Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 35 of 76
Page 35 of 76 • 1 ... 19 ... 34, 35, 36 ... 55 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௪௮(048)
தென்னையில் தோன்றிடுமிச் சீர்வட்டம் கண்டேதான்
பின்னினனோ சக்கரத்தை பீடு
பீடு = பெருமை, வலிமை, செருக்கு
தென்/னையில் - தோன்/றிடு/மிச் - சீர்/வட்/டம் - கண்/டே/தான்
பின்/னின/னோ - சக்/கரத்/தை - பீ/டு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : தென்னையில்: பின்னினனோ
மோனை : தென்னையில் – சீர்வட்டம்; பின்னினனோ – பீடு
ஈற்றுச்சீர் : பீடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
சக்கரம்தான் ஆதி மனிதன் முதல் முதலாகக் கண்டுபிடித்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கி மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மெசபடோமியாவில் சக்கரம் இருந்துள்ளது என்று அகழ்வாய்வு அறிஞர்கள் கூறுகின்றார்கள். இந்துமத புராணங்களில் பல்வேறு சக்கரங்கள் குறித்த செய்திகள் நிறைய இருக்கின்றன. எனக்கென்னவோ, தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும் நோக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒருவன், மேல் நோக்கிப் பார்க்க, மட்டைகளின் ஒழுங்கையும், அவைகள் விரிந்திருக்கும் அழகையும், நடுவில் சேர்ந்திருக்கும் நேர்த்தியையும் கண்டு வியந்திருப்பான். அதுவே அவன் சக்கரத்தை கண்டுபிடிக்க எதுவாக இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. (சும்மா...ஒரு கற்பனை!!! இன்று தம்பி இராமனின் ஒரு குறளை பதிவு செய்ய வேண்டும் என்று இருந்தேன். சீர்/அசை பிரிக்க நேரமில்லை. எனவேதான் முன்பே செய்து வைத்திருந்த எனது ஒரு குறளைப் பதிந்துள்ளேன் !)
இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அய்யா, தங்களின் அழகான கற்பனை கண்டவுடன் கண்ணதாசனின் "பறவையை கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில் படகினைக் கண்டான்" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. மனிதன் பல பொருள்களை இயற்கையிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறான். மிகவும் அருமை.
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தென்னையில் தோன்றிடுமிச் சீர்வட்டம் கண்டேதான்
பின்னினனோ சக்கரத்தை பீடு
அருமையான கற்பனை ஐயா.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௪௮(048)
தென்னையில் தோன்றிடுமிச் சீர்வட்டம் கண்டேதான்
பின்னினனோ சக்கரத்தை பீடு
பீடு = பெருமை, வலிமை, செருக்கு
தென்/னையில் - தோன்/றிடு/மிச் - சீர்/வட்/டம் - கண்/டே/தான்
பின்/னின/னோ - சக்/கரத்/தை - பீ/டு
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : தென்னையில்: பின்னினனோ
மோனை : தென்னையில் – சீர்வட்டம்; பின்னினனோ – பீடு
ஈற்றுச்சீர் : பீடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
சக்கரம்தான் ஆதி மனிதன் முதல் முதலாகக் கண்டுபிடித்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கி மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மெசபடோமியாவில் சக்கரம் இருந்துள்ளது என்று அகழ்வாய்வு அறிஞர்கள் கூறுகின்றார்கள். இந்துமத புராணங்களில் பல்வேறு சக்கரங்கள் குறித்த செய்திகள் நிறைய இருக்கின்றன. எனக்கென்னவோ, தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும் நோக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒருவன், மேல் நோக்கிப் பார்க்க, மட்டைகளின் ஒழுங்கையும், அவைகள் விரிந்திருக்கும் அழகையும், நடுவில் சேர்ந்திருக்கும் நேர்த்தியையும் கண்டு வியந்திருப்பான். அதுவே அவன் சக்கரத்தை கண்டுபிடிக்க எதுவாக இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. (சும்மா...ஒரு கற்பனை!!! இன்று தம்பி இராமனின் ஒரு குறளை பதிவு செய்ய வேண்டும் என்று இருந்தேன். சீர்/அசை பிரிக்க நேரமில்லை. எனவேதான் முன்பே செய்து வைத்திருந்த எனது ஒரு குறளைப் பதிந்துள்ளேன் !)
இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.
அருமை என்ற வார்த்தையை விட உயர்ந்த வார்த்தை இந்த குறளுக்கான என் பின்னூட்டம் ஐயா.....மிக பிரமாதமான கற்பனை ஐயா.....மிக்க வியந்தேன் இக்குறளை படித்து........
வியக்கும் வகையில் விரிக்கின்றீர் பாவை
மயங்குகிறேன் உம்புலமை கண்டு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சதாசிவம் wrote:
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
அருமை ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
உணமைதான் தம்பி, இக்குறளை எழுதும்போது நான் கண்ணதாசனின் அந்தப்பாடலை நினைத்துக்கொண்டேன். உங்களின் குறள் அருமை.சதாசிவம் wrote:அய்யா, தங்களின் அழகான கற்பனை கண்டவுடன் கண்ணதாசனின் "பறவையை கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில் படகினைக் கண்டான்" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. மனிதன் பல பொருள்களை இயற்கையிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறான். மிகவும் அருமை.
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
சந்திரகி wrote:அருமையான கற்பனை ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தென்னையில் தோன்றிடுமிச் சீர்வட்டம் கண்டேதான்
பின்னினனோ சக்கரத்தை பீடு
மிகவும் நன்றி சந்திரகி avargaleசந்திரகி wrote:சதாசிவம் wrote:
ஆழியுறைப் பாய்மீனில் ஆள்படகை, கண்டானா
ஆழியைத் தென்னையைப் பார்த்து
ஆழி - கடல்
ஆழி -சக்கரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி தம்பிபிஜிராமன் wrote:
அருமை என்ற வார்த்தையை விட உயர்ந்த வார்த்தை இந்த குறளுக்கான என் பின்னூட்டம் ஐயா.....மிக பிரமாதமான கற்பனை ஐயா.....மிக்க வியந்தேன் இக்குறளை படித்து........
வியக்கும் வகையில் விரிக்கின்றீர் பாவை
மயங்குகிறேன் உம்புலமை கண்டு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௪௯(049)
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்
சோற்/றுக்/கற் - றா/ழையாம் - சொட்/றொன்/று - போ/துமாம்
ஆற்/றுமாம் - தீக்/கா/யம் - அஃ/து
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளம் – தேமாங்காய் – கூவிளம்
கூவிளம் – தேமாங்காய் – காசு
எதுகை : சோற்றுக்கற்; ஆற்றுமாம்
மோனை : சோற்றுக்கற் – சொட்றொன்று; ஆற்றுமாம் – அஃது
ஈற்றுச்சீர் : அஃது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று சொல்வதைப்போல சோற்றுக் கற்றாழையின் ஒரு பயனைக்குறித்து இக் குறளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாக எழுத ஆரம்பித்தால் குறைந்தது ஒரு நூறு குறளாவது எழுதவேண்டி இருக்கும். மேலும் அறிந்துகொள்ள விரும்புவோருக்கு, சோற்றுக் கற்றாழை என்று கூகுள் செய்தால் போதும். படத்திற்கும் கட்டுரைக்கும் கூகுளுக்கு நன்றி சொல்வோம்.
சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது
வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி
தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.
சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.
இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.
தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .
சிறந்த மலச்சிக்கல் போக்கி.
ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.
கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.
அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.
வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.
சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Jul 19, 2012 5:56 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 35 of 76 • 1 ... 19 ... 34, 35, 36 ... 55 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 35 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|