Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
+4
கா.ந.கல்யாணசுந்தரம்
நாகசுந்தரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )
எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.
1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.
சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)
எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.
1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.
சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)
Last edited by சாமி on Sat Jun 09, 2012 1:30 pm; edited 2 times in total
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
மிகவும் அருமை சாமி...புதிதாகத் தெரிந்துகொண்டேன்...மேலும் தொடருங்கள்...விரும்பினேன் இந்த நல்ல பதிவை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
மிகவும் நன்று ! தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ! பதிவுக்கு நன்றி !
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
மிக சிறந்த பதிவு, தகவல்கள். நன்றிகள் பல.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
அருமையான விளக்கம் சாமி ! தொடருங்கள் !!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
2. வரம்பில்லாத ஆற்றல் உடைமை:- ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.
3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.
(தொடரும்)
3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.
(தொடரும்)
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
நன்று சாமி...தொடருங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
4. இயற்கை உணர்வினன் ஆதல்: அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.
5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.
(தொடரும்)
5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.
(தொடரும்)
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
6. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்: அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்” என்பது தொல்காப்பியம்.
ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.
(தொடரும்)
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்” என்பது தொல்காப்பியம்.
ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.
(தொடரும்)
Re: கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?
அனைத்தும் அருமை ஐயா எனது விருப்பபொத்தானை பாவித்தேன் மேலும் தொடருங்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
» கடவுளுக்கு பயப்படுவது ஏன்?
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
» கடவுளுக்கு ஒரு கடிதம்!
» கடவுளுக்கு ஒரு மின்னஞ்சல் ..!
» கடவுளுக்கு பயப்படுவது ஏன்?
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
» கடவுளுக்கு ஒரு கடிதம்!
» கடவுளுக்கு ஒரு மின்னஞ்சல் ..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|