ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 46 of 76 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 10:20 am

குறள் வெண்பா : ௦௬௬ (066)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Deathiq

விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே


விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே

நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்

கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை

எதுகை : விதியைநீ; விதிதனை

மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா

ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Sun Aug 05, 2012 12:34 pm

வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 12:48 pm

நாகசுந்தரம் wrote:வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு

வாருங்கள் சுந்தரனார் வந்ததற்கு நன்றிசொல்வேன்
தாருங்கள் தண்டமிழ்வெண் பா


மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Sun Aug 05, 2012 5:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௬௬ (066)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Deathiq

விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே


விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே

நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்

கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை

எதுகை : விதியைநீ; விதிதனை

மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா

ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

அழகான திருக்குறள் அய்யா.... சூப்பருங்க


சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by மகா பிரபு Sun Aug 05, 2012 5:43 pm

அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..

சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 06, 2012 8:19 am

சதாசிவம் wrote:
அழகான திருக்குறள் அய்யா.... சூப்பருங்க
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் மகிழ்ச்சி ...குறள் வெண்பா என்பதே சாலச்சிறந்தது. நமது குறள்களை திருக்குறளோடு ஒப்பிடுவது முறையாமோ? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 06, 2012 8:24 am

மகா பிரபு wrote:
அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..
சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 06, 2012 8:35 am

குறள் வெண்பா : ௦௬௭ (067)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Sernthusaappituvom

ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி
நன்றாய் நசிந்தே நலிவு


ஒன்/றா/க - உண்/ணுகி/றார் - ஒர்/சா/ரார் - ஊ/ணின்/றி
நன்/றாய் - நசிந்/தே - நலி/வு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமா – புளிமா – பிறப்பு

1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ன்றாக; ன்றாய்

மோனை : ன்றாக ண்ணுகிறார் ர்சாரார் ணின்றி;
ன்றாய் சிந்தே லிவு

ஈற்றுச்சீர் : நலிவு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படங்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இரு படங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள்.

முழுவதும் முற்றுமோனையில் இக்குறளை யாத்துள்ளேன். இருவேறு துருவங்களை சுட்டுவதாக இக்குறள் அமைத்துள்ளது கண்கூடு. உண்டு கொழுத்து உடல் வளர்ப்போர் ஓரிடம். உண்பதற்கு உணவேஇன்றி உபாதையில் உழல்வோர் ஓரிடம். “ஒருசாரார்” என்பதுவே இக்குறளின் தலையாய ஒரு சொல்லாகும். இருபுறம் இச்சொல்லை சேர்த்து படிக்க, முழுப் பொருள் வருவது காண்க. அதாவது, “ஒன்றாக உண்ணுகிறார் ஒருசாரார், ஒருசாரார் ஊணின்றி நன்றாய் நசிந்தே நலிவு” என வாசிக்கவும்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Mon Aug 06, 2012 3:51 pm

அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா,

இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.


உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு


உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.


சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by மகா பிரபு Mon Aug 06, 2012 9:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள். மகிழ்ச்சி
தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

இயற்றுகிறேன் இனிய குறளை தங்களின்
இதமான வழிகாட்ட லோடு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 46 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 46 of 76 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum