ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து போன மனனம்

+3
யினியவன்
அசுரன்
மகா பிரபு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மறைந்து போன மனனம் - Page 2 Empty மறைந்து போன மனனம்

Post by மகா பிரபு Mon Jun 11, 2012 4:55 pm

First topic message reminder :

உங்க போன் நம்பரை கொஞ்சம் சொல்லுங்க... என்று நண்பரோ, தெரிந்தவர்களோ கேட்டால் உடனடியாக நம்மால் கூற முடியுமா?

ஏறக்குறைய சந்தேகம்தான். ஒரு நிமிஷம் இருங்க என்றவாறு தனது அலைபேசியைத் திறந்து அதில் எண்ணைப் பார்த்துக் கூறக்கூடிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது அலைபேசிக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இன்று இதுதான் யதார்த்தம். அந்த அளவுக்கு மனதையும், நேரத்தையும் சுருக்கிவிட்டோம். இப்படியே போனால் இந்தச் சோம்பல் நம்மை எங்கு கொண்டு போய்விடுமோ என்று தெரியவில்லை.

இன்று பல்கிப் பெருகிவிட்ட இணையதளங்கள், நவீன தொலைத் தொடர்புச் சாதனங்கள் மக்களை படுசோம்பேறியாக்கவிட்டதுடன் மெல்ல மெல்ல தங்களையே மாற்றிவிட்டது.
அண்மையில் வெளியான ஓர் ஆய்வில், இந்தியர்களுக்கு மறதி நோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. "அம்னீஷியா' என்றழைக்கப்படும் இந்த மறதி நம்மை ரொம்பவே குழப்பிவிடுகிறது.

வீட்டிலிருந்து கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபிறகு நம்மை நாமே நம்பமுடியாத நிலை ஏற்படுகிறது. மின்விசிறியை நிறுத்தினோமோ, வீட்டுக்கு பூட்டு போட்டோமா இப்படி பல்வேறு சந்தேகங்கள். அப்படி ஓர் அவசர உலகில் இயந்திரகதியாக நாம் வாழ்க்கையை ஓட்டுகிறோம்.
குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அப்படித்தான் படிக்கிறார்கள். ஆசிரியை அடிப்பாரோ, திட்டுவாரோ என்ற பயம்தான் அது. முன்பெல்லாம் புத்தகத்தைக் கரைத்துக் குடிப்பவர்கள் பலர். இன்றோ நிலைமை மாறிவிட்டது.

திருக்குறள், நாலடியார், வெண்பா, கவிதைகள் இவற்றையெல்லாம் யாராவது வாசிக்கிறார்களா அல்லது அதற்கான முயற்சியிலாவது இறங்குகின்றனரா என்றால் இல்லை.

ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்களையும், தேவாரம், திருவாசகம் போன்றவற்றையும் அக்குவேறு, ஆணிவேராக பிரித்தவர்கள் பலர். இன்றும் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்களைப்போல நாம் குழந்தைகளை வளர்க்கிறோமோ? இல்லவே இல்லை.

காரணம் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் இல்லாத விஷயங்களா? இதைப் போய் யாராவது விழுந்து விழுந்து வாசிப்பார்களா? உங்களுக்கு என்ன தகவல் வேண்டும், இணையதளத்தைத் தட்டி எழுப்பினாலே போதும். மனிதன் செய்ய வேண்டியதை இவை தாராளமாகச் செய்கின்றன.
அதனால் பிரதமர் யார், அமைச்சர்கள் யார் என்றெல்லாம் மண்டை காய வேண்டாம். இதற்காக மனனம் செய்ய வேண்டாம். அதுபோன்ற விஷயங்களை மனதில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

ஆங்கிலத் தேர்வு எழுத வேண்டுமானால் கட்டுரைகளை அர்த்தம் புரியாமலேயே மனனம் செய்து படித்தவர்கள் பலர். இப்போது அவ்வாறு யாராவது சிரமப்பட்டு வாசிக்கிறார்களா என்பது சந்தேகமே.
நாளுக்குநாள் முட்டாளாகி வருகிறோம் என்பதுதான் உண்மை. வாரியார், கிவாஜ போன்ற சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பாடல்களைப் பாடி அருமையாக விளக்கங்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பல பேச்சாளர்கள், இன்னமும் அடிபிறழாமல் கவிதைகள், செய்யுள்கள், பாடல்களை பாடுவதைக் கேட்க முடிகிறது.

காரணம் சிறுவயதில் அவர்கள் விவரம் தெரியாமலேயே முதலில் அனைத்துப் பாடல்களையும் மனனம் செய்ததுதான். நாளாக நாளாக அதன் அர்த்தங்களை உணர்ந்து பின்னர் கற்றுக் கரை தேர்ந்தனர் என்றுதான் கூறவேண்டும்.

இப்போதும்கூட சிலர் வீடுகளில் அதிகாலையிலேயே சுலோகங்கள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை வாசிக்கின்றனர். குழந்தைகளுக்கும் சொல்லித் தருகின்றனர்.

ஆக, மனனம் செய்வது என்பது தவறானதன்று. அதை மறந்து, புரிந்துகொண்டு படிக்கிறேன் பேர்வழி என்று பலர் எதுவுமே புரியாதவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் முக்கால்வாசி பேர் தேசியகீதத்தையும், கடவுள் வாழ்த்தையும் முழுமையாக வாசிக்க முடியாதவர்களாகத்தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மனப்பாடக் கல்வியை ஒழிக்க வேண்டும். செயல்வழிக் கல்வி, கற்றலின் இனிமை என்றெல்லாம் பல பெயர்களில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுகிறது.

ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும்போது அது மனதில் பதியுமாறு இருக்க வேண்டும்.
இன்று வாசிப்பே மறந்து. கேட்பது, பார்ப்பது மட்டுமே நடைமுறையில் உள்ளது.

ஆகவே மறதி நோய் வருவது என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. நாமாகவே ஞாபகசக்தியை வளர்க்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நவீன விஞ்ஞான சாதனங்கள் வந்துவிட்டதால் இதெல்லாம் தேவையில்லை என்று கருத வேண்டும்.

ஒரு வாதத்துக்காகக் கூறுவதென்றால், கணினி, தொலைக்காட்சி இவற்றுக்கான மின்சக்தி இல்லாதபோதும். அலைபேசி செயலிழக்கும்போதும் என்ன செய்ய முடியும்?

திடீரென ஒரு தொலைபேசி எண்ணைத் தேடமுடியுமா அல்லது எத்தனை பேர்தான் கையில் குறிப்பேடுகளுடன் அலைகிறார்கள். நேர்முகத் தேர்வுக்கு போகும்போது அத்தனை விஷயங்களையும் மனப்பாடமாக வைத்துக் கொண்டு சென்றதெல்லாம் ஒரு காலம்.

இப்போது அது தேவையில்லை. ஒரு கணினிக்கு முன்னே அமரவைத்து தேர்வே நடத்திவிடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் கொள்குறித் தேர்வு முறையில் விடைகளைத் தேர்வு செய்யவேண்டும்.
உண்மையில் குருட்டு அதிர்ஷ்டத்தில் தொலைக்காட்சிகளில் வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சிபோலத்தான் கதை இருக்கிறது. இதனால் மறதி என்பதை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

நிறைய வாசித்து, பொருள் அறிந்து மனதில் நிறுத்துவதே சாலச் சிறந்தது. எந்த விஷயத்தையும் திரும்பத் திரும்ப மனதில் நினைவுப்படுத்திக்கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டால் எந்த கவலையும்படத் தேவையில்லை.


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


மறைந்து போன மனனம் - Page 2 Empty மறைந்து போன மனனம்!!!

Post by சாமி Thu Jun 14, 2012 12:29 pm

(எஸ். ரவீந்திரன் நன்றி - தினமணி )

ஏற்கனவே பதிந்து இருப்பதால் என்னுடையதை நீக்கி விட்டேன்.
சாமி .


Last edited by சாமி on Thu Jun 14, 2012 2:50 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மறைந்து போன மனனம் - Page 2 Empty Re: மறைந்து போன மனனம்

Post by விநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 12:34 pm

ஏற்று கொள்ள வேண்டிய கருத்து அருமையிருக்கு


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மறைந்து போன மனனம் - Page 2 Empty Re: மறைந்து போன மனனம்

Post by e.sivakumar1988 Thu Jun 14, 2012 12:42 pm

நூறு விழுக்காடு உண்மை, இந்த மாற்றத்தை நம்மில் நாமே உணர முடிகிறது .

நல்ல பதிவு , நன்றி


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

மறைந்து போன மனனம் - Page 2 Empty Re: மறைந்து போன மனனம்

Post by மகா பிரபு Thu Jun 14, 2012 12:50 pm

இந்த பதிவு ஏற்கனவே இருக்கிறது. இரண்டும் இணைக்கப்பட்டது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறைந்து போன மனனம் - Page 2 Empty Re: மறைந்து போன மனனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum