புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_m10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_m10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_m10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_m10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_m10வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 8:29 pm

இத்தனை ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நாமெல்லாருமே ஒரு வகையில் காரணம்தான்.

ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?

கொடுங்கோலை எதிர்த்துப் போராடும் மக்களை பாதுகாப்பான தொலைவில் சுகமாக இருந்து கொண்டு 'இன்னும் பலமாக அடி, பக்கத்தில் கிடக்கும் கல்லைத் தூக்கி எறி, நாங்க எல்லாம் இருக்கிறோம்' என்று வாய் வார்த்தைகளை மட்டும் கொட்டி விட்டு ஒவ்வொரு மரணத்துக்கும் பிறகு இரங்கல் செய்தியும், துக்கமும் வெளிப்படுத்துவதோடு நின்று விடுகிறோம்.

அடையாள வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட நமது பணிக்கு பாதிப்பில்லாத நாளில் வருகிறதா என்று பார்த்து அன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். வேறு முக்கியமான நாளில் வந்திருந்தால் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம்.

இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்' அப்படி படுகொலை நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் விளையாடப் போகும் போது, கோபப்பட்ட நாம் அதற்குத் துணை போகும் இந்திய அரசாங்கத்தின் குடையின் கீழ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அரசுக்கு வரி செலுத்தப் போவதில்லை, அரசுடன் ஒத்துழைக்கப் போவதில்லை' என்று ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

வெறும் வார்த்தை ஜாலங்களையும், தந்தி அனுப்புவதையும் காட்டி மக்களின் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கருணாநிதியைச் சாடிய அதே நேரத்தில் நாம் என்ன அதிகமாகச் செய்து விட்டோம்? அதே வார்த்தை ஜாலங்கள்தான், வலைப்பதிவில் ஒரு இடுகைதான்.

'நம் எல்லோரின் கைகளிலும் இரத்தம்' என்று ரீடிஃப் டாட் காமில் பத்ரகுமார் என்பவர் எழுதியிருந்தார். 1980களில் இலங்கையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவராம். 'விடுதலைப் புலிகளை வசதிப் படும் போது வளர்த்து விட்டு, இந்திய நோக்கம் மாறும் போது அவர்களை ஆட்டுவிக்க முயற்சித்து தோற்றவுடன் பொறுமையாக கெட்டிக்காரத்தனமாக அவ்வளவு பேரையும் அழிக்கத் துணை போனோம். இந்த கொலைப்பழி பரம்பரை பரம்பரையாகத் தொடரும்' என்று எழுதியிருந்தார்.

ம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக டில்லி போகத் தெரிகிறது, ஈழத் தமிழரின் இன்னல்களைக் குறித்து தந்தி அனுப்ப மட்டும்தான் முடிகிறது என்று சொல்வதற்கு தகுதி கிடையாது. நம்முடைய வேலை என்றால் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம். ஈழத்துயரங்களுக்கு பதிவதோடு நின்று விடுகிறோம். அவ்வளவு அக்கறை என்றால் படகேறி வட இலங்கையில் இறங்கப் போக வேண்டும். அதனால் என்ன துன்பம் வருகிறதோ அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் வெற்றாக கதைத்துக் கொண்டிருப்பதில் பலனுமில்லை, நியாயமுமில்லை.

நம்ம நாலாவது வீட்டில் இருக்கக் கூடியவர் என்ற முகம், தாய், தந்தையர், மனைவி, மக்கள் என்று புகைப்படங்கள். இதைப் போல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் தம்மைப் பலி கொடுத்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஆதரவு என்ற பெயரில் வெற்று ஊக்குவிப்பைக் கொடுப்பதுதான் நம்மால் முடிந்திருக்கிறது. இனிமேல் இது போல வெற்று வாய் வார்த்தைகளைக் கொட்டுவதை நிறுத்தி விட வேண்டும். -
---
கல்வெட்டு
May 21, 2009

avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 8:36 pm

பிரபா பெரிய தல , எனக்கு அவர்தான் தலை , கீரோ என்று கத்தும் காட்டு மிராண்டிகள், அரசியலில் வீரத்தைக் காட்டும் புண்ணாக்குகள், ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்வது இல்லை.

பலர் தான் படித்தவற்றை வாந்தி எடுத்து தனது மேதாவித்தனத்தைக் காட்ட கட்டுரை எழுதுகிறார்கள். இதில் அரசியல் சார்புகள் வேறு.கேணத்தனமாக இன்னும் தனது அரசியல் தலைமைக்கு சொம்பு தூக்கும் ஜடங்களாகவே உள்ளார்கள்.

ஈழக் கனவை அழித்தவர்களில் முதன்மையானவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். காலம்போன கடைசியில் 2009 ‍ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த‌ 30 வருடமாக நடக்கவில்லை?

ஏதோ இவர்கள் வீட்டு வேலையாள் போல காசு கொடுத்தால் போதும் எல்லாம் அவர் பாத்துப்பார் என்று ஈழப்போரை புலிகளின் தலையில் மட்டும் கட்டிவிட்டு இவர்கள் உலக இலக்கியம் படிப்பது,படம் பார்ப்பது,விமர்சனம் எழுதுவது என்று இலக்கியச் சொம்ப‌டித்துக் கொண்டு இருந்தார்கள்.

நம்புங்கள்...இந்த மொன்னையிலும் இன்னும் 2009 பெட்னா விழாவுக்கு வாங்க என்று அமெரிக்காவில் சொம்பு தூக்கிக் கொண்டுள்ளார்கள் அமெரிக்கவாழ் தமிழ்ச்சங்கங்கள். ஆட்டம் பாட்டம் சினிமாவில் நடிக்கும் அட்டக்கத்தி வீரன்கள் எல்லாம் வருகிறார்கள். http://www.fetna.org அசிங்கமாக இல்லை?

பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.

அகதியாக வந்து அந்த நிலையில் இருப்பவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அமெரிக்க மற்றும் கனடா குடியிரிமை வாங்கிய நிம்மதியாக வாழும் மக்கள், ஒரு பெரிய அரசியல் அமைப்பை இலங்கைக்கு வெளியே ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை இந்த 30-40 ஆண்டுகளில் ?அப்படியும் அரசியல் களம் கண்டவர்கள் புலியை விமர்சித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை?


நெல்லிக்காய் மூட்டைபோல இஸ்லாமியத் தமிழன், மலையகத்தமிழன், யாழ்ப்பாணத்து தமிழன், கொழும்பு வாசி அப்புறம் தமிழகத் தமிழன் என்று பல நிலைகள்.

இதற்கு இடையில் சிக்கிக் கொண்டு இன்னுயிரை அர்ப்பணித்த போராளிகள்தான் பாவம். பலர் செய்ததைப்போல அமெரிக்கா, கனடா, அய்ரோப்பபா என்று வந்து செட்டில் ஆகி இருக்கலாம் அவர்களும்.

அடுத்து தமிழகத் தமிழர்கள். சினிமா, கிரிக்கெட்டைத் தவிர எதற்கும் மசியாதவர்கள். மொழிப்போருக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அலை என்று ஏதும் இல்லை. மொழிப்போரில் பங்கெடுத்தவர்கள் இப்போது ஏதும் செய்வது இல்லை. வயது அப்படி. மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று?

பதிவர்கள்...குறைந்த பட்சம் தான் எழுதுவதற்கு உண்மையாய் இருப்பவர்கள் வினவு குழுவினர் மட்டுமே. இவர்களைத் தவிர ரோட்டில் இறங்கிப் போராட அல்லது தான் தாங்கிப்பிடிக்கும் அரசியல் கட்சியை கேள்வி கேட்க துப்பில்லாத ஜென்மங்களே அதிகம்.

பிங்க் ஜட்டி ஏற்படுத்திய ஒரு கலகத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.சினிமா, கதை, பக்தி , விமர்சனம் என்று ஒருவித பிரியாணி கலவையாகவே இருக்க விரும்புகிறார்கள்.சென்னையில் பெண்கள் ஒரு குழுவாக உண்ணாவிரதம் இருந்த போது அதை யாரும் மதிக்கவில்லை. எத்தனைபேர் அவர்களுடன் சேர்ந்து குறைந்த பட்சம் ஆதரவைக் கொடுத்தார்கள்??

ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்களில் நாம் எல்லாரும் அடக்கம்

நல்ல நிலையில் இருக்கும் போது ஒன்றும் செய்ய துப்பில்லை. இரங்கலாம்....வருத்தமாம்... தூ. பிரபாகரனின் போர் உத்திகள் மற்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால், எடுத்துக் கொண்ட கொள்கைக்காக களத்தில் இருந்த அவர்கள், நாம் எல்லாரையும்விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

யூதர் கொலை, ஜாலியன் வாலபாக் கொலை என்றெல்லாம் படித்து வருத்தப்பட்ட நாம், கண்முன் நடந்த ஒரு பெரும் மக்கள் கொடுமையை , இனக் கொலையை தட்டிக் கேட்க திராணியில்லாமல் மிடில்கிளாஸ் மாதவன்களாக இருந்து விட்டோம்.

பொத்திக் கொண்டு இருப்பதுதான் நல்லது.துயரில் பங்கு கொள்கிறேன் என்று சொல்லக்கூட அருகதையற்றவர்கள் நாம். ஈழத்தைக் காட்டிக் கொடுத்த கபோதிகளில் நானும் ஒருவன். ஏதும் செய்யாமல் இருப்பதும் குற்றமே ,கோழைத்தனமே.

இரக்கம் துயரம் கீரோ என்று எந்த ஜல்லியும் இல்லாமல் குற்றவுணர்வுடன் மவுனமாக இருக்கவே விரும்புகிறேன்.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 28, 2012 8:51 pm

நன்றி புரட்சி...பாதாதி கேசம் முதல் பாதுகையால் அர்ச்சனை-அபிஷேகம் செய்யும் பதிவு-பகிர்வு...

///பொத்திக் கொண்டு இருப்பதுதான் நல்லது.துயரில் பங்கு கொள்கிறேன் என்று சொல்லக்கூட அருகதையற்றவர்கள் நாம்///

எனக்கும் சேர்த்து இந்தப் பதிவு சொல்வதை தலை வணங்கி ஏற்கிறேன்...
எழுத்துக்களில் வீரத்தையும் ஈரத்தையும் காட்டும் உள்ளம் ஊனமுற்றோரில் நானும் ஒருவன்...

மிக மிக நடுநிலைப் பதிவு...பகிர்வுக்கு நன்றி புரட்சி...
இதைக் கூடப் போடலாமா வேண்டாமா என்று யோசித்தேன்...ஆனால் எதுவும் செய்ய இயலாதவன் என்ற நிலையை ஏற்பதில் என்ன வெட்கம் என்று எண்ணியதாலே வரும் 'வாக்குமூலமே' இந்தப் பின்னூட்டம்...

நன்றி...



வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  224747944

வாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Rவாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Aவாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Emptyவாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  Rவாய்ச் சொல் வீரர்கள் - உங்கள் வீரம் வேண்டும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக