Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
+3
மகா பிரபு
இரா.பகவதி
சாமி
7 posters
Page 1 of 1
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
பூசை அறையில் மணை போட்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்க.
வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.
நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.
பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.
பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.
இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.
பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.
தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.
தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.
காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.
(தொடரும்)
வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.
நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.
பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.
பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.
இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.
பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.
தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.
தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.
காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.
(தொடரும்)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
ஆஹா திருநீர் புசுவதில் இவ்வளவு விடயம் உள்ளதா பகிர்விற்கு நன்றி சாமி அய்யா
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
நன்றி சாமி..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
திருநிரின் மகிமையை அறியதந்த உங்களுக்கு எல்லா வளமும் நிறையட்டும்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
பின்னர் பதாகை முத்திரையால் (அதாவது திருநீறு உள்ள இடது உள்ளங்கையை வலது உள்ளங்கையால் மூடுதல்) மூடி வரும் கலை மந்திரங்களை ஓதுக.
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!
அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!
இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!
இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.
பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.
“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.
இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)
பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!
அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!
இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!
இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.
பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.
“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.
இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)
பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
மிக நல்ல பதிவு மற்றும் அறிவுக்கு பயனளிக்கும் முக்கிய பதிவு இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் பயனுள்ள thakaval
arsvasan16- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 05/06/2012
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே , இப்போ தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன்
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
அருமையான விளக்கம். நன்றி சாமி!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Similar topics
» திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” :
» திருநீறு!
» திருநீறு விளக்கம்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» திருநீறு..!
» திருநீறு!
» திருநீறு விளக்கம்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» திருநீறு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|