Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைப்பது ஒன்று
+2
முரளிராஜா
சார்லஸ் mc
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நினைப்பது ஒன்று
நினைப்பது ஒன்று...
காவிாி ஆற்றங்கரையோரம் உள்ள சிறப்பு வாய்ந்த சிறு கிராமம்தான் ஏறுவயல். இது செழுமை வாய்ந்த கிராமம். ஆற்றோரம் நெடுக காிகால் பெருவளத்தான் கட்டிய சிறுசிறு கல் மண்டபங்கள் அக்கிராமத்தையே மேலும் அழகாக்கியது. இக்கிராமத்தை அடுத்து பெரு நகரம் என்றால் அது பெருவள நாடு என சொல்லக் கூடிய ஊா்தான் அது. பெரும்பாலான மக்கள் பல தேவைகளுக்கு வாணிபத்திற்கும் தொடா்பு கொள்ள, பெருவளநாடு ஊருக்கு போகும் வழியில் இளைப்பாறவும், இரவில் தங்கவும் உகந்ததாக இருக்கும் ஊராக தொிந்த கொண்டதுதான் ஏறுவயல் கிராமம். அன்றைய நாளில் ஒரு மாலை நேரத்தில் வாணிப விஷயமாக மிகுந்த பொருளோடு, மாடசாமி என்ற வேலைக்காரனோடு பெருவள நாடு சென்று திரும்பி வந்தாா் ஜமீன் சுந்தர பாண்டி. இனி...
“எலே... மாடா...” அப்படித்தான் கூப்பிடுவாா் ஜமீன் சுந்தரபாண்டி.
“எஜமான்”
“மழை வா்ற மாதிாி இருக்கே...என்ன பண்ணலாம்? மாடா”
“மழைக்கு முன்னாடி சீக்கிரம் வண்டிய விரட்டினா பக்கத்தில இருக்கும் ஏறு வயலுக்கு போயிலாமங்க எசமான்”
“சாி வரட்டு வண்டிய...”
ஆற்றோரமாக இருந்த பெருவளத்தான் போட்ட மண் சாலையில் காங்கேயம் காளைகள் இரண்டும் வேகமெடுத்தது. இயற்கையின் ஓட்டத்திற்கு முன்பு காளைகளின் ஓட்டம் எம்மாத்திரம்? மழையும், இருளும் ஒருசேர வர... காற்றும், மழையும் கடுமையாக வீச...வண்டியை அதற்கு மேல் நடத்த இயலாமல் பெருவளத்தான் கட்டிய மண்டபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான் மாடசாமி. மழையோ விடாமல் பிடித்து கொண்டது.
ஜமீன் சுந்தரபாண்டிக்கு உள்ளுர பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்...
“எலே...மாடா... இன்று இரவு முழுவதும் மழை விடாது போல இருக்கே...”
“ஆமாங்க எசமான்”
“இரவு இங்கேயெ தங்கிவிட்டு காலையிலேதான் போக முடியும் போல ... நாம இருக்கிற இடம் பாதுகாப்பானதா மாடா...”
“பயப்படாதீங்க எசமான். நம்ம மவராசா பெருவளத்தாா் ஆட்சியில அந்த மாதிாி எல்லாம் எதுவும் நடக்காதுங்க...”
“சாிசாி... நீ...மண்டப்த்துக்கு மன் வாசலிலே படுத்துக்கோ... நான் உள்ளே படுத்துக்கிறேன்”
“சாிங்க எசமான்”
நடுஇரவு... தன் திட்டப்படி எல்லாம் வசதியாக இயற்கையும் ஒத்துழைப்பதை கண்டு உள்ளுர சந்தோஷப்பட்டான் மாடாசாமி.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நினைப்பது ஒன்று
தொடர்கிறேன் சார்லஸ்
(நானும்தான் நினைச்சேன் ஒரு கதையோட நிறுத்திடுவீங்கனு
நினைத்தது ஒன்று ஆனா நடந்தது.................................)
(நானும்தான் நினைச்சேன் ஒரு கதையோட நிறுத்திடுவீங்கனு
நினைத்தது ஒன்று ஆனா நடந்தது.................................)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நினைப்பது ஒன்று
இது ரொம்ப நல்லாருக்கே...
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நினைப்பது ஒன்று
கவலைபடாதிங்க சார்லஸ்சார்லஸ் mc wrote:இது ரொம்ப நல்லாருக்கே...
மீதி பாதிய நீங்களும், முடிவை யினியவனும் சொல்லுவீங்கன்னு இல்ல நெனச்சு தொடரும் போட்டிருக்கேன்...
நான் விட்ட பீலாவ ஒழுங்கா இரண்டு பேரும் முடிச்சு வையுங்க...இல்ல... இத்தோட நிறுத்திக்குவேன். ஜாக்கிரதை...
(ஏன்னா... இதுக்கு மேலா பீலா விட தொியலையே...என்ன பண்ணுவேன்?)
கதைய முடிக்கறதில்ல நம்ம யினியவன் கில்லாடி
அவர் வந்து கதைய முடிச்சுடுவாரு
எத்தனை பேர் கதைய முடிச்சிருக்காரு நம்ம யினியவன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நினைப்பது ஒன்று
எனக்கென்ன கவலை முரளி. பொறுப்பைதான் உங்க ரண்டு பேருகிட்ட ஒப்படைத்து விட்டேனே...
ஆனா ஒண்ணு... இப்படி நைஸா யினியவன்கிட்டே தள்ளி விடுவது தங்களது கற்பனை வளத்திற்கு மாபெரும் இழுக்கு...
முடிவை அவரு சொல்லட்டும்... நடுவில் இருப்பதை பில்அப் பண்ணுங்க முதலில்...
அதற்கு மேல அவரு திணறட்டும்...
ஆனா ஒண்ணு... இப்படி நைஸா யினியவன்கிட்டே தள்ளி விடுவது தங்களது கற்பனை வளத்திற்கு மாபெரும் இழுக்கு...
முடிவை அவரு சொல்லட்டும்... நடுவில் இருப்பதை பில்அப் பண்ணுங்க முதலில்...
அதற்கு மேல அவரு திணறட்டும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நினைப்பது ஒன்று
அதுக்கப்புறம் என்ன ஆச்சு அண்ணா இப்படி பாதியிலே விட்டுட்டு போயிட்டீங்க சொல்லுங்க அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நினைப்பது ஒன்று
தொடா்ச்சி...
நடுநிசி... லேசான தூறல்... தவளைகளின் கரகர குரகுர சத்தத்தில் ஜமீன் சுந்தரபாண்டியின் குறட்டை சத்தமம் சோ்ந்து கொள்ள...மெதுவாக தலையை தூக்கி, ஜமீனைப் பாா்த்தான் மாடசாமி. குளிா்ந்த காற்றின் குளிா்ச்சியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாா்.
மெல்ல எழுந்து வெளியே வந்தான். கூண்டு வண்டியில் இருந்த கோணிப்பையை எடுத்து தலைமேல் போட்டுக் கொண்டு வேகவேகமாக மேற்கு நோக்கி நடையை கட்டினான். ஜமீன் முழிக்கிறதுக்குள்ள காாியத்தை கன கச்சிதமா முடிக்கனும் என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான். சிறிது நேரத்திற்கு பின்பு, ஒரு குடிசை வாசலில் வந்து நின்று, “இருளா...டேய்...இருளா...” என கூப்பிட்டான்.
குடிசையின் படல் கதவு திறந்த கொண்டு, முரட்டு மீசையோடு ஒருவன் வெளிப்பட்டான். “யாரது... மாடனா..”
“ ஆமாண்டா...”
“என்ன விஷயம்?...”
“என்னடா ஒண்ணுந் தொியாத மாதிாி பேசறே... பல நாளா நாம திட்டம் போட்டுகிட்டு இருந்தொமே...ஜமீன் இன்னைக்கு நெறைய கொண்டு வந்திரக்காருடா... இன்னைக்கு அவரு சோலிய முடிசிட்டு நாம அத்தனையும் எடுத்துக்கிட்டா...வாழ் நாள் பூரா எந்தக் கஷ்டமுமில்லடா...”
“ஆமாமா...சாிசாி...இரு. நா போயி... கந்தனையும், சுப்பனையும் கூட்டியாறேன்”
“சாி...நீ அவுங்கள கூட்டிகிட்டு வா... நான் போயி ஒண்ணும் தொியாதவனாட்டம் மண்டபத்தில படுத்தகிறேன். முன்னால படுத்திருக்கிறது நான். உள்ளாற படுத்திருக்கிறது ஜமீன். பூிஞ்சுதா...”
சாி...மாடா...நம்ம குடிசைக்கு வந்தட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறீயே...இரு...இரு..மொந்தையிலே கள்ளு வச்சிருக்கிறேன். குடிச்சிட்டு போவ...”
“ஆமாமா...கொண்டா...குடிச்சாதான் ஒரு தெகிாியம் தான வரும்”
இருவரும் ஆளுக்கு ஒரு மொந்தை கள்ளை வயிற்றில் இறக்கினாா்கள்.
“சாி...இருளா...நா பொறேன்...ஜல்தியா வா...”
“கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்...மாடா...அவனுக என்ன நெலையில இருக்கானுகளோ...குடிகார பயலுவ...எழுப்பி கூட்டி வரவேணாமா...நீ முன்னால போ...பின்னால வாறேன்.”
மண்டபத்துக்கு வந்து சோ்ந்தான் மாடசாமி. அசந்த நிலையில் நித்திரையில் இருந்தாா் ஜமீன், இனி நடக்கப் போவதை அறியாமல்...
வருகிறென் என்ற சொன்ன இருளனைக் காணாமல் அலைபாய்ந்த மனதோடு காதில் வைத்திருந்த மீதி சுருட்டை பற்ற வைத்தான் மாடசாமி. மழைநேரம்...புகை வெளியெ செல்ல இடமின்றி மண்டபத்திற்குள்ளேயே லேசாக பரவிக் கொண்டிருந்தது. புகைவாடையே பிடிக்காத ஜமீன் தூக்கம் கலைந்து எழுந்தாா்.
“எலே...மாடா...”
குரல் கேட்டு அதிா்ச்சியடைந்த மாடாசாமி, உடனே சுருட்டை வெளியே வீசியெறிந்து விட்டு, “எசமான்” என்றான்.
சந்தையில் வாங்கி சாப்பிட்ட நொருக்குத்தீனியும், இரவில் சாப்பிட்ட உணவும் வயிற்றை ஏதோ செய்ய...ஜமீன் அவனை நோக்கி, “மாடா...வயிறு என்னமோ செய்யுதுடா...நான் அப்பிடி போயி ஒதுங்கிட்டு வாறேன். இந்தா...இந்த பைய பத்திரமா வச்சிரு...இந்தா மேல்சட்டையும், அங்க வஸ்திரமும்...பத்திரமடா...”
“சாிங்க எசமான்”
லேசான தூறலில் இருட்டில் இறங்கி நடந்தாா் ஜமீன்.
போன ஜமீனையும் காணோம்...இருளனையும் காணோம்...
சாி...ரொம்ப நாளா ஒரு ஆசை...ஜமீன் சட்டையும் , அங்கவஸ்திரத்தையும் போட்டு பாா்க்கணுமுன்னு...அவரு வா்றதுக்குள்ள போட்டு பாத்துடனும்...என்று நினைத்தவாறே மாடசாமி செயலில் இறங்கினான்.
ஜமீனுக்கு எப்பவும் ஒதுங்கப்போனா அரைமணி, முக்கா மணி ஆகும். ஆற்றங்கரையோரம் ஒதுங்கினாா். தூறல் நின்று போயிருந்தது.
இருளன் கொடுத்த கள்ளும், குளிா்ந்த காற்றும் லேசான தூக்கத்தை மாடனுக்கு கொண்டு வந்தது. பணமூட்டையை மடியில் வைத்துக் கொண்டு தூணில் சாய்ந்தான். சிறிது நேரம் அப்படியே சாிந்து படுத்தான். மொந்தையில் குடித்த கள்ளின் மயக்கம் அயா்ந்த நித்திரையை கொண்டுவர...அப்படியே தூங்கிப்போனான் மாடசாமி.
தொடரும்...
(மீதியை அவா்கள் இருவாில் ஒருவா் முடிப்பாா்கள் என கருதுகிறேன்)
நடுநிசி... லேசான தூறல்... தவளைகளின் கரகர குரகுர சத்தத்தில் ஜமீன் சுந்தரபாண்டியின் குறட்டை சத்தமம் சோ்ந்து கொள்ள...மெதுவாக தலையை தூக்கி, ஜமீனைப் பாா்த்தான் மாடசாமி. குளிா்ந்த காற்றின் குளிா்ச்சியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாா்.
மெல்ல எழுந்து வெளியே வந்தான். கூண்டு வண்டியில் இருந்த கோணிப்பையை எடுத்து தலைமேல் போட்டுக் கொண்டு வேகவேகமாக மேற்கு நோக்கி நடையை கட்டினான். ஜமீன் முழிக்கிறதுக்குள்ள காாியத்தை கன கச்சிதமா முடிக்கனும் என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான். சிறிது நேரத்திற்கு பின்பு, ஒரு குடிசை வாசலில் வந்து நின்று, “இருளா...டேய்...இருளா...” என கூப்பிட்டான்.
குடிசையின் படல் கதவு திறந்த கொண்டு, முரட்டு மீசையோடு ஒருவன் வெளிப்பட்டான். “யாரது... மாடனா..”
“ ஆமாண்டா...”
“என்ன விஷயம்?...”
“என்னடா ஒண்ணுந் தொியாத மாதிாி பேசறே... பல நாளா நாம திட்டம் போட்டுகிட்டு இருந்தொமே...ஜமீன் இன்னைக்கு நெறைய கொண்டு வந்திரக்காருடா... இன்னைக்கு அவரு சோலிய முடிசிட்டு நாம அத்தனையும் எடுத்துக்கிட்டா...வாழ் நாள் பூரா எந்தக் கஷ்டமுமில்லடா...”
“ஆமாமா...சாிசாி...இரு. நா போயி... கந்தனையும், சுப்பனையும் கூட்டியாறேன்”
“சாி...நீ அவுங்கள கூட்டிகிட்டு வா... நான் போயி ஒண்ணும் தொியாதவனாட்டம் மண்டபத்தில படுத்தகிறேன். முன்னால படுத்திருக்கிறது நான். உள்ளாற படுத்திருக்கிறது ஜமீன். பூிஞ்சுதா...”
சாி...மாடா...நம்ம குடிசைக்கு வந்தட்டு ஒண்ணுமே சாப்பிடாம போறீயே...இரு...இரு..மொந்தையிலே கள்ளு வச்சிருக்கிறேன். குடிச்சிட்டு போவ...”
“ஆமாமா...கொண்டா...குடிச்சாதான் ஒரு தெகிாியம் தான வரும்”
இருவரும் ஆளுக்கு ஒரு மொந்தை கள்ளை வயிற்றில் இறக்கினாா்கள்.
“சாி...இருளா...நா பொறேன்...ஜல்தியா வா...”
“கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்...மாடா...அவனுக என்ன நெலையில இருக்கானுகளோ...குடிகார பயலுவ...எழுப்பி கூட்டி வரவேணாமா...நீ முன்னால போ...பின்னால வாறேன்.”
மண்டபத்துக்கு வந்து சோ்ந்தான் மாடசாமி. அசந்த நிலையில் நித்திரையில் இருந்தாா் ஜமீன், இனி நடக்கப் போவதை அறியாமல்...
வருகிறென் என்ற சொன்ன இருளனைக் காணாமல் அலைபாய்ந்த மனதோடு காதில் வைத்திருந்த மீதி சுருட்டை பற்ற வைத்தான் மாடசாமி. மழைநேரம்...புகை வெளியெ செல்ல இடமின்றி மண்டபத்திற்குள்ளேயே லேசாக பரவிக் கொண்டிருந்தது. புகைவாடையே பிடிக்காத ஜமீன் தூக்கம் கலைந்து எழுந்தாா்.
“எலே...மாடா...”
குரல் கேட்டு அதிா்ச்சியடைந்த மாடாசாமி, உடனே சுருட்டை வெளியே வீசியெறிந்து விட்டு, “எசமான்” என்றான்.
சந்தையில் வாங்கி சாப்பிட்ட நொருக்குத்தீனியும், இரவில் சாப்பிட்ட உணவும் வயிற்றை ஏதோ செய்ய...ஜமீன் அவனை நோக்கி, “மாடா...வயிறு என்னமோ செய்யுதுடா...நான் அப்பிடி போயி ஒதுங்கிட்டு வாறேன். இந்தா...இந்த பைய பத்திரமா வச்சிரு...இந்தா மேல்சட்டையும், அங்க வஸ்திரமும்...பத்திரமடா...”
“சாிங்க எசமான்”
லேசான தூறலில் இருட்டில் இறங்கி நடந்தாா் ஜமீன்.
போன ஜமீனையும் காணோம்...இருளனையும் காணோம்...
சாி...ரொம்ப நாளா ஒரு ஆசை...ஜமீன் சட்டையும் , அங்கவஸ்திரத்தையும் போட்டு பாா்க்கணுமுன்னு...அவரு வா்றதுக்குள்ள போட்டு பாத்துடனும்...என்று நினைத்தவாறே மாடசாமி செயலில் இறங்கினான்.
ஜமீனுக்கு எப்பவும் ஒதுங்கப்போனா அரைமணி, முக்கா மணி ஆகும். ஆற்றங்கரையோரம் ஒதுங்கினாா். தூறல் நின்று போயிருந்தது.
இருளன் கொடுத்த கள்ளும், குளிா்ந்த காற்றும் லேசான தூக்கத்தை மாடனுக்கு கொண்டு வந்தது. பணமூட்டையை மடியில் வைத்துக் கொண்டு தூணில் சாய்ந்தான். சிறிது நேரம் அப்படியே சாிந்து படுத்தான். மொந்தையில் குடித்த கள்ளின் மயக்கம் அயா்ந்த நித்திரையை கொண்டுவர...அப்படியே தூங்கிப்போனான் மாடசாமி.
தொடரும்...
(மீதியை அவா்கள் இருவாில் ஒருவா் முடிப்பாா்கள் என கருதுகிறேன்)
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நினைப்பது ஒன்று
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியுமே.....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நினைப்பது ஒன்று
சார்லஸ் முரளி மீதும் என் மீதும் உங்களுக்கு இவ்ளோ நம்பிக்கை கூடாது. ஆனா வெச்சுட்டீங்க - எனவே அதை நம்ம முரளி சார்பா காப்பாத்தறேன்.
ஒரு பாசிடிவ் முடிவை தருகிறேன் - அனைவரும் எதிர்பார்ப்பது கெடுவான் கேடு நினைப்பவன் என்று தானே? அதை மாற்ற முயற்சிக்கிறேன்:
இறுதிப் பகுதி:
கள் தந்த போதையும், பயணக் களைப்பும், குறுக்கு வழியில் குபேரனாகும் ஆசை இவை அனைத்தும் சேர்ந்து மாடனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. அதோடு நீண்ட நாள் கனவான ஜமீன் உடையும் அங்கவஸ்திரமும் அணிந்தது அவனை சந்தோஷத்தில் மூழ்கடித்திருந்தது.
சில நிமிடங்களுக்கு பின்னர் இருளன், கந்தன், சுப்பன் மூவரும் - ஜமீந்தாரைத் தாக்கி கதையை முடித்துவிட்டு பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்துப் போக வந்தார்கள் மாடனின் யோசனைப் படி.
மண்டப வாசலில் மாடனை காணவில்லை - குடிகாரப் பய எங்க போய் தொலைந்தானோ என்று மூவரும் முணுமுணுத்த படியே சரி வந்த வேலையை முடிக்கலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்தார்கள் ஆயுதங்களுடன்.
அங்கே ஜமீன்தார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மூவரும் அவரைத் தாக்கத் துவங்கினார்கள். ஐயோ அம்மாவென்று கூக்குரல் மட்டுமே இருட்டில் கேட்டது.
திடீரென அங்கே யாரடா அது என்ற ஒரு சிம்மக் குரல் கேட்க மூவரும் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்ததால் அரண்டு விட்டனர்.
சத்தம் வந்த திசையில் ஆஜானுபாகுவான ஜமீன்தார் நிற்க கண்டு மிரண்டு போயினர். ஜமீன்தாரும் கட்டை ஒன்றை எடுத்து இவர்களை தாக்கத் துவங்கினார் - சிலம்பம் கற்றவராச்சே நம்ம ஜமீன்.
சில நிமிடங்களில் மூவரையும் பந்தாடிவிட்டார் ஜமீன் - தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூவரும் ஓடிவிட்டனர் அங்கிருந்து.
அடிபட்டு கீழே மயங்கிக் கிடந்த மாடனை ஜமீன்தார் தூக்கி உட்கார வைத்து - தண்ணீர் பருக வைத்து - ரத்தம் வழிவதை நிறுத்த அங்கவஸ்திரத்தை மாடனின் கழுத்தில் இருந்து எடுத்து கட்டினார்.
டேய் மாடா என் உசிரை காப்பாத்தின தெய்வமடா நீ. நான் உறங்குகையில் இவர்கள் தாக்கி இருந்தால் என் கதை இந்நேரம் முடிந்திருக்குமடா. என் உடை மீதுள்ள ஆசையால் நீ அதை அணியப் போக பாவம் நீ அடிபட்டு நான் பிழைக்க நேர்ந்தது. ரொம்ப நன்றிடா என்று ஜமீன் சொல்ல சொல்ல - மாடனோ கூனிக் குறுகி தன செயலுக்கு வெட்கப் பட்டு மிகவும் வருந்தினான்.
இனி வாழ்க்கையில் ஒருவருக்கும் தீங்கு நினைத்தலோ, அடுத்தவர் பொருளை குறுக்கு வழியில் அபகரிக்கவோ கூடாதென தீர்மானித்தான்.
அந்த மழையையும் பொருட்படுத்தாது ஜமீந்தாரே மாடனை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் அழைத்து சென்றார் அந்த அகால இருளிலே.
இவ்ளோ நல்ல ஜமீனையா நான் தீர்த்துகட்ட நினைத்தேன் என்று மாடன் அழ, ஜமீந்தாரோ டேய் அதான் காப்பாத்திட்டேன்ல - அழாதடா என ஆறுதல் சொன்னார்.
முதல் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கப் பட அங்கே ஒரு நல்ல மனிதன் உருவான விஷயம் அறியாத ஜமீனோ - வருவோர் போவோரிடம் எல்லாம் மாடனின் புகழை வாய் ஓயாது பரப்பிக் கொண்டிருந்தார்.
மாடனும் முழுவதுமாக திருந்தி அன்றிலிருந்து நல்லவனாக வாழத் துவங்கினான்.
(ஓகேயா சார்லஸ்?)
ஒரு பாசிடிவ் முடிவை தருகிறேன் - அனைவரும் எதிர்பார்ப்பது கெடுவான் கேடு நினைப்பவன் என்று தானே? அதை மாற்ற முயற்சிக்கிறேன்:
இறுதிப் பகுதி:
கள் தந்த போதையும், பயணக் களைப்பும், குறுக்கு வழியில் குபேரனாகும் ஆசை இவை அனைத்தும் சேர்ந்து மாடனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. அதோடு நீண்ட நாள் கனவான ஜமீன் உடையும் அங்கவஸ்திரமும் அணிந்தது அவனை சந்தோஷத்தில் மூழ்கடித்திருந்தது.
சில நிமிடங்களுக்கு பின்னர் இருளன், கந்தன், சுப்பன் மூவரும் - ஜமீந்தாரைத் தாக்கி கதையை முடித்துவிட்டு பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்துப் போக வந்தார்கள் மாடனின் யோசனைப் படி.
மண்டப வாசலில் மாடனை காணவில்லை - குடிகாரப் பய எங்க போய் தொலைந்தானோ என்று மூவரும் முணுமுணுத்த படியே சரி வந்த வேலையை முடிக்கலாம் என்று எண்ணி உள்ளே நுழைந்தார்கள் ஆயுதங்களுடன்.
அங்கே ஜமீன்தார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மூவரும் அவரைத் தாக்கத் துவங்கினார்கள். ஐயோ அம்மாவென்று கூக்குரல் மட்டுமே இருட்டில் கேட்டது.
திடீரென அங்கே யாரடா அது என்ற ஒரு சிம்மக் குரல் கேட்க மூவரும் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்ததால் அரண்டு விட்டனர்.
சத்தம் வந்த திசையில் ஆஜானுபாகுவான ஜமீன்தார் நிற்க கண்டு மிரண்டு போயினர். ஜமீன்தாரும் கட்டை ஒன்றை எடுத்து இவர்களை தாக்கத் துவங்கினார் - சிலம்பம் கற்றவராச்சே நம்ம ஜமீன்.
சில நிமிடங்களில் மூவரையும் பந்தாடிவிட்டார் ஜமீன் - தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூவரும் ஓடிவிட்டனர் அங்கிருந்து.
அடிபட்டு கீழே மயங்கிக் கிடந்த மாடனை ஜமீன்தார் தூக்கி உட்கார வைத்து - தண்ணீர் பருக வைத்து - ரத்தம் வழிவதை நிறுத்த அங்கவஸ்திரத்தை மாடனின் கழுத்தில் இருந்து எடுத்து கட்டினார்.
டேய் மாடா என் உசிரை காப்பாத்தின தெய்வமடா நீ. நான் உறங்குகையில் இவர்கள் தாக்கி இருந்தால் என் கதை இந்நேரம் முடிந்திருக்குமடா. என் உடை மீதுள்ள ஆசையால் நீ அதை அணியப் போக பாவம் நீ அடிபட்டு நான் பிழைக்க நேர்ந்தது. ரொம்ப நன்றிடா என்று ஜமீன் சொல்ல சொல்ல - மாடனோ கூனிக் குறுகி தன செயலுக்கு வெட்கப் பட்டு மிகவும் வருந்தினான்.
இனி வாழ்க்கையில் ஒருவருக்கும் தீங்கு நினைத்தலோ, அடுத்தவர் பொருளை குறுக்கு வழியில் அபகரிக்கவோ கூடாதென தீர்மானித்தான்.
அந்த மழையையும் பொருட்படுத்தாது ஜமீந்தாரே மாடனை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் அழைத்து சென்றார் அந்த அகால இருளிலே.
இவ்ளோ நல்ல ஜமீனையா நான் தீர்த்துகட்ட நினைத்தேன் என்று மாடன் அழ, ஜமீந்தாரோ டேய் அதான் காப்பாத்திட்டேன்ல - அழாதடா என ஆறுதல் சொன்னார்.
முதல் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கப் பட அங்கே ஒரு நல்ல மனிதன் உருவான விஷயம் அறியாத ஜமீனோ - வருவோர் போவோரிடம் எல்லாம் மாடனின் புகழை வாய் ஓயாது பரப்பிக் கொண்டிருந்தார்.
மாடனும் முழுவதுமாக திருந்தி அன்றிலிருந்து நல்லவனாக வாழத் துவங்கினான்.
(ஓகேயா சார்லஸ்?)
Last edited by யினியவன் on Thu Jun 21, 2012 8:39 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நினைப்பது யாரோ..?
» நீ மறக்க நினைப்பது
» நினைப்பது முடியும்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நினைப்பது யாரோ..?
» நீ மறக்க நினைப்பது
» நினைப்பது முடியும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|