புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
88 Posts - 39%
i6appar
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_m10இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 6:08 pm

இந்தியா; இறையான்மை; ஈழம் - இதை பத்தி தெரிஞ்சிக்கனுமா? 542177_389637537755178_355290004_n


இந்திய தேசியம் என்பது எந்த சித்தாந்தத்திலும், கருத்தியலிலும் அடங்காத ஒரு மாயை; அப்படி ஒரு தேசியம் எதுவும் வரலாற்றில் இருந்ததாகவும், இருப்பதாகவும் தெரியவில்லை! இந்தியா என்பது ஒரு தேசிய இனங்களின் சிறைக்கூடம்! அங்கே இந்தியன் என்று வரலாற்று பூர்வீகம் கொண்ட யாரும் இல்லை, அது ஒரு வெறும் நிலக்குரியீடு; ஒரு புவியியல் அமைப்பு; அது பல்வேறு மொழிவாரி தேசியம் கொண்ட பல இனக்குழுக்கள் வாழும் பூகோள எல்லை! வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு அத்தகைய (இந்தியா என்ற) நிலை இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனி அரசுகளாக மட்டுமே இருந்தன. இந்தியாவில் ஒன்றுகொன்று எந்த வித தொடர்பும் இல்லாத அசாமியர்கள் இருக்கிறார்கள், காஷ்மீரிகள் இருக்கிறார்கள், மராட்டியர்கள் இருக்கிறார்கள், வங்காளிகள் இருக்கிறார்கள், பஞ்சாபிகள் இருக்கிறார்கள், தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு இனத்துக்கும் எந்தொரு கலாச்சார பண்பாட்டு தொடர்பும் ஒற்றுமையும் இல்லை.

இங்கே ஐரோப்பாவில் வேறு வேறு தேசங்களாக இருக்கும் ஒரு ஸ்பானியனுக்கும்- ஒரு பிரெஞ்ச்காரனுக்கும், ஒரு பிரெஞ்ச்காரனுக்கும் - ஒரு ஜெர்மானியனுக்கும், ஒரு ஜெர்மானியனுக்கும் - ஒரு இத்தாலியனுக்கும் இருக்கும் குறைந்த பட்ச நாகரீக, கலாச்சார, பண்பாட்டு ஒற்றுமைகூட ஒரு அசாமியனுக்கும்- குஜராத்திக்கும்-தமிழனுக்கும் கிடையாது! இவரகளின் நடை, உடை, பாவனை, கலாச்சாரம், பண்பாடு, உணவு, மொழி என அத்துனையுமே வேறு! அதாவது ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு தேசத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளைவிட அதிக வேறுபாடுகளை கொண்டது இந்தியாவில் இருக்கும் மொழிவாரி தேசிய இனங்களின் வேறுபாடு! இதையொத்த இந்த பல கலாச்சார, தேசிய இனங்களின், கூட்டாட்சி அல்லது கிச்சடி இதற்கு முன் உலகில் ஒரே ஒருமுறை சோவியத் யூனியனால் முயற்சி செய்யப்பட்டு தோற்றுப்போனது நினைவிருக்கலாம்!



அத்தகைய நிலையில் அந்த இனங்கள் தங்களுக்குள் சகோதரத்துவத்துடன், நீர், நிலம், மின்சாரம், மற்றும் இயற்கை வளங்களை பங்கிட்டுகொள்ளும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று! அதையும் தாண்டி, இந்த தேசிய இனங்களை ஆளும் மத்திய ஆரிய ஆதிக்கவர்க்கம் அனைத்து தேசிய இனங்களுக்கும் நடுநிலையோடு நடந்துகொள்ளும், நடந்து கொள்ளவேண்டும் என்பதும் எதிர்பார்க்க முடியாத, எதிர்பார்க்க கூடாத ஒன்று! மேலாக, குறைந்த பட்சம் இந்த 'தேசிய இனங்களை' ஆளும் ஆதிக்கவர்க்கமானது இதில் ஏதாவது ஒரு இனத்தை சேர்ந்ததா என்றால் அதுவும் இல்லை! வெள்ளையனுக்குப்பின், ஒரு ஐம்பது ஆண்டு காலம் ஆண்டவர்கள் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட பண்டிட்டுகள் (காஷ்மீர பார்ப்பனியர்கள்), மீதிக்காலம் ஆண்டவர்கள் பிரிந்தபோன பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்கள்!

இப்படியாக, இந்த தேசிய இனங்கள் தங்களுக்குள் ஆயிரக்கணக்கான அவிழ்க்க இயலாத இடியாப்ப சிக்கல்

பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றன! இவர்களுக்கிடையே, இந்த வேற்றுமைக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை 'அனைவருக்குமே பிரச்சினை, அனைவருக்குமே பசி, அனைவருக்குமே பஞ்சம், அனைவருக்குமே லஞ்சம் லாவண்யம்' என்பதுதான்! அதாவது, இந்த தேசிய இனங்களை கட்டி வைத்திருப்பது அவர்களின் கல்வியின்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் எல்லோர்க்கும் இருக்கும் பிரச்சினைகளுமே! இந்த தேசிய இனங்களின் சிறைக்கூடமானது இந்த தெற்காசிய புவிப்பரப்பில் 'இந்தியம்' என்னும் கண்ணுக்கு தெரியாமல் புரையோடிப்போய் இருக்கும் ஒரு பார்ப்பனிய மணற் கயிறால் பின்னி பிணையப்பட்டு இருக்கிறது. எல்லோருக்கும் கல்வியறிவும், பகுத்தறிவும், பிரச்சினைகள் நீங்கத்தொடங்கியதும் இந்த மணற்கயிறு என்னவாகும் என்று ஆருடம் சொல்வது இப்போது தேவையற்றது. சரி, இதற்கும் தமிழ் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?





இத்தகைய காலகட்டத்தில் இந்திய துணைகண்டத்தில், இந்துமா சமுத்திரத்தில் தமிழீழம் என்ற தேசம் உருவாகிறது. அது உலகம் முழுவதும் சுதந்திர காற்றை சுவாசிக்கத்துடிக்கும், சுதந்திர தாகம் எடுக்கும், புதிதாக உருவாக இருக்கும்/உருவான தேசங்களுக்கு முன்மாதிரி தேசமாக உருவெடுக்கிறது. மற்ற தேசங்களோடு ஒப்பிடுகையில், ஒரு குறைந்த காலகட்டத்தில், அதாவது ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளிலேயே தமிழீழ விடுதலை வீரர்கள் உருவாக்கிய தேசத்தில் பஞ்சம் இல்லை, பசி இல்லை! லஞ்ச, லாவண்யம் இல்லை! கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லை! சாதி, மத வெறியில்லை! ஆனால் நான் இங்கே என்னவெல்லாம் இல்லை என்றேனோ அது அத்துனையும் நிரம்பி வழிகிறது, தன்னை தானே வல்லரசு என அறிவித்துக்கொண்ட அந்த மேற்சொன்ன தேசத்தில். உலகின் எந்த ஒரு தேசத்தின் அங்கீகாரமும் இல்லாமல், ஏற்றுமதி இறக்குமதி இல்லாமல் தன்னிறைவடைந்த தேசமாக மாறுகிறது ஈழம்; உலகின் அத்துனை தேசங்களின் அங்கீகாரமும் பெற்று, சந்திர மண்டலம் தவிர்த்து உலகின் அத்துனை நாடு/அமைப்புகளிடம் கடன் வாங்கியும் இரண்டு வேளை உணவுக்கு திண்டாடும் மக்களே அதிகம் அந்த Self-Styled வல்லரசில்! கொசோவோவும், குர்துகளும், தெற்கு சூடானும், எரித்ரியாவும் தமிழீழம் அறிவிக்கும் செயல்திட்டத்தை வெளிப்படையாகவே தழுவி சோஷலிச நாடுகளாக உருவாகின்றன அல்லது உருவாக துடிக்கின்றன.

இப்படியாக தமிழீழ தேசம், உலகம் முழுவதும் பல்வேறு தேசிய இனங்களின் விடுதலை பயணத்தை ஊக்குவிக்கிறது அல்லது தூண்டுகிறது! இதற்கு இந்திய துணைக்கண்டமும் தப்பாது எனபது சிறைக்கூடத்தை ஆளும் ஆரிய ஆதிக்க வர்க்கத்தின் யூகம்! அதாவது, ஈழம் என்ற தேசத்தின் ஒவ்வொரு நாள் இருப்பும், இந்தியம் என்ற சிறைக்கூடத்தின் ஆயுளை ஒவ்வொரு நாள் குறைக்கிறது! தமிழீழ சுதந்திர போராட்ட வீரர்கள் உருவாக்கிய அந்த தேசம், பல மணற்கயிறுகளையும், சில ஆணிவேர்களையும் ஆட்டி கலகலத்துபோக வைக்கிறது! இப்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொழிவாரி தேசியத்திலும் பெரும்பான்மையினராக இல்லாத 'இப்போதைய இந்த பார்ப்பனிய ஆதிக்க வர்க்கம்', சிறைக்கூடம் உடைந்தால் புதிதாக உருவாகும் எந்த ஒரு தேசியத்தையும் ஆள முடியாது என்ற நிலையில், நடுத்தெருவிற்கு வரவேண்டும் என்ற அச்சமும், பதட்டமும் சேர்ந்து தொற்றிக்கொள்கிறது! (இந்த பார்ப்பனிய ஆதிக்க வர்க்கம் அங்கே இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மொழிவாரி தேசியத்திலும் (மாநிலம்) பெரும்பான்மை மக்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!)

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவிலிருக்கும் ஒரு மொழிவாரி தேசியத்தின் பல இனவுணர்வுமிக்க இளைஞர்களிடம் வந்தே மாதரமும், ஜெய் ஹிந்தும், சாரே ஜகாங் சே அச்சாவும், மூவர்ணக்கொடியும் ஏற்படுத்தாத ஆர்ப்பரிப்பையும், எழுச்சியையும், வன்னியிலும், கிளிநொச்சியிலும் ஏற்றப்பட்ட புலிக்கொடியும், 'புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்' என்று அங்கிருந்து விண்ணை பிளந்து வந்த சத்தமும் ஏற்படுத்துகிறது; ஈழத்திலிருந்து இந்து மகா சமுத்திரத்தின் காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றி வந்த சுதந்திர காற்றும் வடக்கே தில்லி நோக்கி திருபியிருந்த தமிழர்களை தெற்கே வன்னி நோக்கி திருப்புகிறது!

இந்த காரணிகளால் இனத்தின் சில எதிரிகள், மற்றும் பல துரோகிகள் துணையுடன் ஈழத்தை அழித்தொழிக்கும் சதி தில்லியில் உருவாகிறது! பின்னர் அது தமிழகத்தின் பத்துக்கோடி தமிழர்களின் கண்ணெதிரே அரங்கேறுகிறது! பசில் ராசபக்சே சொன்ன ஒரே சத்தியமான உண்மை இதுதான் ''நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்''!!!


பின்குறிப்பு: மேலே சொல்லப்பட்ட கருத்துக்களால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? நான் இறையாண்மையை மீறினேனா? என்று தீர்மானிக்கும் முன் ஒன்றை அவசியம் சொல்ல வேண்டும். மேற்சொன்ன கருத்துக்கள் யாவுமே 'நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது, கேள்விப்பட்டது, முட்டுச்சந்தில் பேசிக்கொண்டார்கள், காதில் விழுந்தது, உணரப்படுகிறது வகையை சேர்ந்தது'! அதாவது 'நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது, உணரப்படுகிறது' போன்ற வார்த்தைகள் தினமலராலும், சன் டிவியாலும், துக்ளக்காலும் காப்பிரைட்டும், பேடன்ட்டும் வாங்கப்படாதவரை நாமும் பயன்படுத்தலாமே? புன்னகை

இப்படிக்கு,

-முன்னாள் இந்திய சுதந்திர போராட்ட தியாகி திரு. கருப்பையா அவர்களின் பேரனும், சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணம் ஏதும் பதுக்காது, பத்து ஆண்டுகள் ஐரோப்பாவில் எச்சில் கிளாஸ் வரை கழுவி இந்தியாவுக்கு பணம் அனுப்பி வரும், கிரிஷ்ணா என்கிற கலகக்காரன்!!! —

mukanuul

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 25, 2012 7:31 pm

சூப்பருங்க செவிட்டில் அறைவது போல இருக்கிறது கட்டுரை , திரும்ப ஒருமுறை படிக்கவேண்டும்.... பகிர்வுக்கு நன்றி பகவதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 25, 2012 7:45 pm

உண்மையை சொல்லப்போனால் இது தான் உண்மை. மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat May 26, 2012 8:13 am

அருமை பகவதி ... பாராட்ட வார்த்தைகள் இல்லை .. நல்ல ஒரு பகிர்வு சூப்பருங்க

சமீபமாக இதை போன்ற கருத்து செறிவுள்ள , ஆராய்ச்சி பதிவுகள் ஈகரையில் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது ...

இந்தியா என்பது ஒரு தேசம் இல்லை .... அனைத்து மக்களின் வரி பணத்திற்காக அலையும் வேசி மக்கள் அரசியல்வாதிகள் கோசமே இந்தியா என்பது ஒரு நாடு என்பது ...

அஸ்ஸாமுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது உண்மையான , அழுத்தமான வார்த்தை ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக