புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_m10எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு


   
   
rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Tue Jun 12, 2012 3:15 pm

முகநூல் எனக்கு கொடுத்த அருமையான கொடை எனது மகள் திருமதி ஜோஸ்பின் பாபா. அவர்களது அறிமுகம் வித்தியாசமானது.

எனக்கு கொழும்பு டாக்டர் திரு முருகானந்தம் அவர்கள் முகநூல் நண்பர். அவர் முகநூலில் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களின் பதிவை புகழ்ந்து எழுதி படிக்கும்படி கேட்டிருந்தார். அந்த பதிவு தான் பத்மநாபபுரம் அரண்மனை. அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
அருமையான பதிவு.
நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நன்கு, நிறைய விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி அம்மா.
வாழ்த்துக்கள்.
இந்த பதிவு மூலம் தான் எங்கள் நட்பு தொடர்ந்தது.

நான் நேரில் பார்த்ததை விட இவர்கள் அருமையாக, விபரமாக விளக்கியிருக்கிறார்கள். அவர்களது அனுமதியின் பேரில் இந்த பதிவை வெளியிடுகிறேன். மிக்க மகிழ்ச்சி. எனது மகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

இனிமேல் திருமதி ஜோஸ்பின் பாபா உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார்.

புலியூர்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டருக்குள், அல்லது கன்னியாகுமரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace வந்து விடலாம்.
திருவனந்தபுரம் மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசுவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது. அங்கு கட்டணம் 40 ரூபாய். அரண்மனை நிலைகொள்ளும் தாலுக்குக்கு (Toll) செலுத்த வேண்டும். பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர். அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்திருந்தது.






கேரளத்து சேச்சிமார் கன்னத்தில் கை கொடுத்து தமிழக அம்மாக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.





ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு மேலும் சாதாரண பெண்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்று மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.


என் மகனிடம் வுட் ஒர்க்(wood work) அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்டினால் ஒட்டியுள்ளதை சுட்டிக் காட்டினான். டிக்கட்டை காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம். சேலம் பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு என "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்க்கோ, போய்க்கோ என்று பொறுமை இழந்து வழி விட்டார். தமிழன்னா சும்மாவா?

அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்.
சிலர் மலையாள அன்போடு கொஞ்சும் தமிழில் விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும் விரட்டி விட்டு கொண்டிருந்தனர்.
அரண்மனை வரவேற்பறை கருப்பட்டி, சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது
என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண் விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்கிலத்தில் பக்கத்தில் நின்றே ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.

விரும்பும் திசையில் திருப்பி வைக்க கூடிய ஒரு தொங்கும் விளக்கும் அதன் அடியில் கல்லால் ஆன பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதையும் காட்டி கதைத்து கொண்டிருந்தனர். நம் தமிழ் ஆசாமி ஒருவர் இவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெளிவு படுத்த விரும்பி விளக்கின் மேல் கை வைத்ததும் அப்பெண் நீங்கள் தொடக்கூடாது இது பழமையானது ஆசாரமானது என்று கோபம் கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக தொடுவதை தடுத்தார். அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டப்பட்டு மார்த்தாண்ட ராஜா காலத்தில் புதுப்பிக்கப் பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்லப் பணித்தனர்.


பின்பு ஒரு இடுங்கிய படிகள் வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர். அரசன் தர்பார் மண்டம், குறைகேட்கும் அறை, அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி, கட்டில், மஹா ராணியின் சாப்பாட்டு அறை, அவருடைய கழிவறை என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம். குளிக்கும் அறையில் கல் தொட்டிகள் , அரைக்கும் அரைகற்கள், எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்க பட்டது. அரசி தன் கணவர்-மன்னரை தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து விட்டு ஆலயத்திற்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக மேலும் எளிமையான அழகுணர்ச்சியுடன் செய்யப் பட்டிருந்தது.

அம்மா ராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் அம்மா ராணி என்றால் யார் என்று தன் நியாயமான சந்தேகத்தை எழுப்பியதும் ராஜாவின்றே அம்மா என்று அவர் பதில் உரைத்தவுடன் ஓஹோ ராஜா மாதாவா என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.


ஒரு மண்டபத்தில் தரை செம்பருத்தி மருதாணி இலையால் சாயம் பூசப்பட்டு சிவப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்தது. அதன் ஒரு தூண் வாஸ்துப் படி பலாமரத்தில் செய்யப் பட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப் பட்டதாகவும் கூறினர்.
நம்ம சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு ஆகா அற்புதம் நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச வேறு ஒரு பெண் ஆமாம், இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது என்று பரவசப்பட்டு தன் மதிப்பெண்ணயும் பதித்துக் கொண்டார். விளக்கி கொண்டிருந்தவர் அப்படி எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாடு பக்கம் பல வீடுகள் இதே போல் கலை நயத்துடன் உள்ளது தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.



மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர். கட்டிலை பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்துக் கொண்டிருந்தார். கீழ் மாடியில் விருந்தினர், மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும், நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் செல்ல இயலாது என்று உருக்கமாக கூறினார். 127 அறைகளில் 60 அறைக்குள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்ற அறைகள் என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.


சுற்றுப்புறம், உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது மட்டுமல்லாது
பழமையான முல்லை, செம்பருத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு இட்டு செல்கின்றது என்றால் மிகையாகாது.

திருவனந்தபுரம் அரச பரம்பரை பிரிட்டிஷாருடன் இணக்கத்தில் கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி தருகின்றது. வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர்.



தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில் நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல் அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் என தெள்ள தெளிவாக எடுத்துரைத்தது.





மேலும் மகா ராணிகள் மன்னர் தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர் என்பதும் ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை
என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது.
பதவிக்கு என அவர்கள் குடும்பத்திற்குள் சண்டையிட்டு மடிந்ததும் ராஜ குடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய அரண்மனை வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.





அடுத்தது எங்கள் பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில் எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல் விட்டு விடுவேனா!!!!

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue Jun 12, 2012 3:31 pm

அரண்மனைக்கே சென்று பார்த்ததாய் ஒரு தோற்றம்... பகிர்விற்கு நன்றிகள் ஐயா..



எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Image00045y
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 12, 2012 6:12 pm

நன்றி.. இந்த அரண்மனை என் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தான் ஜாலி




எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 6:14 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி.. இந்த அரண்மனை என் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தான் ஜாலி
எங்க வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தான் நீ இருக்கிறாயா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 12, 2012 6:17 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி.. இந்த அரண்மனை என் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தான் ஜாலி
எங்க வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தான் நீ இருக்கிறாயா
ஹேய்.. ஹேய்.. சீக்கிரம் இவரை புடிச்சு கட்டி போடுங்கப்பா சிப்பு வருது




எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 12, 2012 6:24 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி.. இந்த அரண்மனை என் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தான் ஜாலி
உங்கள் வீடு எந்த ஊரில் உள்ளது .உங்கள் சொந்த ஊர் தில்லையாடி தானே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு 1357389எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு 59010615எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Images3ijfஎனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 12, 2012 6:29 pm

கேசவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி.. இந்த அரண்மனை என் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தான் ஜாலி
உங்கள் வீடு எந்த ஊரில் உள்ளது .உங்கள் சொந்த ஊர் தில்லையாடி தானே
இல்லையே நாகர்கோயில் தான்




எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 12, 2012 7:09 pm

ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு மேலும் சாதாரண பெண்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்று மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.

இது தானே அந்த பெண் சிலைகளில் ஒன்று ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு Kerala02

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:30 am

ஒரு சுற்றுலாவிற்கு சென்று வந்த அனுபவம் உங்கள் பதிவை வாசிக்கும் போது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 13, 2012 1:16 pm

பதிவின் மூலம் அரண்மனையை பற்றி முழுமையாக அறிய முடிந்தது..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக