Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
3 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
First topic message reminder :
நிச்சயமாகவே மக்கள் ரொம்பவுமே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். இன்றும், தொழில் நுட்பவியலின் வளர்ச்சிகளின் மத்தியிலும், மக்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை தெரிந்து கொள்ள வாஞ்சிக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கும் மேலான நோக்கத்திற்காகவும், அறிவிற்காகவும் மக்கள் “அறிவுப் பசி” கொண்டவர்களாய் உள்ளார்கள். “நாம் பார்த்து, கேட்டு, உணர்ந்து, ருசித்து, தொடக் கூடிய காரியங்களுக்கும் மேலாக இன்னும் வாழ்க்கையில் ஏதேனும் உண்டா?” என மக்கள் யோசிக்கிறார்கள்.
இந்த கேள்விகள் தேவன் மனித இனத்தை எவ்வாறு படைத்தார் என்று காட்டுகிறது. நாம் தேவனையும், அவரது நோக்கங்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்டோம். (ஆதியாகமம்: 1:26,27; எரேமியா: 29:11-13). துர்ப்பேற்றின் பயனாக, மனதன் பாவம் செய்வதை தெரிந்து கொண்டது. அவன் தன் சிருஷ்டிகரிடம் கொண்டிருந்த கள்ளங்கபடற்ற ஐக்கியத்தை அழித்துப் போட்டது. இப்படி ஆவிக்குரிய இருளில் சென்று விட்ட மனிதனின் தவிர்க்க முடியாத பெரிய வீழ்ச்சியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
ஆனால், வேதாகமம் ஒரு சிறந்த சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதனை மீண்டும் தன்னிடமாய் இழுத்துக் கொள்ளும் கிரியையில் தேவன் ஈடுபட்டிருக்கிறார். மனித குலம் மீண்டும் தேவனிடம் சோ்க்கப்படும்படியாக தேவன் ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.
ஆனாலும், சாத்தானும் அவனது பிசாசுகளும் கூட கிரியை செய்கின்றன. அவைகள் மனிதனை தேவனுடைய சத்தியத்தினிடமிருந்தும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தினின்றும் விலக்கி வைக்க, வஞ்சகத்தையும், பொய்களையும் பயன்படுத்தி இடைவிடாமல் முயன்று வருகின்றன. பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சத்தியம் மனித குலத்தை விடுதலையாக்கும் என்பதை சாத்தான் அறிவான் (யோவான்: 8:32).
தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய உங்கள் புரிந்து கொள்ளுதலை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தவே இப்பகுதியில் எழுத விரும்புகிறேன். மெய்யான வேதத்தின்படியான கிறிஸ்தவத்திற்கும், இன்றைய உலகில் உலவி வரும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தைக் காட்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியே எல்லா ஆவிக்குரிய வஞ்சகத்தையும் அடக்கி ஆளும் சக்தி என வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவ ஜனத்தை “வஞ்சக ஆவி” யின் (1யோவான்: 4:6) அடிமைத்தனத்திலிருந்து வெளிநடத்தி, கிறிஸ்து இயேசுவின் மூலமாய் நித்திய இரட்சிப்புக்குள் கொண்டுவர உங்களை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன். இப்பகுதியில் யாரையும் புண்படுத்தவோ, குற்றப்படுத்தவோ, தாக்கும் நோக்கமோ கொண்டதல்ல. தொடர்ந்து வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். கிறிஸ்துவின் மூல உபதேசங்களை கற்றறிவோம் வாருங்கள். நல்லாதரவு தாருங்கள்.
“கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக் கற்கள்”
ஒவ்வொருவரும் தேவனைப்பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றியும் சிறிது விசுவாசிக்கிறோம். சிலர் தேவன் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் ஆயிரக்கனக்கான தேவர்களை வணங்குகிறார்கள். சிலர் தங்கள் அறிவு தெளிவு பெற தேடுகிறார்கள். சிலர் பொருள்களுக்கு அல்லது இயற்கை சக்திகளுக்கு ஆவியின் சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். சிலர் தங்களையே வணங்கிக் கொள்கிறார்கள்.நிச்சயமாகவே மக்கள் ரொம்பவுமே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். இன்றும், தொழில் நுட்பவியலின் வளர்ச்சிகளின் மத்தியிலும், மக்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை தெரிந்து கொள்ள வாஞ்சிக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கும் மேலான நோக்கத்திற்காகவும், அறிவிற்காகவும் மக்கள் “அறிவுப் பசி” கொண்டவர்களாய் உள்ளார்கள். “நாம் பார்த்து, கேட்டு, உணர்ந்து, ருசித்து, தொடக் கூடிய காரியங்களுக்கும் மேலாக இன்னும் வாழ்க்கையில் ஏதேனும் உண்டா?” என மக்கள் யோசிக்கிறார்கள்.
இந்த கேள்விகள் தேவன் மனித இனத்தை எவ்வாறு படைத்தார் என்று காட்டுகிறது. நாம் தேவனையும், அவரது நோக்கங்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்டோம். (ஆதியாகமம்: 1:26,27; எரேமியா: 29:11-13). துர்ப்பேற்றின் பயனாக, மனதன் பாவம் செய்வதை தெரிந்து கொண்டது. அவன் தன் சிருஷ்டிகரிடம் கொண்டிருந்த கள்ளங்கபடற்ற ஐக்கியத்தை அழித்துப் போட்டது. இப்படி ஆவிக்குரிய இருளில் சென்று விட்ட மனிதனின் தவிர்க்க முடியாத பெரிய வீழ்ச்சியை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
ஆனால், வேதாகமம் ஒரு சிறந்த சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதனை மீண்டும் தன்னிடமாய் இழுத்துக் கொள்ளும் கிரியையில் தேவன் ஈடுபட்டிருக்கிறார். மனித குலம் மீண்டும் தேவனிடம் சோ்க்கப்படும்படியாக தேவன் ஒரு இரட்சிப்பின் வழியை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார்.
ஆனாலும், சாத்தானும் அவனது பிசாசுகளும் கூட கிரியை செய்கின்றன. அவைகள் மனிதனை தேவனுடைய சத்தியத்தினிடமிருந்தும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தினின்றும் விலக்கி வைக்க, வஞ்சகத்தையும், பொய்களையும் பயன்படுத்தி இடைவிடாமல் முயன்று வருகின்றன. பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சத்தியம் மனித குலத்தை விடுதலையாக்கும் என்பதை சாத்தான் அறிவான் (யோவான்: 8:32).
தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய உங்கள் புரிந்து கொள்ளுதலை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தவே இப்பகுதியில் எழுத விரும்புகிறேன். மெய்யான வேதத்தின்படியான கிறிஸ்தவத்திற்கும், இன்றைய உலகில் உலவி வரும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள தெளிவான வித்தியாசத்தைக் காட்டும். அந்திக்கிறிஸ்துவின் ஆவியே எல்லா ஆவிக்குரிய வஞ்சகத்தையும் அடக்கி ஆளும் சக்தி என வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவ ஜனத்தை “வஞ்சக ஆவி” யின் (1யோவான்: 4:6) அடிமைத்தனத்திலிருந்து வெளிநடத்தி, கிறிஸ்து இயேசுவின் மூலமாய் நித்திய இரட்சிப்புக்குள் கொண்டுவர உங்களை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன். இப்பகுதியில் யாரையும் புண்படுத்தவோ, குற்றப்படுத்தவோ, தாக்கும் நோக்கமோ கொண்டதல்ல. தொடர்ந்து வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். கிறிஸ்துவின் மூல உபதேசங்களை கற்றறிவோம் வாருங்கள். நல்லாதரவு தாருங்கள்.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:02 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2
இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கு வேத ஆதாரம்:
இந்த உலகில் அவர் ஊழியம் செய்தபோது தாம் தேவன் என்று கூறினார். (யோவான்: 5:18; 8:58; 10:30). இயேசு கிறிஸ்து திமிர்வாதக்காரனின் பாவங்களை மன்னித்தார் என்று மாற்கு: 2:5-12 ல் காண்கிறோம்.
அப்பொழுது, அப்படி மன்னிப்பதற்குத் தேவனாகிய தமக்கு உரிமையும் அதிகாரமும் இருப்பதை நிரூபிக்க, இயேசு கிறிஸ்து அவனை குணமாக்கினார். இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனைத் தருகிறார் (யோவான்: 10:28). அற்புதங்களை நடப்பிக்கத் தம்முடைய சீஷர்களுக்கு அதிகாரங் கொடுக்கிறார். (மத்தேயு: 10:1,8). அவரும் பிதாவும் ஒன்றே என அறிவித்தார். (யோவான்: 10:31-33). யூதர்கள் இயேசு தான் தேவன் என்று கூறுவதை விளங்கிக் கொண்டனர். இதுதான் அவர்கள் அவரை வெறுத்ததற்கு காரணமாயிற்று.
இயேசு கிறிஸ்து, அவரும் பிதாவாகிய தேவனும் குணாதிசயத்திலும், நோக்கத்திலும், பணியிலும் ஒன்றாயிருப்பதாகக் கூறினார். (யோவான்: 14:9). அவர் பிதாவின் கிரியைகளைச் செய்தார். (யோவான்: 5:17; 10:37,38).
இயேசு கிறிஸ்து மக்களின் சிந்தனைகளை அறிந்தார். (மாற்கு: 2:8; லூக்கா: 6:8; யோவான்: 2:23-25). அவருக்கு ஜீவனின் மேலும் மரணத்தின் மேலும் அதிகாரம் இருந்தது (யோவான்: 6:63; லூக்கா: 7:11-17; யோவான்: 11:1-44). மேலும், அவரைப் பின்பற்றினோர் அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்படி போதித்தார். (யோவான்: 16:23,24). இயேசுவானவர் (யாத்திராகமம்: 34:14; மத்தேயு: 4:10). ஆராதனையை ஏற்றுக் கொண்டார் (மத்தேயு: 2:2,11; 14:33; 28:9,10,17; யோவான்: 9:38; எபிரேயர்: 1:6). இயேசுவானவர் உண்மையிலேயே தேவனாயிருப்பதால் ஆராதனையை ஏற்றுக் கொண்டார்.
இந்த உலகில் அவர் ஊழியம் செய்தபோது தாம் தேவன் என்று கூறினார். (யோவான்: 5:18; 8:58; 10:30). இயேசு கிறிஸ்து திமிர்வாதக்காரனின் பாவங்களை மன்னித்தார் என்று மாற்கு: 2:5-12 ல் காண்கிறோம்.
அப்பொழுது, அப்படி மன்னிப்பதற்குத் தேவனாகிய தமக்கு உரிமையும் அதிகாரமும் இருப்பதை நிரூபிக்க, இயேசு கிறிஸ்து அவனை குணமாக்கினார். இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனைத் தருகிறார் (யோவான்: 10:28). அற்புதங்களை நடப்பிக்கத் தம்முடைய சீஷர்களுக்கு அதிகாரங் கொடுக்கிறார். (மத்தேயு: 10:1,8). அவரும் பிதாவும் ஒன்றே என அறிவித்தார். (யோவான்: 10:31-33). யூதர்கள் இயேசு தான் தேவன் என்று கூறுவதை விளங்கிக் கொண்டனர். இதுதான் அவர்கள் அவரை வெறுத்ததற்கு காரணமாயிற்று.
இயேசு கிறிஸ்து, அவரும் பிதாவாகிய தேவனும் குணாதிசயத்திலும், நோக்கத்திலும், பணியிலும் ஒன்றாயிருப்பதாகக் கூறினார். (யோவான்: 14:9). அவர் பிதாவின் கிரியைகளைச் செய்தார். (யோவான்: 5:17; 10:37,38).
இயேசு கிறிஸ்து மக்களின் சிந்தனைகளை அறிந்தார். (மாற்கு: 2:8; லூக்கா: 6:8; யோவான்: 2:23-25). அவருக்கு ஜீவனின் மேலும் மரணத்தின் மேலும் அதிகாரம் இருந்தது (யோவான்: 6:63; லூக்கா: 7:11-17; யோவான்: 11:1-44). மேலும், அவரைப் பின்பற்றினோர் அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்படி போதித்தார். (யோவான்: 16:23,24). இயேசுவானவர் (யாத்திராகமம்: 34:14; மத்தேயு: 4:10). ஆராதனையை ஏற்றுக் கொண்டார் (மத்தேயு: 2:2,11; 14:33; 28:9,10,17; யோவான்: 9:38; எபிரேயர்: 1:6). இயேசுவானவர் உண்மையிலேயே தேவனாயிருப்பதால் ஆராதனையை ஏற்றுக் கொண்டார்.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:40 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பாிசுத்த வேதாகம உபதேசங்கள் - Page 2
இயேசு கிறிஸ்து : “முழுவதும் தேவன், முழுவதும் மனிதன்”
புதிய ஏற்பாடு இயேசுவானவர் தேவன் என ஆணித்தரமாய்க் கூறுகிறது. இயேசுவானவரைப் பற்றி விவரிக்கும்போது, அவருடைய (தேவனுடைய) மகிமையின் பிரகாசமும், “அவருடைய (தேவனின்) தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபிரேயா்: 1:3). “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் (கொலோசெயர்: 1:15). தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோசெயர்: 2:9) என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
இயேசுவானவரும் பிதாவாகிய தேவனும் ஒன்றாயிருக்கிறார்கள் (யோவான்: 10:30). கிரேக்க மொழியின்படி இது அவர்கள் சாராம்சத்தில் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஆளில்லை எனக் குறியிட்டுக் காட்டுகிறது. இது திரித்துவத்தைக் குறித்த இறையியல் கருத்தை ஆதரிக்கிறது.
“மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து” (தீத்து:2:13). என் ஆண்டவரே! என் தேவனே! (யோவான்: 20:28) என்றார். “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (1தீமோத்தேயு: 3:16) என இயேசு அழைக்கப்படுகிறார்.
கிறிஸ்து தேவனுடைய குணாதிசயத்தைக் கொண்டிருந்ததோடு , அதைத் தம்முடைய வாழ்க்கை, ஊழியம், தியாக பலியான மரணத்தினால் வெளிப்படுத்திக் காட்டினார்.
கிறிஸ்து காட்டிய நன்னெறிப் பண்புகள்:
- அன்பு - யோவான்: 3:16; 13:34; 15:12,13; ரோமர்: 8:35.
- சத்தியம் - யோவான்: 8:31-36; 14:6; வெளிப்படுத்தல்: 3:7.
- பணிவிடை செய்தல் - மத்தேயு: 20:25-28; யோவான்: 13:13-17; பிலிப்பியர்: 2:5-8.
- பரிசுத்தம் - லூக்கா: 1:35; அப்போஸ்தலர்: 4:27,30.
- நீதி - ரோமர்: 5:17-21; 2தீமோத்தேயு: 4:8; 1யோவான்: 2:1,29; 3:7.
இயேசு கிறிஸ்து தேவனாயிருந்தார்; தேவனாயிருக்கிறார் என்று வேத வாக்கியங்கள் போதிப்பது ஏராளமான சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
அவர் ஒரே சமயத்தில் முழு மனிதனாகவும் முழுவதும் தேவனாகவும் இருந்தார். வேதாகமத்தின் கூற்றுப்படி இயேசு கிறிஸ்து யார் என்பதை மறுதலிக்கும் எந்த ஒரு போதனையும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்.
புதிய ஏற்பாடு இயேசுவானவர் தேவன் என ஆணித்தரமாய்க் கூறுகிறது. இயேசுவானவரைப் பற்றி விவரிக்கும்போது, அவருடைய (தேவனுடைய) மகிமையின் பிரகாசமும், “அவருடைய (தேவனின்) தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபிரேயா்: 1:3). “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் (கொலோசெயர்: 1:15). தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோசெயர்: 2:9) என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
இயேசுவானவரும் பிதாவாகிய தேவனும் ஒன்றாயிருக்கிறார்கள் (யோவான்: 10:30). கிரேக்க மொழியின்படி இது அவர்கள் சாராம்சத்தில் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஆளில்லை எனக் குறியிட்டுக் காட்டுகிறது. இது திரித்துவத்தைக் குறித்த இறையியல் கருத்தை ஆதரிக்கிறது.
“மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து” (தீத்து:2:13). என் ஆண்டவரே! என் தேவனே! (யோவான்: 20:28) என்றார். “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (1தீமோத்தேயு: 3:16) என இயேசு அழைக்கப்படுகிறார்.
கிறிஸ்து தேவனுடைய குணாதிசயத்தைக் கொண்டிருந்ததோடு , அதைத் தம்முடைய வாழ்க்கை, ஊழியம், தியாக பலியான மரணத்தினால் வெளிப்படுத்திக் காட்டினார்.
கிறிஸ்து காட்டிய நன்னெறிப் பண்புகள்:
- அன்பு - யோவான்: 3:16; 13:34; 15:12,13; ரோமர்: 8:35.
- சத்தியம் - யோவான்: 8:31-36; 14:6; வெளிப்படுத்தல்: 3:7.
- பணிவிடை செய்தல் - மத்தேயு: 20:25-28; யோவான்: 13:13-17; பிலிப்பியர்: 2:5-8.
- பரிசுத்தம் - லூக்கா: 1:35; அப்போஸ்தலர்: 4:27,30.
- நீதி - ரோமர்: 5:17-21; 2தீமோத்தேயு: 4:8; 1யோவான்: 2:1,29; 3:7.
இயேசு கிறிஸ்து தேவனாயிருந்தார்; தேவனாயிருக்கிறார் என்று வேத வாக்கியங்கள் போதிப்பது ஏராளமான சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
அவர் ஒரே சமயத்தில் முழு மனிதனாகவும் முழுவதும் தேவனாகவும் இருந்தார். வேதாகமத்தின் கூற்றுப்படி இயேசு கிறிஸ்து யார் என்பதை மறுதலிக்கும் எந்த ஒரு போதனையும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 10:43 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
இயேசு கிறிஸ்துவின் பணி
இயேசு, "நானும் என் பிதாவும் ஒன்றாயிரக்கிறோம்" (யோவான்: 10:30) என்று கூறிய தம்முடைய தெய்வீக சுபாவத்தை உறுதிப்படுத்தினார். இயேசுவானவர் சொன்னதின் உட்பொருளை, அவர் தம்மை தேவன் என்று உரிமை பாராட்டியதை யுதர்கள் விளங்கிக் கொண்டதை அவர்களின் பிரதிக்கிரியை காட்டுகிறது.
ஆனால், இயேசுவானவர் எந்தக் காரணமுமின்றி தம்மை தேவன் என்று கூறிக் கொள்ளவில்லை. அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் தம்மைப் பற்றி கூறிக் கொண்ட யாவற்றையும் தம்முடைய கிரியைகளினால் நிருபித்தார். அவர் திரும்பத் திரும்ப தமது போதனையைக் கேட்டவர்களிடம்...
அ) அவருடைய கிரியைகள் தேவனுடையவை
ஆ) அவருடைய கிரியைகள் தாம், அன்றும், இன்றும் தேவனாயிருக்கிறார் என நிருபித்தன என்றும் கூறினார்.
என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார் (யோவான்: 10:37,38; 5:17,36: 9:4; 10:25; 14:10,11; 15:25).
1. அவருடைய ஊழியம்:
இயேசுவானவர் புமியில் ஊழியம் செய்யும்போது:
- பிணியாளிகள், குருடர், செவிடரை சுகமாக்கினார்.
- மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.
- பிசாசுகளைத் துரத்தினார்.
- இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் , பசியுற்றோரை பசியாற்றினார்.
- பிசாசை முறியடித்தார்.
- பக்தி மார்க்கத்தை சேர்ந்த சுயநீதிக்காரரை எதிர்கொண்டார்.
- பாவங்களிலிருந்து மனந்திரும்புதலைப் போதித்து பாவங்களை மன்னித்தார்.
- தம்மாலும் தம் போதனையாலும் தேவனாகிய பிதாவின் அன்பான இதயத்தையும் அவரது குணாதிசயத்தையும் வெளிப்படுத்தினார்.
தொடரும்...
[right][/center]
இயேசு, "நானும் என் பிதாவும் ஒன்றாயிரக்கிறோம்" (யோவான்: 10:30) என்று கூறிய தம்முடைய தெய்வீக சுபாவத்தை உறுதிப்படுத்தினார். இயேசுவானவர் சொன்னதின் உட்பொருளை, அவர் தம்மை தேவன் என்று உரிமை பாராட்டியதை யுதர்கள் விளங்கிக் கொண்டதை அவர்களின் பிரதிக்கிரியை காட்டுகிறது.
ஆனால், இயேசுவானவர் எந்தக் காரணமுமின்றி தம்மை தேவன் என்று கூறிக் கொள்ளவில்லை. அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் தம்மைப் பற்றி கூறிக் கொண்ட யாவற்றையும் தம்முடைய கிரியைகளினால் நிருபித்தார். அவர் திரும்பத் திரும்ப தமது போதனையைக் கேட்டவர்களிடம்...
அ) அவருடைய கிரியைகள் தேவனுடையவை
ஆ) அவருடைய கிரியைகள் தாம், அன்றும், இன்றும் தேவனாயிருக்கிறார் என நிருபித்தன என்றும் கூறினார்.
என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார் (யோவான்: 10:37,38; 5:17,36: 9:4; 10:25; 14:10,11; 15:25).
1. அவருடைய ஊழியம்:
இயேசுவானவர் புமியில் ஊழியம் செய்யும்போது:
- பிணியாளிகள், குருடர், செவிடரை சுகமாக்கினார்.
- மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.
- பிசாசுகளைத் துரத்தினார்.
- இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் , பசியுற்றோரை பசியாற்றினார்.
- பிசாசை முறியடித்தார்.
- பக்தி மார்க்கத்தை சேர்ந்த சுயநீதிக்காரரை எதிர்கொண்டார்.
- பாவங்களிலிருந்து மனந்திரும்புதலைப் போதித்து பாவங்களை மன்னித்தார்.
- தம்மாலும் தம் போதனையாலும் தேவனாகிய பிதாவின் அன்பான இதயத்தையும் அவரது குணாதிசயத்தையும் வெளிப்படுத்தினார்.
தொடரும்...
[right][/center]
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
2. சிலுவை:
மரணமும், தேவனிடமிருந்து நித்தியமாய் பிரிக்கப்படுதலும், மனிதனுடைய பாவத்தின் விளைவாகும். இருப்பினும், இயேசு கிறிஸ்து, 'நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிருந்து எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14).
மனுக்குலத்திற்காக பாவமில்லாத பலியாக சிலுவையில் மரித்ததன் மூலம் இயெசு கிறிஸ்து நம்முடைய பாவத்திற்கான தண்டனையை செலுத்தித் தீர்த்து நம்மை மறுபடியும் தேவனோடு ஒப்புரவாக்கினார்.
தொடரும்...
மரணமும், தேவனிடமிருந்து நித்தியமாய் பிரிக்கப்படுதலும், மனிதனுடைய பாவத்தின் விளைவாகும். இருப்பினும், இயேசு கிறிஸ்து, 'நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிருந்து எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14).
மனுக்குலத்திற்காக பாவமில்லாத பலியாக சிலுவையில் மரித்ததன் மூலம் இயெசு கிறிஸ்து நம்முடைய பாவத்திற்கான தண்டனையை செலுத்தித் தீர்த்து நம்மை மறுபடியும் தேவனோடு ஒப்புரவாக்கினார்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
3. அவருடைய உயிர்த்தெழுதல்:
இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திற்குப் பின் அவருடைய சரீர உயிர்த்தெழுதல், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது (சங்கீதம்: 16:10; அப்போஸ்தலர்: 2:31). ஆனால், அதற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்புக்கு அது அடித்தளமாக அமைகிறது (ரோமர்: 10:9,10). கிறிஸ்தவ விசுவாசம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய சத்தியத்தின் அடிப்படையில்தான் எனப் பவுல் உறுதிபடக் கூறுகிறார்.
1கொரிந்தியர்: 15:14-19 ன் படி இயெசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையில்லாவிடின்:
- அப்போஸ்தலரின் பிரசங்கம் வீணாயிருக்கும் (வசனம்:14)
- கொரிந்து பட்டணத்தின் விசுவாசிகளின் விசுவாசம் வீணாயிருக்கும் (வசனம்:14)
- அப்போஸ்தலர்களும் பிறரும் பொய் சாட்சிகளாயிருப்பார்கள் (வசனம்: 15)
- கொரிந்திய சபை இன்னமும் பாவத்திலிருப்பார்கள் (வசனம்: 17)
- கிறிஸ்துவை விசுவாசித்தவர்களாய் மரித்தவர்கள், இரட்சிப்பு இல்லாமல் இருப்பார்கள் (வசனம்:18)
- எல்லா மனிதர்களிலும் கிறிஸ்தவர்களே மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்பார்கள். (வசனம்:19)
மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்து திட்டவட்டமாய் உயிரோடெழும்பியது சுவிசேஷத்தின் முக்கிய பகுதியாயுள்ளது (1கொரிந்தியர்: 15:4; 2தீமோத்தேயு: 2:8).
முழு வரலாற்றிலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அதன் முக்கியத்துவத்திலும் தனித்தன்மையிலும் தனித்துயர்ந்து நிற்கிறது.
தொடரும்...
இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்திற்குப் பின் அவருடைய சரீர உயிர்த்தெழுதல், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது (சங்கீதம்: 16:10; அப்போஸ்தலர்: 2:31). ஆனால், அதற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்புக்கு அது அடித்தளமாக அமைகிறது (ரோமர்: 10:9,10). கிறிஸ்தவ விசுவாசம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய சத்தியத்தின் அடிப்படையில்தான் எனப் பவுல் உறுதிபடக் கூறுகிறார்.
1கொரிந்தியர்: 15:14-19 ன் படி இயெசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையில்லாவிடின்:
- அப்போஸ்தலரின் பிரசங்கம் வீணாயிருக்கும் (வசனம்:14)
- கொரிந்து பட்டணத்தின் விசுவாசிகளின் விசுவாசம் வீணாயிருக்கும் (வசனம்:14)
- அப்போஸ்தலர்களும் பிறரும் பொய் சாட்சிகளாயிருப்பார்கள் (வசனம்: 15)
- கொரிந்திய சபை இன்னமும் பாவத்திலிருப்பார்கள் (வசனம்: 17)
- கிறிஸ்துவை விசுவாசித்தவர்களாய் மரித்தவர்கள், இரட்சிப்பு இல்லாமல் இருப்பார்கள் (வசனம்:18)
- எல்லா மனிதர்களிலும் கிறிஸ்தவர்களே மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்பார்கள். (வசனம்:19)
மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்து திட்டவட்டமாய் உயிரோடெழும்பியது சுவிசேஷத்தின் முக்கிய பகுதியாயுள்ளது (1கொரிந்தியர்: 15:4; 2தீமோத்தேயு: 2:8).
முழு வரலாற்றிலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அதன் முக்கியத்துவத்திலும் தனித்தன்மையிலும் தனித்துயர்ந்து நிற்கிறது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
கீழ்க்கண்ட வேத வாக்கிய உண்மைகள், கிறிஸ்தவின் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ள உதவுகிறது:
அ) இயேசு கிறிஸ்து உண்மையாகவே, முழுவதுமாகவே சரீரத்தில் மரணமடைந்தார். அவர் சாதாரண மயக்கமடையவோ, தற்காலிக செயலிழந்த கோமா நிலையிலோ இருக்கவில்லை. (மாற்கு: 15:44,45; யோவான்: 19:33-35; வெளிப்படுத்தல்: 1:18)
ஆ) இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிரோடு எழுப்பப்பட்டார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சரீரமற்ற ஆவியோ, ஒரு மாயத் தோற்றமோ அல்ல (லூக்கா: 24:36,39; சங்கீதம்: 16:10; அப்பொஸ்தலர்: 2:31)
இ) இயேசு கிறஸ்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், அவருடைய சரீரத்தில்தானே அநேக சாட்சிகளுக்குக் காணப்பட்டார் (லூக்கா: 24:30-36; யோவான்: 20:19,26; 1:3,21,22; 1கொரிந்தியர்: 15:3-8)
ஈ) அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தனித்தன்மை வாய்ந்தது. (அப்போஸ்தலர்: 13:34; ரோமர்: 6:9,10; 2தீமோத்தேயு: 1:10; வெளிப்படுத்தல்: 1:18). வேறு சிலர் அற்புதமான விதமாக மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்ட ◌ார்கள். (யோவான்: 11:1-44). ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் புமியில் வாழ்ந்து முடித்த பிறகு தங்கள் சரீரத்தில் மரணமடைந்தார்கள்.
உ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், தமது தெய்வத்தன்மையை பற்றிக் கூறியதை நிரபிக்கிறது (மத்தேயு: 12:38-40; யோவான;: 2:18-22; ரோமர்: 1:4)
ஊ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சிலுவையில் அவர் செலுத்திய பலி தேவனாகிய பிதாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது (ரோமர்: 4:25; எபிரேயர்: 9:23-28; 10:11-14).
தொடரும்...
அ) இயேசு கிறிஸ்து உண்மையாகவே, முழுவதுமாகவே சரீரத்தில் மரணமடைந்தார். அவர் சாதாரண மயக்கமடையவோ, தற்காலிக செயலிழந்த கோமா நிலையிலோ இருக்கவில்லை. (மாற்கு: 15:44,45; யோவான்: 19:33-35; வெளிப்படுத்தல்: 1:18)
ஆ) இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிரோடு எழுப்பப்பட்டார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சரீரமற்ற ஆவியோ, ஒரு மாயத் தோற்றமோ அல்ல (லூக்கா: 24:36,39; சங்கீதம்: 16:10; அப்பொஸ்தலர்: 2:31)
இ) இயேசு கிறஸ்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், அவருடைய சரீரத்தில்தானே அநேக சாட்சிகளுக்குக் காணப்பட்டார் (லூக்கா: 24:30-36; யோவான்: 20:19,26; 1:3,21,22; 1கொரிந்தியர்: 15:3-8)
ஈ) அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தனித்தன்மை வாய்ந்தது. (அப்போஸ்தலர்: 13:34; ரோமர்: 6:9,10; 2தீமோத்தேயு: 1:10; வெளிப்படுத்தல்: 1:18). வேறு சிலர் அற்புதமான விதமாக மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்ட ◌ார்கள். (யோவான்: 11:1-44). ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் புமியில் வாழ்ந்து முடித்த பிறகு தங்கள் சரீரத்தில் மரணமடைந்தார்கள்.
உ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், தமது தெய்வத்தன்மையை பற்றிக் கூறியதை நிரபிக்கிறது (மத்தேயு: 12:38-40; யோவான;: 2:18-22; ரோமர்: 1:4)
ஊ) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சிலுவையில் அவர் செலுத்திய பலி தேவனாகிய பிதாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது (ரோமர்: 4:25; எபிரேயர்: 9:23-28; 10:11-14).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
வணக்கம் நண்பர் சார்லஸ் அவர்களே, நான் அண்மையில் கிறிஸ்தவத்தின் போதனைக்குள் வந்தவர். பைப்லை ஒரு தடவை முழுதிலும் வாசித்து இயேசு தேவன் இல்லை என்ற
முடிவைக் கொண்டு இருக்கிறேன்!!! உங்கள் பதிவின் படி இயேசுதான் தேவன் என்றால் நீங்கள் மேலே எழுதிய பதிவுகள் அவசியம் அற்றது என்றே கருதுகிறேன் அல்லது இந்த சந்தேகம் யாருக்கும் எழவேண்டிய அவசியம் இருந்து இருக்காது. மற்றும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆக்கப் பூர்வமாக இருக்கின்றன. தொடர்ந்து வருகின்ற காலங்களில் இதைக் குறித்து விவாதிப்போம். நன்றி
முடிவைக் கொண்டு இருக்கிறேன்!!! உங்கள் பதிவின் படி இயேசுதான் தேவன் என்றால் நீங்கள் மேலே எழுதிய பதிவுகள் அவசியம் அற்றது என்றே கருதுகிறேன் அல்லது இந்த சந்தேகம் யாருக்கும் எழவேண்டிய அவசியம் இருந்து இருக்காது. மற்றும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆக்கப் பூர்வமாக இருக்கின்றன. தொடர்ந்து வருகின்ற காலங்களில் இதைக் குறித்து விவாதிப்போம். நன்றி
Rajenderam- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2012
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
இயேசுவானவர் உயிரோடிருக்கிறார்
இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிரோடெழுப்பப்பட்டார். நித்தியமாகவும் வல்லமையிலும் மகிமையிலும் ஆளுகை செய்யும் ஒரு உயிரோடிருக்கும் ஒரு இரட்சகரைப் பற்றி மட்டுமே பின் வரும் கருத்துக்கள் உண்மையாயிருக்க முடியும்:
- சபைக்கு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலான தலையாயிருக்கிறார் (எபேசியர்: 1:19-23)
- பரம பிதாவை நமக்கு எடுத்துக் காட்டும் பிரதான ஆசாரியராகவும் தேவனாகிய பிதாவிடமும் நம்முடைய பிரதிநிதியாகவும் கிறிஸ்து இருக்கின்றார் (ரோமர்: 8:27; எபிரேயர்: 2:17; 3:1; 4;14,15; 5:5-11; 6:20; 7:25,26; 9:11)
- கிறிஸ்து சபைக்கு ஆவிக்குரிய வரங்களைத் தந்திருக்கிறார் (எபேசியர்: 4:8-13)
- கிறிஸ்து "மரித்தோரிலிருந்து எழுந்த முதற் பேறானவர்" (கொலோசெயர்: 1:18) ஆக இருப்பது, அவருடைய இரண்டாம் வருகையின்போது அனைத்து விசுவாசிகளுக்கும் சரீர உயிர்த்தெழுதல் உண்டென உறுதிப்படுத்துவதோடு , மனுக்குலத்தோர் நியாயத்தீர்ப்பின் நாளிலே உயிரோடெழுந்திருப்பர் எனவும் உறுதியாக கூறுகிறது (அப்போஸ்தலர்: 17:31; 26:23; ரோமர்: 8:11; 1கொரிந்தியர்: 15:20-24, 50-52; பிலிப்பியர்: 3:7-11; கொலோசெயர்: 1:18; வெளிப்படுத்தல்:20:11-15).
"கிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்து , நித்திரையடைந்தவர்களில் (மரித்தவர்களில்) முதற்பலனானார் (1கொரிந்தியர்: 15:20). அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழந்தார்! இப்படி கிறிஸ்து மரணத்தை ஜெயித்தினால் அவரோடு நாமும் எழும்பி நித்தியத்தில் ஆளுவோம்.
நாம் கஷ்டம், துக்கம், உபத்திரவத்தின் மத்தியிலும் நாம் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாயிருப்போம்!
இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிரோடெழுப்பப்பட்டார். நித்தியமாகவும் வல்லமையிலும் மகிமையிலும் ஆளுகை செய்யும் ஒரு உயிரோடிருக்கும் ஒரு இரட்சகரைப் பற்றி மட்டுமே பின் வரும் கருத்துக்கள் உண்மையாயிருக்க முடியும்:
- சபைக்கு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலான தலையாயிருக்கிறார் (எபேசியர்: 1:19-23)
- பரம பிதாவை நமக்கு எடுத்துக் காட்டும் பிரதான ஆசாரியராகவும் தேவனாகிய பிதாவிடமும் நம்முடைய பிரதிநிதியாகவும் கிறிஸ்து இருக்கின்றார் (ரோமர்: 8:27; எபிரேயர்: 2:17; 3:1; 4;14,15; 5:5-11; 6:20; 7:25,26; 9:11)
- கிறிஸ்து சபைக்கு ஆவிக்குரிய வரங்களைத் தந்திருக்கிறார் (எபேசியர்: 4:8-13)
- கிறிஸ்து "மரித்தோரிலிருந்து எழுந்த முதற் பேறானவர்" (கொலோசெயர்: 1:18) ஆக இருப்பது, அவருடைய இரண்டாம் வருகையின்போது அனைத்து விசுவாசிகளுக்கும் சரீர உயிர்த்தெழுதல் உண்டென உறுதிப்படுத்துவதோடு , மனுக்குலத்தோர் நியாயத்தீர்ப்பின் நாளிலே உயிரோடெழுந்திருப்பர் எனவும் உறுதியாக கூறுகிறது (அப்போஸ்தலர்: 17:31; 26:23; ரோமர்: 8:11; 1கொரிந்தியர்: 15:20-24, 50-52; பிலிப்பியர்: 3:7-11; கொலோசெயர்: 1:18; வெளிப்படுத்தல்:20:11-15).
"கிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்து , நித்திரையடைந்தவர்களில் (மரித்தவர்களில்) முதற்பலனானார் (1கொரிந்தியர்: 15:20). அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழந்தார்! இப்படி கிறிஸ்து மரணத்தை ஜெயித்தினால் அவரோடு நாமும் எழும்பி நித்தியத்தில் ஆளுவோம்.
நாம் கஷ்டம், துக்கம், உபத்திரவத்தின் மத்தியிலும் நாம் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாயிருப்போம்!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
Rajenderam wrote:வணக்கம் நண்பர் சார்லஸ் அவர்களே, நான் அண்மையில் கிறிஸ்தவத்தின் போதனைக்குள் வந்தவர். பைப்லை ஒரு தடவை முழுதிலும் வாசித்து இயேசு தேவன் இல்லை என்ற
முடிவைக் கொண்டு இருக்கிறேன்!!! உங்கள் பதிவின் படி இயேசுதான் தேவன் என்றால் நீங்கள் மேலே எழுதிய பதிவுகள் அவசியம் அற்றது என்றே கருதுகிறேன் அல்லது இந்த சந்தேகம் யாருக்கும் எழவேண்டிய அவசியம் இருந்து இருக்காது. மற்றும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆக்கப் பூர்வமாக இருக்கின்றன. தொடர்ந்து வருகின்ற காலங்களில் இதைக் குறித்து விவாதிப்போம். நன்றி
தொடர்ந்து வாசியுங்கள்.
உண்மையை கண்டறியுங்கள்.
நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள்.
தேவாசீர்வாதம் பெறுங்கள்.
அதே சமயம் தங்களை முதலில் உறுப்பினர் பகுதியில் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
» சக்தியின் உபதேசங்கள்
» தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம்
» "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
» ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
» சக்தியின் உபதேசங்கள்
» தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம்
» "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|