Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 23 of 76
Page 23 of 76 • 1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?
அய்யா மன்னிக்கவும் இனி சிமிளிகளை குறைத்து வார்த்தைகளை உபயோகிக்கிறேன்
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நான் சிமிலிகள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை தம்பி பகவதி. அத்துடன் ஒரு இரண்டொரு வார்த்தைகள். அவ்வளவுதான் . நன்கு தமிழ்ப் படித்த, யாப்பறிந்த கவிஞர்கள், பள்ளியில் ஆசிரியராக, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆக உள்ளவர்களே இந்தத் திரிக்கு வர விரும்பவில்லை என்ற நிலையில், நீங்கள் அடிக்கடி வருகிறீர்களே அதுவே பெரிய காரியம். அதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வாருங்கள்.இரா.பகவதி wrote:நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?
அய்யா மன்னிக்கவும் இனி சிமிளிகளை குறைத்து வார்த்தைகளை உபயோகிக்கிறேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நாடு
ஐயா வழி காட்டுதலுக்கு நன்றி. நாடு என்று முடிந்தால் சரி யென நினைக்கிறேன்.
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் சரி...நாகா அவர்களே... உங்களின் சரியான புரிதலை நான் பாராட்டுகின்றேன்.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே.naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
நோட்டுக்கள் நாடாது நாடு
ஐயா வழி காட்டுதலுக்கு நன்றி. நாடு என்று முடிந்தால் சரி யென நினைக்கிறேன்.
பாட்டுக்கள் பா/டுவதை பா/தையாய்ப் போ/ட்டிட்டால்
நோ/ட்டுக்கள் நா/டாது நா/டு
மேலே குறித்தபடி பார்த்தால், பாட்டுக்கள் என்ற மூவாசை காய்ச்சீருக்கு அடுத்து பா என்று நேரில் துவங்குவதையும்; பாடுவதை என்ற காய்ச்சீருக்கு அடுத்து பா என நேரில் துவங்குவதையும்; பாதையாய் என்ற காய்ச்சீருக்கு அடுத்து போ என்று நேரில் துவங்குவதையும்; போட்டிட்டால் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நோ என்று நேரில் துவங்குவதையும்; நோட்டுக்கள் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும்; நாடாது என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும் காண்கின்றீர்கள். எல்லாமே காய்ச்சீர் ஆக நீங்கள் தேர்ந்து எடுத்துள்ளதால் இது முழுவதும் வெண்சீர் வெண்டளையால் வந்துள்ளது. பாட்டுக்கள் என்ற முதல் சீருக்கு இரண்டாம் அடியில் நோட்டுக்கள் என்று வந்ததால் எதுகை சிறப்பாக அமைந்துள்ளது. அவ்வாறே முதலடியில் மோனையும் அழகாய் அமைந்துள்ளது. நாடு என்று நீங்கள் முடித்துள்ளதால், காசு என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது. ஆக, ஒரு குறள் வெண்பாவை மிகவும் சிறப்பாக எழுதி முடித்துள்ளீர்கள் என் பாராட்டுக்கள்.
இதற்கு அடுத்து மிக முக்கியமான ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, நீங்கள் மனதில் எண்ணியதை, சொல்லவந்த கருத்தை, இந்தக் குறள் அப்படியே பிரதிபலிக்கிறதா அல்லது நீங்கள் நினைத்த உட்கருத்து முடிவில் மாறிவிட்டதா? என்பதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். எதுகை, மோனை, இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, ஓரசை ஈற்றுச்சீர் என்று எல்லா இலக்கணத்தையும் பார்த்து கடைசியில் நீங்கள் சொல்லவந்த கருத்து மாறி விட்டால் அந்தக் குறளில் ஒரு பயனும் இருக்க முடியாதல்லவா?! எழுதி முடித்த ஒரு குறளைப் பார்த்து, படித்து மூன்றாவது ஒருவர் அதைச் சரியாகப் புரிந்துகொண்டால், அவரின் விளக்கம் உங்களின் எண்ணத்தின் படி ஒத்துப்போகும் போதுதான் நீங்கள் எழுதும் குறள் சரியாக வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து எழுதிவரும்போது இந்தப் பிரச்சனை சரியாகி விடும். எனவே குழப்பமடைய வேண்டாம் நாகா அவர்களே.
அடுத்து நீங்கள், ஈற்றுச்சீர் என்பதைக்குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். அது, நாள், மலர், காசு , பிறப்பு என்று வாய்பாட்டில் ஒன்றில் தான் முடியவேண்டும். அது குறித்து பின்பு எழுதுகிறேன். தொடர்ந்து முயலுங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௩௪ (034)
நட்புக்கு நல்விளக்கம் நானென்றே நற்க்கிளையில்
உட்கார்ந் துதவும் குரங்கு
நட்/புக்/கு – நல்/விளக்/கம் – நா/னென்/றே – நற்க்/கிளை/யில்
உட்/கார்ந் – துத/வும் – குரங்/கு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
எதுகை : நட்புக்கு; உட்கார்ந்
மோனை : நட்புக்கு – நல்விளக்கம் – நானென்றே - நற்க்கிளையில்
ஈற்றுச்சீர் : குரங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் 'தடோபா விலங்குகள் சரணாலயம்' உள்ளது. இது தேக்கு, சால் மரங்களால் ஆன அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும். வருடாவருடம், ஏப்பிரல், மே மாதங்களில் கடுமையான வறட்சி நிலவும். அப்போது தரையில் உள்ள புற்களும் பூண்டுகளும் முற்றிலும் காய்ந்து போய் விடும். மான்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படும். அப்போது அங்குள்ள லங்கூர் இன கருங்குரங்குகள் இந்த மான்களுக்கு உதவி செய்யும். ஒரு மரக்கிளையில் அமர்ந்து இந்த குரங்குகள் அதை வளைத்து தரையை நோக்கி தாழ்த்தும். அப்போது மான்கள் பச்சை இலைகளை பறித்துத் தின்னும். சிறிய மான் குட்டிகளுக்கு எட்டவில்லை என்றால், குரங்கே இலையைப் பறித்து தரையில் வீசும். வருடா வருடம் இந்த உறவு தொடர்த்துகொண்டே உள்ளது. என்னே குரங்குகளின் மனிதநேயம். வியப்பில் ஆழ்த்துகிறது. இப்படத்தை எடுத்தவர், எனது அருமை நண்பர் Dr அருண் சதுர்வேதி அவர்கள். நாக்பூரில் வசிக்கிறார்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அழகு
முகமதை மிளிராக்க மேலிட்டாய் மூலிகை
அகமதை அழகாக்க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
முகமதை மிளிராக்க மேலிட்டாய் மூலிகை
அகமதை அழகாக்க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நேற்று, காய்ச்சீர் வரும்போது அடுத்து துவங்கும் சீர் நேரில் இருக்கவேண்டும் என்று பார்த்தீர்கள். அவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை என்றும் கண்டீர்கள். இன்று இயற்ச்சீர் வெண்டளை என்றால் என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஈரசைச் சீர்கள் நான்கு...தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்று தெரிந்திருப்பீர்கள். ஒரு சொல் நேரில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நிரையாக இருத்தல் வேண்டும். மாறாக, ஒரு சொல் நிரையில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நேராக இருத்தல் வேண்டும். இப்படி மாறி வருவது இயற்ச்சீர் வெண்டளை எனப்படும். உதாரணம்:naka wrote:அழகு
முக/மதை மிளி/ராக்/க மே/லிட்/டாய் மூ/லிகை
அக/மதை அழ/காக்/க அறி
(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
"அன்பும் அறனும் அகிலம் முழுதுமே
என்பும் .......... .......... ........."
இயற்ச்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து வருமாறு வெண்பாக்களை அமைத்தல் சிறப்பு.
முதலில், ஓரசைச்சீர், ஈரசைச்சீர், முவசைச்சீர் என்றால் என்ன அவற்றை எவ்வாறு அசை பிரிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். " மரபுப் பா பயிலரங்கம்" திரியில் இவை மிகவும் எளிமையாக சொல்லப்பட்டு இருக்கிறதே?!! தவறாமல் படியுங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : ௦௩௫ (035)
வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து
வாழ்/க - மண/மக்/கள் - வை/யத்/துள் - வாழ்/வாங்/கு
சூழ்/கவே - சுற்/றம் - தொடர்ந்/து
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமா – புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு
எதுகை : வாழ்க; சூழ்கவே
மோனை : வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு;
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து
ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இன்று நமது ஈகரை உறவு , நிர்வாகக்குழு உறுப்பினர், தம்பி மகாபிரபுவின் திருமண வைபவம் இனிது நடைபெறுகிறது.
அவ்வாறே நமது உறவு , ஈகரையின் சிறப்புக் கவி, அருமைத் தம்பி பி.ஜி. ராமனின் அக்காவின் திருமணமும் சிறப்புற நடைபெறுகிறது.
இவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 23 of 76 • 1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு திருக்குறள் யாப்போம்
» எங்கே போச்சு "தினம் ஒரு குறள் , தினம் ஒரு தகவல்"
» தினம் ஒரு குறள்
» தினம் ஒரு குறள்
Page 23 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|