புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நலம்.
உதவுங்கள் உறவுகளே
எனக்கு புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும். இரண்டிற்கும் தனி தனி கட்டுரைகள் இருந்தாலும் சரி அல்லது ஒரே கட்டுரையில் இரண்டும் இடம் பெற்றிருந்தாலும் சரி. விளைவுகளுக்கான புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நலம்.
உதவுங்கள் உறவுகளே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
நானே தேடி எடுத்து விட்டேன் உறவுகளே, யாராவது முயற்சித்து இருந்தால் நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
ஒரு புகைய போட்டுட்டு வந்து உங்களுக்கு உதவலாம்ன்னு
நெனச்சேன் - அதுக்குள்ள நீங்களே கண்டு புடிச்சிட்டீங்க...
நெனச்சேன் - அதுக்குள்ள நீங்களே கண்டு புடிச்சிட்டீங்க...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
யினியவன் wrote:ஒரு புகைய போட்டுட்டு வந்து உங்களுக்கு உதவலாம்ன்னு
நெனச்சேன் - அதுக்குள்ள நீங்களே கண்டு புடிச்சிட்டீங்க...
ஹா ஹா நீங்க புகையைப் போடுறதுக்குள்ள......நான் ஒரு ரவுண்டு எ போயிட்டு வந்துட்டேன் அண்ணா......இருந்தாலும் நன்றிகள் அண்ணா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
படம் பார்க்க விருப்பமுள்ளவர்கள் , spoiler என்பதனை கிளிக் செய்து பார்க்கவும் - ராஜா
- Spoiler:
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
எடுத்ததை பகிா்ந்து கொண்டால் மற்றவா்களுக்கும் உபயோகமாக இருக்குமே பிஜி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
சார்லஸ் mc wrote:எடுத்ததை பகிா்ந்து கொண்டால் மற்றவா்களுக்கும் உபயோகமாக இருக்குமே பிஜி
அப்படியே ஆகட்டும் சார்.....பகிர்கிறேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
புகைபிடித்தலும் அதன் விளைவுகளும்
• இந்தியாவில் தினமும் சராசரியாக புகை பழக்கத்தினால் சுமார் 2 ,200 பேர் உயிர் இழக்கின்றனர். மேலும் 15 - 49 வயது குழுமத்தில் உள்ள 57 சதவீத ஆண்களும், 10 சதவீத பெண்களும் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக 2005 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
• புகைக்கும்போது வெளிவரும் புகையில் பலவகையான நச்சுப் பொருள்கள் இருந்தாலும், இதயத்துககு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று முக்கியப் பொருள்களை உள்ளன அவை, நார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவையாகும்.
நிக்கோடினும் அதன் பாதிப்புகளும்
• சிகரெட்டை புகைக்கும்போது சுமார் இரண்டு மில்லி கிராம் அளவுள்ள நிக்கோடின் நம் உடலுக்குள் செல்கிறது. புகையிலையில் அடங்கியுள்ள நிக்கோடின் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்துவதோடு அல்லாமல் இதயத் துடிப்பின் அளவையும் அதிகமாக்குகிறது.
• உடலின் புறப்பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களையும் நிக்கோடின் குறுக்கிவிடுகிறது. இதனால் அங்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து விடுகிறது.
கார்பன் மோனாக்சைடும் அதன் பாதிப்புகளும்
• சிகரெட் புகையில் சாதாரணமாக சுமார் 2 முதல் 4 சதவீத அளவில் கார்பன் மோனாக்ஸைடு (Car Monoxide) என்ற வாயு உள்ளது. கார்பன மோனாக்ஸைடு வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுடன் (Haemoglobin) இணைந்து கார்பாக்ஸி ஹீமோ குளோபின் (Carboxy Hameoglobin) என்று மாறுகிறது.
• சாதாரணமாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோ குளோபின் அளவு 6 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிடும்.
• ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும்போது இதயத் தசைகள் இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தின் அளவானது அதிகரிப்பதால் இதயத் தமனி 20 மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
பொதுப்படையான பாதிப்புகள்
• வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
• இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
• ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.
• புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.
• புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.
• புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.
• புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகள், வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.
• புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது.
• புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
• புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.
• பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும். தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும்.
• உலகத்தில் பத்து வினாடிக்கு ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார். நுரையீரல் புற்று நோய் வந்து இறப்பவர்களில் 82 விழுக்காடு மக்கள் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.
• இந்தியாவில் தினமும் சராசரியாக புகை பழக்கத்தினால் சுமார் 2 ,200 பேர் உயிர் இழக்கின்றனர். மேலும் 15 - 49 வயது குழுமத்தில் உள்ள 57 சதவீத ஆண்களும், 10 சதவீத பெண்களும் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக 2005 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
• புகைக்கும்போது வெளிவரும் புகையில் பலவகையான நச்சுப் பொருள்கள் இருந்தாலும், இதயத்துககு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று முக்கியப் பொருள்களை உள்ளன அவை, நார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவையாகும்.
நிக்கோடினும் அதன் பாதிப்புகளும்
• சிகரெட்டை புகைக்கும்போது சுமார் இரண்டு மில்லி கிராம் அளவுள்ள நிக்கோடின் நம் உடலுக்குள் செல்கிறது. புகையிலையில் அடங்கியுள்ள நிக்கோடின் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்துவதோடு அல்லாமல் இதயத் துடிப்பின் அளவையும் அதிகமாக்குகிறது.
• உடலின் புறப்பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களையும் நிக்கோடின் குறுக்கிவிடுகிறது. இதனால் அங்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து விடுகிறது.
கார்பன் மோனாக்சைடும் அதன் பாதிப்புகளும்
• சிகரெட் புகையில் சாதாரணமாக சுமார் 2 முதல் 4 சதவீத அளவில் கார்பன் மோனாக்ஸைடு (Car Monoxide) என்ற வாயு உள்ளது. கார்பன மோனாக்ஸைடு வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுடன் (Haemoglobin) இணைந்து கார்பாக்ஸி ஹீமோ குளோபின் (Carboxy Hameoglobin) என்று மாறுகிறது.
• சாதாரணமாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோ குளோபின் அளவு 6 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிடும்.
• ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும்போது இதயத் தசைகள் இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தின் அளவானது அதிகரிப்பதால் இதயத் தமனி 20 மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
பொதுப்படையான பாதிப்புகள்
• வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
• இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
• ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.
• புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.
• புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.
• புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.
• புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகள், வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.
• புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது.
• புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
• புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.
• பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும். தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும்.
• உலகத்தில் பத்து வினாடிக்கு ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார். நுரையீரல் புற்று நோய் வந்து இறப்பவர்களில் 82 விழுக்காடு மக்கள் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.
சிகரட் அட்டையில் உபயோகிக்கப் படும் படங்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்
போதைப்பொருட்களும் அதன் விளைவுகளும்
போதைப்பொருட்கள்
உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருட்களில் முக்கியமான சில ஹெராயின் (Heroin), ஹொகைன் (Cocaine), மீதம்பெட்டாமைன் (Methamphetamine), கிராக் ஹொகைன் (Crack Cocaine), மற்றும் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD) ஆகும். இந்தியாவில் பரவலாக போதைப் பொருட்களாக ஆல்ஹகால் மற்றும் கஞ்சா (cannabis) பயன்படுத்தப்படுகின்றன.
ஹெராயின் மற்றும் ஹொகைன் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற தி லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆக இங்கு மதுவால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி காணலாம்
முதல் இடம் : ஹெராயின் (heroine)
இரண்டாம் இடம்: ஹொஹைன் (cocaine)
உடல் நல பாதிப்பு
• மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகள்
o கல்லீரல் இழைநார் வளர்ச்சி,
o கணைய அழற்சி,
o காக்காய் வலிப்பு (epilepsy),
o பன்மை நரம்புகள் இயக்கத் தடை (polyneuropathy),
o மதுசார் மறதிநோய்,
o இதயநோய்கள்,
o ஊட்டச்சத்துக் குறைபாடுகள்,
o வயிற்றுப் புண்,
o பால்வினை செயல் பிறழ்ச்சி
மூன்றாம் இடம் : மீதம்பெட்டமைன் (Methamphetamine)
நான்காம் இடம்: கிராக் கொஹைன் (crack cocaine)
• அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வுகள் மதுவை அருந்துவதால் ஏற்படுவதாகும். மேலும் அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு குடிப்பழக்கம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் காரணியாக இருக்கிறது
• உடல் நலத்தைப் பாதிக்கும் இதர காரணிகளில்
o இதயகுழலிய வியாதி (cardeovascular disease),
o அகத்துறிஞ்சாமை (malabsorbtion),
o மது சார்ந்த கல்லீரல் நோய், மற்றும் புற்று நோய்
ஐந்தாம் இடம்: லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD)
ஆறாம் இடம்: எக்ஸ்டசி (Ecstasy)
• தொடர்ந்து மது அருந்துவதால் மைய நரம்பு மண்டலமும் புற நரம்பு மண்டலமும் கூடச் சேதமடையலாம்.பொதுவாக குடிகாரர்கள் இறப்பதற்கு காரணம் இதயகுழலிய கோளாறுகள்தான் என அறியப்பட்டுள்ளது
• அதிகரித்த குடிப்பழக்கத்தால் ஆண்களை விட, பெண்களிலேயே அதிகளவில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், குடியினால் ஏற்படும் இறப்பும் பெண்களிலேயே அதிகம்இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
• உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு தற்கொலை மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள். இளம் வயதினரிடையே இந்த அளவு மேலும் மிகையாக காண்கின்றது, மது அல்லது போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதலால் 70 விழுக்காடு வரை இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்
ஏழாம் இடம்: ஓபியம் (opium)
எட்டாம் இடம்: மரிஜுவானா (Marijuana) (cannabis)
உடலில் ஆல்ஹகால் அளவும் மாற்றங்களும்
• இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
• இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது;
1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக் கப்படும்.
• இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்;
1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.
• பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
• கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.
• மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
போதைப்பொருட்கள்
உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருட்களில் முக்கியமான சில ஹெராயின் (Heroin), ஹொகைன் (Cocaine), மீதம்பெட்டாமைன் (Methamphetamine), கிராக் ஹொகைன் (Crack Cocaine), மற்றும் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD) ஆகும். இந்தியாவில் பரவலாக போதைப் பொருட்களாக ஆல்ஹகால் மற்றும் கஞ்சா (cannabis) பயன்படுத்தப்படுகின்றன.
ஹெராயின் மற்றும் ஹொகைன் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற தி லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆக இங்கு மதுவால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி காணலாம்
முதல் இடம் : ஹெராயின் (heroine)
இரண்டாம் இடம்: ஹொஹைன் (cocaine)
உடல் நல பாதிப்பு
• மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகள்
o கல்லீரல் இழைநார் வளர்ச்சி,
o கணைய அழற்சி,
o காக்காய் வலிப்பு (epilepsy),
o பன்மை நரம்புகள் இயக்கத் தடை (polyneuropathy),
o மதுசார் மறதிநோய்,
o இதயநோய்கள்,
o ஊட்டச்சத்துக் குறைபாடுகள்,
o வயிற்றுப் புண்,
o பால்வினை செயல் பிறழ்ச்சி
மூன்றாம் இடம் : மீதம்பெட்டமைன் (Methamphetamine)
நான்காம் இடம்: கிராக் கொஹைன் (crack cocaine)
• அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வுகள் மதுவை அருந்துவதால் ஏற்படுவதாகும். மேலும் அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு குடிப்பழக்கம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் காரணியாக இருக்கிறது
• உடல் நலத்தைப் பாதிக்கும் இதர காரணிகளில்
o இதயகுழலிய வியாதி (cardeovascular disease),
o அகத்துறிஞ்சாமை (malabsorbtion),
o மது சார்ந்த கல்லீரல் நோய், மற்றும் புற்று நோய்
ஐந்தாம் இடம்: லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD)
ஆறாம் இடம்: எக்ஸ்டசி (Ecstasy)
• தொடர்ந்து மது அருந்துவதால் மைய நரம்பு மண்டலமும் புற நரம்பு மண்டலமும் கூடச் சேதமடையலாம்.பொதுவாக குடிகாரர்கள் இறப்பதற்கு காரணம் இதயகுழலிய கோளாறுகள்தான் என அறியப்பட்டுள்ளது
• அதிகரித்த குடிப்பழக்கத்தால் ஆண்களை விட, பெண்களிலேயே அதிகளவில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், குடியினால் ஏற்படும் இறப்பும் பெண்களிலேயே அதிகம்இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
• உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு தற்கொலை மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள். இளம் வயதினரிடையே இந்த அளவு மேலும் மிகையாக காண்கின்றது, மது அல்லது போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதலால் 70 விழுக்காடு வரை இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்
ஏழாம் இடம்: ஓபியம் (opium)
எட்டாம் இடம்: மரிஜுவானா (Marijuana) (cannabis)
உடலில் ஆல்ஹகால் அளவும் மாற்றங்களும்
• இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
• இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது;
1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக் கப்படும்.
• இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்;
1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.
• பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
• கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.
• மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
ஒன்பதாம் இடம்: சிலோசய்பின் மஸ்ரூம்ஸ் (Psilocybin Mushrooms)
பத்தாம் இடம்: பென்சைக்ளைடின் (Phencyclidin PCP)
இந்த பத்து போதைப்பொருட்களும், அது மனிதன் உடலில் உண்டாக்கும் விளைவுகளின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மலேசிய பட்ஜட்: பொருட்கள் மற்றும் சேவை வரி 6 சதவிகிதம்! 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வரும்!
» கண்ணூர் சிறையில் 4 லாரி வெடிபொருட்கள், போதைப் பொருட்கள், செல்போன் பறிமுதல்
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
» புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
» கண்ணூர் சிறையில் 4 லாரி வெடிபொருட்கள், போதைப் பொருட்கள், செல்போன் பறிமுதல்
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
» புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|