Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
+3
மகா பிரபு
இரா.பகவதி
சாமி
7 posters
Page 1 of 1
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
பூசை அறையில் மணை போட்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்க.
வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.
நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.
பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.
பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.
இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.
பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.
தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.
தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.
காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.
(தொடரும்)
வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.
நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.
பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.
பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.
இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.
பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.
தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.
தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.
காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.
(தொடரும்)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
ஆஹா திருநீர் புசுவதில் இவ்வளவு விடயம் உள்ளதா பகிர்விற்கு நன்றி சாமி அய்யா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
நன்றி சாமி..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
திருநிரின் மகிமையை அறியதந்த உங்களுக்கு எல்லா வளமும் நிறையட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
பின்னர் பதாகை முத்திரையால் (அதாவது திருநீறு உள்ள இடது உள்ளங்கையை வலது உள்ளங்கையால் மூடுதல்) மூடி வரும் கலை மந்திரங்களை ஓதுக.
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!
அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!
இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!
இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.
பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.
“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.
இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)
பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!
அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!
இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!
இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.
பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.
“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.
இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!
பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)
பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
மிக நல்ல பதிவு மற்றும் அறிவுக்கு பயனளிக்கும் முக்கிய பதிவு இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் பயனுள்ள thakaval
arsvasan16- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 05/06/2012
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?
அருமையான விளக்கம். நன்றி சாமி!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” :
» திருநீறு!
» திருநீறு விளக்கம்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» திருநீறு..!
» திருநீறு!
» திருநீறு விளக்கம்
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» திருநீறு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|