ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

+5
hega
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
9 posters

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 154550


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Mon Jun 04, 2012 4:58 am

19. சங்கீதங்கள்

அ) பின்னணி:


ஆசிரியர்:

1. தாவீது 73 சங்கீதங்கள் (புத்தகம் 1 ல் 37; புத்தகம் 2 ல் 18, புத்தகம் 3 ல் 1, புத்தகம் 4 ல் 2, புத்தகம் 5 ல் 15)

2. ஆசாப் - 12 சங்கீதம் (சங்கீதம்: 50; 73 - 83)

3. கோராகின் புத்திரர் - 11 (சங்கீதம்: 42 - 49, 84,87,88)

4. சாலமோன் - 2 (சங்கீதம: 72, 127)

5. மோசே - 1 (சங்கீதம்: 90)

6. ஏத்தான் - 1 (சங்கீதம: 89)

7. பெயர் அறியப்படாதவர்கள் - 50

காலம்: பெரும்பாலானவை தாவீதின் காலத்தை சோ்ந்தவை. (ஏறக்குறைய கி.மு.1000); சில மோசேயின் காலத்தைச் சோ்ந்தவை (ஏறக்குறைய கி.மு.1400 - 1200). சில பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தைச் சோ்ந்தவை (ஏறக்குறைய கி.மு.586 - 538) சங்கீதங்கள் 90, 137 பார்க்கவும்.

எதற்காக எழுதப்பட்டது:

புத்தகம் 1 (சங்கீதங்கள் 1 - 4) பெரும்பாலான சங்கீதங்கள், ஒரு பெரிய புத்தகமாக எழுதப்பட்ட தாவீதின் ஜெபங்களாகும்; இச்சங்கீதங்களை தாவீது அல்லது அவனுடைய ஆட்சியில் அவனுடைய உத்தரவின் பேரில் வேறொருவர் சீரமைத்திருக்கலாம்.

புத்தகம் 2 (சங்கீதங்கள் 42 - 72) மற்றும் புத்தகங்கள் 3 (சங்கீதங்கள் 73 - 89) இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய விழிப்பைப் பெற்ற பிற்பட்ட காலகட்டத்தில் இச்சங்கீதங்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம். (எசேக்கியா கி.மு.725 அல்லது கி.மு.625).

புத்தகங்கள் 4 (சங்கீதங்கள் 90 - 106) மற்றும் புத்தகங்கள் 5 (சங்கீதங்கள் 107 - 150). இவை பல்வேறுபட்ட சங்கீதங்கள் மற்றும் ஜெபங்களின் தொகுப்பு; இவற்றில் சில, எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையின்போதும், ஆராதனையின்போதும் பயன்படுத்தப்பட்டன.

ஆ) பின்னணி:

தலைப்பு: “சங்கீதங்கள்”

எபிரேயு: “டெஹில்லிம்” (Tehillim) “துதிகள்” , துதியைக் குறித்து 40 சங்கீதங்கள். ஜெபத்தைக் குறித்து 75 சங்கீதங்கள்.

கிரேக்கு: “சால்டீஸியன்” (Psaltesion) “பாடல்கள்”

கருப்பொருள்: தேவனுடைய மக்கள் தனியாகவும் கூட்டாகவும் ஏறெடுத்த துதியும், ஜெபமும்.

நோக்கம்: இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களின் கூக்குரலைக் க‌ேட்டு, அவர்களுக்கு இரங்கி, அவர்களை விடுவிப்பதால், தேவன் தங்களுடைய துதிக்கும், நன்றிக்கும் பாத்திரர் என்பதை வெளிப்படுத்ததல் (இந்த ஐந்து பெரும் பிரிவுகளும் - புத்தகங்கள் 1 முதல் 5 வரை துதியுடன் முடிவடைகின்றன)

முக்கிய வசனம்: சங்கீதம்: 145:20,21 - “ கர்த்தர் தம்மில் அன்புகூறுகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கக்கடவது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:05 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Mon Jun 04, 2012 12:30 pm

20. நீதிமொழிகள்

பின்னணி:


ஆசிரியர்:

1. சாலமோன் (நீதிமொழிகள்: 1:1-9; 18; 10:1-22:16; 25:1-29; 27). ஏறக்குறைய 375 நீதிமொழிகள்.

2. “ஞானமுள்ள மனிதர்கள்” (22:17-23:22; 23:23-24)

3. ஆகூர் (30:1-33)

4. ராஜாவாகிய லேமுவேல் (31:1-9; 31:10-31)

காலம்: சாலமோனின் காலம் (ஏறக்குறைய கி.மு.971 - 931); 1இராஜாக்கள்: 4:32 பார்க்கவும்.

எதற்காக எழுதப்பட்டது: ஞானமுள்ள மொழிகளால் வாலிபருக்கு ஞானத்தையும், சரியான வாழ்க்கையையும் குறித்துப் போதிக்கிறதற்காக “காலத்தை வென்ற ஞானத்தின்” ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டிய தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “நீதிமொழிகள்”

எபிரேயு: “மிஷேல்” (Mishell) “நீதிமொழிகள், பழமொழி”

கிரேக்கு: “பரோய்மியா” (Paroimia) “நீதிமொழிகள், பழமொழி”

கருப்பொருள்: கர்த்தருக்குப் பயப்படுதலை அடிப்படையாகக் கொண்ட ஞானத்தின் வார்த்தைகள்.

நோக்கம்: இளந்தலைமுறையினர் ஞானமுள்ள, தெய்வீக வாழ்க்கையை வாழும்படி, ஞானமுள்ள மனிதர்கள் அளித்துள்ள நடைமுறை அறிவைப் பதிவு செய்தல்.

முக்கிய வசனம்: நீதிமொழிகள்: 1:7 - “கர்த்தருக்குப் பயப்படுதல‌ே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:07 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Mon Jun 04, 2012 10:44 pm

21. பிரசங்கி

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. சாலமோன் எனக் கருதப்படுகிறது. (பிரசங்கி: 1:1,16; 2:7,8)

காலம்: சாலமோனின் காலம் (ஏறக்குறைய கி.மு.971 - 931)

எப்போது எழுதப்பட்டது:

ராஜாவாகிய சாலமோனின் சொந்த வாழ்க்கையிலிருந்த மாயையின் மூலம், மற்றவர் கற்றுக் கொள்ளும் வகையில், அவனுடைய மரணத்திற்கு முன்பாக அவை எழுதப்பட்டன.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பிரசங்கி”

எபிரேயு: “கோஹிலெட்” (Gohelet) “கூட்டிச் சோ்ப்பவர்”

கிரேக்கு: “எக்லெசியாஸ்ட்ஸ்” (Ekklesiastes) “கூட்டிச் சோ்ப்பவர்”

கருப்பொருள்: தேவனுக்குப் புறம்பான வாழ்க்கையின் மாயைகளைக் குறித்த பிரசங்கங்கள்.

நோக்கம்: கர்த்தருக்குப் பயப்படுதலுக்குப் புறம்பாக, வாழ்க்கையின் பிரயாசங்களில் காணப்படும் வெறுமையைத் தெளிவாக எடுத்துக்காட்டுதல்.

முக்கிய வசனம்: பிரசங்கி: 12:13 - “காரியத்தின் கடைத் தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்; எல்லா மனுசர் மேலும் விழுந்த கடமை இதுவே.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:08 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Mon Jun 04, 2012 11:08 pm

22. உன்னதப்பாட்டு

அ) பின்னணி:


ஆசிரியர்: சாலமோன் (உன்னதப்பாட்டு: 1:5; 3:7,9,11; 8:11,12)

காலம்: சாலமோனின் ஆட்சி (ஏறக்குறைய கி.மு.971 - 931)

எந்நிலையில் எழுதப்பட்டது:

உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை.


கருத்து விளக்கம்:

1. தொடர் உருவகமானவை: தேவனும் இஸ்ரவேலும், கிறிஸ்துவும் சபையும்.

2. நாடக வடிவமானது: சாலமோன் மற்றும் சூலாமியப் பெண்ணின் காதல் கதை.

3. எழுத்துச் சார்ந்தது: சிற்றின்பம் சார்ந்த காதல் பாடல்கள், கவிதைகள்.

4. நீதி சார்ந்தது: உண்மையான அன்பின் அதிசயத்தையும், தூய்மையையும் போதிக்கிறது.

5. அன்பின் உணர்வு சார்ந்தது: திருமணப் பாடல்கள்.



ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “உன்னதப்பாட்டு”

எபிரேயு: ஷிர் அஸ்ரிம் (Shir has Shirim) “உன்னதப்பாட்டு” “ஒரு மிகச் சிறந்த பாடல்”

கிரேக்கு: “அஸ்மா” (Asms) “பாடல்”

கருப்பொருள்: ஒரு மணப்பெண்ணிற்கும், மணவாளனுக்குமிடையே உள்ள அன்பின் காதல் பாடல்கள்.

நோக்கம்: ஒரு ஆணிற்கும், பெண்ணிற்குமிடையே உள்ள அன்பின் அழகையும், மென்மையையும் எடுத்துக் காட்டுதல்; தேவன் மனுக்குலத்தின் மீது பாராட்டும் நெருங்கிய, ஆழமான அன்பிற்கு ஒரு அடையாளமாகவும் விளக்கப்படுகிறது.

முக்கியவசனம்: சாலமோனின் உன்னதப்பாட்டு: 8:6 - “நீர் என்னை உமது இருதயத்தின் மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின் மேல் முத்திரையைப் போலவும் வைத்துக் கொள்ளும். நேசம் மரணத்தைபோல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல கொடிதாயிருக்கிறது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:09 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Tue Jun 05, 2012 5:03 am

தீர்க்கதரிசிகளுக்கு ஒரு முன்னுரை

(ஏசாயா முதல் மல்கியா வரை)

அ) இனவாரியாக பிரித்தல்:
(பெறுபவர்களின்படி)

1. இஸ்ரவேலுக்கு - ஓசியா, ஆமோஸ்

2. யூதாவுக்கு - யோவேல், ஏசாயா, மீகா, செப்பனியா, புலம்பல், எரேமியா, ஆபகூக், ஆகாய், சகரியா, மல்கியா.

3. நினிவேக்கு (அசீரியா) - யோனா, நாகூம்.

4. பாபிலோனுக்கு - தானியேல்

5. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு - எசேக்கிய‌ேல்

6. ஏதோமிற்கு - ஒபதியா

ஆ) தீர்க்கதரிசியின் பொருள் விளக்கம்:

வார்த்தைகள்: (1நாளாகமம்: 29:29,30).

1. நபி (Nabi) - “(தேவனால்) அழைக்கப்படட்வர்”

2. ரோயே (Roeh) - “ஞானதிருஷ்டிக்காரன்” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).

3. ஹோசே (Hozeh) - “ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசி” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).

தேவன் தம்முடைய வார்த்தையையும், சித்தத்தையும் (முதன்மையாகத் தம்முடைய மக்களுக்கு) அறிவிக்கும்படி, தமது சார்பில் பேசுவதற்காக தெரிந்தெடுத்து அழைக்கும் ஒரு மனிதன் “தீர்க்கதரிசி” எனப்படுகிறான்.

விளக்கம்:

1. “முன்னறிந்து கூறுதல்” (அடிக்கடி) - தேவனுடைய சார்பில், பொதுவாக நிகழ் காலத்தைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தை முன்னறிந்து கூறுதல்.

2. “முன்னறிவி” (‌அவ்வப்போது) - தேவனுடைய சார்பில், முன்குறிக்கப்பட்ட எதிர்கால சம்பவங்களை மையமாகக் கொண்ட, நிகழ்காலத்திற்குரியவைகளைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தைக் குறிப்பாகக் கூறுதல்.

இ) தீர்க்கதரிசனத்தின் தன்மை:


மூலாதாரம்: இயற்கைக்கு அப்பாற்ப்பட்டது. (2பேதுரு: 1:20,21)

வழிவகைகள்:

1. சொப்பனங்களும், இரவு தரிசனங்களும் (எண்ணாகமம்: 12:6)

2. தரிசனங்களும், மிகையான உணர்வுகளும் (ஏசாயா: 2:1; 29:7; ஆமோஸ்: 1:1; மீகா:1:1)

3. தேவனோடு நேரடியாக எதிர்ப்படுதல் (2இராஜாக்கள்: 20:1-6; ஏசாயா: 6:1-10, 38:4)

4. வெளிப்படுத்தலுடன் வரலாற்றுச் சம்பவங்கள் (எரேமியா: 21:1,2; 36:1-26; 42:7-22)

5. தீர்க்கதரிசியின் வாழ்க்கைச் சூழ்நிலை (ஏசாயா: 39:1-8)

நோக்கம்: நெறிமுறை சார்ந்தது (ஆமோஸ்: 4:12; 2பேதுரு: 3:11; 1யோவான்: 3:3)

தோற்றம்: இரட்டைப் பரிமாணம்.

- “எப்போது” என்பதைவிட, “என்ன” மற்றும் “யார்” என்பவை தெளிவாயிருப்பதால், காலத்தின் பரிமாணம் துல்லியமாக இல்லாவிட்டாலும் எப்போதும் ஓரளவிற்கு சரியாக உள்ளது. (ஏசாயா: 13:6, எசேக்கியேல்: 30:3, யோவேல்: 1:5, ஒபதியா: 15, செப்பனியா: 1:7,14, மத்தேயு: 10:23, 16:28, 24:34, யாக்கோபு: 5:8,9, 1தெசலோனிக்கேயர்: 4:15, பிலிப்பியர்: 4:5, வெளிப்படுத்தல்: 1:1,3, 22:6,10,12,20).

மாதிரிப் படிவம்: சமநிலையடைந்தது:

1. பாவத்திற்காக தேவன் அளித்த நியாயத்தீர்ப்பு தற்போதைய துயரத்தின் காரணமாகும்; எனவே, “வரவிருக்கும் “கர்த்தரின் நாளைச்” (தேசங்களின் நியாயத்தீர்ப்பு) சந்திப்பதற்காக மனம் வருந்தி, தேவனிடம் திரும்புங்கள். தேவன் மன்னிப்பை அளித்து, மீண்டும் ஆசீர்வதிப்பார். மேசியாவின் யுகமும், ஒரு உயரிய நிலை உள்பட மகிமையான எதிர்காலமும் வரவிருக்கிறது.

2. (கள்ளத்தீர்க்தரிசிகளுக்கான) சோதனைகள். நிறைவேறுதல்: உபாகமம்: 18:20-22.

3. தேசிய நீதி (உபாகமம்: 13:1-5, எரேமியா: 23:13,14)

4. தனிப்பட்ட நீதி (எரேமியா: 23:9-12, மத்தேயு: 7:15-20)


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:14 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Tue Jun 05, 2012 6:29 am

23. ஏசாயா

அ) பின்னணி:


காலம்: ஏறக்குறைய கி.மு.740 - 681 - உரியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா மற்றும் மனாசே முதலியோரின் ஆட்சி.

எந்நிலையில் எழுதப்பட்டது:

அசீரியர்களின் தாக்குதல்களின் பயம் காரணமாக, தேவனுடைய மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக கர்த்தரின் மீது தங்களுடைய நம்பிக்கையை வைப்பதற்கான தேவ‌ை (கி.மு.734 ல் இஸ்ரவேல் மற்றும் சீரியாவுடனான நெருக்கடி; கி.மு.701 ல் அசீரியாவுடனான நெருக்கடி).

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஏசாயா”

எபிரேயு: “யேஷாயாகூ” (Yeshayahu) “தேவன் இரட்சிப்பானவர்”

கிரேக்கு: “ஏசாயாஸ்” (Esias) “ஏசாயா”

கருப்பொருள்: தேவன் ஒருவரே இரட்சிப்பானவர். எனவே, அவரை மட்டும் விசுவாசியுங்கள்.

நோக்கம்: எருசலேமும், யூதாவும் தங்களைச் சுற்றியுள்ள தேசங்களின் மீது நம்பிக்கை வைக்காமல் தம் இரட்சிப்பிற்காக தேவனை மட்டும் விசுவாசிப்பதன் மூலம் அவர்களைத் திரும்பவும் தேவனுடைய உடன்படிக்கையினிடமும் நீதியினிடமும் அழைத்தல்.

முக்கியவசனம்: ஏசாயா: 49:6 - “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசி பரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்ப‌ேன் என்கிறார்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:16 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Tue Jun 05, 2012 6:44 am

24. எரேமியா

அ) பின்னணி:


ஆசிரியர்: எரேமியா, பாரூக்கு (எரேமியா: 36:12)

காலம்: ஏறக்குறைய கி.மு.627 - 575 - யோசியா‌, யெகாகஸ், யோயாக்கீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா (எரேமியா: 1:1-3) முதலானோரின் ஆட்சி.

எப்போது எழுதப்பட்டது: அதிகரித்துக் கொண்டு போகும் யூதாவின் மீறுதல், மற்றும் பாபிலோனியர்களால் யூதாவிற்கு நேரிடக்கூடிய அழிவு ஆகியவற்றினால் எரேமியாவின் மூலம் தேவனுடைய மதிப்பீட்டின் வார்த்தை அளிக்கப்பட வேண்டிய தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “எரேமியா”

எபிரேயு: “யிமேயாகூ” (Yimeyahu) “தேவன் நிலைநிறுத்துகிறார், உயர்த்துகிறார்”

கிரேக்கு: ஜெரேமியாஸ் (Jeremias) “எரேமியா”

கருப்பொருள்: மனந்திரும்புதல் அல்லது நீக்குதல்

நோக்கம்: தேவனுக்கு விரோதமாக செயல்பட்டு, அவரை விட்டு விலகின யூதா, மீண்டும் மனந்திரும்பி அவாிடம் திரும்புவதற்காக, வரவிருக்கிற நியாயத்தீர்ப்பைக் குறித்து யூதாவை எச்சரித்தல்.

முக்கியவசனம்: எரேமியா: 4:14 - “எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்த மட்டும் அக்கிரமநினைவுகள் உன் உள்ளத்தில‌ே தங்கும்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:17 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Tue Jun 05, 2012 6:57 am

25. புலம்பல்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எரேமியா எனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய எருசலேமினுடைய வீழ்ச்சியின் காலத்தில், கி.மு.586 (அல்லது கி.மு.575).

எந்நிலையில் எழுதப்பட்டது: தேவனுடைய பரிசுத்த நகரமாகிய எருசலேமின் பயங்கரமான அழிவைக் குறித்துத் தேவனுடைய தீர்க்கதரிசி துயரத்துடன் புலம்பும்படி எருசலேமின் வீழ்ச்சி ஏவுகிறது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “புலம்பல்”

எபிரேயு: “ஈகா” (Ekah) “அந்தோ! ஓ! எப்படி!”

கிரேக்கு: “த்ரேநோய்” (Threnoi) “புலம்பல்கள், அரற்றுதல்”

கருப்பொருள்: எருசலேமின் பயங்கரமான வீழ்ச்சியைக் குறித்துத் துயரமான புலம்பல்கள்.

நோக்கம்:

எருசலேம் தன்னுடைய விக்கிர ஆராதனையிலிருந்து (தேவனைப் புறக்கணித்தல்) மனந்திரும்ப மறுத்ததன் காரணமாக அடைந்த வீழ்ச்சியைக் குறித்து, தீர்க்கதரிசியாகிய எரேமியா அனுபவித்த மிகுதியான துயரத்தை வெளிப்படுத்துதல்.

முக்கிய வசனம்: புலம்பல்: 2:17 - “கர்த்தர் தாம் நினைத்தத‌ை செய்தார்; பூர்வ நாட்கள் முதற் கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:18 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Tue Jun 05, 2012 1:53 pm

26. எசேக்கிய‌ேல்

அ) பின்னணி:


ஆசிரியர்: எசேக்கிய‌ேல்

காலம்: ஏறக்குறைய கி.மு.597 - 571 - யோயாக்கின் மற்றும் சிதேக்கியாவின் ஆட்சி (எசேக்கிய‌ேல்:1:2)

எந்நிலையில் எழுதப்பட்டது:

கி.மு.586 ல் எருசலேம் அடைந்த முடிவான வீழ்ச்சியைக் குறித்து தேவன் அளித்த எச்சரிப்பையும், மனந்திரும்புகிறவர்களுக்கு அவர் வாக்களித்த மீட்பையும் குறித்து தேவன் கூறினவற்றை, பாபிலோனிற்கு நாடு கடத்தப்பட்ட யூதர்கள் அறிய வ‌ேண்டியதன் தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “எச‌ேக்கிய‌ேல்”

எபிரேயு: “யெகஸ்கல்” (Yehezgel) “தேவன் பெலப்படுத்துகிறவர்”

கிரேக்கு: “லெசேக்கியேல்” (Lesekiel) “எசேக்கியேல்”

கருப்பொருள்:

மனந்திரும்புகிறவர்களுக்கு தேசமும், ஆலயமும் திரும்ப அளிக்கப்படும் என்ற வாக்குத்தத்தோடு தேவனுடைய காவலாளி யூதாவிற்கு அளிக்கும் எச்சரிப்புகள்.

நோக்கம்:

யூதாவிற்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பையும், மீதியான நீதிமான்களுக்கு அளிக்கப்படவிருக்கும் மீட்பையும் குறித்து எச்சரிப்பதற்காக மதிலின் மீது ஒரு காவலாளியாக நிற்பது.

முக்கியவசனம்:

எசேக்கிய‌ேல்: 18:31,32 - “நீங்கள் துரோகம் பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள் மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டு பண்ணிக் கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:20 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7

Post by சார்லஸ் mc Wed Jun 06, 2012 4:39 am

27. தானியேல்

அ) பின்னணி:

ஆசிரியர்: தானியேல்

காலம்:

ஏறக்குறைய கி.மு.605 -536 - நேபுகாத்நெச்சார், அவெல் - மர்துக், நாகிலேசர், நாபோநிதஸ், பெல்ஷாத்சார், கோரேஸ்/ தரியு (தானியேல்: 1:1,21) முதலானோரின் ஆட்சி

எந்நிலையில் எழுதப்பட்டது:

நெருக்கத்திலுள்ள தேவனுடைய மக்கள், தானியேலுடைய விடுதலையின் அனுபவங்களாலும், வருங்கால நிகழ்ச்சிகளின் தரிசனங்களாலும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: தானியேல்

எபிரேயு: “தானியேல்” (Daniel) “தேவன் என்னுடைய நியாயாதிபதி”

கிரேக்கு: “தானியேல்” (Daniel) தானியேல்

கருப்பொருள்: தம்முடைய மக்களை விடுவிப்பதற்காக உலகத்தின் வல்லமைகளை ஆளுகை செய்யும் தேவனுடைய சர்வ வல்லமை.

நோக்கம்:

தேவன் அனைத்து தேசங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றும், அவர் தம்முடைய மக்களை இன்றும், என்றும் விடுவிப்பதற்காக குறுக்கிடுகிறார் என்றும் தேவனுடைய மக்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் அவர்களை ஊக்குவித்தல்.

முக்கியவசனம்:

தானியேல்: 7:13,14 - “இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார் ... சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 3:22 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum