புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
9 Posts - 39%
mohamed nizamudeen
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
1 Post - 4%
mruthun
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
4 Posts - 2%
Karthikakulanthaivel
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_lcapகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_voting_barகீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 2: சாங்கிய யோகம் !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jun 10, 2012 12:53 am

அழியும் உடம்பினுள் உறையும் ஆத்துமா அழிவற்றது !![/size]

கீதை 2:10 அப்போது கொந்தளிக்கிற சேனைகளின் மத்தியிலே சாந்தமுடன் புன்னகை பூத்த யுகபுருஷன் கிரிஸ்ணர் துக்கசாகரத்தில் மூழ்கிய அர்ச்சுணனுக்கு பின்வருமாறு உபதேசித்தார் !!

கீதை 2:11 இறைதூதர் கிரிஸ்ணர் கூறுகிறார் : பட்டறிவால் விளைந்த வார்த்தைகளையே பேசுகிறாய் அர்ச்சுணா ! நன்று ! ஆனாலும் துக்கப்பட தகுதியில்லாதைவகளுக்கு நீ அஞ்சலி செலுத்துகிறாய் !யார் ஞானம் விளைந்தவர்களோ அவர்கள் உயிரோடு இருக்கிறவர்களுக்கோ அல்லது மரித்தவர்களுக்கோ வெதும்புவதில்லை !!

கீதை 2:12 படைப்பின் துவக்கத்திலிருந்து நான் இல்லாத நேரம் இல்லை அல்லது நீயோ ஏன் இங்குள்ளோர் அனைவரும் இல்லாது போகும் நேரம் இனிமேலும் இல்லை !!

கீதை 2:13 உடலினுள் உறையும் ஆத்துமா இந்த உடம்பில் குழந்தை ; வாலிபம் மற்றும் வயோதிகத்துள் கடந்து போவதுபோல இறப்பிற்குப்பின்னும் ஆத்துமசரீரமாய் உடம்பையும் கடந்துபோகிறது ! உணர்ந்தோன் உடம்பு கடந்து போவதற்காய் தடுமாற்றம் அடைவதில்லை !!

கீதை 2:14 நிலைத்த தன்மை அற்ற ``இன்பம் மற்றும் துன்பம்`` ஆகியவற்றின் தற்காலிக இருப்பும் அல்லது சின்னாளில் இல்லாதுபோவதும் குளிர்காலமும் கோடைகாலமும் மாறிமாறி வருவது போன்றதே ! பாரத குலத்தோன்றலே ! இவைகள் புலண்களின் நுகர்சியிலிருந்து தோன்றுபவையே ! அவைகளால் உண்டாகும் பாதிப்புகளை பொருட்படுத்தாத மனநிலையை கற்றுகொள்ளவேண்டும் !!

கீதை 2:15 மனிதர்களில் சிறந்தவனே ! யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கபடாத மனநிலை உடையவனாய் இரண்டிலும் சமநிலை எய்தியவனோ அவனே விடுதலை பெற தகுதியுடையவன் !!

கீதை 2:16 உண்மையை உணர்ந்தவர்கள் நிலையற்ற பெளதீக பொருட்களுக்கு நீடிப்பும் : நிலைத்த ஆத்துமாவுக்கு முடிவும் இல்லையென்றே தீர்க்கமாய் உரைக்கிறார்கள் ! உலகம் சார்ந்தவைகள் மற்றும் உள்ளார்ந்தவைகள் இரண்டின் இயல்புகளை ஆராய்ந்தே இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள் !!

கீதை 2:17 உடல் முழுவதும் நிறைந்திருக்கும் ``ஆத்துமா அழிவற்றது `` என அறியக்கடவாய் ! அழிவற்ற ஆத்துமாவை இப்போரினால் கொல்லமுடியாது !!

கீதை 2:18 கண்டறிந்து கைப்பற்ற இயலாத உள்ளார்ந்த மனித ஆத்துமா (ஜீவாத்துமா) அழிவற்றது ! அதன் பெளதீக உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும் ! ஆகவே போரிடுவாயாக !!

கீதை 2:19 தன்னைத்தானே அழித்துக்கொள்ளவோ அல்லது அடுத்த ஆத்துமவை அழிக்கவோ ஜீவாத்துமாவாலும் முடியாது ! ஆகவே யார் பிறரை கொல்லுவோம் அல்லது பிறரால் கொல்லப்படுவோம் என நினைக்கிறார்களோ அவர்கள் அறிவீணர்களே !!

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

கீதை 2:21 பார்த்தா ! ஆத்துமா அழிவற்றது ; நித்தியமானது :பிறப்புஇறப்பை கடந்தது ; கட்டிவைக்கபட முடியாதது என்பதை உணர்ந்த ஒருவன் ``கொல்லுவது கொல்லப்படுவது`` என்பதை கடந்துவிடுகிறான் !!

கீதை 2:22 ஒரு மனிதன் பழைய ஆடைகளை களைந்து புதிய ஆடைகளை அணிந்துகொள்ளுவது போல புதியபுதிய உடல்களாக பரிணமித்துகொள்ளுகிறது ; தளர்ந்து பயனற்று போன உடலை விட்டுவிடுகிறது !!

கீதை 2:23 ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டமுடியாது ! தீயினால் எரிக்கமுடியாது ; தண்ணீராலும் பதப்படுத்தமுடியாது அல்லது காற்றினாலும் பறக்கடிக்க முடியாது !!

கீதை 2:24 அனைத்துமாகிய பரமாத்துமாவோ பிரித்துபார்க்க முடியாதது ; சாம்பலாக்கவோ கரைக்கவோமுடியாதது ; உலர்ந்தும் போகாதது !பரமாத்துமா முடிவே இல்லாதது ; எங்கும் நிறைந்தது ; மாற்றமடையாதது ; அகன்றுபோகாதது !!
கீதை 2:25 ஆத்துமா கண்ணால் காணமுடியாதது ; ஒடுக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாதது ! இவற்றை அறிந்தபின்பு லெளகீக உடலுக்காய் ஏன் துக்கபடவேண்டும் ?

கீதை 2:26 போரில் வல்லவனே ! ஆத்துமா பிறக்கிறது அழிகிறது என நம்பிக்கொண்டிருந்ததாலேயே உனக்கு இந்த துக்கம் உண்டாகிறது !!

கீதை 2:27 இப்பிறவியின் உடல் நிச்சயம் அழிந்தே தீறும் ! ஆத்துமாக்கள் இப்பிறவிக்கு பிறகு அடுத்த யுகத்தில் பிரவேசிக்கின்றன ! ஆகவே உன் மேல் வந்த கடமைகளை நிறைவேற்ற துக்கம் கொள்ளாதே !!

கீதை 2:28 எல்லா படைப்பிணங்களும் படைப்பவரால் வெளிப்படுத்தபடாதபோது இல்லாதவைகளைப்போல இருந்தவைகளே ! தற்காலிகமாக வெளிப்படுத்தபட்டு இருப்பவைகளைப்போல செயல்படுபவைகளே ! முடிவில் அழிவடைந்து இல்லாதவைகளைப்போல ஆவைகளே ! ஆகவே எவைகளுக்காய் துக்கபட என்ன இருக்கிறது ?

கீதை 2:29 சிலர் மட்டுமே அற்புதமான ஆத்துமாவை அறிந்து கொள்ளுகிறார்கள் ! சிலர் அற்புதமான ஆத்துமாவை பற்றி பேசிக்கொண்டு மட்டுமே உள்ளனர் ! சிலரோ கேள்விப்பட்டு மட்டுமே உள்ளனர் ! ஆனால் பலரோ எதுவுமே அறியாதவராகவே உள்ளனர் !!

கீதை 2:30 அழியும் உடலில் உறையும் ஆத்துமா அழிவற்றது ! ஆகவே அர்ச்சுணா ! எவருக்காகவும் நீ துக்கபட வேண்டிய அவசியமில்லை !!

[size=18]தர்மத்திற்கான யுத்த களம் மறுமையில் மேன்மைக்கான கதவு !!


கீதை 2:31 சத்திரியனுக்கு நியமிக்க பட்ட தனித்த கடமை என்ற அளவில் தர்மத்திற்காக போரிடுவதை விட மேலான வேறு பொறுப்புகள் ஏதுமில்லை ! ஆகவே நீ தயங்குவதற்கு முகாந்தரமில்லை !!

கீதை 2:32 அப்படிப்பட்ட யுத்த களம் வாய்க்குமென்றால் அதற்காக ஆத்மதிருப்தி கொள்ளும் சத்திரியர்கள் இருப்பார்கள் பார்த்தா ! ஏனெனில் மறுமையில் மேன்மைக்கான கதவு திறக்கப்பட்டதை அறிந்து உவகை அடைவார்கள் !!

கீதை 2:33 தர்மத்திற்காக போரிடுவதை தட்டிகளித்தால் கடமை தவறிய குற்றத்திற்கு ஆளாவதோடு போர்வீரன் என்ற கீர்த்தியையும் இழப்பாய் !!

கீதை 2:34 உலகோர் உன் இயலாமையை இகழ்வர் ! அத்தகைய அவப்பெயரை விட மதிப்புள்ளவருக்கு மரணமே மேலானது !!

கீதை 2:35 உனது பேரையும் புகழையும் கொண்டாடும் யுத்த வீரர்களின் தலைவர்கள் நீ பயந்து யுத்த களத்தை விட்டு ஓடியதாகவே நினைப்பர் ! அதனால் உன்னை கோழை என்பதாக முடிவு செய்வர் !!

கீதை 2:36 உனது எதிரிகள் வாய்க்கு வந்த படி வர்ணித்து சொல்லத்தகாத வார்த்தைகளால் இகழ்வர்! அதனை காட்டிலும் வேறு என்ன மனநோவு வரும் ?

கீதை 2:37 குந்தியின் மகனே ! ஒன்று தர்மத்திற்காக யுத்த களத்தில் கொல்லப்பட்டால் மறுமையில் மேன்மையை அடைவாய் ! அல்லது போரில் வென்று உலக அரச போகத்தையும் அனுபவிப்பாய் ! ஆகவே மனதிடத்தோடு எழுந்து நின்று போரிடுவாயாக !!

கீதை 2:38 இன்பதுன்பம் ; லாப நட்டம ; வெற்றி தோல்வி என்ற இருமைகளை கடந்து செயலுக்காக செயல் புரியும் மன நிலையில் போருக்காக போர் செய்க ! அப்படி செயல்பட்டால் பாவம் உன்னை பற்றாது !!

மனச்சம நிலையில் செயலாற்றுவதே யோகம் !!

கீதை 2:39 இதுவரை பவ்தீக பொருட்களின் அடிப்படையில் இந்த மெய் அறிவை உனக்கு உபதேசித்தேன் ! இப்போதோ பலன் விளைவில் பற்று கடந்த வேள்வியைப்பற்றி உனக்கு உபதேசிக்கிறேன் ! பிரதாவின் மகனே ! அந்த அறிவில் நிலைத்து நின்று செயல்பட்டால் கர்மங்களால் உண்டாகும் தளைகளை தகர்த்து சுதந்திரமடைவாய் !!

கீதை 2:40 இந்த வேள்வியில் இழப்போ அல்லது குறைச்சலோ ஏற்படாது !மாறாக இவ்வழியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஒருவன் அதி பயங்கரமான பயத்தையும் கடந்து விடுவான் !!

கீதை 2:41 இவ்வழியில் நடப்போர் தங்கள் இலக்கில் தெளிவடைந்து ஒரே நோக்கத்திற்காய் செயல்படுவர் ! குருவம்சத்தில் சிறந்தவனே ! இலக்கில் தெளிவில்லாதவர்களின் அறிவுத்திறனோ பல பல வாய்க்கால்களில் வடிந்து போகும் !!

கீதை 2:42 ஆழ்ந்த அறிவற்றவர்கள் லோகாதாய பக்தி மார்க்கங்களின் ஜால வார்த்தைகளை வேதமென நம்பி அதன் பால் கவரப்படுகிரார்கள் ! அது வசதியையும் வாய்ப்பையும் அதிகாரத்தையும் ஆட்சியையும் அடைவதற்கு வாக்களித்து அதன் மூலம் உயர்ந்த லோகத்தையும் அடைந்துவிடலாம் என நம்ப வைக்கிறது !

கீதை 2:43 ஆடம்பரமான வாழ்வையும் புலனின்பங்களை அனுபவிப்பதையுமே விரும்பி இதை விட மேலான சம்பத்து வேறு என்ன வேண்டும் என கூறிக்கொள்கின்றனர் !!

கீதை 2:44 புலனின்பங்களையும் டாம்பீக வாழ்வையும் அதனால் சுயபெருமையும் அடைந்தவர்கள் அந்த வழியில் மனம் லயித்ததனால் உன்னதமான் கடவுளுக்கு உள்ளார்ந்த பக்தி -இறைஅன்பு புலப்படாமலேயே போகின்றனர் !!

கீதை 2:45 தாமச, ரஜோ மற்றும் சத்வம் எனும் மூவகை குணங்களிலிருந்து பிறக்கும் அண்ணமயம், மனோமயம் ,மற்றும் விஞ்ஞானமயம் என்ற மூவகை கோஷங்களின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அந்த லோகாயாத வேதங்கள் வழிகாட்டுகின்றன ! அர்ச்சுனா ! இந்த மூன்றையும் கடந்து மெய்ஞானமய கோஷத்தில் நுழைந்தால் எல்லாவகையான் இருமைகளின் தாக்கத்தை கடந்து ; வெற்றி தோல்வி வேட்கையை களைந்து பரிபூரணத்தில் தன்னில்தானே மகிழ்ந்திருப்பாய் !!

கீதை 2:46 பெரிய ஏரியால் கிடைக்கும் அனுகூலங்கள் எல்லாம் ஒரு கிணற்றிலிருந்தும் அடையப்பெறும் ! அதுபோல லோகாயாத வேதங்கள் அனைத்தினதும் அனுகூலங்கள் எல்லாம் அதனை கடந்த மெய்ஞானத்தை அடைந்தவனுக்கும் உண்டாகும் !!

கீதை 2 :47 உனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்வதற்கு மட்டுமே உரிமை உண்டு ; ஆனால் செயல்களின் பலன்களின் மேல் உனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை ! எப்போதும் உனது செயல்களின் விளைவுகளுக்கு நீ காரணன் என்று எண்ணாதே ; அதற்காக கடமைகளை தட்டிகழிக்கவும் உன்னை ஆட்பாடுத்தாதே !!

கீதை 2 :48 வெற்றி தோல்வியின் மீது உள்ள பற்றுதல்கள் ஒழித்து விட்டு மன சமநிலையோடு உனது கடமைகளை செய்து வருவாயாக ! அர்ச்சுனா ! அந்த சம நிலையே யோகம் என்பதை அறிக !!

கீதை 2 :49 தனஞ்சய ! லோகாயாத செயல்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து :கடவுளையே சரனாகதியடைத்து அவருக்கு பக்தி தொண்டாக கருதி உன்மேல் வந்த கடமைகளை செய்து வருவாயாக ! அவ்வாறில்லாமல் பலன்களை அனுபவிக்கும் நோக்கில் செயல்படுவோர் துன்பத்தையே அடைவர் !!

கீதை 2 :50 யார் ஞானம் முதிர்ந்த பக்தி தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்களோ அவர்கள் இவ்வுலக வாழ்விலேயே நன்மையான செயல்கள் அல்லது தீமையான செயல்கள் என்ற பேதத்தை கடந்து சுதந்தரமடைவர் ! ஆகவே அத்தகைய யோகத்தில் நிலைக்க பெருமுயற்சி செய்க ! அதுவே செயல்களில் சிறந்த செயலாகும் !!

கீதை 2:51 இவ்வாறான மெய்ஞான பக்தியின் மூலம் உன்னதமான கடவுளுக்கே தொண்டாற்றி மகரிஷிகளும் நல்லடியார்களும் உலகியல் வாழ்வில் கர்மங்களின் தளைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்கிறார்கள் ! இப்பாதையில் நடப்பதால் எல்லாவகையான பிரவிப்பினியை வெல்லும் தகுதியடைந்து நித்திய ஜீவனுக்கு ஏதுவாகிறார்கள் !!

கீதை 2:52 மாயைகள் என்னும் அடர்ந்த வனத்தை உன் அறிவுத்திறன் கடந்து விட்டால் ; உலகம் அறிந்ததைதையும் இனிமேல் அறியப்போவதையும் விஞ்சிய நிலையடைவாய் !!

கீதை 2:53 எப்போது உன் மனம் லோகாயாத வேதங்களின் ஜால வார்த்தைகளால் மயங்காத நிலையடைகிறதோ ; தன்னை உணர்ந்து பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதில் நிலைத்து நின்றுகொண்டே இருக்கிறதோ அப்பொழுதே நீ தெய்வீக உணர்வில் -மெய்ஞானமய கோஷத்தில் திளைக்க முடியும் !!


கீதை 2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?

ஆத்தும விடுதலை !!

கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!

கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!

கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!

கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!

கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் துலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபரிபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்துமபரிபூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர ஆத்துமா ; கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!


கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை ! தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!

கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!

கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை உண்டாகிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை வளர்க்கிறது !!

கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!

கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!

கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது ! ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !!

தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதை !!

கீதை 2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன் ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை ! இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த சந்தோசமும் நிலைப்பதில்லை !!

கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!

கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!

கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!

கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!

கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!

கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!

http://www.godsprophetcenter.com/index_5.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக