Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
5 posters
Page 1 of 1
சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
'இமாலய சாதனை' என்ற சொற்றொடரை கேள்பிப்பட்டிருப்பீர்கள். இமயத்தைத் தொடுவதற்கு நிகரான ஒரு சாதனை என்பதுதான் அதன் பொருள். இந்த சொற்றொடர் 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் உலகிலேயே ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தான் மனிதன். தனிமனித முயற்சிகளிலேயே ஆக சிரமமானது இமயத்தைத் தொடுவதுதான் என்பது 1953-ஆம் ஆண்டுக்கு முன்னும் உண்மையாக இருந்தது. இப்போதும் உண்மையாக இருக்கிறது. அந்த சிகரத்தை முதன் முதலாக தொட்டு மனுகுல முயற்சிகளின் எல்லைகளை அகலப்படுத்திய அந்த அபூர்வ மனிதன் எட்மண்ட் ஹில்லரி. அப்படிப்பட்ட அதிசய மனிதனுக்கு வானம் வசப்பட்ட கதையைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் நாள் உலகத்தின் கண்கள் லண்டன் பக்கம் திரும்பியிருந்தன. ஏனெனில் அன்றைய தினம்தான் இரண்டாம் எலிசபெத்தை இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டும் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. அரசியார் முடிசூடிக்கொள்வதற்கு முன்பாக அவருக்கு ஓர் அவசரக் கடிதம் வந்தது. அதில் அடங்கியிருந்த செய்தி அந்த விழாவிற்கு இன்னும் பெருமை சேர்த்தது. இங்கிலாந்தின் ராணியாக தாம் முடிசூடிக்கொள்ளவிருக்கும் இந்த தருணத்தில் மலைகளின் முடிசூடா ராணியான எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு விட்டான் என்ற செய்தியைத்தான் அந்தக் கடிதம் தாங்கி வந்திருந்தது. அந்த சாதனையை செய்தது பிரிட்டிஷ் காமன்வெல்த் உறுப்பு நாட்டை சேர்ந்த ஒருவர் என்பதுதான் பெருமைக்குக் காரணம்.
1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் நாள் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டனர் நியூசிலாந்து நாட்டவரான எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் (Tenzing Norgay). அந்த செய்தியே புதிய அரசிக்கு ஏற்ற பரிசாக அமைந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் பிறந்தார் எட்மண்ட் ஹில்லரி. அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது. ஹில்லரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி Mount Ruapehu என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹில்லரிக்கு ஆர்வம் பிறந்தது. இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் Mount Cook என்ற பன்னிரெண்டாயிரம் அடி மலையில் ஏறினார்.
இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து ஆகாயப்படையில் சேர்ந்த அவர் வார இறுதியில் அருகிலிருந்த Mount egment என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. 1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.
அந்தக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்கள் வெவ்வேறு நிலைகளில் தங்கள் முயற்சியை கைவிட்டனர். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்ற அந்த நிலையில்கூட எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் தன்னம்பிக்கை தளராமல் ஏறினர். மே 29-ஆம் நாள் காலை சுமார் 11:30 மணிக்கு அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தனர். அந்தக்கணம் மனுகுல முயற்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. இமயத்தின் உச்சியைத் தொட்ட அவர்களுக்கு கிடைத்த பரிசு இதுவரை எவரும் எட்டாத உயரத்திலிருந்து அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உலகின் இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பு.
எவரெஸ்ட் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள் என்று பின்னர் அவரை கேட்டபோது எத்தனையோ பேர் சாதிக்க துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டதாக சொன்னார். அந்த மிகப் பெரிய சாதனைக்காக தாம் முடிசூடிக்கொண்ட பிறகு எட்மண்ட் ஹில்லரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கெளரவித்தார் எலிசபெத் ராணி. இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட சிரமங்களிலும், பொருளியல் தட்டுப்பாடுகளிலும் உழன்று கொண்டிருந்த இங்கிலாந்து தேசம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவாலும், எட்மண்ட் ஹில்லரியின் இமாலய சாதனையாலும் புத்துணர்ச்சி பெற்றது என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். எத்தனையோ மலையேற்ற வீரர்களை அதற்கு முன் காவு கொண்டிருந்தும் கம்பீரமான எவரெஸ்ட் மலையால் ஹில்லரியின் தன்னம்பிக்கையை அசைக்க முடியவில்லை.
தன் உயிருக்கு பயந்து எட்மண்ட் அந்த முயற்சியை கைவிட்டிருந்தால் மலையை மனிதன் வென்றிருக்க முடியாது. இமயத்தின் உச்சியை தொடுவதெல்லாம் ஒன்றுக்கும் பயன் தராத செயல் என்று எண்ணுவோரும் இருக்கின்றனர். அதைத் தொட்டதால் என்ன கிடைத்து விட்டது என்று அவர்கள் நினைக்கக் கூடும். உண்மைதான் இமயத்தை தொட்டு விட்டதால் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது என்றோ அல்லது நமது பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் ஒரு தனிமனிதனின் முயற்சி எத்தனைப் பேருக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த தன்னம்பிக்கை எத்தனை பேரை அவரவர் துறையில் சாதனை படைக்கத் தூண்டியிருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் எட்மண்ட் ஹில்லரி நிகழ்த்தியிருக்கும் சாதனையின் உண்மையான ஆழம் புரியும்.
நாம் அனைவரும் இமயத்தைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தேர்ந்தெடுத்திருக்கும் துறையின் உச்சம்தான் நமக்கு இமயம். அந்த உச்சத்தை நோக்கி நாம் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் பயணித்தால் போதும் எட்மண்ட் ஹில்லரியைப்போல் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
"மனிதா
உன் முயற்சி இருக்கும் வரை
இமயம் என்ன
உலகமே உன் கைகளுக்கு உள்ளே " என அருமையாக சொல்லியது உங்கள் பதிவு ... நமக்கேன் வம்பு என சும்மா காலைக்கட்டி கொண்டு உட்கார்ந்தால் வானம் எப்படி வசமாகும் வரலாற்றில் எப்படி இடம் பிடிப்பது என அழகாய் சொல்லியது ... நாம் இமயத்தை தொட முயலவில்லை என்றாலும் நமது துறையில் சிறப்போம் என சிறப்பாய் சொல்லியது ...பதிவுக்கு நன்றி ...
உன் முயற்சி இருக்கும் வரை
இமயம் என்ன
உலகமே உன் கைகளுக்கு உள்ளே " என அருமையாக சொல்லியது உங்கள் பதிவு ... நமக்கேன் வம்பு என சும்மா காலைக்கட்டி கொண்டு உட்கார்ந்தால் வானம் எப்படி வசமாகும் வரலாற்றில் எப்படி இடம் பிடிப்பது என அழகாய் சொல்லியது ... நாம் இமயத்தை தொட முயலவில்லை என்றாலும் நமது துறையில் சிறப்போம் என சிறப்பாய் சொல்லியது ...பதிவுக்கு நன்றி ...
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
விடாது முயன்றோர்
கெடாது வெல்வர்
அருமையான பகிர்வுக்கு நன்றி
கெடாது வெல்வர்
அருமையான பகிர்வுக்கு நன்றி
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
விடா முயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்
நன்றி நண்பரே .
நன்றி நண்பரே .
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல்..
செய்த கடின முயற்சிக்கும்.. உழைப்புக்கும்..
கிடைத்த பரிசு - அழியாப்புகழ்..!!
அருமை நண்பரே..!!
செய்த கடின முயற்சிக்கும்.. உழைப்புக்கும்..
கிடைத்த பரிசு - அழியாப்புகழ்..!!
அருமை நண்பரே..!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Similar topics
» ரூசோ - வரலாற்று நாயகர்!
» 'லியொனார்டோ டாவின்சி' - வரலாற்று நாயகர்!
» வரலாற்று நாயகர் (மகாகவி பாரதியார்)
» மகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்!
» மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்)
» 'லியொனார்டோ டாவின்சி' - வரலாற்று நாயகர்!
» வரலாற்று நாயகர் (மகாகவி பாரதியார்)
» மகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்!
» மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|