ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

+5
hega
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
9 posters

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 2:42 pm

“நம்பகத்தன்மையின் 5 சோதனைகள்”

1. தெய்வீக அதிகாரம்:


வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகமும் ஒரு தீர்க்கதரிசன அல்லது தெய்வீக அதிகாரத்தின் அறிவிப்பைப் பெற்றிருக்கிறது.

“...என்று கர்த்தர் கூறுகிறார்” அல்லது “கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி” போன்ற சொற்றொடர்களைப் பல இடங்களில் காணலாம்.

தேவன் தம்முடைய மக்களின் சரித்திரத்தில் நடப்பித்த கிரியைகளைக் கூறுவதிலும் இந்த தெய்வீக அதிகாரம் வெளிப்படுகிறது.

2. தீர்க்கதரிசன படைப்பு:

தேவனுடைய வார்த்தை, பரிசுத்தாவியினால் வழி நடத்தப்பட்ட, தேவனால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாக தேவனுடைய மக்களுக்கு அளிக்கப்பட்டது. (எபிரேயர்: 1:1).

அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகியோர் எழுதின புத்தகங்கள் மட்டுமே வேதாகமத்தில் சோ்க்கப்படுவதற்காக கருதப்பட்டன.

3. நம்பத்தகுந்த உண்மை:

முரண்பாடான சமயக் கருத்துக்கள் அல்லது தவறான கோட்பாடுகளடங்கிய ஒரு புத்தகம் தேவனாலுண்டானது அல்ல என்பதால் அது விலக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட வேதாகம வெளிப்பாட்டிற்கு முரணான புத்தகங்களும், ஆதாரமற்றவை என்று கருதி விலக்கப்பட்டன. (2பேதுரு: 2:1).

தேவன் பொய் கூறுபவரல்ல, தேவனால் அளிக்கப்பட்ட எந்தப் புத்தகத்திலும் பொய்யோ அல்லது முரண்பாடோ கிடையாது. தேவனுடைய உந்துதலினால் எழுதப்பட்ட புத்தகங்கள் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்தவையாக உள்ளன.

பெரேயா பட்டணத்தார் “மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்” (அப்போஸ்தலர்: 17:11).

பவுலின் உபதேசம் பழைய ஏற்பாட்டிலுள்ள தேவனுடைய முந்தின வெளிப்பாட்டை ஒத்திருக்கிறதா என்பதை அவா்கள் ஞானமாக சோதித்துப் பார்த்தார்கள்.

4. ஆற்றல் மிக்க வல்லமை:

வேதாகமத்தின் புத்தகங்களில் அடங்கியுள்ள வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் மிக்க வல்லமையின் அளவை கண்டறிவது மிகக் கடினமாகும்.

“தேவனுடைய வார்த்தையானது ஜீவனு‌ம் வல்லமையும்...”உள்ளதாயிருப்பதால் “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைபடிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2தீமோத்தேயு: 3:16).

தேவனால் பிறப்பிக்கப்பட்ட நிறைவான போதனை, தன்னுடைய தெய்வீக, ஆற்றல் மிக்க வல்லமையின் மூலமாக நம்மைக் கட்டியெழுப்பி, அறிவுறுத்தி, விடுவிக்கிறது (2தீமோத்தேயு்: 3:15; 1பேதுரு: 1:23; யோவான்: 8:32).

தவறான போதனை நம்மை அதைரியப்படுத்தி, வீழ்த்தி, அடிமைத்தனத்திற்கு வழி நடத்தும்; அது மக்களை வஞ்சித்து, ஒரே உண்மை தேவனையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிப்பதிலிருந்து அவர்களை வழி தவறச் செய்கிறது.

5. பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுதல்:

ஒரு புத்தகம் “தேவனால் பிறப்பிக்கப்பட்டதா”என்பதை தீர்மானிக்க மற்றொரு சோதனை உபயோகிக்கப்பட்டது. அது சபைகளால் அங்கீகரிக்கப்பட்டதா? அது தேவனுடைய மக்களால், தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சேகரிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்டதா?

பண்டைய காலங்களில் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக இருந்தன; எனவே, வேத வாக்கியங்களின் திருமுறையில் அனைத்து 66 புத்தகங்களும் சோ்க்கப்பட வேண்டுமென்று ஏற்றுக் கொள்வதற்கு பல பல வருடங்கள் சென்றன.என்றாலும், த‌ேவனுடைய மக்கள் மோசே மற்றும் அப்போஸ்தலனாகிய பவுல் போன்றவர்கள் எழுதிய பல புத்தகங்களை தாமதமில்லாமல் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மற்ற புத்தகங்கள் அதிகமான ஆய்வையும், காலத்தின் சோதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பழைய ஏற்பாட்டின் திருமுறை 400 கி.முவில் எபிரேயர்களால் நிறைவேற்றப்பட்டது; புதிய ஏற்பாட்டு திருமுறை 170 கி.பி.யில் நிறைவேற்றப்பட்டது.
தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:35 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 3:06 pm

வேதாகமம் இன்றைக்கும் பிழையின்றி உள்ளது என்பதை எவ்வாறு அறிய முடியும்?

அற்புதமான பாதுகாப்பு
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வேதாகமம் நமக்கு எவ்வாறு கிடைத்தது என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரமாகும். அதில், தேவன் தம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையை எவ்வாறு பாதுகாத்தார் - என்பதைக் குறித்த அற்புதமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

வேதாகமத்தின் புத்தகங்களை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் “பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு” எழுதினார்கள் - என்பதே இதன் துவக்கமாகும். (2பேதுரு: 1:20-21; 2தீமோத்தேயு: 3:16).


பழைய ஏற்பாடு - முற்றிலுமாகப் பிழையற்றது
பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்கள் சந்தேகமின்றி முதலில் மிருகங்களினுடைய தோல்களின் மீது எழுதப்பட்டன. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில், காகிதத்தைவிட பதனிட்ட தோல் மிகவும் எளிதாகக் கிடைத்தது.

மிருகங்களின் தோல்கள் பலவற்றை ஒன்றாக தைத்துச் சுருள்கள் தயாரிக்கப்பட்டன. அச்சுருள்கள் சில அடிகள் அளவிலான சிறிய சுருள்களாகவும், 100 அடி அல்லது அதற்கும் மேற்பட்ட அளவிலான பெரிய சுருள்களாகவும் இருந்தன. சுருள்களை ஒன்று அல்லது இரண்டு கைத்தடிகளில் சுருட்டினார்கள்.

வேத வாக்கியங்களின் மூலப்படிவங்களைப் பார்த்து தோல்களின் மீது எழுதும் வேலையில் ஈடுபட்ட யூதர்கள், வ‌ேத வாக்கியங்களைக் குறித்த ஒரு தீவிரமான பக்தியைப் பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக, வ‌ேத வாக்கியங்களை முற்றிலுமாகப் பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஒரு மத வைராக்கியமுள்ள ஒழுங்கை, மிகவும் கவனத்துடன் அவர்கள் பின்பற்றினார்கள்.

அவர்கள் தாங்கள் எழுதினவற்றைச் சரிபார்ப்பதற்கு ஒரு மிகவும் சிக்கலான முறையை உபயோகப்படுத்தினார்கள். ஒவ்வொரு எழுத்தும், வார்த்தையும், வசனமும் சரிபார்க்கப்பட்டது! அவர்கள் வார்த்தைகளின் நடுவே உள்ள இடைவெளியையும் கூட கணக்கிட்டார்கள்; ஒரு முழு புத்தகத்தையும் பார்த்து எழுதுவதற்கு எவ்வளவு இடைவெளி தேவை என்பதையும் கூட அவர்கள் துல்லியமாக அறிந்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நுட்பமான அளவுகளை உபயோகப்படுத்தி, அவர்கள் ஒவ்வொரு புதிய படிவத்தையும் கவனமாக சரிபார்ப்பார்கள். புதிய படிவத்திலுள்ள எழுத்து அல்லது வார்த்தைகளின் எண்ணிக்கை மூலப்படிவத்திலிருந்து வேறுபடுமானால், படிவங்களை எழுதுபவர்கள் எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்வார்கள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ஒரு தவறு காணப்பட்டாலும், அந்த முழுப்பக்கமும் அழிக்கப்பட்டது.

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:39 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 3:37 pm

முழுமையானதும், ச‌ேதமற்றதும்
வேதாகம எழுத்தாளர்கள் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கவனம் செலுத்தினபடியால், பழைய ஏற்பாடு பிழையின்றி விரிவாக எழுதப்பட்டு, அதன் உண்மைத் தன்மை பாதுகாக்கப்பட்டது. நம்மிடம் மூலப் படிவங்கள் இல்லாவிட்டாலும், நம்மிடம் உள்ள படிவங்கள் முற்றிலுமாக பிழையற்றவை என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

வேத வாக்கியங்களின் மூலப்படிவங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மூலப்படிவங்கள் நம்மிடம் இல்லாததற்குக் காரணம், யூத எழுத்தர்களின் பக்தியும், கவனமுமாகும். வேத வாக்கியங்களின் ஒரு பிரதி பழமையாகி விட்டாலோ அல்லது எதிர்பாராமல் சேதமடைந்தாலோ, அதைப் போன்ற ஒரு புதிய சரியான மறுபடிவத்தை உருவாக்கிய பின் அது புதைக்கப்பட வேண்டும் அல்லது எரிக்கப்பட வ‌ேண்டும்.

ஒவ்வொரு முந்திய பிரதியிலிருந்தும் எழுதப்பட்ட படிவங்கள் உருக்குலையாமல் பாதுகாக்கப்படுவதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டது.

நீங்கள் வாசிக்கும் சங்கீதங்களின் புத்தகம் ஒரு சேதப்பட்ட அல்லது முழுமை பெறாத மூலப்படிவத்திலிருந்து அரைகுறையாக எழுதப்பட்டது என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? வ‌ேத வாக்கியங்களை நமக்காகப் பாதுகாப்பதற்காக தேவன் மிகுதியான முயற்சிகளை மேற்கொண்டார்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:40 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 3:54 pm

உறுதியான நம்பிக்கை
சவக்கடல் சுருள்களை கண்டு பிடிக்கும் வரை, எபிரேய மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமையான படிவங்கள் 900 கி.பி.யைச் சோ்ந்தவையாக இருந்தன. பதனிட்ட தோல்களில் எழுதப்பட்டிருந்த இந்த சவக்கடல் சுருள்கள் 200 கி.மு. மற்றும் 68 கி.பி. க்கு இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவையாகும்.

இச்சுருள்களில் ஒன்று ஏசாயா புத்தகத்தின் ஒரு முழமையான படிவமாகும். அப்படியென்றால், இந்தப் பிரதி வெத பண்டிதா்கள் வைத்திருந்த எந்த முந்திய பிரதியைக் காட்டிலும் ஓராயிரம் வருடங்கள் பழமையானது.

சவக்கடல் சுருள்ளகளின் கண்டுபிடிப்பில் ஒரு மிக முக்கியமான உண்மை என்னவென்றால், அந்த சுருள்களுக்கும், ஏற்கனவே உள்ள மற்ற படிவங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையாகும்.

யூத எழுத்தர்கள் வேத வாக்கியங்களை மூலப்படிவங்களிலிருந்து மிகவும் சரியாகவும், அசாதாரண நுட்பத்துடனும் எழுதினார்கள் என்பதற்கு சவக்கடல் சுருள்கள் ஒரு முடிவான, போதுமான சான்றாக விளங்குகின்றன.

ஓராயிரம் வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்த இரண்டு யூதர்கள், மூலப்படிவங்களிலிருந்து ஒரே புத்தகத்தைப் பார்த்து எழுதிய இரண்டு படிவங்களை ஒப்பிடும்போது, அவைகளுக்குள் குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான வேறுபாடுகளோ அல்லது முரண்பாடுகளோ காணப்படவில்லை. இன்றைக்கு நாம் வாசிக்கும் வேதாகமம் அதனுடைய மூலபிரதியை ஒத்திருக்கிறது என்பதை நாம் நம்புவதற்கு ஒரு உறுதியான காரணத்தை இது நமக்கு அளிக்கிறது.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:41 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 4:14 pm

புதிய ஏற்பாடு

மிகுதியான சான்று
40 கி.பி. மற்றும் 95 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் அனைத்தும் ஒரு விதமான காகிதத்தில் எழுதப்பட்டன.

இந்தக் காகிதம் “பாப்பிரஸ்” என்கிற ஒரு வகை இலையை உபயோகித்து தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதங்களை தனிதாளாகவும், பல தாள்களை இணைத்து சுருட்டப்பட்ட சுருள்களாகவும் பயன்படுத்தினார்கள்.

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதி முற்றிலுமாக முரண்பாடற்றது என்பதற்கு மிகுதியான சான்றுகள் உள்ளன. எந்தப் பழமையான எழுத்துப் படைப்புகளைக் காட்டிலும் தன்னுடைய பிழையற்ற தன்மைக்கும் , நம்பகத்தன்மைக்கும் ஆதாரப்பூர்வமான போதிய சான்றுகளை வ‌ேதாகமம் பெற்றிருக்கிறது.

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதி எழுதப்பட்டபின் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் (ஒரு தலைமுறைக்குள்ளாக - இயேசுவை அறிந்த மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில்!) அம்மூலப்பிரதியின் 24,000 படிவங்கள் எழுதப்பட்டன.

இவைகளில் 5,400 படிவங்கள், புதிய ஏற்பாட்டின் மூலப்படிவம் எழுதப்பட்ட கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இந்தப் படிவங்களை ஒன்றோடொன்று ஒப்பிடும்போது, ஒவ்வொரு படிவமும் மற்ற படிவங்களை 100 சதவீதம் ஒத்திருக்கிறது.

உலகத்தில் தோன்றிய எந்தப் பழமையான எழுத்துப் படைப்பைக் காட்டிலும், புதிய ஏற்பாடு உண்மையென உறுதிப்படுத்தப்பட்டதாயும் சரிபார்க்கப்பட்டதாயும் உள்ளது.

தேவனுடைய பரிசுத்த வார்த்தைக்காக அவரைத் துதியுங்கள். “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா: 40:8).

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:43 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 9:00 pm

வேதாகமம் தேவனுடைய வார்த்தையா?... அல்லது மனிதனுடைய வார்த்தையா?
வேதாகமம் மற்றெந்த புத்தகத்தையும் விட தனித்தன்மை வாய்ந்தது. வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடாகவும் , மனிதர்களுக்கு அளிக்கப்படும் அவருடைய வார்த்தையாகவும் விளங்குகிறது. மனிதர்களால் எழுதப்பட்ட எந்த ஒரு புத்தகத்தைப் பார்க்கிலும் அது மேன்மையானது.

வேதாகமம் உண்மையிலேயே தேவனுடைய வார்த்தை என்பதை சிலர் நம்ப மறுக்கிறார்கள். அது பிழையற்றதாகவும், அது நம்பத்தக்கதாகவும் இருக்கின்றதா என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். எந்த அளவிற்கு தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தையாயிருக்கிறது என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

“தேவனுடைய வார்த்தை” என்ற பதத்தின் பொருள், வ‌ேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் பேசப்பட்டது என்பது அல்ல. வேத வாக்கியங்களில் மனிதர்கள் அல்லது த‌ேவதூதர்கள் அல்லது சாத்தானின் வார்த்தைகளும்கூட இடம் பெற்றிருக்கின்றன.

உதாரணமாக, வேதாகமத்தில் பாவகரமான பல செயல்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், வேதாகமம் அவைகளை ஆதரிக்கவில்லை. மாறாக, அது அவைகளை கண்டிக்கிறது.

வேத வாக்கியங்கள் சாத்தான் கூறிய சில பொய்களைக் குறித்தும் கூறுகிறது. (ஆதியாகமம்: 3:4). ஆனால், அதை வேதாகமத்தில் சோ்ப்பதனால், இந்தப் பொய்கள் அனைத்தும் உண்மைகள் என்று வேதாகமம் போதிக்கவில்லை. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களும், பலரால் பேசப்பட்ட வார்த்தைகளும் வேதாகமத்தில் பிழையின்றி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கு அது உத்திரவாதம் அளிக்கிறது.

வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வாயிலிருந்து பிறந்தது என்பது அதன் பொருளல்ல.

தேவன் பாிசுத்த ஆவியின் மூலமாக, அதை எழுதும்படி தேவ மக்களை தூண்டினார். எனவே, வ‌ேதாகமம் தேவனுடைய வார்த்தையாகிறது. தேவன் வேதாகமத்தின் அமைப்பையும், உள்ளடக்கத்தையும் தீர்மானித்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட மேற்பார்வையாளர் எனக் கூறலாம்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:46 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 9:24 pm

சில கேள்விகள்
- வேதாகமம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?

- அல்லது அது விசேஷித்த மதப்பிரகாரமான நுண்ணறிவு கொண்ட மனிதர்களின் வார்த்தைகளா?

- வேதாகமத்தின் சில பகுதிகள் மட்டும் தேவனுடைய வார்த்தையா? - அல்லது வேதாகமம் முழுவதும் தேவனுடைய பரிசுத்த வார்த்தையா?

- வேதாகமம் முற்றிலுமாக பிழையற்றது என்று நாம் உண்மையில் நம்ப முடியுமா?

இக் கேள்விகளுக்கு வேதாகமம் தன்னைக் குறித்து நமக்கு போதிக்கும் 3 முக்கியமான “அஸ்திபாரக் கற்களைக்” குறித்து பார்ப்போம்:

இந்த மூன்று அஸ்திபாரக் கற்களாவன:

1. உந்துதலின் கோட்பாடு (Doctrine of Inspiration)

2. பிழையற்ற தன்மையின் கோட்பாடு (Doctrine of Inerrancy)

3. பொருள் விளக்கத்தின் சட்டம் (Law of Interpretation)

உந்துதலின் கோட்பாட்டைக் குறித்து முதலாவது காண்போம்:


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:47 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 2

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 9:49 pm

A. வேதாகமம் : அது எங்கிருந்து வருகிறது?

உந்துதலின் கோட்பாடு
மூல வார்த்தை: “தியோப்நுஸ்டஸ்” (Theopneustos)

“உந்துதல்” என்ற பதத்தினுடைய பொருளை அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தையில் காணலாம்:

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது...” (2தீமோத்தேயு: 3:16).

துரதிர்ஷ்டவசமாக, “உந்துதல்” என்ற வார்த்தையின் பொருள், மூல பாஷையான கிரேக்க மொழியில் இவ்வார்த்தை அளிக்கும் பொருளிலிருந்து வேறுபட்டிருக்கிறது. உண்மையில், அது தவறான வழி நடத்துதலை அளிக்கிறது.

“உந்துதல்” என்ற வார்த்தை “உள் சுவாசித்தல்” அல்லது “பிறப்பித்தல்” என்று பொருள்படும் இன்ஸ்பிரோ (inspro)என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.

இந்த வார்த்தையை சாியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், த‌ேவன் வேதாகமத்தை எழுதிய மனிதர்களுக்கு வார்த்தைகளை சுவாசிக்கச் செய்து அவைகளை எழுதுவதற்கான ஒரு குறிப்பிட்ட வல்லமையையும் அளித்தார் என்ற தவறான முடிவுக்கு வருகிறார்கள். வேத வாக்கியங்கள் நமக்கு இவ்வாறு போதிக்கவில்லை. நாம் இவ்வாறு புரிந்து கொள்ள வ‌ேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் விரும்பவுமில்லை.

இங்கு தியோப்நுஸ்டோஸ் (Theopneustos) என்ற கிரேக்க வார்த்தை ஒரு வினைச் சொல்லாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையில் தியோஸ் (Theos) மற்றும் நுஸ்டோஸ் (pneustos) என்ற இரண்டு வார்த்தைகள் அடங்கியுள்ளன.

"தியோஸ்" (Theos) என்ற வார்த்தையின் பொருள் “தேவன்” என்பதாகும்; “நுஸ்டொஸ்” என்ற வார்த்தை “பிறப்பித்தல்” அல்லது “ஊதுதல்” என்று பொருள்படும். எனவே, "தியோப்நுஸ்டோஸ்" என்ற வார்த்தையின் பொருள் “தேவனால் பிறப்பிக்கப்பட்டது” என்பதாகும்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:49 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by hega Tue May 22, 2012 10:53 pm

தங்களின் நல் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தாங்கள் தட்டச்சிடும் போது இடையிடையே எழுத்துக்கள் வட்டவட்டமாக் வருவது ஏன்...

அம்மாதிரி தட்டச்சில் தடங்கல் வருவது படிக்கும் ஆர்வத்தினை குறைக்கிறது என்பதுடன் பொதுவாக் ஆன்மீகம் சம்பந்தப்ட்ட கருத்துக்கள் பெரிய பந்தி பதிவாயிருப்பதனால் யாருமே அதை உணர்ந்து படிக்க முயல்வதில்லை என்பது என் கருத்து.

இம்மாதிரி பெரிய பதிவுகளை ஓரிரு நாள் இடைவெளி விட்டு ஒருவராவது படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய பின் தொடரலாமே.

avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Wed May 23, 2012 6:52 am

நன்றி சகோதாி.ஹேகா அவா்களே. பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 678642

நான் பாமினி தமிழ் ஃபாண்ட் உபயோகப்படுத்துகிறேன். புள்ளி வரும்போது, “ாி” வரும்போது இப்படித்தான் வந்து என்னை பாடாய்படுத்துகிறது.

எனக்கு வேறு தமிழ் ஃபாண்ட் பயன்படுத்த தொியவில்லை. இதிலேயே பாிச்சயமாகி விட்டது. ஆகவே, தாங்களும், தொடா்ந்து இதை வாசிப்போா்களும் (இப் பிழைகளை பொறுத்துக் கொண்டு) நல் ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாசிப்போா் எண்ணிக்கையை கவனித்தே இதை வெளியிட்டு வருகிற‌ேன். நமது உறவுகள் இதை அநேகா் ஆா்வத்துடன் வாசிப்பதை (இதுவரை 316போ்) பாா்த்தே, அவா்களின் வாஞ்சையை அறிந்து நான் வேகமெடுத்து எழுதி விட்டேன்.

இருப்பினும் தங்களின் மேலான ஆலோசனையின்படி இடைவெளி விட்டு எழுதுவதும் நல்லதென்று கருதுகிறேன். இனி அவ்வாறே செய்கிறேன். தொடா்ந்து தங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்கிட வாஞ்சிக்கிறேன். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 3 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum