Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
+5
கபாலி
விநாயகாசெந்தில்
ராஜா
யினியவன்
அருண்
9 posters
Page 1 of 1
பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசர். இவர் மதுரையில் இருந்து தேனி செல்வதற்காக, அரசு பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்ததால், உட்கார சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பஸ்சில், மாலை 5.35 மணிக்கு காளவசால் ஸ்டாப்பில் எம்.எல்.ஏ., லாசர் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால், நின்று கொண்டு பயணம் செய்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்ற போது, கண்டக்டர் ஜெபமாலை ஸ்டீபன், லாசரிடம் டிக்கெட் வாங்குமாறு கூறினார். எம்.எல்.ஏ.,வுக்குரிய பாசில் பயணம் செய்வதாக, லாசர் கூறினார். செக்கானூரணியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் மீண்டும் தேனி நோக்கி சென்றது. கண்டக்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ., லாசர், தான் நின்று கொண்டு பயணம்செய்வது பற்றியும், கண்டக்டர் பஸ்சில் அமர்ந்து வருவது பற்றியும், தேனி கிளை மேலாளர் சுப்பிரமணியிடம், மொபைல் போனில் புகார் கூறினார். இதுகுறித்து சுப்பிரமணி உடனடியாக மதுரை கிளை மேலாளர் அறிவானந்தனிடம் தெரிவித்தார். பஸ் உசிலம்பட்டி வரும்போது நடவடிக்கை எடுக்க, நான்கு பரிசோதகர்கள் கொண்ட குழுவை, அதிகாரிகள் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைத்தனர். பஸ் எண் குழப்பத்தால் அவர்கள் பஸ்சை கோட்டை விட்டனர்.
தொட்டப்பநாயக்கனூர் அருகே பஸ் சென்ற போது தேனி கிளை மேலாளர்,எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, "சார் சீட் கிடைத்து விட்டதா,' என விசாரித்தார். அதற்கு எம்.எல்.ஏ., "இன்னும் நின்று கொண்டு தான் வருகிறேன்,' என்றார். மொபைல் போனை கண்டக்டரிடம் கொடுக்கச்சொல்லிய மேலாளர் சுப்பிரமணி, அவரை கண்டித்ததுடன், சீட் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உடனே எம்.எல்.ஏ.,விடம் மன்னிப்பு கேட்ட கண்டக்டர், அமருமாறு கூறினார். அதற்குள் பஸ் ஆண்டிபட்டி வந்து விட்டது. அதன் பிறகே எம்.எல்.ஏ., அமர்ந்து பயணம் செய்தார். மதுரை பொது மேலாளர் சந்திரசேகரன், அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ்சில் பணி வழங்க வேண்டாம், எனவும் உத்தரவிட்டார்.
தேனி கிளை மேலாளர் சுப்பிரமணி கூறுகையில், ""மக்கள் பிரதிநிதிகளுக்கு பஸ்சில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பஸ்சில் சீட் இல்லாத நிலையில் கண்டக்டர் சீட்டையாவது வழங்கி இருக்க வேண்டும்,'' என்றார். மதுரை பொதுமேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""எம்.எல்.ஏ., விற்கு சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார். கண்டக்டர் ஸ்டீபன் கூறுகையில், ""நான் அதிகாலை 5 மணி முதல் பணியில் இருந்தேன். எம்.எல்.ஏ., பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே, பஸ்சில் 75 பயணிகள் இருந்தனர். நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது. எம்.எல்.ஏ., முன் பக்கமாக ஏறினார். செக்கானூரணியில் 6 பேரும், உசிலம்பட்டியில் 16 பேரும் இறங்கினர். அதே எண்ணிக்கையில் பயணிகள் ஏறினர். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைத்து, என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். கண்டக்டர் சீட் உள்ள பின்பக்க சீட்டில் ஏற்கனவே 6 பேர் அமர்ந்திருந்தனர். நான் ஏழாவது ஆளாக அமர்ந்து வந்தேன். மேனேஜர் என்னிடம் பேசிய உடனே எம்.எல்.ஏ.,வை பஸ்சில் அமர வைத்தேன்,'' என்றார்.
தினமலர்
மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பஸ்சில், மாலை 5.35 மணிக்கு காளவசால் ஸ்டாப்பில் எம்.எல்.ஏ., லாசர் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால், நின்று கொண்டு பயணம் செய்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்ற போது, கண்டக்டர் ஜெபமாலை ஸ்டீபன், லாசரிடம் டிக்கெட் வாங்குமாறு கூறினார். எம்.எல்.ஏ.,வுக்குரிய பாசில் பயணம் செய்வதாக, லாசர் கூறினார். செக்கானூரணியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் மீண்டும் தேனி நோக்கி சென்றது. கண்டக்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ., லாசர், தான் நின்று கொண்டு பயணம்செய்வது பற்றியும், கண்டக்டர் பஸ்சில் அமர்ந்து வருவது பற்றியும், தேனி கிளை மேலாளர் சுப்பிரமணியிடம், மொபைல் போனில் புகார் கூறினார். இதுகுறித்து சுப்பிரமணி உடனடியாக மதுரை கிளை மேலாளர் அறிவானந்தனிடம் தெரிவித்தார். பஸ் உசிலம்பட்டி வரும்போது நடவடிக்கை எடுக்க, நான்கு பரிசோதகர்கள் கொண்ட குழுவை, அதிகாரிகள் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைத்தனர். பஸ் எண் குழப்பத்தால் அவர்கள் பஸ்சை கோட்டை விட்டனர்.
தொட்டப்பநாயக்கனூர் அருகே பஸ் சென்ற போது தேனி கிளை மேலாளர்,எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, "சார் சீட் கிடைத்து விட்டதா,' என விசாரித்தார். அதற்கு எம்.எல்.ஏ., "இன்னும் நின்று கொண்டு தான் வருகிறேன்,' என்றார். மொபைல் போனை கண்டக்டரிடம் கொடுக்கச்சொல்லிய மேலாளர் சுப்பிரமணி, அவரை கண்டித்ததுடன், சீட் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உடனே எம்.எல்.ஏ.,விடம் மன்னிப்பு கேட்ட கண்டக்டர், அமருமாறு கூறினார். அதற்குள் பஸ் ஆண்டிபட்டி வந்து விட்டது. அதன் பிறகே எம்.எல்.ஏ., அமர்ந்து பயணம் செய்தார். மதுரை பொது மேலாளர் சந்திரசேகரன், அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ்சில் பணி வழங்க வேண்டாம், எனவும் உத்தரவிட்டார்.
தேனி கிளை மேலாளர் சுப்பிரமணி கூறுகையில், ""மக்கள் பிரதிநிதிகளுக்கு பஸ்சில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பஸ்சில் சீட் இல்லாத நிலையில் கண்டக்டர் சீட்டையாவது வழங்கி இருக்க வேண்டும்,'' என்றார். மதுரை பொதுமேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""எம்.எல்.ஏ., விற்கு சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார். கண்டக்டர் ஸ்டீபன் கூறுகையில், ""நான் அதிகாலை 5 மணி முதல் பணியில் இருந்தேன். எம்.எல்.ஏ., பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே, பஸ்சில் 75 பயணிகள் இருந்தனர். நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது. எம்.எல்.ஏ., முன் பக்கமாக ஏறினார். செக்கானூரணியில் 6 பேரும், உசிலம்பட்டியில் 16 பேரும் இறங்கினர். அதே எண்ணிக்கையில் பயணிகள் ஏறினர். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைத்து, என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். கண்டக்டர் சீட் உள்ள பின்பக்க சீட்டில் ஏற்கனவே 6 பேர் அமர்ந்திருந்தனர். நான் ஏழாவது ஆளாக அமர்ந்து வந்தேன். மேனேஜர் என்னிடம் பேசிய உடனே எம்.எல்.ஏ.,வை பஸ்சில் அமர வைத்தேன்,'' என்றார்.
தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
இதென்ன எழுதப் படாத சட்டமா?
ப்ரீ பாஸ் ஒகே - சீட்டெல்லாம் குடுக்க சொல்றது கொடுமை - மரியாதைல அவரே கொடுத்தா ஒகே - ஏன் இவர்கள் மரியாதை தரும் செயல்களை செய்யக் கூடாது?
விட்டா டிரைவர் சீட்ட குடுக்க சொல்லுவாங்க போல இருக்கே?
ப்ரீ பாஸ் ஒகே - சீட்டெல்லாம் குடுக்க சொல்றது கொடுமை - மரியாதைல அவரே கொடுத்தா ஒகே - ஏன் இவர்கள் மரியாதை தரும் செயல்களை செய்யக் கூடாது?
விட்டா டிரைவர் சீட்ட குடுக்க சொல்லுவாங்க போல இருக்கே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன.நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
அட்லீஸ்ட் டிரைவராவது தன் சீட்டைக்கொடுத்துட்டு நின்னுட்டு இருந்திருக்கலாம்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
அந்த ரூட்டில் உள்ள கண்டக்டர்கள் அனைவருமே அடாவடிகள். அவர்கள் பயணிகளை எப்படி அசிங்கபடுதுவார்கள் என்பது அந்த ரூட்டிலே பயணம் செய்தவர்களுக்கு தான் தெரியும். மற்றபடி தமிழ் நாட்டில் ஒரு எம் எல் எ பஸ்ஸில் பயணம் செய்வது எவ்வளவு ஒரு ஆச்சரியம் என்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் வார்ட் உறுப்பினர் கூட சுமோவில் வரும் காட்சி மதுரை மக்களுக்கு தெரியும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
கபாலி wrote:அட்லீஸ்ட் டிரைவராவது தன் சீட்டைக்கொடுத்துட்டு நின்னுட்டு இருந்திருக்கலாம்.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
அரசியல்வாதிகளுக்கு இந்த சீட் பிரச்சினை பெரிய பிரட்சினைதான்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
ராஜா wrote:இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன.நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» இணைய கலாட்டா
» 64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்
» இதில் உட்கார ஆசையா?
» பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால், நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன
» தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!
» 64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்
» இதில் உட்கார ஆசையா?
» பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால், நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன
» தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|